இடுகைகள்

நவம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கண்டிப்பார்களா?

படம்
 தமிழ்நாடு ஆளுநர், ஆர்.என்.இரவி அவர்களின் பேச்சுகள் சர்ச்சைக்குரியதாக இருப்பது மட்டுமல்ல, அவரது நடவடிக்கைகளும் சந்தேகத்துக்குரியதாக இருக்கின்றன. கோவை சம்பவத்தை மூன்றே நாட்களில் என்.ஐ.ஏ. விசாரணைக்கு உத்தரவிட்டது தமிழ்நாடு அரசு. அந்த மூன்று நாள் தாமதத்தையே பெரிய சர்ச்சை ஆக்கினார் ஆளுநர்.  சம்பவம் நடந்ததும் என்.ஐ.ஏ. வரவுக்காகக் காத்திருக்காமல் அனைத்து தடயங்களையும் திரட்டி, அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்து வழங்கியது தமிழ்நாடு காவல்துறை. அதனையே சந்தேகப்பட்டார் ஆளுநர். இப்போது கர்நாடக பா.ஜ.க. அரசு என்ன செய்துள்ளது?  ஆறுநாட்கள் கழித்து தான் என்.ஐ.ஏ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அது பற்றி எல்லாம் இவருக்கு கவலை இல்லை. அதனைப் பற்றி இவர் கருத்துத் தெரிவிக்கவில்லை. இது எல்லாம் ஏன் என்பது அனைவருக்கும் தெரியும். தி.மு.க. அரசைப் பற்றி ஏதாவது குறை சொல்ல வேண்டும். அதற்காக எதையாவது சொல்வது என்று இருந்தார் ஆளுநர். இதோ, இப்போது ஆன்லைன் ரம்மி தடை செய்யும் அரசின் சட்டத்துக்கு அனுமதி வழங்குவதில் ஆளுநர் ஏற்படுத்தும் காலதாமதம் சந்தேகத்துக்குரியதாக பொதுமக்களால் பார்க்கப்படுகிறது. ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்

கணினியை மிஞ்சும் மூளை

படம்
மனித மூளை, கணினி(கம்ப்யூட்டரை)யைவிட விரைவாக சிக்கல்களைத் தீர்க்கும் திறன் கொண்டது.  தகவல்களை, 260 MPH வேகத்தில் அனுப்பும் திறன் கொண்டது நமது மூளை என்பது ஆச்சரியமான தகவல்.  அதேபோல, மூளையின் திசுக்களில் வலி அறியும் தன்மை இல்லை. எனவே நாம் விழித்திருந்தாலும், அறுவைசிகிச்சை செய்வது எளிதானது என்பது வியப்பளிக்கிறது.  அதேபோல, நாம் தூங்கும்போதும், நமது மூளை ஓய்வு எடுப்பது இல்லை. நாம் உறங்கும் போது, தேவையற்ற சிந்தனைகள், கனவு என மூளை இயங்கிக் கொண்டே இருக்கிறது.  நமது மூளையின் ஒரு பகுதியின் பெயர் க்ரே மேட்டர் (Gray Matter). புத்திசாலித்தனத்தைக் குறிக்க ஆங்கிலத்தில் பயன்படுத்தும் சொல் Gray Matter! மனித மூளையானது, கணினியை விட விரைவாக சிக்கல்களைத் தீர்க்கும் திறன் கொண்டது.  தகவல்களை, 260 MPH வேகத்தில் அனுப்பும் திறன் கொண்டது நமது மூளை என்பது ஆச்சரியமான தகவல். அதேபோல, மூளையின் திசுக்களில் வலி அறியும் தன்மை இல்லை. எனவே நாம் விழித்திருந்தலும், அறுவைசிகிச்சை செய்வது எளிது. அதேபோல, நாம் தூங்கும்போதும், நமது மூளை ஓய்வு எடுப்பது இல்லை.  நாம் உறங்கும் போது, தேவையற்ற சிந்தனைகள், கனவு என மூளை இயங்கிக் கொண்டே

