இடுகைகள்

அக்டோபர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வதந்தி கிளப்பும் சேட்டன்மார்

படம்
 கேரளாவில் அதிகமாக மழை பெய்கிறது. ஆனால் சிலருக்கு முல்லைப் பெரியாறு அணையைப் பார்த்தால் ஏனோ வேர்க்கிறது. அதிகமாக மழை பெய்வதைக் காரணமாகக் காட்டி, முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்து என்று வதந்தியைக் கிளப்பி விட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.  அதிகமாக மழை பெய்வதுகூட அவர்களுக்கு ஒரு காரணம்தானே தவிர, உண்மையான உள்நோக்கம் அவர்களுக்கு முல்லைப் பெரியாறு அணைதான் உருத்துகிறது முல்லைப் பெரியாறு அணை கம்பீரமானது. அதற்கு எந்த ஆபத்தும் இல்லை. தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மறுக்கும் சக்திகள் தான், ‘முல்லைப் பெரியாறு அணை பலவீனமானது’ என்பதை தொடர்ந்து ஒரு பொய்ப் பிரச்சாரமாக முன்னெடுத்து வருகிறார்கள்.இந்த விவகாரத்திற்கு ஆரம்ப நிலையிலேயே கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள் முற்றுப்புள்ளி வைத்திருப்பதை பாராட்ட வேண்டும்.  “முல்லைப் பெரியாறு அணை ஆபத்தான நிலையில் உள்ளது எனவும் லட்சக்கணக் கானவர்கள் உயிரிழக்கப் போகிறார்கள் எனவும் சமூக வலைத்தளம் மூலம் சிலர் பரப்புகின்றனர். உண்மையில் அதுபோன்ற ஆபத்து ஏதும் இல்லை.  முல்லைப் பெரியாறு அணை ஆபத்தான நிலையில் உள்ளதாக பொய் பரப்புரை செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட

மிளகு கொதிநீர்.

படம்
  பெ ரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள உடல் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டியது அவசியம். அதிலும் பெரும்பாலான மக்கள் தற்போது ஆயுர்வேதம் மற்றும் இயறகை பொருட்களில் உள்ள மருத்துவ குணங்களை நாடிச்செல்கின்றனர். இயற்கை மருத்துவம் மட்டுமல்லாது இயற்கையாக கிடைக்கும் உணவுப்பொருட்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகினறனர். இதனை கருத்தில் கொண்டு பலரும் தங்களது தினசரி உணவு முறையில் மற்றம் செய்துள்ளனர். உடலின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டியது கட்டாயம். இயற்கையில் கிடைக்கும் பொருட்களில் நோய் எதிர்ப்பு பண்புகள் அதிகம் இருந்தாலும், அந்த உணவு எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அந்த நிலையில் உள்ளவர்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஒரு சிறந்த மற்றும் எளிய வழிமுறை உள்ளது. கருப்பு மிளகு தண்ணீர் ஒரு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முக்கிய பானமாக உள்ளது. இந்த நீரை தயாரிக்க நீண்ட நேரம் தேவையில்லை. அதிக பொருட்களும் தேவையில்லை. வீட்டில் எளிமையாக கிடைக்கும் தண்ணீர் மற்றும் மிளகை பயன்படுத்தி எளிய முறையில் இந்த நீரை தயாரித்

வினோத(ராய் பொய்) வழக்கு

படம்
 காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான அரசு 2004-2009 மற்றும் 2009 முதல் 2014-ஆம் ஆண்டுகள்வரை ஆட்சியில் இருந்தது. அதில் முதலாவது ஆட்சியில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிஐ விசாரணை நடத்தியது. அதில் மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சரான ஆ. ராசா, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீதும் மூன்று தனியார் நிறுவனங்கள் மீதும் சிபிஐ 2011-ஆம் ஆண்டில் வழக்குப் பதிவு செய்தது. இதேபோல மத்திய அமலாக்கத் துறையும் தனியாக தொடர்ந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடந்தது. இந்த வழக்குகளின் விசாரணை கடந்த ஆறு ஆண்டுகளாக டெல்லி சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் நடைபெற்று வந்தது. நீதிபதி ஓ.பி. சைனி வழங்கிய இந்த தீர்ப்பில் உள்ள சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:- 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு நடைமுறையில் குற்றங்கள் நடைபெற்றதா என்பதை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்ட ஓ.பி. சைனி, குற்றச்சாட்டுகளை நிரூபிக்க சிபிஐ அமைப்பு

ஆளுநர் தலையீடு..

