இடுகைகள்

ஜூலை, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நெடுஞ்சாலை ஊழல்

படம்
2018-ம் ஆண்டு, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த முறைகேடு குற்றச்சாட்டை எழுப்பியது தி.மு.க. 'தன் உறவினர்களுக்குச் சாதகமாக நெடுஞ்சாலை ஒப்பந்தங்களை முறைகேடான வழிகளில் எடப்பாடி வழங்கிவிட்டார்' என்பதுதான் தி.மு.க எழுப்பிய குற்றச்சாட்டு.  இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க-வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார். இந்த முறைகேட்டை விசாரித்து, மூன்று மாதங்களுக்குள் ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு சி.பி.ஐ-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.  இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடிய எடப்பாடி, சி.பி.ஐ விசாரணைக்கு எதிராக இடைக்கால தடை உத்தரவைப் பெற்றார். அதோடு எடப்பாடி மீதான முறைகேடுப் புகாரும் அமுங்கிப்போனது. இந்த வழக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் உறங்கிக்கொண்டிருந்த நிலையில், மீண்டும் புத்துயிர் பெற்றதுதான் அரசியல் 'ஹாட்.’ நேற்று, ஜூலை 26-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 'வக்காலத்து மாற்ற வேண்டியிருப்பதால், மூன்று வார கால அவகாசம் தேவை' என ஆர்.

பள்ளி கல்வி ஊழல்

படம்
  தொழில்துறை அமைச்சரும், திரிணாமுல்  காங்கிரஸ்  கட்சியின் மூத்த தலைவருமான பார்த்தா சாட்டர்ஜி, மாநில பள்ளிப் பணியாளர் தேர்வாணையத்தில் (SSC) ஆசிரியர் ஆட்சேர்ப்பு செயல்முறையில் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி  அமலா க்க இயக்குநரகத்தால் (ED) சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.  பார்த்தா சாட்டர்ஜி முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியின் மிகவும் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவர் ஆவார். பல்வேறு முக்கிய இலாகாக்களைக் கையாளும் ஒரு முக்கிய (ஹெவிவெயிட்) அமைச்சராக இருப்பதைத் தவிர, பார்த்தா சாட்டர்ஜி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராகவும் உள்ளார்.  கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி மற்றும் அவரது மருமகனும் கட்சியின் தேசிய பொதுச் செயலாளருமான அபிஷேக் பானர்ஜியின் பதவிக்குப் பிறகு மிக முக்கியமான கட்சிப் பதவி இது. கொல்கத்தாவின் மிக முக்கியமான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முகங்களில் ஒருவரும், கொல்கத்தாவின் பெஹாலா பாஸ்கிம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து ஐந்து முறை எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கபட்டவருமான 69 வயதான பார்த்தா சாட்டர்ஜி, மேற்கு வங்க கட்சி ரீதியிலான விவகாரங்களை

காணொலிகள்

படம்
  ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள், டிஜிபிக்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் எதிராக சட்ட ரீதியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க முன்அனுமதி கோரி தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம் அனுப்பியுள்ளது. இந்நிலையில் தமிழக விரைவில் இது தொடர்பாக பரீசீலனை செய்யும் என்று தகவல் வெளியாகி உள்ளது.   சென்னை புறநகரில் உள்ள எம்டிஎம் என்ற பான் மசாலா நிறுவனத்தில் வருமானவரித் துறையினர் கடந்த 2016-ம் ஆண்டு நடத்திய சோதனையில் அந்நிறுவனம் ரூ.250 கோடி வரி ஏய்ப்பு செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

"ஷாக்" கட்டணங்கள்.

படம்
  தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார்.   மத்திய அரசின் அழுத்தம் காரணமாக மின் கட்டணம் உயர்த்தப்படுவதாகவு அவர் தெரிவித்துள்ளார்.  அதன்படி, 8 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 2.37 கோடி வீடு மற்றும் குடிசை மின் நுகர்வோரில், ஒரு கோடி நுகர்வோர்களுக்கு (42.19 சதவீதம்) மின் கட்டண உயர்வு எதுவும் இல்லை என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   மேலும் 100 யூனிட் வரையிலான இலவச மின்சாரம் தொடரும் என்றும் குடிசை  இணைப்புகளுக்கும் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  இதேபோல்,  இருமாதங்களுக்கு ரூ.20 முதல் ரூ.50 வரை செலுத்துவதில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படுகிறது.  இதனால் 2.37 கோடி வீட்டு மின்நுகர்வோர்கள் பயன் அடைவர். குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிப்பாட்டுதலங்கள் முதலிய மின் கட்டண பிரிவிற்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும். இரு மாதங்களுக்கு மொத்தம் 200 யூனிட் வரை பயன்படுத

உண்மை

படம்
  கொரோனா காலத்தில் நல்ல வளர்ச்சி கண்ட துறைகளில் மருத்துவ துறையும் ஒன்று. குறிப்பாக மருந்துகள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் நிறுவனங்கள் பல மடங்கு வளர்ச்சியினை கண்டன. "டோலோ 650" கொரோனா காலத்தில் அதிகம் தேவைப்பட்ட மாத்திரைகளில் இதுவும் ஒன்று. இதன் காரணமாக கொரோனா காலத்தில் 350 கோடி டோலோ 650 மாத்திரைகள் விற்றுள்ளதாகவும், இதன் மூலம் 400 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வாரம் மைக்ரோ லேப் நிறுவனத்தில் 9 மாநிலங்களில் 36 இடங்களில் வருமான வரித்துறையில் சோதனையில் ஈடுபட்டனர். இதில் மைக்ரோலேப்ஸ் நிறுவனத்துக்கு தொடர்புடைய இடங்களிலும் இந்த சோதனையானது நடைபெற்றது. இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக பெங்களூரு அலுவலகத்தில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பதாகவும் தெரிகிறது. இது குறித்து வருமான வரித்துறையினர் வெளியிட்ட அறிக்கையில், கணக்கில் காட்டப்படாத 1.20 கோடி ரூபாய் பணம், 1.40 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள், வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆச்சரியத்தினையும், அ