இடுகைகள்

நவம்பர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எதற்கு? இந்த விருது?

படம்
  செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு வினாடிக்கு 6000 கன அடியாக அதிகரிப்பு.3500 கனட அடி நீர்வரத்து. சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் மழையால் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு. 'வீட்டிற்குள் முடங்கும் காலம் மலையேறிவிட்டது தமிழக மாணவிகள் உலகெங்கும் சாதிக்க வேண்டும்':-கல்லூரி திறப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் . மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத விவகாரம்; அரசியல் தீர்வு எட்டவில்லை என்றால் அரசியல் சாசனப்படிமுடிவெடுப்போம்.காலக்வரையறை விதிப்போம்.:-  உச்ச நீதிமன்றம் . விலங்குகள் உருவ‘அனிமல் ஹெல்மெட்’ அணிந்த வாலிபருக்கு ₹10 ஆயிரம் அபராதம் பைக்கும் பறிமுதல். ரூ.4800 கோடி டெண்டர் முறைகேடு எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கின் அமர்வை தலைமை நீதிபதி முடிவு செய்வார்: -உச்ச நீதிமன்றம் . மருத்துவ மேற்படிப்பு நீட் தேர்வு கட்-ஆஃப் மதிப்பெண் குறைப்பால்தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு லாபம். ஆய்வில் அம்பலம். பொதுமக்களின் அதித வரவேற்பை பெற்ற ஆவின் டிலைட்.. இனி 200 மி.லி. பாக்கெட்டிலும் கிடைக்கும். உள்நாட்டு நிலக்கரி மின் உற்பத்தி 8.8 சதவிகிதம் உயர்வு. உ .பி.:

சீருடை நாயகன்

படம்
  ஒரு டிரில்லியன் பொருளாதாரம் என்ற இலக்கை விரைந்து அடைவோம் .முதலீட்டாளர்கள் விரும்பும் மாநிலமாக திகழ்கிறது தமிழ்நாடு;- முதல்வர் மு.க.ஸ்டாலின் . சேரி மொழி என பேசிய விவகாரம்: குஷ்புவின் உருவப் படத்தின் மீது சாணியை கரைத்து ஊற்றி காங்கிரஸ் கட்சியினர் ஆவேச போராட்டம். செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை காலை 9 மணிமுதல்1,000 கன அடியாக அதிகரிக்க முடிவு. புவனேஸ்வர் வந்த வந்தே பாரத் ரெயில.மீது கல்வீச்சு - இருவர் கைது. உத்தரகாசி சுரங்கத்தில் சிக்கியிருந்த தொழிலாளர்கள் 41 பேரும் பத்திரமாக மீட்பு. தங்கள் உயிரைக் காக்கும் உணவாக கருதியது பைப் மூலமாக வந்த அந்தப் பொருட்களைத்தான். அந்த உயிர் காத்த உணவைத்தான், தங்களை உயிருடன் மீட்ட வீரர்களுக்கு நன்றிப்பெருக்கில் பரிசாக வழங்கி கட்டியணைத்து நெகிழ்ந்துள்ளனர் தொழிலாளர்கள். சென்னை தி நகரில் 6.5 கிலோ தங்கநகைபளை நகை பட்டறையில் திருடிய கொள்ளையர்.நகை பட்டறையில் பணிபுரிந்த 6 ஊழியர்களிடம் போலீசார் விசாரணை. பதவிக்காக பாஜகவுடன் உறவாடியது திமுக.. சிறுபான்மை மக்களுக்கு அதிமுகதான் அரண்.போராடுகிறது:-எடப்பாடி பழனிசாமி பேச்சு. மதுரை தோப்பூரில் வழிப்ப