சூதாட்டத்தில் ஒரு சதிராட்டம்

படம்
அதிமுக ஆட்சியில் 2020ம் ஆண்டு ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அச்சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.  இதையடுத்து, தமிழ்நாடு அரசின் சட்டத்துக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இத்தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது. இதன்பின் திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், ஆன்லைன் சூதாட்டங்களால் பணத்தை இழப்பதால் நேரிடும் தற்கொலைகளைத் தடுக்க வலுவான புதிய சட்டத்தைக் கொண்டு வரவேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.  இதையடுத்து, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே. சந்துரு தலைமையில் இதுகுறித்து ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு ஜூன் மாதம் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. இந்த அறிக்கை அடிப்படையிலேயே ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான அவசர சட்டத்திற்கு செப். 26 தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.  இதைத்தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார். இந்த அவசர சட்டம்தான் 60 நாட்கள் முடிந்து நேற்றுடன் (நவ. 27) காலாவதியானது. அதற்கு மாற்றாக இயற்றப்பட்ட சட்ட மசோதாவுக்

அரியலூர் பயங்கரம்

படம்
நாட்டை உலுக்கிய அரியலூர் ரயில் விபத்து நடந்து இன்றோடு 66 ஆண்டுகள்  ஆகின்றது. இதே நவம்பர் 23  தேதிதான் அந்த நாட்டையே உலுக்கிய அரியலூர் ரயில் விபத்து நடந்து 66 ஆண்டுகள் ஆகிறது. ரயில் பயணம் பாதுகாப்பானது. இதனால் பொதுமக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தையே விரும்புகிறார்கள். ஆனால் விபத்துகள் அரிதாக இருந்தாலும், அப்படி விபத்துக்கள் நிகழ்ந்தால் பெரிய அளவில் சேதங்கள் ஏற்படுகிறது ரயில் பயணத்தில்தான். அந்த வகையில் கடந்த 1956-ஆம் ஆண்டு நவம்பர் 23-ஆம் தேதி அரியலூரில் நிகழ்ந்த விபத்து இந்தியாவையே உலுக்கியது. ஒன்றிய அமைச்சராக இருந்த லால் பகதூர் சாஸ்திரியை பதவியைவிட்டு  விலகச் செய்யதது  இந்த அரியலூர் விபத்துச் சம்பவம். இந்தவிபத்துஇந்த நாள் இரவு 9.30 மணிக்கு, சென்னை எழும்பூர் நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு விரைவு ரயில்(வண்டி எண். 603) 13 பெட்டிகளில் 800 பயணிகளை சுமந்து கொண்டு புறப்பட்டது.  அப்போது நீராவி என்ஜின் இணைக்கப்பட்ட அந்த ரயில் கொட்டும் மழையிலும் கரும்புகையை கக்கிக் கொண்டு கிளம்பியது. இந்த ரயிலில் பயணம் செய்த யாருக்கும் இதுதான் நமது இறுதி பயணம் என்று தெரிந்திருக்கவில்லை.  ரயில் சென்ற ப

மோடி வம்சம்

படம்
 * "மோடி ஜி" - யின், குடும்பத்தைப் பற்றி தேடி கண்டறிந்த உண்மைகள்" நரேந்திர மோடி தன்னை அடிக்கடி ஏழை.ஏழைத்தாயின் மகன் என முழங்குவார். தனது சிறுவயதில் அக்காலத்தில் கட்டவேப்படாத ரெயில் நிலையத்தில். நிற்காத ரெயில்களில் ஓடி,ஓடி தேநீர் விற்றதாக பெருமையாகக் கூறுவார். கட்டப்படாத ரெயில் நிலையத்தில் நிற்காத ரெயிகளில் தேநீர் விற்பது என்பது கின்னஸ் பதில் கூட பதிவு செய்ய முடியாத பெருஞ்சாதனை. அப்பேர்பட்ட ஏழைத்தாய் குடும்பத்தைச் சேர்ந்த ஏழை பிள்ளைகளைப் பற்றிதான் இப்பதிவு. 1. சோமாபாய் மோடி (75 வயது) ஓய்வு பெற்ற மாநில சுகாதார துறை அதிகாரி - தற்போது குஜராத் மாநில பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர்.! 2. அமிர்தபாய் மோடி (72 வயது) முன்பு ஒரு தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்தவர், தற்போது அகமதாபாத் மற்றும் காந்திநகரில், மிகப்பெரிய ரியல் எஸ்டேட் தொழிலதிபர்.!. 3. பிரஹ்லாத் மோடி (64 வயது) ஒரு ரேஷன் கடை வைத்திருந்தவர், தற்போது இவர் வசம் ஹூண்டாய், மாருதி மற்றும் ஹோண்டா போர் வீலர், ஷோ ரூம்கள் வதோதரா மற்றும் அகமதாபாத்தில் உள்ளன.!. 4.பங்கஜ்மோடி (58 வயது) முன்னதாக மாநில தகவல் துறையில் வேலை செய்தவர் இன்று ச

தமில் வாள்க!

