இடுகைகள்

மார்ச், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
படம்
  தற்சார்பென்ற மோடி சார்பு. சீ மானின் “தற்சார்பு” பொருளாதாரம் பற்றி அமெரிக்காவில் வசிக்கும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த அர்ஜுன் பேசும் வீடியோ பார்க்கக் கிடைத்தது. அதில் அவர் விவசாய உற்பத்திப் பொருட்களை வணிக மயமாக்கி ஏற்றுமதி செய்வதைப் பற்றி விளக்கம் கொடுக்கிறார். வெளிப்படையாகவே தமிழ் முதலாளிகளை உருவாக்கி வளர்க்க வேண்டும் என்கிறார். அவரது பேச்சு, கிட்டத்தட்ட பூமி திரைப்படம் பார்ப்பது போலிருந்தது. Make in India என்ற பெயரில் மோடி பிரச்சாரம் செய்து வந்த “தற்சார்பு” பொருளாதாரத்திற்கும், சீமானின் “தற்சார்பு” பொருளாதாரத்திற்கும் எந்த விதமான வித்தியாசமும் இல்லை. இருவரும் ஒரே விடயத்தை தான் பேசுகிறார்கள். ஆனால், இவர்கள் சொல்லாமல் மறைக்கும் உண்மை ஒன்றுள்ளது. இந்தியா சுதந்திரமடைந்த நாளில் இருந்து இன்று வரை IMF, உலக வங்கியிடமிருந்து கடன் வாங்கி வருகின்றது. மத்திய அரசு மட்டுமல்ல, தமிழ்நாடு மாநில அரசு தனக்கென தனியாக கடன் வாங்கி வருகின்றது. அந்தக் கடன்கள் நிபந்தனையின் பேரில் கொடுக்கப்படுகின்றன. பொருளாதாரத்தை தாராளமயப்படுத்த வேண்டும், சந்தையை நூறு சதவீத அந்நிய முதலீடுக்கு திறந்து விட வேண்டும். அதனால்தா

தேர்தல் நிறுத்தம் செய்தி பின்னணி யாருங்க?

படம்
  ஆணையத்துக்கு கேள்வி. தேர்தல் ரத்து என்று செய்தி வெளியான விவகாரத்தில் ஆளுங்கட்சியின் தலையீட்டை நிறுத்த வேண்டும் என்றும் கே.என்.நேருவின் பெயருக்குக் களங்கம் விளைவிக்க முயற்சி நடப்பதாகவும் திமுக, தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூவிடம் நேற்று (மார்ச் 29) அளித்த புகாரில், “முன்னாள் அமைச்சரும், திமுகவின் முதன்மை செயலாளருமான கே.என்.நேரு திருச்சி மேற்குத் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த நிலையில் திமுகவுக்கு மக்கள் அளிக்கும் ஆதரவை ஜீரணிக்க முடியாத ஆளும்கட்சியினர் மற்றும் அதிகாரிகள், பத்திரிகை மற்றும் சமூக ஊடகங்களுக்குப் பணம் கொடுத்து திமுக மற்றும் கட்சித் தலைவர்கள் மீது கெட்ட பெயர்களை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் கே.என்.நேருவின் பெயரைக் களங்கப்படுத்த முயற்சி செய்கின்றனர். கடந்த மார்ச் 27ஆம் தேதி நாளிதழ் ஒன்றில் 'கரூர், திருவண்ணாமலை, திருச்சி மேற்கு தொகுதிகளில் தேர்தல் ரத்து?' என்று செய்தி வெளியானது. மேலும், கே.என்.நேரு காவல்நிலையங்களுக்குப் பணம் கொடுத்து தேர்தல் குழுவினரின் செயல்பாடுக

இம்முறையும் ராம நாமம்தான் பொரி உருண்டைக்கு.

படம்
 தொலைக்காட்சி யில் கன்னியாகுமரி  நாடாளுமன்ற தொகுதியில் போட்டியி டும் வேட்பாளர்களிடம் கேள்விகளை  தொடுக்கும் ‘மக்கள் தர்பார்’  நிகழ்ச்சிக்கு 30 பேர் அழைக்கப் பட்டிருந்தனர். அவர்களிடம் நி கழ்ச்சியின் இறுதியில் வாக்கெடு ப்பு நடத்தப்பட்டது. 18 பேர் காங்கிரஸ் வேட்பாளர் வி ஜய் வசந்தை ஆதரித்தனர். பொன்னா ருக்கு ஆதரவாக 8 பேரே கையை தூக் கினர். நிகழ்ச்சியின் இறுதியை  மட்டும் தான் பார்க்க முடிந்தது .  கன்னியாகுமரியில் காங்கிரஸ்  வெற்றி பெற்ற பிறகு கடந்த இரண் டு வருடங்களாக திருவனந்தபுரம்  செல்லும் நான்கு வழிச் சாலை வே லை நடைபெறவில்லை என்றார் பொன்னா ர். பாஜக தவிர்த்து வேறு யாரை  தேர்ந்தெடுத்தாலும் வேலைகள்  நடக்காது என்றும், மூன்று வரு டங்கள் இனியும் பாஜக தான் மத்தி யில் இருக்கப் போகிறது என்றும்  மிரட்டும் தொனியில் பேசினார்.  அதை நாம் தமிழர் வேட்பாளர் உடனே  தட்டிக் கேட்கவும் செய்தார்.  பொன்னார் இன்னொன்றையும் கூறினா ர். சாதி, மதமென பிரிந்து கிடப் பது போதுமெனவும், மக்களை வாழ வி டுங்கள் என்றும் பெரிய யோக்கிய  சிகாமணி போல பேசினார். இது பொன் னார் மற்றவர்களை பார்த்துப் பே சினார் என்று நினைப்பதைக் காட் டிலும