இடுகைகள்

பிப்ரவரி, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பிரபாகரன் வெளிப்படப் போகிறார்?

படம்
 பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும் அதைப் பற்றிய தகவல்களை வெளியிட வேண்டுமென்றும் தமிழ்நாட்டில் உள்ள ஈழ ஆதரவாளர்கள் சில நாட்களுக்கு முன்பாக தொடர்புகொள்ளப்பட்டுள்ளனர்.  அதன் அடிப்படையில்,  தஞ்சாவூரில், பழ. நெடுமாறன் தலைமையில் ஈழத்திற்கு ஆதரவாக உள்ள தமிழ்நாட்டு தலைவர்களை ஒன்று திரட்டி செய்தியாளர்களைச் சந்திக்க வைக்க ஏற்பாடுகள் நடந்தன. , பிரபாகரன் குறித்த உறுதியான தகவல் ஏதும் கிடைக்காத நிலையில், பல தலைவர்கள் இந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்பதைத் தவிர்த்துவிட்டதாகத் தெரிகிறது. இந்த நிலையில்தான் இலங்கையைச் சேர்ந்த கவிஞர் காசி ஆனந்தன், பழ. நெடுமாறன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்து, இந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர். தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் மிக்க நலமுடன் இருக்கிறார் என்ற நற்செய்தியை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு உறுதியாகத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.  இதுவரை அவரைப் பற்றித் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட யூகங்களுக்கும் ஐயங்களுக்கும் இது முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறோம். தமிழீழ மக்களின் விடியலுக்கான திட்டத்தை அவர் விரைவில் அறிவிக்கவுள்ளார். தமிழீழ மக்களும் உலகத் தமிழர

திட்டமிட்டு படுகொலைகள்

படம்
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி தொடர் போராட்டம் 2018-ல் நடைபெற்றது. 100-வது நாளாக 22-5-2018 அன்று நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது.  இதில், காவல் துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 ஆண்கள், 2 பெண்கள் என 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  40 பேர் பெரிய அளவிலும், 64 பேர் சிறிய அளவிலும் காயமடைந்தனர்.  கடந்த அதிமுக ஆட்சியின்போது நடைபெற்ற இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இந்த துப்பாக்கி சூடு விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் 23.05.2018-ல் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.  விசாரணை ஆணையம் பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்தது. விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கை அரசிடம் 18.05.2022 அன்று சமர்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்தாண்டு அக்டோபரில் தமிழக சட்டப் பேரவையில் ஆணையத்தின் அறிக்கை 4 பகுதிகளாக தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் 100-வது நாளையொட்டி போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் வன்முறையில் இறங்க வாய்ப்புள்ளதா

கூகுள் AI

படம்
  செயற்கை நுண்ணறிவு(AI) சா ட்ஜிபிடிக்கு (ChatGPT) போட்டியாக கூகுள் நிறுவனம் தற்போது 'பார்டு' (Bard) எனப்படும் சாட்பாட்டை களமிறக்க உள்ளது. இந்த சாட்பாட், சோதனை ஓட்டத்திற்குப் பின்னர், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வெளியிடப்படும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. கூகுள் ஏற்கெனவே உருவாக்கிய 'லாம்டா' (Lamda) எனப்படும் உரையாடல் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த லாம்டா தொழில்நுட்பம் மனிதர்களைப் போன்றே உரையாடும் என்றும், மனிதர்களைப் போன்ற உணர்வுகள் அதற்கு இருக்கக்கூடும் என்றும் கூகுள் நிறுவனத்தின் பொறியாளர் ஒருவர் ஏற்கனவே கூறியிருந்தார். இந்த சாட்பாட், கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதத்திலும் தகவல்களை தேடும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கு சாட்ஜிபிடி சிறந்த உதாரணமாக திகழ்கிறது. இந்த தொழில்நுட்பம், இணையத்தில் உள்ள மிகப் பெருமளவிலான தரவுகளைப் பயன்படுத்தி செயலாற்றுகின்றன. எனினும், இத்தொழில்நுட்பத்தில் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய மற்றும் தவறான தகவல்களும் இருக்கலாம் என்ற கவலைகளும் எழுந்துள்ளன. பார்டு த

