இடுகைகள்

ஜனவரி, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நாம் குஜராத்திகளாக இல்லை.

படம்
 கௌதம் அதானி 2023 புத்தாண்டில் மிகப்பெரிய சரிவை சந்தித்து வருகிறார். ஃபோர்ப்ஸ் (Forbes) ரியல் டைம் உலக பணக்காரர்கள் பட்டியலில் உலக பணக்காரர்கள் பட்டியலில் தற்போது 3வது இடத்திலிருந்து 7-வது இடத்திற்கு தள்ளப்பட்டார். சந்தை மதிப்பீட்டில் இருந்து 4.17 லட்சம் கோடி ரூபாய் அதானி குழும்ம்  இழந்துள்ளது. ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கையில், நிறுவனங்களின் பங்குமதிப்பு உயர்வைக் காட்டி அதானி குழும நிறுவனங்கள் மிக அதிக அளவில் கடன் பெற்றுள்ளன என்றும், இது பங்குச் சந்தையில் முறைகேடுகள் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.  மேலும், அதானி குடும்ப உறுப்பினர்கள் வெளிநாடுகளில் போலி நிறுவனங்களைத் தொடங்கி வரி ஏய்ப்பு செய்து பண மோசடியிலும் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது. அதானி குழுமம் குறித்த அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி அறிக்கை மிகவும் நம்பகமானது மற்றும் நன்கு ஆராய்ச்சி செய்யப்பட்ட பின்னர் தயாரிக்கப்பட்டுள்ளதாக பில்லியனர் முதலீட்டாளர் வில்லியம் எக்மேன் தெரிவித்துள்ளார். அவரது சொத்து மதிப்பில் தொடர்ச்சியான சரிவு காரணமாக அவர் இந்தப் பின்னடைவை அடைந்துள்ளார். அதோடு, இந்த ஆண்

எல்ஐசி, க்கு உண்டான இழப்பு

படம்
 முறைகேடுகள் அம்பலமானதால். அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு சரிவால் எல்ஐசிக்கு ரூ.18,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இரண்டு நாட்களில் மிகப் பெரிய இழப்பை சந்தித்துள்ளது எல்ஐசி. முன்னதாக, அதானி குழுமம் நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் கடந்த புதன்கிழமை அறிக்கை வெளியிட்டது.  இதைத் தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு சரியத் தொடங்கியது. கடந்த 2 நாட்களில் மட்டும் அதானி நிறுவனங்களின் மதிப்பு ரூ.4.20 லட்சம் கோடி சரிந்துள்ளது.  அதானி என்டர்பிரைசஸ், அதானி டோட்டல் கேஸ், அதானி கிரீன் எனர்ஜி, அதானி டிரான்ஸ்மிஷன் ஆகிய நிறுவனங்களின் பங்கு மதிப்பு நேற்றைய வர்த்தகத்தில் 20% அளவில் சரிந்தன இந்நிலையில், அதானி குழும பங்குகள் சரிவால் எல்ஐசி மிகப் பெரிய இழப்பை சந்தித்துள்ளது. அதானி குழுமத்தின் ஐந்து நிறுவனங்களில் எல்ஐசி மிகப் பெரிய அளவில் முதலீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  அதன்படி, அதானி குழும நிறுவனங்களில் எல்ஐசி முதலீடு ஜனவரி 24, 2023-ல் ரூ.81,628 கோடியாக இருந்த நிலையில், ஜனவரி 27-ல் அது ரூ.62,621

மோடி நண்பர் மகா ஊழல்

படம்
மோடியின்  நண்பரும்,கூட்டாளியுமான அதானி மீது ஆதாரப்பூர்வ  குற்றச்சாட்டுகள்? கடந்த புதன்கிழமை அன்று அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்ட பிரபல ஷார்ட் செல்லிங் நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கை அதானி குழும நிறுவனத்தை மட்டுமன்றி இந்தியப் பங்கு சந்தையையே ஆட்டம் காணச் செய்யும் நிலையில் உள்ளது. அதானி குழுமத்தைச் சேர்ந்த அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம், தொடர் பங்கு வெளியீடு (Follow on Public offer - FPO) மூலம் 20,000 கோடி ரூபாய் திரட்டுகிறது. அந்த நிறுவனத்தின் பங்கு வெளியீடு ஜனவரி 27-ம் தேதி அன்று ஆரம்பித்து ஜனவரி 31 அன்று முடிவடைகிறது.  அந்த நிறுவனத்தின் பங்குக்கான குறைந்தபட்ச விலை ரூ. 3,112 எனவும் அதிகபட்ச விலையாக ₹ 3,276 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 25-ம் தேதி, புதன் கிழமையன்று அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்ட பிரபல ஷார்ட் செல்லிங் நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கை அதானி நிறுவனத்தை மட்டுமன்றி இந்தியப் பங்கு சந்தையையே ஆட்டம் காணச் செய்யும் நிலையில் உள்ளது. ஷார்ட் செல்லிங் என்பது ஒரு நிறுவனத்தின் பங்குகள் விலை குறையும் என்று கருதி தம்மிடம் இல்லா