நாங்கள் காரணம் இல்லை

படம்
  கனமழை பொழிவதால் டெல்லிக்கு வந்த 16 விமானங்கள் திருப்பி விடப்பட்டன. உத்தரப்பிரதேச  மௌதாஹா கோட்வாலி நகரைச் சேர்ந்தவர் முஹம்மது ஷாஹித். எல்லைப் பாதுகாப்பு படை(பிஎஸ்எஃப்) வீரரான இவர் வீட்டில் முன் பட்டாசு வெடித்தவர்களை கண்டித்ததால் அவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய 22 பேர் மீது வழக்குப் பதிவு. அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார். சீனாவில் பரவும் சுவாச நோய்கள் இன்னொரு கொரோனா பாதிப்பாக உருவாக வாய்ப்பில்லை. இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம்.மேலும் 2 நாட்களுக்கு நீட்டிப்பு அரசியலில் ஏமாற்றுப்பேர்வழிகளின் தந்தை இபிஎஸ்.அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம். உத்தரகாசி சுரங்க விபத்திற்கு நாங்கள் காரணம் இல்லை.அதானி குழுமம் விளக்கம் திருவள்ளூர் மாவட்டத்தில் 70 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது. ஐஐடி பேராசிரியர் ஆசீஷ் குமார் சென் துன்புறுத்தலால்தான்  ஆராய்ச்சி மாணவர் சச்சின் குமார் தற்கொலை என விசாரணை குழு அறிக்கை பணியிடை நீக்கம் செய்தது நிர்வாகம். உத்தரகாசி சுரங்கம் சரிந்து 41தொழிலாளர் சிக்கிக்கொண்ட விபத்து. 17வது நாளாக தொடர்கிறது மீட்புப்பணி. சமூக நீதிக்கான சில

சலவை எந்திரத்தால் தூய்மை

படம்
மணல் குவாரிகள் தொடர்பாக 10 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருக்கிறது.  இதற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. ‘’சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் எனும் அமலாக்கத்துறையின் அதிகார வரம்புக்குள் மணல் எடுப்பது வராது; ஆனால், அதிகார வரம்பை மீறி அமலாக்கத்துறை செயல்படுகிறது’’ என தமிழ்நாடு அரசு குற்றம்சாட்டியிருக்கிறது. சம்மன் அனுப்புவது, வழக்கு போடுவது, சொத்துக்களை முடக்குவது, கைது செய்வது என அமலாக்கத் துறை ஒவ்வொரு வினாடியும் பா.ஜ.க. அல்லாத கட்சிகளை மட்டுமே குறி வைத்து நடவடிக்கை மேற்கொள்கிறது. மோடி அரசின் ஏவல் படையாக இருக்கும் அமலாக்கத் துறை 9 ஆண்டில் நடத்திய நடவடிக்கைகள் அனைத்தும் ஒன்றிய அரசின் எதிர்க் கட்சிகளை மட்டுமே குறி வைத்து நடத்தப்பட்டவை.   அவற்றின் பட்டியல் தான் இது... «2014 நாடாளுமன்றத் தேர்தலில் ஏப்ரல் 27-ம் தேதி ஃபதேபூரில் பிரதமர் வேட்பாளரான மோடி பேசும் போது, ‘’மன்மோகன் சிங்கின் பத்தாண்டு கால ஆட்சியில் சி.பி.ஐ., ஐ.பி, ரா, வருமானவரித் துறை, அமலாக்கத் துறை அமைப்புகளை எனக்கு எதிராகப் பயன்படுத்திய போதிலும் காங்கிரஸ்காரர்கள

அரசியலமைப்புச்சட்டம்- மனுநீதிச் சட்டம்.

படம்
  முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலையை  இன்று மாநிலக்கல்லூரி வளாகத்தில் திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.'சமூகநீதி காவலர்' வி.பி.சிங் மனைவி சீதா குமாரி,உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ்  கலந்துகொள்கிறார்கள். இலங்கை தமிழர்கள் 7 பேர் அகதிகளாக தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கு வருகை . ஒரு பாடப்பிரிவில் 240 மாணவர்களை மட்டுமே சேர்க்க வேண்டும் என தற்போதுள்ள #நிபந்தனையை தளர்த்த முடிவு . டிஎன்பிஎஸ்சி சார்பில் 15,000 காலிப் பணியிடங்கள் நிரப்ப ஓராண்டு கால தேர்வு அட்டவணை. டிசம்பர் 2வது வாரம் வெளியீடு. தமிழகத்தில் நாளை நடக்க இருந்த பட்டதாரி, முதுகலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு கைவிடல். ஆண்டு வருமானம் ரூ.1.8 லட்சம் உள்ளகுடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் இலவசக் கல்வி. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு. Google Pay, Paytm இந்த இலவச சேவையை நிறுத்திவிட்டது. இனிமேல் கட்டணம் செலுத்த வேண்டும். “மாவட்ட எல்லையை காரணம் காட்டி இறப்புச் சான்றிதழ் விண்ணப்பத்தை நிராகரிக்கக் கூடாது” - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அறிவிப்பு. அமைச்சர்" உதயநிதி ஸ்டாலின் " பிற

