இடுகைகள்

செப்டம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இரு பதவியேற்புகள்.

படம்
  இந்திய ஒன்றிய   அரசின் புதிய தலைமை வழக்கறிஞர் இந்திய ஒன்றிய  அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் ஆர்.வெங்கடரமணி நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.  இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பிறப்பித்திருக்கிறார்.  இவர், பதவியேற்கும் நாளிலிருந்து மூன்று ஆண்டுகள் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக தொடர்வார் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. இவர் தமிழ்நாடு பார் கவுன்சிலில் கடந்த 1977-ம் ஆண்டு பதிவுசெய்தார்.  1982-ம் ஆண்டு முதல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். உச்ச நீதிமன்றத்தில் 42 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் பணியாற்றியிருக்கிறார்.  சுற்றுச்சூழல் சட்டங்கள், வரி தொடர்பான வழக்குகள், அரசியல் சாசனம், பழங்குடியினர் உரிமைகள் மற்றும் குழந்தைகள், பெண்கள் உரிமைகள் குறித்த பல வழக்குகளில் ஆஜராகியிருக்கிறார்.  பல்வேறு உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசுகள், ஒன்றியஅரசின் சார்பில் வாதாடியுள்ளார்.  இந்திய சட்ட ஆணையத்தின் உறுப்பினராக கடந்த 2010-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை பணிசெய்துள்ளார். ------------------------------------------------------------------

உலக நாயகன்

படம்
 " கமல்ஹாசன்".  அது வெறும் பெயர் அல்ல, சினிமா துறையில் சாதிக்க துடிக்கும் எண்ணிலடங்கா இளைஞர்களின் இன்ஸ்பிரேஷன். திரைத்துறையில் 4 அல்லது 5 ஆண்டுகள் முன்னணி நட்சத்திரமாக நிலைத்து நிற்பதே கடினம். அப்படி இருக்கையில் 60 ஆண்டிற்கு மேல் தனது அசாத்திய திறமையால் திரையுலகை கட்டி ஆளும் கலையுலக நாயகன் கமல்ஹாசன்.  6 வயதில் அரை கால்சட்டையுடன் தொடங்கிய இந்த அசாத்திய பயணம் 67 வயதை தாண்டியும் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. கமல்ஹாசன் எனும் மகா கலைஞனை  நடிப்பு எனும் சிறு வட்டத்திற்குள் மட்டும் சுருக்க முடியாது. நடிப்பை தாண்டி, இயக்கம், எழுத்து, தயாரிப்பு, பாடகர் என ஒவ்வொரு துறையிலும் தனக்கென தனி முத்திரை பதித்திருக்கிறார்.  கலைப்பசியை போலவே கமல்ஹாசன் கொண்டிருந்த இன்னொரு அடங்காப்பசி தொழில்நுட்பம் மீதானது.  நாம் சமகாலத்தில்  கொண்டாடும், பயன்படுத்தும், புரிந்துகொள்ள திணறும் பல தொழில்நுட்பங்களை பல ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் சினிமாவிற்கு அறிமுகபடுத்திய தீர்க்கதரிசி.  சிறந்த கலைஞன் கமல்ஹாசன் சினிமா துறைக்கு அறிமுகப்படுத்திய சில தொழில்நுட்பங்களை பற்றி.......... விக்ரம் -   கம்பியூட்டரில்  பாடல் பதிவு (

மேலூம்,கீழும்

படம்
  இந்தியாவில் நடப்பு ஆண்டில் 1000 கோடி ரூபாய் அல்லது அதற்கு மேல் சொத்துகளை உடைய பெரும் பணக்காரர்களின் பட்டியலை ஐ.ஐ.எப்.எல். வெல்த் ஹரூன் இந்தியா நிறுவனம் முன்னதாக வெளியிட்டது. அதில், ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி முதலிடத்தைப் பிடித்திருக்கிறார்.  முன்னதாக அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸை பின்னுக்குத் தள்ளி உலகின் இரண்டாவது பணக்காரராகவும் உருவெடுத்தார் அதானி. இந்நிலையில், இந்த சாதனையை நிகழ்த்த கடந்த ஓராண்டில் கவுதம் அதானி தினமும் 1600 கோடி ரூபாய் சம்பாதித்திருக்கிறார் எனத் தகவல்கள் வெளிவந்தன. கவுதம் அதானியின் மொத்த சொத்து மதிப்பு 10 லட்சத்து 94 ஆயிரத்து 400 கோடி ரூபாயாக தற்போது உள்ளது. அதில், ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி முதலிடத்தைப் பிடித்திருக்கிறார்.  முன்னதாக அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸை பின்னுக்குத் தள்ளி உலகின் இரண்டாவது பணக்காரராகவும் உருவெடுத்தார் அதானி. இந்நிலையில், இந்த சாதனையை நிகழ்த்த கடந்த ஓராண்டில் கவுதம் அதானி தினமும் 1600 கோடி ரூபாய் சம்பாதித்திருக்கிறார் எனத்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா:

