இடுகைகள்

ஜூன், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

"நீட்" டு.......

படம்
  நீட் தேர்வை தி.மு.க ஆட்சிதான் கொண்டு வந்தது என்பதுதான் பழனிசாமியின் பழைய பொய். அவருக்கு நீட் தேர்வைப் பற்றி தலையும் தெரியவில்லை, வாலும் தெரியவில்லை.  நீட் தேர்வு என்பதே 2016 ஆம் ஆண்டு பா.ஜ.க அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்டது. முதல் தேர்வு நடந்ததே 2016இல்தான்.  பல்வேறு மாநிலங்கள் எதிர்த்த காரணத்தால் விதிவிலக்கு தரப்பட்டது. 2016ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவும் எதிர்ப்புத் தெரிவித்தார். அதனால் 2016 - 17 ஆம் ஆண்டுக்கான தேர்வில் விலக்கு கிடைத்தது. ஆனால் அடுத்து வந்த பழனிசாமி அரசாங்கம் ‘நீட்’ தேர்வை தலையாட்டி ஏற்றுக்கொண்டுவிட்டது.  தானும் எதிர்ப்பது போல காட்டுவதற்காக இரண்டு முறை சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டு ஒப்புக்கு அனுப்பினார்கள். அதனை ஒன்றிய அரசு திருப்பி அனுப்பியதைக்கூட வெளியில் சொல்லாமல் மறைத்து வைத்திருந்ததுதான் பழனிசாமியின் நாடகங்களில் மகத்தானது. 2011 முதல் தி.மு.க அதிகாரத்தில் இல்லை. நீட் தேர்வை எதிர்த்து 2013 ஆம்ஆண்டு மே மாதம் 5ஆம் தேதியே தலைவர் கலைஞர் அவர்கள் அறிக்கை வெளியிட்டார்கள். நீட் தேர்வு மசோதாவுக்கு ஒன்றிய பா.ஜ.க அரசு 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி உயிர் கொடு

கடற் கொள்ளையர்.

படம்
  நாடு முழுவதும் உள்ள 204 சிறிய துறைமுகங்களை தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வருவதற்கு புதிய மசோதா ஒன்றைத் தாக்கல் செய்யும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது. `இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டால் மாநில அரசின் தன்னாட்சியை குறைக்கும்' என்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சிறிய துறைமுகங்களை இந்திய அரசு வளைக்க முயற்சிப்பது ஏன்? இந்திய அரசின் துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறையின் சார்பில் 18வது கடல்சார் மாநில மேம்பாட்டுக்குழு கூட்டம் கடந்த 24ஆம் தேதி நடைபெற்றது. காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு, கேரளம், மகாராஷ்ட்ரம், கோவா, தெலங்கானா, ஆந்திரம், ஒடிஷா ஆகிய கடலோர மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய இந்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து, ரசாயனங்கள் மற்றும் உரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா, ``கடல்சார் மாநில மேம்பாட்டுக்குழு கூட்டம் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இந்திய துறைமுகங்கள் மசோதாவை அரசியல் பார்வையுடன் அணுகாமல் வளர்ச்சிக்கான விவகாரமாக பாருங்கள். கடலோரங்களில் சிறந்

தமிழ்நாட்டில் மின் தடை

படம்
பின்னணி பட மூலாதாரம், `தமிழ்நாட்டில் அடிக்கடி ஏற்படும் மின் தடை பிரச்னைக்கு இந்த கட்சிதான் காரணம் என ஆளும் தி.மு.க அரசும் அ.தி.மு.கவும் பரஸ்பரம் குற்றம்சுமத்தி வருகின்றன. ஆனால், இந்த விவகாரத்தில் `ஒப்பந்ததாரர்கள் மோதல் உள்பட பல்வேறு காரணங்கள் பின்னணியில் உள்ளன' என்கின்றன மின் ஊழியர் சங்கங்கள். என்ன நடக்கிறது தமிழ்நாடு மின் வாரியத்தில்? சென்னை அண்ணா சாலையில் மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு கடந்த வாரம் செய்தியாளர்களைச் சந்தித்த மின்சாரம் மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ` மின் பராமரிப்புப் பணிகளை கடந்த ஆட்சியில் ஒன்பது மாதங்களாக மேற்கொள்ளவில்லை. இதனால் தற்போது மின் தடங்கல் ஏற்படுகிறது. தற்போது பராமரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. இதனை 10 நாள்களுக்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளோம்' என்றார். மேலும், `மின்சார வாரியத்துக்கு ரூ. 1,33,671 கோடி கடன் உள்ளது. கடந்த ஆட்சியில் மின் வாரியத்தில் மேற்கொள்ளப்பட்ட கொள்முதல் விவகாரங்கள் தொடர்பாக சட்டமன்றத்தில் விவாதிக்கப்படும். கடந்த ஆட்சியில் தமிழகத்தை மின் மிகை மாநிலம் என அழைத்தார்கள். ஆன