பொறுப்பற்ற நிதியமைச்சர்

படம்
 அதானி விவ­கா­ரம் பொரு­ளா­தா­ரத்­தைப் பாதிக்­காது’ என்று நிதி அமைச்­சர் நிர்­மலா சீதா­ரா­மன் சொல்லி இருக்­கி­றார். எதை வைத்து இப்­ப­டிச் சொன்­னார்?  எதை வைத்­தும் இப்­ப­டிச் சொல்­ல­வில்லை. ‘பாதிக்­காது’ என்று மட்­டும் சொல்லி இருக்­கி­றார்.  அவ­ரால் அதற்கு மேல் எது­வும் சொல்­லத் தெரி­ய­வில்லை. நாட்­டின் பொரு­ளா­தா­ரக் கொள்­கை­க­ளும், பொரு­ளா­தா­ரச் சூழ­லும் வலு­வாக உள்­ளன என்று சொல்லி இருக்கிறார் நிர்­மலா சீதா­ரா­மன்.  அதானி விவ­கா­ரத்­தால் எவ்­வித பாதிப்­பும் ஏற்­ப­ட­வில்­லை­யாம். இந்­தி­யப் பங்­குப் பரி­வர்த்­தனை மைய­மான செபி­யும், இந்­திய ரிசர்வ் வங்­கி­யும் இதனை ஆராய்ச்சி செய்து வருகிறதாம். பங்­குச் சந்­தை­யில் ஏற்ற இறக்­கம் வரு­வது வழக்­கம் தானாம்.  அதானி விவ­கா­ரம் கிளம்­பிய இரண்டு நாட்­களில் கூட 800 கோடி அமெ­ரிக்க டாலர் மதிப்­பி­லான அந்­நி­யச் செலா­வணி இந்­தி­யா­வுக்­குக் கிடைத்­து­விட்­ட­தாம்.  இத­னால் இந்­தி­யப் பொரு­ளா­தா­ரம் வலி­மை­யாக உள்­ள­தாம். இது­தான் நிதி அமைச்சரின் கண்­டு­பி­டிப்­பு­கள். இந்­தி­யப் பொரு­ளா­தா­ரம் பா.ஜ.க.வின் கொள்­கை­க­ளால் நிலை­கு­லை­யத் தொடங்கி இருக்­

நெட் ஆண்டர்சன்

படம்
  நெட் ஆண்டர்சன் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் நேதன் எனப்படும் நெட் ஆண்டர்சன் ஆவார். ஆண்டர்சன் இந்த நிறுவனத்தை 2017 இல் நிறுவினார்.  அமெரிக்காவின் கனெக்டிகட் பல்கலைக்கழகத்தில் படித்தவர். ஆண்டர்சன் சர்வதேச வணிகம் பயின்று, ஃபேக்ட்-செட் ரிசர்ச் சிஸ்டம்ஸ் என்ற தரவு நிறுவனத்தில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.  இந்த நிறுவனத்தில், ஆண்டர்சன் முதலீட்டு மேலாண்மை நிறுவனங்களுடன் பணிபுரிந்தார். 2020 ஆம் ஆண்டில் வால் ஸ்ட்ரீட் ஜர்னலுக்கு அளித்த பேட்டியில், ஆண்டர்சன், "இவர்கள் மேலோட்டமான பகுப்பாய்வு செய்கிறார்கள் என்பதை நான் உணர்ந்தேன்." என்றார். ஆண்டர்சன் இஸ்ரேலில் சிறிது காலம் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக இருந்ததாக, செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் தெரிவிக்கிறது. ஆண்டர்சனின் லிங்க்ட்இன் சுயவிவரத்தில், "ஆம்புலன்ஸ் டிரைவராகப் பணிபுரியும் போது, மிகுந்த அழுத்தத்தில் எப்படி வேலை செய்வது என்று கற்றுக்கொண்டேன்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சுயவிவரத்தில் அவருக்கு 400 மணிநேர மருத்துவ அனுபவம் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பல நேர்காணல்களில், ஆண்டர்சன் அமெரிக்க கணக்காளர் ஹாரி மோர்கோ