சேது சமுத்திரத் திட்டம்

படம்
 சமீபத்தில் மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு, “செயற்கைக்கோள் வாயிலாக ஆய்வுசெய்ததில், ராமர் பாலம் இருந்ததாகத் துல்லியமாகக் கூற முடியவில்லை” என விண்வெளி மற்றும் அணு ஆற்றல் துறை இணை அமைச்சர்ஜிதேந்தர் சிங் பதிலளித்தார். அதே சமயம் மத நம்பிக்கையாளர்கள் மத்தியில் இது குறித்த நம்பிக்கையும் உறுதியாகவே இருக்கிறது. இதையடுத்து, சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான விவாதம் மீண்டும் உச்சமடைந்திருக்கிறது. இந்தியாவில் ஏறத்தாழ 7,500 கி.மீ. நீளத்துக்குக் கடற்கரை உள்ளது. நாட்டின் ஒரு பகுதியிலிருந்து மறு பகுதிக்குச் செல்ல வேண்டும் என்றால், கடல் மார்க்கமாக நேர் வழி கிடையாது.  மேற்குக் கடற்கரைப் பகுதிகளான மும்பை, கொச்சி போன்ற பகுதிகளிலிருந்து கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள சென்னை, விசாகப்பட்டினம், கொல்கத்தா வரை கப்பல்கள் செல்வதற்கு, இலங்கையைச் சுற்றித்தான் சென்றாக வேண்டும். கிட்டத்தட்ட 400 கடல் மைல்களைக் கடக்க வேண்டும்.  அதற்கு 30 மணி நேரம் பிடிக்கும். ஏராளமான எரிபொருள் செலவாகும். இதைத் தவிர்ப்பது சரக்குப் போக்குவரத்துக்கு லாபம் தரும் என்ற கருத்தின் அடிப்படையில் போடப்பட்ட திட்டம்தான் - சேது சமுத்தி

பி.பி.சி , வரலாறு

படம்
  1922-ம் ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி பி.பி.சி நிறுவப்பட்டது. இது முன்பு பிரிட்டிஷ் பிராட்காஸ்டிங் நிறுவனம் என்று அழைக்கப்படும் ஒரு தனியார் நிறுவனமாக இருந்தது.  பிரிட்டிஷைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பங்குகளை வைத்திருக்க அனுமதிக்கப்பட்டனர். ஆரம்பத்தில் நிறுவனம் வளர்ச்சியடைய போராடியது. 1926 பொது வேலைநிறுத்தத்தின் போது அதன் அதிர்ஷ்டம் திரும்பியது. பேராட்டம் மற்றும் நெருக்கடி பற்றிய பிபிசியின் கவரேஜ் பிரிட்டிஷ் மக்களால் பரவலாகப் பாராட்டப்பட்டது, இது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உயிர்நாடியாக அமைந்தது. அதே ஆண்டின் பிற்பகுதியில் பாராளுமன்றக் குழு பி.பி.சியை பொது நிறுவனமாக மாற்ற வேண்டும் என பரிந்துரைத்தது.  தனியார் நிறுவனத்திற்குப் பதிலாக கிரவுன்-சார்ட்டர்ட் நிறுவனம் என பிரிட்டிஷ் ஒளிப்பரப்பு கழகத்தால் மாற்றப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது. இருப்பினும் நிறுவனம் சுதந்திரமாக செயல்பட்டு வந்தது. இன்று வரை, பிபிசி ராயல் சாசனத்தின் ( Royal Charter) விதிப்படி செயல்படுகிறது.  இது ஆளும் மன்னரால் வழங்கப்படும் முறையாகும். இது இருந்தால் தான் நிறுவனம் உரிமம் பெற முடியும். நாட்டின் உள்துறை செயலாளர் உரிமத்தை வழங்க

இண்டியா: தி மோடி க்வெஸ்டின்’