படம்
  இந்தியாவில் பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆளுநரை வைத்து அந்தந்த மாநில அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது மத்தியில் ஆளும் பாஜக அரசு. தமிழ்நாட்டில் திமுக ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் மாற்றப்பட்டு ஆர்.என். ரவி ஆளுநராக நியமிக்கப்பட்டார். சர்ச்சைக்குரிய நபராக  அறியப்படும் ரவி தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டது பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கிய நிலையில் அப்போதே காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ரவியின் நியமனத்திற்கு கண்டனம் தெரிவித்தனர். ஆனால், ரவி தமிழ்நாட்டில் நியமிக்கப்பட்ட பின்னர் சத்தமின்றி  அவர் நேரடியாக தமிழ்நாட்டின் அரசுத்துறைகளில் தலையிட்டு அதிகாரிகளுடன் பேசி சில கோப்புகளைக் கேட்பதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான செய்திகள் சில ஆங்கில ஊடகங்களில் வெளியானது. இப்போது தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் மத்திய, மாநில அரசு நலத்திட்டங்களின் விபரங்கள்  அதற்காக எவ்வளவு நிதிகள் ஒதுக்கப்படுகின்றன? பயனடைந்த மகக்ளின் விபரங்களை ஆளுநர் ரவிக்கு அனுப்பி வைக்க தயாராக இருக்க வேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு அரசுத்துறை செயலாளர்களுக்

தளர்வுகள்.

படம்
  தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மே மாதங்களில் கொரோனா தொற்றின் 2-வது அலை தீவிர பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்ததை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. தற்போது தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு இல்லாமல் உள்ளது. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவில் மேலும் தளர்வுகள் அறிவிப்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன மூதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார். இன்னும் 2 வாரங்களில் தீபாவளி பண்டிகை வருவதையெட்டி பொது இடங்களில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்ப்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தின் முடிவில் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்குஉத்தரவு நவம்பர் 15-ந் தேதி வரை நீடிக்கப்படுவதாகேட்டுக்கொள்ளப்படுகிறது. தமிழ்நாட்டில், கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், 31.10.2021 காலை 6.00 மணி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. கொரோனா நோய்த்

கடைசி இடத்தில் இந்தியா.. ‘

படம்
 ‘ 100 கோடி தடுப்பூசி செலுத்திய சாதனை’ என்பது கொண்டாடக்கூடியதா? இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி செலுத்தி சாதனை படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  இந்த 100 கோடி மக்களுக்குத் தடுப்பூசி போட்ட சிறப்புமிகு பணியில் ஒன்றிய மற்றும் பல மாநில அரசுகளின் முழு முயற்சிகள் இருந்தன! இந்தப் பணியில் ஈடுபட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப் பணியாளர்கள் பாராட்டுக்குரியவர்கள். அதேநேரத்தில் இந்தச் செய்திக்குத் தந்துள்ள முக்கியத்துவமும், பிரதமர் மோடி தனக்குத் தானே முதுகில் தட்டிக்கொண்டு பாராட்டிக் கொள்வது போல முன்னின்று கடந்த இரு தினங்களாக விடுத்த செய்திகளும் ‘கொரோனா’ தொற்று முற்றிலும் இந்தியாவிலிருந்து ஒழிந்துவிட்டது போன்ற ஒரு தோற்றத்தை நாட்டு மக்களுக்கு உணர்த்திடும் வகையில் உள்ளதோ என்ற அச்சம் வருகிறது! வரும் மாதங்கள் தொடர்ந்து தீபாவளி, பொங்கல் போன்று மக்கள் கூடிடும் பண்டிகைகள் வர இருக்கும் காலமாகும்! பிரதமர் 100 கோடி தடுப்பூசி போடப்பட்ட தாகக் கூறினாலும், இந்தியாவில் முழுவதுமாக - அதாவது, இரண்டு முறை தடுப்பூசிகள் ஏற்றவர்களின் சதவீதம் வெறும் 21 சதவீதம்தான் என ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக கோவிட் ஆதார மையம் (