2023 பட்ஜெட்

படம்
 2023 இன் புதிய வருமான வரி வரம்பு. புதிய வரி விதிப்பு திட்டத்தில் 0-3 லட்ச ரூபாய் வரை வருமானம் பெறுபவர்களுக்கு வரி இல்லை. 3-5 லட்ச ரூபாய் வரை வருமானம் பெறும் நபர்களுக்கு 5 சதவீத வருமான வரியும், 6-9 லட்ச ரூபாய் வரை வருமானம் பெற்றால் 10 சதவீத வரியும் 12-15 லட்ச ரூபாய் வரை வருமானம் பெறுபவர்களுக்கு 20 சதவீதமும் 15 லட்சத்திற்கு மேல் வருமானம் பெற்றால் 30 சதவீதம் வரி வசூலிக்கப்படும். எளிமையான வகையில், ரூ.9 லட்சம் ஆண்டு வருமானம் உள்ள ஒருவர் ரூ.45,000 வரி செலுத்துவார், இது சம்பளத்தில் 5 சதவீதமாகும்.  தற்போது ரூ.60 ஆயிரத்தில் இருந்து ரூ.15,000 குறைக்கப்பட்டுள்ளது. 15 லட்சம் ஆண்டு வருமானம் உள்ள தனிநபர், 1.87 லட்சத்தில் இருந்து 1.5 லட்சம் வரி செலுத்த வேண்டும். புதிய அறிவிப்பின் கீழ் வரி செலுத்துவோருக்கு ரூ. 50,000 நிலையான விலக்கு உள்ளது.  அங்கு மதிப்பீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளில் விலக்குகள் அல்லது விலக்குகளை கோர முடியாது. புதிய வரி விதிப்பில், அதிகபட்ச கூடுதல் கட்டணம் 37 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைக்கப்பட்டது.  இது மேலும் அதிகபட்ச தனிநபர் வருமான வரி விகிதத்தை 39 சதவீதமாகக் குறைக்கும். -

எய்ம்சுக்கு துட்டுதராத பட்டுஜெட்டு

படம்
  ராஜராஜன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் அவ்வப்போது ஏதாவது ஒரு மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டு அவை மக்களிடம் பெறும் வரவேற்பைப் பெறுகின்றன.  அந்த வரிசையில் சமீபத்தில் ChatGPT என்கிற சாட் பாட் டிரெண்டானது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தி எழுதவும், வரையவும் முடியும். சந்திரகுப்த மௌரியர் முதல் அலாவுதீன் கில்ஜி வரை அந்தக் காலத்து மன்னர்களுக்குச் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவம் கொடுத்திருக்கிறார்.  பள்ளிக்கூட வகுப்பில் இந்த மன்னர்களைப் பற்றிப் படித்திருப்போம்.  அவர்களைப் பற்றிக் கிடைக்கப்பெற்ற தகவல்களைக் குறிப்புகளைக் கொண்டு இந்தத் தொழில்நுட்பம் மூலம் தத்ரூபமாக வரைந்திருக்கிறார் மாதவ் கோலி. செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தி வரையப்பட்ட மன்னர்களின் படங்கள்:  அசோகர், அக்பர், ஷாஜகான், பாபர், முதல் ராஜ ராஜ சோழன், ஜெஹாங்கிர் வரை மொத்தம் 21 மன்னர்களின் படங்களை வரைந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் அவர்.  ட்விட்டரில் வெளியான சில மணி நேரங்களில் வைரலான இந்தப் பதிவை சமூக வலைதள பயனர்கள் பலரும் கருத்துகள் பதிவிட்டுப் பகிர்ந்து வருகின்றனர். பெரும