படம்
 காசிக்குப் போயிருக்கிறார்கள் சிலர்! எதற்காகவாம்?  பாவத்தைக் கழுவவா?  ஆமாம்! தமிழுக்கு இதுவரைச் செய்த பாவத்தைக் கழுவ வேண்டாமா? அதற்காகவாக இருக்கலாம்!பல நூறு ஆண்டு காலத் துரோகங்களை ஒரு மாத காலத்தில் கழுவ முடியுமா என்ன?  காசியில் எத்தனை ஆண்டுகள் தமிழ்ச் சங்கமம் நடத்தினாலும் கழுவ முடியாத பாவங்கள் செய்த கூட்டமல்லவா அது! நடுநாயகமாக இந்திய ஒன்றிய தலைமை அமைச்சர் நரேந்திரமோடி அவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். ''தமிழ்நாட்டின் பாரம்பர்ய வழக்கப்படி பிரதமர் அவர்களுக்கு அங்கவஸ்திரம் அணிவிக்கப்படுகிறது'' என்று அறிவிக்கிறார் தமிழகத்தின் புகழ்பெற்ற பேச்சாளர்.  தமிழ்ப் பாடல்களை எல்லாம் மனப்பாடமாகச் சொல்லிச் சொல்லிக் கைதட்டல் வாங்கி - எத்தனையோ பொன்னாடைகளை - எத்தனையோ மேடைகளில் பெற்றுக் கொண்ட அந்தப் பேச்சாளர் வாயில் 'அங்கவஸ்திரம்' தான் நுழைகிறது. இதுதான் அவர்களது தமிழ்ப்பற்று!  இவர்கள் தான் தமிழ்ச் சங்கமம் கூட்டுகிறார்கள்! நாடாளுமன்ற அலுவல் மொழி குறித்து ஆராய அமித்ஷா தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் என்ன சொல்லப்பட்டுள்ளது.  அனைத்தும் இந்தி, இந்தியைத் தவிர வேறில்லை என்று!

சங்கிகளின் சங்கமம்

படம்
 தமிழகத்தில் காலூன்றுவதற்காக பா.ஜ.க தீவிரமாக முயன்று வருகிறது. தமிழ் மொழியின் மீதும் தமிழக கலாச்சாரத்தின் மீதும் அக்கறை இருப்பது போல காட்டிக்கொள்ள எதையாவது செய்வது அக்கட்சியின் வாடிக்கை.  இதற்கு முட்டுக்கொடுக்கும் வகையில் ஒன்றிய அரசு நடந்துகொள்கிறது. ஒன்றிய கல்வி அமைச்ச கத்தின் நிதியுதவியுடன் உத்தரப்பிரதேச பா.ஜ.க அரசின் ஆதரவோடு காசியில் தமிழ்ச் சங்கமம் நடத்தப்படுகிறது.  இதற்காகத் தமிழகத்திலிருந்து 2500க்கும் மேற்பட்டோர் அணி அணியாக வாரணாசிக்கு அழைத்துச்செல்லப்படுகிறார்கள். ஐ.ஐ.டி மற்றும் இதர பிரதான கல்விக் கூடங்களில் பயிலும் மாணவர்கள், குறி வைத்து அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.  கர்நாடக மாநிலத்தில் ஆளுகின்ற பாஜக அரசு இஸ்லாமிய மாணவிகள் பர்தா அணியக் கூடாது.  பள்ளி வளாகங்களுக்குள் மதரீதியான குறியீடுகள் இருக்கக் கூடாது என்கிறது. ஆனால் ஐஐடி மற்றும் இதர கல்விக்கூடங்களில் இருந்து மாணவர்களை மதரீதியாக ஒருங்கிணைக்கும் பணியை ஒன்றிய அரசு மேற்கொண்டிருக்கிறது. தமிழக ஆளுநரும் ஒன்றிய இணை அமைச்சர் முருகனும் காசி தமிழ்ச் சங்கம நிகழ்ச்சிக்குப் பங்கேற்கச் சென்ற மாணவர்களுக்கு எழும்பூர் ரயில் நிலையத்தில் காவ