மாட்டிக் கொண்ட வலது கை இளங்கோ

படம்
  ஊழல் செய்தவர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தப்பிக்க முடியாது. ஊழல் செய்தவர்களுக்கு கருணை காட்டமுடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி நீட்டி முழக்கி யுள்ளார். குஜராத் மாநிலம் கீவாடியாவில் மத்திய புலனாய்வுத்துறை மற்றும் மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் கூட்டுக் கூட்டத்தில் பேசிய அவர் 2017ஆம் ஆண்டு தாம் ஆட்சிப் பொறுப்பேற்றபிறகு ஊழலை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று தமக்குத் தானே நற்சான்றிதழ் வழங்கி கொண்டிருக்கிறார்.  இவர் ஊழலை ஒழித்த லட்சணத்தை ஊரறி யும், உலகறியும். பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய்களை சுருட்டிக் கொண்டு வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிய வர்களில் ஒருவரைக்கூட பிடித்து வந்து நீதியின்  முன்னால் இவரது ஆட்சியால் நிறுத்த முடியவில்லை. மாறாக மல்லையா, நீரவ் மோடி, சோக்சி உள்ளிட்ட ஊழல் குற்றவாளிகளுடன் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருக்கிறது மோடி அரசு. இந்த லட்சணத்தில் உலகின் எந்த மூலையிலிருந்தாலும் கருணைக் காட்ட மாட்டோம் என்ற சவடால் வேறு. ரபேல் ஊழல் ஒன்று போதும் மோடி அரசின் நேர்மையான செயல்பாட்டிற்கு. புலனாய்வு அமைப்புகளை கையில் போட்டுக் கொண்டு, நீதித்த

ஐம்பதாண்டு வரலாற்றின் பின்னணி..

படம்
அ.தி.மு.க என்ற கட்சி தொடங்கி ஐம்பது ஆண்டுகள் ஆகிவிட்டது.  அதற்காக விழா எடுத்தார்கள்.  அது அவர்கள் உரிமை. விழா எடுக்கட்டும். அந்தக் கட்சி உருவாக்கம் குறித்த துரோகங்களை எல்லாம் தியாகங்களாகக் காட்டி பொய்யும் புனைசுருட்டும்  கொண்ட வரலாற்றுக் கட்டுரைகளை - அக்கட்சியின் இரட்டை இலை சின்னத்தை முடக்குவதற்கு முனைந்த துரோகசக்தி எல்லாம் எழுதுவதுதான் மாபெரும் துரோகம் ஆகும். அந்தக் கட்சி எப்படி உருவாக்கப்பட்டது என்பதை அந்தக் காலத்து போலீஸ் பெரிய மனிதர்கள் எழுதி இருக்கிறார்கள். அதுதான் உண்மையானதே தவிர, இந்தப் போலி ஐ.ஏ.எஸ் சென்டர் பேர்வழிகள் எழுதுவது அல்ல  . இதற்கான முடிவுரையை பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா எழுதினார். உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்தவராய் ஆகிய இருவரும் இறுதி அத்தியாயத்தை எழுதி முடித்தார்கள். ஜெயலலிதா யோக்கியர் என்றும், சசிகலாதான் அனைத்துக்கும் காரணம் என்றும் சில புல்லுருவிகள் புதிய வியாக்கியானம் சொல்லி வருகிறார்கள். இது தவறானது என்பதை உச்சநீதிமன்றமே சொல்லிவிட்டது. ஜெயலலிதாவை வைத்து சசிகலா சம்பாதித்தார் என்பதை நீதிமன்றம் நம்பவில்லை. என்