படம்
  வாக்காளர் அடையாள அட்டை. சில திருத்தங்கள் ! 18 வயது பூர்த்தி அடைவதற்கு முன்னரே, பதின்ம பருவத்தினர் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  வாக்காளர் அட்டைகளை மக்கள் அனைவரும் பெற வேண்டும் என்றும், அதிகளவில் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற கோணத்திலும் தேர்தல் ஆணையம் திட்டமிட்டு, வசதிகளை செய்து வருகிறது. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களின்படி, ஜனவரி 1, 2023 அன்று 18 வயது நிறைவடைந்தவர்களும் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். 18 ஆண்டுகள் நிறைவடைந்தவர்கள் தேர்தல்களில் வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை அவசியமானது.  ஆனால், வாக்காளர் அட்டை இல்லாதவர்கள் ஏராளமாக உள்ளனர். எனவே, வாக்காளர் அட்டைகள் அனைத்து மக்களுக்கு கிடைக்கும் வகையில், தேர்தல் ஆணையம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களின்படி, ஜனவரி 1, 2023 அன்று 18 வயது நிறைவடைபவர்களும்  வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.  இத்துடன் ஆண்டுக்கு 3 முறை வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கும் வசதியை தேர்தல் ஆணையம் வழங்கி வருகிறது.  புதிய வாக்காளர்கள் தங

ஜக்கி (விதிமீறல்)தேவ்

படம்
  கோ வையில் உள்ள கோவை ஈஷா அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்ட கட்டடங்களுக்கு சுற்றுசூழல் அனுமதி பெறவேண்டும் என்ற விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மோடி ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. தொடர் சர்ச்சையில் ஈஷா யோகா மையம் வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் ஈஷா யோக மையத்தின் மீது வன ஆக்ரமிப்பு தொடர்பாக, தொடர்ந்து குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வந்தது. * யானையின் வழித்தடங்களை ஆக்ரமித்தது; அரசு நிலங்களை வளைத்தது; மலையில் இருந்து இறங்கி வரும் சிற்றோடையை ஆசிரமத்திற்குள் மடைமாற்றியது; * இளம்பெண்களை சந்நியாசியாக மாற்றியது எனக் கடந்த 15 ஆண்டுகளாக ஈஷா பெயர் அவ்வப்போது சர்ச்சையில் அடிபட்டது உண்டு. எதிர்ப்புகளுக்கு மத்தியில் திறக்கப்பட்ட சிவன் சிலை இன்னொரு பக்கம் ஆண்டுதோறும் அங்கு கோலாகலமாக கொண்டாடப்படும் மகாசிவராத்திரி கொண்டாட்டம் குறித்தும் சர்ச்சைகள் எழுவது உண்டு.  வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைக்கப்பட்ட ஆதி யோகி சிவன் சிலையையே, கடந்த 2017 ஆம் ஆண்டு பிரதமர் மோடிதான் திறந்து வைத்தார். * 'காட்டு வளங்களை அழிக்கும் ஈஷா நிகழ்ச்சியில்

அவர்கள் கண்களுக்கு மட்டுமே தெரியும்

படம்
  மதுரைக்கு பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் நட்டா வந்தார். ‘எய்ம்ஸ் மருத்துவமனையின் 95 சதவிகித கட்டுமானப் பணிகள் முடிந்துவிட்டது' என்றார். சென்றார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தில், ரூ.5 கோடி செலவில் சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்ட நிலையில், 95 சதவிகித கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றதாக பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளதைப் பார்க்கும் போது, பா.ஜ.க. எந்த வகைப்பட்ட கட்சி என்பதை இது உணர்த்துகிறது.  யார் மனைவியெல்லாம் பத்தினியோ அவர்கள் கண்களுக்கு மட்டுமே தெரியும் என்ற வடிவேலு நகைசுவையாகி விட்டது. தான் பொய் சொல்வது மட்டுமல்ல, அந்தப் பொய்யைத் தன்னைப் போலவே அனைவரும் திருப்பிச் சொல்ல வேண்டும் என்று நினைக்கும் கட்சி அது. மதுரை மாவட்டம் தோப்பூரில் 224 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.  3 ஆண்டுகளாகியும் 5 கோடி ரூபாயில் சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. மாநில அரசிடமிருந்து 224.24 ஏக்கர் நிலம் ஒன்றிய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. திட்ட மதிப்பீடு ஆயிரத்து 977 கோடி ரூபாயாக அதிகரித்த நிலையில், ஓரா

தனது முயற்சியில் தளரா

படம்
  52 ஆண்டுகளாக லாட்டரி சீட்டு வாங்க கோடிக்கணக்கில் செலவழித்த நபருக்கு இதுவரையில் மொத்தமாக மிக சொற்பமான பரிசு மட்டுமே விழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த ராகவன்.  இவர் கடந்த 52 ஆண்டுகளாக லாட்டரி சீட்டுகளை வாங்கி வருகின்றார். அதன்மூலம் தனது வாழ்க்கை என்றென்றும் மாறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். இவர் இதுவரை லாட்டரி சீட்டுக்கு செலவு செய்த தொகை மொத்தம் ரூ.3.5 கோடியைத் தாண்டியுள்ளது.இவ்வளவு செலவு செய்தது கூட அவருக்குத் தெரியாது.  அவர் வைத்து இருந்த பழைய சீட்டுகளை மொத்தமாக எண்ண ஆரம்பித்தபோது தான் இந்த விஷயம் தெரிய வந்தது. ராகவன் தனது வருமானத்தில் ஒரு பகுதியை லாட்டரி சீட்டுக்காக ஒதுக்கி வருகிறார். அவர் இதுவரை வாங்கிய பழைய லொட்டரிகள் சாக்கு மூட்டைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. சமீபகாலமாக அனைத்தையும் கூட்டி கணக்கிட்டால் மொத்தம் ரூ.3.5 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்படி அவர் லாட்டரி வாங்கி இருந்தாலும் அவர் வென்ற அதிகபட்ச லாட்டரி பணம் எவ்வளவு தெரியுமா..?  வெறும் ரூ. 5 ஆயிரம் மட்டுமே. இருந்தாலும் அவர் தான் லாட்டரி வாங்கும் முயற்சியை