இடுகைகள்

மே, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இனவெறுப்பு...

படம்
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத் தலைநகரான மினியாபொலிஸ் நகரில் கருப்பினத்தை சேர்ந்த ஒருவர் போலீஸாரின் பிடியில் உயிரிழந்ததால் அங்கு மூன்று நாட்களாக கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஒரு காருக்கு அடியில் ஒரு மனிதர் கைவிலங்கிட்டு இருப்பது போன்றும் அவரின் கழுத்தின் மேல் தனது முழங்காலை வைத்து காவலர் ஒருவர் அழுத்துவதும் போன்றும் ஒரு காணொளி இரண்டு தினங்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டது. "என்னால் மூச்சு விட முடியவில்லை" - ஜார்ஜ் ஃப்ளாய்ட் அந்தக் காணொளியில் போலீஸாரின் பிடியில் இருந்தவரின் பெயர் ஜார்ஜ் ஃப்ளாய்ட். அவருக்கு வயது 46. அந்தக் காணொளியில் ஜார்ஜ் "என்னால் மூச்சு விட முடியவில்லை; தயவு செய்து என்னைக் கொல்லாதீர்கள்" என்று கூறுகிறார். Image copyright TWITTER/RUTH RICHARDSON Image caption ஜார்ஜ் ஃப்ளாய்ட் அமெரிக்காவில் கருப்பினர்த்தவர்கள் போலீஸாரால் கொல்லப்படுவது குறித்து ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் இருக்கும் நிலையில், இந்த சம்பவம் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய நான்கு போலீஸாரின் மீதும் கொலைக்குற்றம் சுமத்தப்பட வேண்டும

மாநில சுயாட்சியின் தேவை.

படம்
கேரளா அரசுக்கு தகவல் தெரிவிக்காமல் வெளிமாநிலங்களில் இருந்து புலம் பெயர் தொழிலாளர்களுக்கான ரயில்களை அனுப்புவதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது: கேரளாவிடம் தெரிவிக்காமல் மஹாராஷ்டிராவிலிருந்து மேலும் ஒரு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணிகள் விவரங்களைப் பெறுவதற்காக அதை ரத்துசெய்து அதன் பயணத்தை வேறொரு தேதிக்கு திட்டமிட அரசு தலையிட வேண்டும். தனிமைப்படுத்த ஏற்பாடு செய்ய மாநிலத்திற்கு வருபவர்கள் இணையதள போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில் எங்கள் கொரோனா கட்டுப்பாட்டு முயற்சிகள் வீணாகிவிடும் எங்கள் மாநிலத்திற்கு ஒரே ஒரு கோரிக்கை மட்டுமே உள்ளது. அதாவது வருபவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட வசதிகளை ஏற்பாடு செய்வதற்காக இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும், இது மாநிலத்திற்கு வரும் கேரள மக்களுக்கு எதிரானது அல்ல. பயணிகள் ‘கோவிட் -19 ஜாக்ரதா போர்ட்டலில்’ பதிவு செய்வது கட்டாயமாகும். வெளிநாட்டினர், வெளிமாநிலத்தில் இருந்து இங்கு வரும்போது மாநிலத்தில் சில ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டியது அவசியம். நோய் பரவக்கூடிய பகுதிகளிலிருந்து

நீ தனித்திரு. நாங்கள் இந்தியாவையே தனியாராக்குகிறோம்.

படம்
கொரோனா நோய் பரவலை தடுப்பதற்காக கடந்த 2 மாதங்களாக பொது முடக்கம் அமலில் இருந்தால் மக்கள் அனைவரும் வீட்டில் முங கிய நிலையில்  மத்திய பா.ஜ.க. அரசு இந்தியாவின் பொருளாதர கட்டமைப்பையே சீரழிக்கும் நடவடிக்கையில் கடுமையாக செயல்பட்டு வருகிறது. லாபம் தரும் பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் தனியாருக்கு விற்று வருகிறது. நிதியில்லை எனக் கூறி மக்கள் கொரோனா கால வேலையிழப்பு,வருமானமின்மைகளுக கு உதவாத வெற்று அறிக்கைகளை வாரக்கணக்கில் தொலைக்காட்சியில் நிதியமைச்சர் அறிவிக்கிறார். ஆனால் பொதுத்துறை நிறுவனங்களை கையகப்படுத்த பணமுதலைகளுக்கு,ஏற்கனவே வாராக் கடன்தார் பட்டியலில் உள்ளவர்களுக்கு வங்கிகள் மேலும் பலகோடிகளை கடனாக வாரி வழங்க நிதியமைச்சகம் ஆணையிட்டுள்ளது. பெட்ரோல்,காப்பீடு,ரெயில்,விமானம் என ஆரம்பித்து ராணுவ தளவாடங்களையும் தனியார் மயமாக்கிய மோடி தற்போது வனங்களையும்,பசுமைக் காடுகளையும் தனியாருக்கு சத்தமே இல்லாமல் விற்றுள்ள அதிர்ச்சி தகவல் வெளி வந்துள்ளது.   மத்திய சுற்றுச்சூழல் வன மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம், உயிரியல் முக்கியத்துவம்வாய்ந்த 30 காடுகளை தனியார் திட்டங்களுக்காக தாரை வார்த்துள்ளது.  கொரோனா வைரஸ