ரப்பர் ஸ்டாம்ப்

படம்
 தமிழக அரசின் பல முக்கியமான மசோதாக்கள் மீது எந்த ஒரு முடிவும் எடுக்காமல் கிடப்பிலேயே போட்டு வைத்திருக்கிறார் ஆளுநர் ரவி. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 தமிழர் விடுதலை தொடர்பான விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுக்காதது தொடர்பாக உச்சநீதிமன்றம் மிக கடுமையாக விமர்சித்திருந்தது. ஒரு கட்டத்தில் ஆளுநரைப் புறக்கணித்துவிட்டு 7 தமிழரையும் விடுதலையும் செய்துவிட்டது உச்சநீதிமன்றம்.  இதனால் தார்மீக அடிப்படையில் ஆளுநர் ஆர்.என்.ரவி   திரும்ப பெற வேண்டும் என்பதும் தமிழக தலைவர்களின் குரல். ஏற்கனவே ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும் என ஜனாதிபதியிடம் திமுக எம்.பிக்கள் மனுவும் கொடுத்துள்ளனர். டிசம்பர் 29-ந் தேதி ஆளுநர் பதவி விலக வலியுறுத்தி 1 லட்சம் பேருடன் முற்றுகைப் போராட்டம் நடத்தப் போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் அறிவித்தும் உள்ளார். தி.மு.க.கூட்டணியினர் குடியரசுத் தலைவரிடம் மனு கொடுக்க செல்கிறார்கள் என்ற உடனே டெல்லி சென்று இரண்டு நாட்கள் ரவி முகாமிட்டார். பின் திமுக மக்களவை உறுப்பினர்கள் குடியரசுத்தலைவரை சந்திக்க காலம் கேட்ட போது அவர்தரவில்லை.எனவே அங்குள்ள அலுவலரி

800 கோடிகளை எட்டும்.

படம்
  உலக மக்கள் தொகை 800 கோடியை தொட்டது.  கடந்த 12 ஆண்டுகளில் உலக மக்களை தொகை 100 கோடி அதிகமாகி உள்ளது.  உலக மக்கள் தொகை 800 கோடியை எட்டும் என்று ஐ.நா, கணித்துள்ளது. மக்கள் தொகையின் உச்சம் படிப்படியாக அதிகரித்து 2086 இல் 10.4 பில்லியனாக இருக்கும் எனவும் அவர்கள் கூறுகின்றனர். குறைந்த அளவிலான கருவுறுதல் உள்ளிட்ட காரணங்களால் 2022 - 2050ஆம் ஆண்டுகளுக்கு இடையில் 61 நாடுகளின் மக்கள்தொகை ஒரு சதவீதம் அல்லது அதற்கும் அதிகமாக குறையும் என்றும் உலக மக்கள் தொகை பற்றிய ஐ.நா., அறிக்கை கணித்துள்ளது.  காங்கோ ஜனநாயக குடியரசு, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் மற்றும் தான்சானியா ஐக்கிய குடியரசு ஆகிய எட்டு நாடுகளில் மக்கள் தொகை அதிகரிக்கும் எனவும், 2050 ஆம் ஆண்டு வரை அதிகரிக்கும் உலக மக்கள்தொகையில் பாதிக்கும் மேல் இந்த நாடுகளில் மட்டுமே அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. 1990 ஆம் ஆண்டை ஒப்பிடும் போது 9 ஆண்டுகள் அதிகரித்து 2019 இல் உலகளாவிய சராசரி ஆயுட்காலம் 72.8 ஆண்டுகளை எட்டியுள்ளது.  இது மேலும் அதிகரித்து 2050 இல் உலகளாவிய சராசரி ஆயுட்காலம் 77.2 ஆண்டுகளாக உய

தலைவலிக்கு மேல் தலைவலி.

