இடுகைகள்

மே, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புடுச்சி உள்ளே போடுங்க சார்.

படம்
  பழங்குடியினர் நலத்துறைக்காக ஒதுக்கப்பட்ட நிதி பழங்குடியினர் நலத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 265 கோடி ரூபாய் அரசுக்கு திருப்பி அளிக்கப்பட்டு அது பிற துறைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது. மதுரை ஊமச்சிகுளம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் கார்த்திக், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பழங்குடியினர் நலத்துறைக்கு கடந்த 2018 முதல் 2021 வரையிலான மூன்று நிதி ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட நிதி, அவற்றில் அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்ட நிதி, அதிலிருந்து பிற துறைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட நிதி ஆகியவற்றின் விபரங்களை கோரியிருந்தார். அவருடைய கடிதத்திற்கு கிடைக்கப்பட்ட பதில் மூலம், மத்திய அரசு மற்றும் தமிழக அரசு இணைந்து தமிழக பழங்குடியினர் நலத்துறைக்கு கடந்த 2018-19, 2019-20, 2020-21 ஆகிய மூன்று நிதி ஆண்டுகளில் மொத்தம்ஆயிரத்து 310 கோடியே 94 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் ஒதுக்கி உள்ளது தெரிகிறது. ஆண்டுவாரியாக பார்க்கையில், 2018-19ம் ஆண்டில் 333 கோடியே 82 லட்சத்து 43 ஆயிரம் ரூபாயும்; 2019-20ம் ஆண்டில் 482 கோடியே 80 லட்ச

தற்செயலாக நடந்தது

படம்
  தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தற்செயலாக நடந்தது சவுக்கு சங்கர் பித்தலாட்டம்! தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு ஆளும் வர்க்கத்தினால் திட்டமிட்டு நடத்தப்பட்டது. வேதாந்தா போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் எடுபிடிகளாக செயல்படுகின்ற ஓட்டுக்கட்சிகள், போலீசு மற்றும் அதிகார வர்க்கம் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக லுவலக முற்றுகையை, 100 நாட்கள் அமைதியாக நடந்த போராட்டத்தை பாசிச முறையில் ஒடுக்க நடத்தப்பட்டது தான் துப்பாக்கிச் சூடு. Video Player 01:10 01:10 ஸ்நீப்பர் செல் உட்பட அனைத்து விதமான போலீஸ் படையையும் கொண்டு வந்து தாக்குதல் நடத்திய போலீசு, இந்த ஊடக போலி சவுக்கு சங்கரிடம் மட்டும் விவாதித்தாம். இவர் கேட்டாராம் என்ன சார் இப்படி நடந்து விட்டதே என்று! அவர்கள் சொன்னார்களாம் தற்செயலாக நடந்துவிட்டது என்று. சோனா என்ற பெண்ணை வாயிலேயே அருகில் இருந்து சுட்டார்களே எனக்கேட்டபோது பல குண்டுகள் போகிறபோது எங்கே தாக்கும் என்று தெரியாதே. என்கிறார் சவுக்கு சங்கர். அப்போ கண்மூடித்தனமாக சுட்டார்கள் என்பதை ஒப்புக்கொள்கிறார்தானே? இவர் வேலையே பார்க்காமல் வசதியாக வாழ்கிறார் என்றால் எப்படி முடிகிறது. பல ரகச

கதறல் ஏன்?

படம்
  சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோடி பங்கேற்ற விழாவில் பேசிய தமிழகமுதல்வர் ஸ்டாலின், நீட் தேர்வில் இருந்து தமிழத்திற்கு விலக்கு, கச்சத் தீவு மீட்பு, தமிழக திட்டங்களுக்கு நிதி பங்களிப்பதை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன் வைத்துப் பேசினார். பிரதமர்மோடியை மேடையில் வைத்தே தமிழக முதல்வர் ஸ்டாலின் இவ்வாறு பேசியதை திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் வெகுவாகப் பாராட்டியதோடு சமூக வலைத்தளங்களில் பலத்த  விவாதங்களையும் எழுப்பியுள்ளது. அதே நேரத்தில் மேடையில் முதல் பிரதமர் வைத்துக் கொண்டே இவ்வாறு பேசுவது ஏற்புடையது அல்ல எனவும் பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.  இந்நிலையில் அதிக அளவு ஜிஎஸ்டி வசூல் தமிழத்திலிருந்து இருந்தாலும், மத்திய அரசு தமிழகத்துக்கு திருப்பி தருவது 1.21 சதவீதம்தான் என பிரதமரை வைத்துக்கொண்டே மேடையில் முதல்வர் பேசும் துணிச்சல் தான் பாஜகவினரின் கதறலுக்கு காரணம் என திராவிடர் தமிழர் இயக்க பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் கூறியுள்ளார். . . 'திராவிட மாடல் என்பது பொருளாதாரத்தையும் சமூகநீதியும் உள்ளடக்கிய வளர்ச்சி. இரண்டையும் உ