படம்
இண்டியா: தி மோதி க்வெஸ்டின் ’ என்ற இரண்டு அத்தியாய ஆவணப்படத்தை பிபிசி உருவாக்கியுள்ளது.  இதன் முதல் அத்தியாயம் ஜனவரி 17 அன்று பிரிட்டனில் ஒளிபரப்பப்பட்டது.  முதல் அத்தியாயத்தில் நரேந்திர மோதியின் ஆரம்ப கால அரசியல் வாழ்க்கை காட்டப்பட்டது. அதில் அவர் பாரதிய ஜனதா கட்சியில் முன்னேறி குஜராத்தின் முதலமைச்சர் பதவியை அடைவது வரை சித்தரிக்கப்பட்டிருந்தது. இந்த ஆவணப்படம் பிரிட்டிஷ் வெளியுறவு அலுவலகத்திலிருந்து பிபிசியால் பெறப்பட்ட, வெளியிடப்படாத அறிக்கையை அடிப்படையாகக் கொண்டது.  நரேந்திர மோதி முதல்வராக இருந்தபோது குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு நடந்த வன்முறையில் குறைந்தது 2000 பேர் இறந்தது குறித்து இந்த ஆவணப்படத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. 2002ல் குஜராத்தில் வன்முறைச் சூழலை ஏற்படுத்தியதற்கு மோதிதான் நேரடிப் பொறுப்பு என்று பிரிட்டிஷ் வெளியுறவு அலுவலக அறிக்கை கூறுகிறது. வன்முறைக்கு தான் காரணம் என்ற குற்றச்சாட்டுகளை பிரதமர் மோதி தொடர்ந்து வன்மையாக மறுத்து வருகிறார்.  ஆனால் பிரிட்டனின் வெளியுறவு அமைச்சகத்திற்காக அறிக்கை எழுதிய பிரிட்டிஷ் தூதாண்மை அதிகாரியிடம் பிபிசி பேசியபோது, அவர் தனது அறிக்கையை தொ

தலைகீழ் பாடம்

படம்
 30 ஆண்டுகள் வரை ஐ பி எஸ் ஆக இருந்துள்ளீர்கள், பல்வேறு நகரங்களில் பணி புரிந்த அனுபவம் , பதவி ஓய்வு பெற்ற பின் அதிக நேரம் கிடைத்தது. நான் எந்த மாற்றத்தையும் உணரவில்லை.  ஆனால், தற்போது தமிழ்நாட்டில் பணியாற்றுவது மூலம் தான் அறியாத பல விஷயங்களை தெரிந்து கொண்டதாகவும், தொடர்ந்து தமிழ் மொழியை கற்று வருவதாகவும் கூறினார்.  தமிழ்நாட்டில் உள்ள பழங்கால கோயில்களில் கட்டிடக் கலை கிரேக்க கட்டடக்கலை கூட தோற்கும் என குறிப்பிட்ட அவர், தமிழின் கலாசாரம், அறிவு எவ்வளவு மகத்தானது என்பதை இது காட்டுகிறது . நம் நாட்டின் பிற பகுதிகள், தமிழின் சிறப்பை போதுமான அளவு அறியாதது வருத்தம் அளிக்கிறது. எனவே, நாட்டின் எந்த மாநிலத்திற்கு சென்றாலும் அங்குள்ள மொழியை கற்றுக்கொள்ளுமாறு பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, நேர்மையான எண்ணங்களுடன் செயல்படுங்கள், மொழியை கற்று கொள்ளுங்கள், உங்கள் பணியை செய்யுங்கள்.  இக்கட்டான சூழ்நிலையில் நீங்கள் எவ்வளவு அமைதியாக செயல்படுகிறீர்கள் என்பது முக்கியம். நீங்கள் பணி செய்யும் இடம் சிறியதா , பெரியதா என்பது முக்கியமல்ல தொடர்ந்து பணியாற்றுங்கள், உங்கள் பணியில் நீங்கள் சிற

50கோடிகள்

படம்
  எஸ்.பி.ஐ (SBI) வங்கி கிளைகளில், ரூ. ஆயிரம், 10 ஆயிரம், 1 லட்சம், 10 லட்சம், கோடி போன்ற மதிப்புகளில் தேர்தல் பத்திரங்கள் கிடைக்கும். தனி நபர்களோ, கார்ப்பரேட் நிறுனங்களோ இந்த தேர்தல் பத்திரங்களை வாங்கி, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு நன்கொடையாக அளிக்கலாம். ஒருவர் எத்தனை தேர்தல் பத்திரமும் பெறலாம் என்று கூறப்பட்டது. தேர்தலின்போது கட்சிகளுக்கு 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் நிதி வழங்கியவர் பெயர் மற்றும் தொகை தொடர்பான தரவுகளை நிதியாண்டின் இறுதியில் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் (Representation of People Act-1951) முன்பு குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனை தேர்தல் பத்திரங்கள் திட்டம் (Electoral Bond Scheme- 2018) மூலம் திருத்திய பாஜக அரசு, தேர்தல் பத்திரம் மூலம் கட்சிகளுக்கு நிதி வழங்குபவரின் பெயர்களைத் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கத் தேவையில்லை என மாற்றியது. தேர்தல் பத்திரம் என்பது வெளிப்படைத் தன்மைக்கு எதிராக உள்ளது என உச்ச நீதிமன்றத்தில் 2019-ஆம் ஆண்டுத் தேர்தல் ஆணையம் தரப்பிலேயே முறையிடப்பட்டது. எனினும் அது மாற்றப்படவில

ஏழைக்கு அதிகவரி.G.S.T.

