இடுகைகள்

ஆகஸ்ட், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆன்டி ஆக்சிடன்ட்.

படம்
  நம் தாத்தா, பாட்டி காலத்தில் ‘ஆன்டி-ஆக்ஸிடன்ட்’ என்ற வார்த்தையோ அதைப்பற்றிய புரிதல்களோ, அதைப்பற்றிய தேடல்களோ இல்லாத போதே ஆரோக்கியமாக வாழ்க்கை வாழ்ந்து ஆயுள்காலத்தை கூட்டினர்.  காரணம் அவர்கள் பயன்படுத்திய உணவு வகைகள், பின்பற்றிய மருத்துவ முறைகள் அனைத்திலும் இன்று நாம் தேடும் ‘ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள்’ நிரம்பி இருந்தது என்பது தான் இன்றைய அறிவியல் புரிதல். டாக்டர் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ள கிரீன் டீ குடிச்சா நல்லதுன்னு சொன்னாங்க, அதனால சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், இருதய நோய்கள், ஏன் புற்றுநோய்கள் கூட வராமல் தடுக்கும் என சொன்னாங்க” என்று பச்சை தேநீரினை நாடும் நம்மவர்கள் பச்சை காய்கறிகளையும், பழங்களையும் மறந்தவர்கள் தான்.  இன்னும் சொல்லப்போனால் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் தகவல் என்னவெனில் அறிவியலாளர்களே வியக்கும் வண்ணம் அதிக ஆன்டி-ஆக்ஸிடன்ட்களை கொண்டது நம்ம ஊர் ‘நெல்லிக்கனி’ என்பது தான். அந்த வகையில் நெல்லிக்கனிக்கு அடுத்தாற்போல் அதிக ஆன்டி-ஆக்ஸிடன்ட்களை கொண்டதும், அதிக மருத்துவ குணமுடையதும், இருதயத்தை காப்பதும், கிறிஸ்துவ காலத்திற்கு முன்பிருந்தே கிரேக்கர்களால் அதிகம் பயன்படுத்தப்பட்ட

அதன் பெயர் " பிச்சையா"?

படம்
  பெரு நிறுவனங்களுக்கு மத்திய அரசு சலுகைகள் அளித்து கடன்களை தள்ளுபடி செய்து வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடி வருகின்றன.   அந்த வகையில், பெரு நிறுவனங்களுக்கான கடன்கள் 5 லட்சம் கோடியை வங்கிகள் தள்ளுபடி செய்து இருப்பதாக கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்  முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது:-  'இதற்கு முன்பு வங்கிகள் கார்பரேட் கடன்களை தள்ளுபடி செய்ய அச்சப்படும். ஏனென்றால், ரிசர்வ் வங்கியும் நிதி அமைச்சகமும் இது தொடர்பாக கேள்விகள் எழுப்பும் என்பதால் வங்கிகள் அச்சப்படும். ஆனால், தற்போது ஐபிசி முறையில் எந்த நடவடிக்கைக்கும் ஆளாகத வகையில், வங்கிககள் தள்ளுபடி செய்கின்றன. கடன் வழங்குபவர்கள் குழுவுடன் ஒருங்கிணைந்து, மிகப்பெரிய தொகையை தள்ளுபடி கோரும் தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்கின்றன.  இந்த தீர்மான திட்டம் தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தால் ஒப்புதல் வழங்கப்பட்டதும் கடன் பெற்ற கார்பரேட் நிறுவனங்கள் அனைத்து பொறுப்புகளில் இருந்து விடுவிடுக்கப்படுகிறது. இந்த நடவடிக்கையை வங்கிகள் 'ஹேர்கட்' என்று சொல்கின்றன. கடன் தொகையில் 69 சதவீ

எது இலவசம்.