உலகம் சுற்றும் வாலிபன்"

படம்
  1973-ஆம் ஆண்டு மே 11-இல் வெளிவந்த எம்.ஜி. ஆரின் உலகம் சுற்றும் வாலிபன் கடந்த 11-ஆம் தேதி 49 ஆண்டுகளை முடித்து,  பொன்விழாவில் அடியெடுத்து வைக்கிறது.  50 ஆண்டுகளான போதிலும் எம்.ஜி.ஆர். ரசிகர்களால் இந்தப் படத்தை அவ்வளவு எளிதாக கடந்துவிட முடியாது.   திரைப்படங்களை பற்றி விமர்சிக்கும்போது, அரசியல் வராமல் தடுக்கலாம். ஆனால் அரசியல் அல்லாத ஒரு திரைப்படத்தை, அரசியல் இல்லாமல் விமர்சிக்கவே முடியாது. அரசியல் பின்னணியால் பிணைந்த ஒரு வெற்றி படம் "உலகம் சுற்றும் வாலிபன்". திரைப்படங்களில் அரசியல் பஞ்ச் டயலாக்குகள், பஞ்ச் காட்சிகள் வருவதெல்லாம் இப்போது சாதாரணம். இரண்டு படங்கள் ஹிட் கொடுத்த நடிகர்கள்கூட, தன் அடுத்த படத்தில் அரசியல் பஞ்ச் வைக்கச் சொல்லும் காலமிது. ஆனால், ஒரு படமே அரசியலாக மாறியது "உலகம் சுற்றும் வாலிபன்' படத்தில்தான்! இதற்கு பின்னர் வந்த எந்த படமும், இந்தளவுக்கு ஒரு நடிகரின் வாழ்க்கையோடு ஒட்டிஇருந்ததில்லை.  இதன் பிண்ணனி குறித்த தகவல்கள் இன்று படிக்கும் போது கூட ஆச்சரியமாக உள்ளது. இப்படியெல்லாம் கடந்ததுதான் இந்தப் படம் வெற்றிப் படமாகியாதா என்று நினைத்தால் ஆச்சரியம் கொள

இது திராவிட மாடலாக?

படம்
  “முதலமைச்சர் என்பவர் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களுக்கும், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் பொதுவானவர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்” என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டு உள்ளார். இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான சூழ்நிலை தமிழ்நாட்டில் நிலவுவதைப் போல பயம் காட்டி இருக்கிறார் பன்னீர்செல்வம். இறுதியில் ‘சந்திரமுகியாகவே' மாறியதைப் போல பா.ஜ.க.வாகவே மாறிவிட்டார் பன்னீர். அவர்களது அவதூறுப் பிரச்சாரத்தை இவர் கையாளத் தொடங்கி இருக்கிறார்.  தி.மு.க. ஆட்சி மீது ஏதும் குறை கூற முடியாதவர் முன்வைக்கும், அவதூறுகளில் ஒன்றுதான் இது போன்ற விமர்சனங்கள். பன்னீர்செல்வம் இது போன்ற அறிக்கை விடுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே ஆத்தூர் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இதற்கான முழு விளக்கத்தை தனது பேச்சில் எடுத்துரைத்து விட்டார். “இந்த ஆட்சிமீது எதை வைத்தும் குறை சொல்ல முடியாத சிலர் ஆன்மிகத்தின் பேரால் குறை சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். எவரது பக்திக்கும் - எவரது உணர்வுக்கும் தடையாக திராவிட முன்னேற்றக் கழக அரசு இருந்ததும் இல்லை. இனியும் இருக்காது.  ‘பக

பரிந்துரைகள்

படம்
  ஒன்றிய பா.ஜ.க அரசின் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்படும் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்றும் கடல் சரக்குகள் மீதான ஒருங்கிணைந்த வரியை ரத்து செய்தும் உத்தரவிட்டது. குஜராத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது கடந்த மே 19 அன்று அதிரடியான தீர்ப்பை வழங்கி உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். அதில், “ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கும் முடிவுகளை அமல்படுத்த வேண்டும் என மாநில அரசுகளை ஒன்றிய அரசு நிர்பந்திக்க முடியாது. ஜி.எஸ்.டி கவுன்சிலுக்கு அறிவுரைகள் மற்றும் பரிந்துரைகள் மட்டுமே வழங்கலாம்.. ஜி.எஸ்.டி கவுன்சில் பரிந்துரைகள் மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது.  அப்படி செய்தால் அது கூட்டாட்சி அமைப்பை பாதிக்கும். இந்தியாவில் ஜனநாயகமும், கூட்டாட்சியும் ஒன்றை ஒன்று சார்ந்தே உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்” எனவும் தெரிவித்திருந்தது. இதனையடுத்து, உச்ச நீதிமன்றம் ஒன்றிய மாநில அரசுகளுக்கு இட