பட்டினி பட்டியல்

படம்
 பட்டினி என்பதை எப்படிக் கணக்கிடுவது என்பதற்கு சில அளவுகோல்கள் முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக, ஒவ்வொரு நாட்டிலிருந்தும் நான்கு விஷயங்களுக்கான தரவுகள் சேமிக்கப்படுகின்றன.  முதலாவதாக, போதுமான சத்துணவு இல்லாத மக்களின் சதவீதம். இரண்டாவது, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள், தங்கள் உயரத்திற்கு ஏற்ற எடையில்லாமல் இருத்தல். மூன்றாவது, குழந்தைகள் தங்கள் வயதிற்கேற்ற உயரமின்றி குன்றிப்போயிருத்தல். நான்காவது, ஐந்துவயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம். இவற்றை வைத்து ஒவ்வொரு நாட்டிற்கும் மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. இதில் 10க்கும் குறைவான மதிப்பெண்களைப் பெற்றவை 'கீழ்' என்ற பிரிவில் பட்டியலிடப்படுகின்றன. 10 முதல் 20 வரையிலான மதிப்பெண்களைப் பெற்றவை 'சுமார்' என்ற பிரிவில் வைக்கப்படுகின்றன. 20 முதல் 35 வரையிலான மதிப்பெண்களைப் பெற்றவை 'சீரியஸ்' என்ற பிரிவிலும் 35 முதல் 50 வரையிலான மதிப்பெண்களைப் பெற்றவை 'ஆபத்தான' என்ற பிரிவிலும் 50க்கு மேற்பட்ட மதிப்பெண்களைப் பெற்றவை 'தீவிர ஆபத்தான' என்ற பிரிவிலும் வைக்கப்படுகின்றன. அதாவது அதிக மதிப்பெண் பெற்றால் மோசமான நிலை

இந்தி வெறியர்கள்

படம்
  ஆன்லைன் உணவு டெலிவரி சேவை வழங்கும் நிறுவனமான ஜொமேட்டோ வாடிக்கையாளர் பிரிவு பிரதிநிதி, வாடிக்கையாளர் ஒருவரிடம் "இந்தி நமது தேசியமொழி, சிறிதளவாவது அதைக் கற்றுக்கொள்ள வேண்டும்" எனக் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த நிறுவனத்தை புறக்கணிக்க வேண்டும் என சமூக ஊடகங்களில் பலரும் இடுகைகளை பகிர்ந்து வருகின்றனர். நேற்று மாலை ஆறு மணியளவில் விகாஸ் என்பவர், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்தப் பதிவில், தான் ஜொமேட்டோ செயலி மூலமாக உணவு ஆர்டர் செய்தபோது, தான் ஆர்டர் செய்ததில், ஒரு உணவுப் பொருள் வராதது குறித்து ஜொமேட்டோவின் வாடிக்கையாளர் பிரிவைத் தொடர்பு கொண்டு பேசியதாக கூறியுள்ளார். அந்த பிரதிநிதி, "இந்தி தெரியாததால் பணத்தைக் கொடுக்க முடியாது," என கூறியதாகவும், அந்த வாடிக்கையாளர் பிரதிநிதிக்கு தமிழ் தெரியாததால், தன்னைப் பொய்யர் என கூறியதாகவும் விகாஸ் தெரிவித்திருந்தார். அத்துடன் அந்த ஜொமேட்டோவின் வாடிக்கையாளர் பிரதிநிதியுடன் தான் நடத்திய சாட் உரையாடலின் ஸ்க்ரீன் ஷாட்களையும் விகாஸ் ட்விட்டர் பக்கத்தில் இணைத்திருந்தார். அந்த உரையாடலின் ஒ