படம்
  கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வரிச்சலுகைக் காட்டுவது ஏன் என்று சொல்லி பா.ஜ.க. வழக்கு தாக்கல் செய்வது இல்லை.  வங்கிகளில் வாங்கிய பல்லாயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்வதை எதிர்த்து பா.ஜ.க. வழக்கு தாக்கல் செய்வது இல்லை.  ஆனால் ஏழைகளுக்கு, விளிம்பு நிலை மக்களுக்குச் செய்யும் உதவிகளுக்கு எதிராக பா.ஜ.க. நிர்வாகி ஒரு வழக்கைப் போட்டு இந்தியாவில் அதனை அதிமுக்கியமான பிரச்சினையாக ஆக்கிக் கொண்டு இருக்கிறார். டெல்லியைச் சேர்ந்த நிரஞ்சன் குமார் என்ற இளைஞர் சமூக வலைத்தளத்தில் தன்னைப் பற்றி எழுதி இருக்கிறார். ‘’இலவச சைக்கிளில் வந்து, இலவச பஸ் பாஸில் பேருந்து பயணம் செய்து, இலவச மதிய உணவு சாப்பிட்டு படித்தவன் நான். இவையெல்லாம் எனக்கு இல்லாவிட்டால் படித்திருக்க சாத்தியம் குறைவு.  அடுத்த வீட்டுக்கு டி.வி. பார்க்கப் போய் கூனிக்குறுகி நின்ன எனக்கு சின்ன செல்ப்கான்பிடன்ஸ் கொடுத்தது இலவச டி.வி.” என்று அவர் எழுதி இருக்கிறார். ‘இலவசமாக வழங்கப்பட்டும் எந்தப் பொருட்கள் உபயோகமாக உள்ளன?’ என்று ஒருவர் கேட்ட கேள்விக்குத்தான் நிரஞ்சன் குமார் என்ற இளைஞர் இப்படி பதில் சொல்லி இருக்கிறார். பலன்பெற்றவர்களிடம் கேட்டால் இதுபோன்ற

இந்தியன்.

படம்
கமல்ஹாசன் நடித்த இந்தியன் திரைப்படம் கடந்த 1996-ம் ஆண்டு ரிலீசாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அப்படத்தில் தந்தை, மகன் என இரட்டை வேடத்தில் நடித்து அசர வைத்திருப்பார் கமல்.  இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் எடுக்க உள்ளதாக கடந்த 2017-ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். பின்னர் 2 ஆண்டுகள் கழித்து தான் இந்தியன் 2 ஷூட்டிங் தொடங்கப்பட்டது. இப்படத்தில் கமலுடன் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்க ஒப்பந்தமானது.  கடந்த 2019-ம் ஆண்டு இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு குஜராத்தில் நடத்தப்பட்டது. இதன்பின்னர் சென்னையில் பிரம்மாண்ட செட் அமைத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பை நடத்தினர். கடந்த 2020-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்று வந்த படப்பிடிப்பின் போது கிரேன் கவிழ்ந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். இதனால் நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பு அதன்பின் தொடங்கப்படவில்லை.  இதையடுத்து இயக்குனர் ஷங்கருக்கும் லைகா நிறுவனத்துக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு கோர்ட் வரை சென்றதால் இப்படம் கிட்டத்தட்ட கைவிடப்படும் சூழலுக்கு சென்றது. இந்நிலையில், இந்தியன் 2 படம் மீண்டும் உயிர்பெற்று உள்ளது. இதற்கு

"குஜராத் மாதிரி"

படம்
 பில்கிஸ் பானு வழக்கில் தொடர்புடைய 11 பேர் விடுதலை செய்யப்பட்ட பிறகு, இஸ்லாமிய குடும்பங்கள் ரந்திக்பூர் கிராமத்திலிருந்து தங்களது வீடுகளை விட்டு  தாகோத் மாவட்டத்தில் உள்ள நிவாரண முகாம்களுக்கு சென்றுள்ளனர். 2002ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பை தொடர்ந்து நடைபெற்ற மதக் கலவரத்தில்  21 வயதான கர்ப்பிணி பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்.  அவரது குழந்தை மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொலை செய்யப்படுகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை வழங்கப்படுகிறது. இந்நிலையில் இவர்கள் கடந்த ஆக்ஸ்டு 15ம் தேதி விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த செய்தி வெளியாகிய சில நாட்களிலேயே 11 குற்றவாளிகள் வசித்து வரும் ரந்திக்பூர் கிராமத்திலிருந்து தங்களது உடமைகளை எடுத்துக்கொண்டு இஸ்லாமியர்கள், நிவாரண முகாம்களுக்கு செல்ல முடிவு செய்துள்ளனர்.    தாகோத் மாவட்டத்தில் உள்ள நிவாரண முகாம்களுக்கு தற்போது தங்களது உடமைகளுடன் வந்தடைந்த 24 வயதான சுல்தானா கூறுகையில் “ கடந்த வாரம் முதல் இஸ்லாமியர்கள் மத்தியில் ஒரு பயம் உருவாக தொடங்கியது.  நேரடியாக மிரட்ட

வைகுண்டராஜனின் தில்லு முல்லு.