படம்
  உலக பொருளாதார மன்ற மாநாட்டின் முதல் நாள் நிகழ்வில் இந்திய பொருளாதாரக் கொள்கைகளும், வரி விதிப்புகளும் எவ்வாறு பணக்காரர்களுக்கு சாதகமாக உள்ளன என்பது குறித்த ஆய்வறிக்கையை ஆக்ஸ்பாம் என்ற தொண்டு நிறுவனம் வெளியிட்டது. ஆக்ஸ்பாம் அமைப்பு இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும், சமத்துவத்திற்காகவும் பாடுபட்டு வரும் தொண்டு நிறுவனம் ஆகும்.  மத்திய அரசு மற்றும் பன்னாட்டு அமைப்புகள் வெளியிட்ட ஆவணங்களை ஆய்வு செய்த ஆக்ஸ்பாம் நிறுவனம், இந்திய அரசின் வரிவிதிப்பு முறைகள் நாட்டில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அதிகரித்து வருவதை புள்ளிவிவரங்களுடன் தெளிவுபடுத்தியுள்ளது. 2020-21 ஆம் ஆண்டில் சரக்கு மற்றும் சேவை வரியாக வசூலிக்கப்பட்ட ரூ.14.83 லட்சம் கோடியில், 64% அதாவது ரூ.9.50 லட்சம் கோடி, இந்திய மக்கள்தொகையில் 50 விழுக்காடாக இருக்கும் ஏழை மக்களிடமிருந்து வசூலிக்கப்பட்டுள்ளது.  ஜி.எஸ்.டியில் 33% அதாவது ரூ.4.90 லட்சம் கோடி மக்கள் தொகையில் 40% ஆக உள்ள நடுத்தர மக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது.  மக்கள்தொகையில் 10% ஆக உள்ள பணக்காரர்களிடமிருந்து 3%, அதாவது ரூ.44,000 கோடி மட்டுமே வசூலிக்கப் பட்டுள்ளது. இந்தியா

ஒரே தேசம் ஒரே நாசம்?

படம்
  பா.ஜ.க.வுக்குத் தெரிந்த ஒரே வார்த்தை ‘ஒரே’தான்! எதற்கெடுத்தாலும் ‘ஒரே’ சேர்த்துவிட்டால் தேசம் முழுக்க ஒன்றாக ஆக்கிவிட்டதாக அவர்களுக்கே ஒரு நினைப்பு! ஒரே மதம் ஒரே மொழி ஒரே உணவு ஒரே கலாச்சாரம் ஒரே தேர்வு ஒரே தேர்தல் ஒரே வரி ஒரே உரம் - என்று ஒரே பாட்டைப் பாடி, அனைத்தையும் திசை திருப்பிக் கொண்டு இருக்கிறார்கள். எல்லா நோய்க்கும் அவர்கள் வைத்திருப்பது ‘ஒரே’ மருந்துதான். தேசத்தைச் சொல்லி ஏமாற்றுவது. திசை திருப்புவது. ‘நாடு முழுக்க ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப் போகிறோம்’ என்பது அடுத்த பசப்புகள். சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் தேர்தல் நடந்தது. பா.ஜ.க. ஆட்சி அமைந்துள்ளது. அதனைக் கலைக்கப் போகிறார்களா? இன்னும் பல மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. அதைக் கலைக்கப் போகிறார்களா? இதனை பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களே ஏற்பார்களா? நடந்து முடிந்த மாநிலங்களைக் கலைத்து தேர்தல் நடத்துவதன் மூலமாக எத்தனை ஆயிரம் கோடி மீண்டும் செலவாகும்? பா.ஜ.க.வுக்கு தெரிந்த பாதை என்பது கொல்லைப்புற வழியாகும். சட்டமன்றங்களில் தான் வெற்றி பெற முடியவில்லை என்றால் ஆளும் கட்சி உறுப்பினர்களை இழுத்து, ஆட்சியைக் கலைப்பது அதற்குத் தெரிந்த வ