வாரங்கள் ஆகலாம்.

படம்
  சுரங்க இடிபாடுகளில் சிக்கி துளையிடும் கருவி உடைந்தது 41 தொழிலாளர்களை மீட்பதில் சிக்கல் நீடிப்பு: ஐதராபாத்தில் இருந்து புதிய கருவி கொண்டு வர ஏற்பாடு.  கடும் போட்டி ராஜஸ்தானில் 68% வாக்குப்பதிவு.4 இடங்களில் மோதல், போலீஸ் துப்பாக்கிச்சூடு. இறுதியாக தெலங்கானாவில் 30ம் தேதி தேர்தல்; டிச.3ல் வாக்கு எண்ணிக்கை . கொச்சியில் உள்ள அறிவியல் தொழில்நுட்ப பல்கலையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் பலி . முன்னாள் ஒன்றிய பிரதமர் வி.பி.சிங் சிலை சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்துவைக்கிறார். விபி.சிங் மனைவி கலந்து கொள்கிறார் நிறுவனங்களின் நாயகர் – கலைஞர்” சிறப்பு புகைப்பட கண்காட்சி மூன்று நாட்கள் நடைபெறும்: தலைமைச் செயலாளர் அறிவிப்பு . உத்தரகாசி சுரங்க விபத்து. தொழிலாளர்களை மீட்க நாட்கள் அல்லது வாரங்கள் கூட ஆகலாம் என தகவல்!  தடையை மீறி மலை மேல் கார்த்திகை தீபம் ஏற்ற சென்ற இந்து முன்னணியினர் கைது.

நிலையான போர் நிறுத்தம்

படம்
  இஸ்ரேல்-ஹமாஸ் 4 நாள் போர் நிறுத்தம் துவங்கியது25 பணய கைதிகள் விடுவிப்பு. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை. ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தல். வாக்குப்பதிவு தொடங்கியது. கருத்தரங்குகளில் மது விநியோகிப்பது சட்டத்திற்கு எதிரானது - சென்னை உயர் நீதிமன்றம் . முதலமைச்சர்,அமைச்சர்கள் குறித்து அவதூறு.. தூத்துக்குடி பாஜக  ஜான் ரவி என்பவர் பிணை மனு தள்ளுபடி .  “பக்தி இல்லை, பகல் வேஷம் போடுகின்றனர்.ஒன்றிய அமைச்சரான அவர் கொள்ளையடிக்ப்படும் கோவில்.கொள்ளையடித்தவர்களைப் பற்றி கூறலாமே.அதன் மீதுநாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்.அவள” தானே கருவறை வரை செல்பவர்கள்." - நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!   நிலையான போர் நிறுத்தம்.? . இஸ்­ரேல் ---–- ஹமாஸ் படை­யி­னர் இடை­யி­லான போர், நான்கு நாட்­கள் நிறுத்­தப்­பட்­டுள்­ளது.  இதற்­கான ஒப்­பந்­தத்தை இரண்டு தரப்­பும் போட்­டுள்­ளார்­கள். நான்கு நாட்­கள் போர் நிறுத்­தத்­தால் எந்­தப் பய­னும் இல்லை. நிரந்­த­ர­மான போர் நிறுத்­தம்­தான் வேண்­டும். அக்­டோ­பர் -– 7 முதல் தொடர்ச்­சி­யாக ப