படம்
 வி.வி.மினரல் மற்றும் வி.வி. தொழில் குழுமம் என்பதன் விரிவாக்கம் வெற்றிவேல் மினரல்ஸ் மற்றும் வெற்றிவேல் தொழில் குழுமம் ஆகும்.  மேற்படி தொழில் குழுமம் வி.வி.மினரல் என்ற பெயரில் கூட்டாண்மை நிறுவனமாக தோற்றுவிக்கப்பட்டு அதன் பின்னர் பல்வேறு கூட்டாண்மை நிறுவனங்களை வி.வி.மினரல் மற்றும் வெற்றிவேல் மினரல் என்ற பொதுப்பெயரில் உருவாக்கப்பட்ட தொழில் நிறுவனமாகும்.  மேற்படி தொழில் நிறுவனத்தில் உயர்திரு. சு.ஜெகதீசன் உட்பட அவரது குடும்ப உறுப்பினர்கள் 6 நபர்களும், அவர்களோடு இணைந்து வைகுண்டராஜன் உட்பட அவரது குடும்ப உறுப்பினர்கள் 6 நபர்களும் சேர்ந்து 12 பங்குதாரர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கூட்டாண்மை நிறுவனமாகும்.  அதைப்போலவே தனியார் நிறுவனங்களும் (Private Limited Companies) இரண்டு குடும்ப உறுப்பினர்களை சரிசமமாக கொண்டு உருவாக்கப்பட்ட தொழில் நிறுவனங்களாகும். மேற்படி ஒவ்வொரு கூட்டாண்மை நிறுவனத்தில் லாபநஷ்டத்திலும், சொத்திலும், அதைப்போலவே ஒவ்வொரு தனியார் நிறுவனத்தின் லாபநஷ்ட சொத்திலும் இரண்டு குடும்பத்திற்கும் அதாவது உயர்திரு. சு.ஜெகதீசன் அவர்களின் குடும்பத்திற்கும், வைகுண்டராஜன் குடும்பத்திற்கும் சரிசமமாக

பிராடு பிரதர்ஸ்.

படம்
  வேலூர், காட்பாடியைச் சேர்ந்த லட்சுமி நாராயணன் சுந்தரம், 2015-ம் ஆண்டு முதலே பங்குச் சந்தையில் முதலீடு செய்துவந்தார். இவருடன் சகோதரர்கள் ஜனார்த்தனன், வேதநாராயணன் மற்றும் பெரியப்பா மகன் மோகன்பாபு ஆகியோரும் கைகோத்தனர். ஆனால், போதிய வருமானம் கிடைக்கவில்லை என்ற சூழலில், ‘உங்க பணத்தை எங்கிட்ட குடுங்க, நான் சூப்பர் லாபம் சம்பாதிச்சுத் தர்றேன்’ என்று அக்கம்பக்கத்து நண்பர்கள், தெரிந்தவர்கள் என்று பணத்தை வாங்கி, பங்குச் சந்தையில் முதலீடு செய்வதுபோல பாவ்லா காட்டி, அவர்களுடைய பணத்தை அவர்களுக்கே திருப்பித் தந்துகொண்டிருந்தார்கள் பிராடு பிரதர்ஸ். இந்த ஃபிராடு பிசினஸ் 2019-ம் ஆண்டுக்குப்பிறகு சூடுபிடிக்க ஆரம்பித்தது. ‘1 லட்ச ரூபாய் முதலீடு செய்தால், மாதந்தோறும் 10 ஆயிரம் ரூபாய் தரப்படும்’ என்பதுதான் இவருடைய பிஸினஸின் அடிநாதம்.  ஒரே ஆண்டில் போட்ட பணம் டபுளாகிவிடும் என்பதால், பல்வேறு காரணங்களுக்காகச் சேர்த்து வைத்திருந்த பணம் மட்டுமல்லாது, கடனை வாங்கிக்கூட பணத்தைக் கொட்ட ஆரம்பித்தார்கள் மக்கள். பணம் எண்ணும் மெஷின்கள் வைத்தும்கூட எண்ண முடியாத அளவுக்கு பணம் கொட்டுவதைப் பார்த்து பிரமித்துப்போன ஃபிராடு ப