படம்
   எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கூறப்பட்டுள்ள புதிய ஊழல் குற்றசாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதால் மேல் நடவடிக்கைக்கு தயாராகி வருவதாக தமிழக லஞ்ச ஒழிப்பு துறை தெரிவித்திருப்பதால், அவருக்கு சிக்கல் மேலும் அதிகரித்துள்ளது. ஏற்கெனவே எடப்பாடிக்கு தலைவலியை ஏற்படுத்திய கொடநாடு பங்களா கொலை, கொள்ளை வழக்கின் விசாரணையை சி.பி.சி.ஐ.டி க்கு மாற்றி தமிழ்நாடு டி.ஜி.பி சைலேந்திரபாபு கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவிட்டார்.  இதனையடுத்து தனிபடை போலிசாரிடமிருந்து வழக்கு விசாரணை தொடர்பான ஆவணங்களை சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவினர் பெற்று, விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளனர். இது ஒருபுறம் இருக்க, எடப்பாடி மீதான ரூ. 4,800 கோடி நெடுஞ்சாலை துறை டெண்டர் ஊழல் முறைகேடு வழக்கும் அவருக்கு நெருக்கடியைக் கொடுத்து வந்தது. இவ்வழக்கில் எடப்பாடி மீது நடவடிக்கை எடுக்கலாம் என கடந்த செப்டம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் கூறியிருந்தது. இதனால் இந்த ஊழல் வழக்கில் எடப்பாடி பழனிசாமி மீது எப்போது வேண்டுமானாலும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் பாயக்கூடும் எனக் கூறப்பட்டு வந்த நிலையில்தான், அடுத்த ஊழல் புகாரிலும் சிக்கி உள்ளார் எடப்பாடி பழ

தவறானதால் பலி

படம்
 சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் பிரியா.  இவர் சென்னை ராணி மேரி கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார்.  கால்பந்து வீராங்கணையான பிரியா மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்றுள்ளார். மூட்டு வலி காரணமாக கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக சென்ற  பிரியாவைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவரது வலது கால் மூட்டுப் பகுதியில் ஜவ்வு விலகி உள்ளதாகக் கூறி, அறுவை சிகிச்சை செய்துள்ளனர். ஆனால்  அறுவை சிகிச்சைக்குப் பின், காலில் வீக்கம் ஏற்பட்டு பிரியா உணர்விழப்பு ஏற்பட்டதால், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு உயர்சிகிச்சைக்காக பிரியா அனுப்பப்பட்டார்.  அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் அவரது வலது காலில் ரத்த ஓட்டம் தடைபட்டிருப்பது தெரியவந்தது. மேலும் ரத்தம் கட்டி,ரத்த ஓட்டம் தடையாகியுள்ளதையும்,கால் மிக வீங்கி மோசமான  நிலையில்  இருப்பதையும் கண்டறிந்த மருத்துவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதைத் தடுப்பதற்காக காலை அகற்ற வேண்டும் என உடனடியாக அறுவை சிகிச்சை செய்து, வலது கால் அகற்றினர். பெங்களூருவில் உள்ள

அரியவகை ஏழைகள்

படம்
  எடப்பாடி வியூகம் சில காலமாக எடப்பாடி பழளிசாமி செயல்பாடுகள் இல்லை. எதிர்கட்சியின் செயல்பாடுகளை பாஜகதான் செய்கிறது என்ற பேச்சுகள் எழ்ழுந்துள்ளது. அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கப் போகிறது, தீர்ப்பு எப்படி வந்தாலும் தனது பாதை இதுதான் என்பதில் எடப்பாடி பழனிசாமி தெளிவாக இருக்கிறாராம். பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் தமிழகம் வருகை அதிமுகவில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கூறிவரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி புதிய திட்டத்துடன் தனது ஆதரவாளர்களை தயார்படுத்தி வருகிறார். கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் என பெரும்பான்மையான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி பக்கமே நிற்கின்றனர்.  ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவை சென்னை உயர் நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது.  இதை எதிர்த்துஓ.பன்னீர்செல்வம் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில் அது தொடர்பாக இந்த மாதம் தீர்ப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது. தீர்ப்பு எப்படியும் தங்களுக்கு சாதகமாக இருக்கும் என எடப்பாடி பழனிசாமி தரப்ப