இடுகைகள்

ஏப்ரல், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஓன்றிய அரசின் ஏமாற்று

படம்
  அல்லது மோடி மஸ்தான் வேலை. கடந்த புதன் கிழமை அன்று மோடியின் தலைமையில் ஒன்றிய அரசு முதலமைச்சர்களோடு ஒரு வீடியோ கான்பரன்ஸை நடத்தியது. அந்தக் கூட்டம் கோவிட் கூட்டம் பற்றி பேசுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது.  ஆனால் அதில்   மோடி  சம்பந்தமே இல்லாமல் பெட்ரோல், டீசல் விலைக்கான வரியை பாஜக ஆளும் மாநிலங்கள் குறைத்திருப்பதாகவும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் குறைக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.  மேலும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதற்கு மத்திய அரசு எடுத்த சில முயற்சிகளுக்கு சில மாநிலங்கள் ஒத்துழைக்கவில்லை எனக் கூறினார். தமிழக சட்டப் பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும், இது குறித்த வினாவை காங்கிரசுக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை எழுப்பினார்.  அதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின் "இதனை ஒருவரியில் சொல்ல வேண்டுமெனில் முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்ற கருத்தை பிரதமர் சொல்லியிருக்கிறார்" என்றார். இது போன்ற பல மாநில எதிர்க்கட்சி முதல்வர்களும் கடுமையாக கண்டனங்களை கூறியிருக்கின்றனர். இதற்கு பதிலளிக்கும் முகமாக ஒன்றிய அரசின் பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்திப் சிங்

தமிழ்நாடு ரெயில் வேலைக்கு

படம்
ஜம்மு காஷ்மீரில் தேர்வு மய்யம் சென்னை ரயில்வே வாரிய தேர்வு எழுதி மையங்களை ஜம்மு காஷ்மீரிலும் குஜராத்திலும் ஒதுக்கீடு செய்துள்ளது ரெயில்வே துறை. இது எவ்வளவு பெரிய கொடுஞ் செயல். இது தொடர்பாக சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கை:  "ஆர்ஆர்பி சென்னை 601 ரயில் நிலைய அதிகாரி காலியிடங்களுக்கு 2020 டிசம்பருக்கும் 2021 ஜூலைக்கும் இடையே முதல்நிலைத் தேர்வு நடத்தியது . இந்த முதல்நிலை தேர்வு தமிழகத்திலேயே உள்ள நகரங்களில் நடத்தப்பட்டது. இதற்கான முடிவுகள் மார்ச் 22 க்கும் ஏப்ரல் 22 க்கும் இடையே வெளியிடப்பட்டன. தேர்வானவர்களுக்கு இரண்டாம் நிலை தேர்வு நடத்தப்பட வேண்டும் .இந்த தேர்வு தெற்கு ரயில்வேயில்  ஜம்மு-காஷ்மீரில் உள்ள சம்பா விலும் அலகாபாதிலும் மைசூரு உடுப்பி சிமோகா விலும் தேர்வு மையங்கள் வைக்கப்பட்டுள்ளன.  மே 9 ஆம் தேதி தேர்வு நிச்சயிக்கப்பட்டுள்ளது .  சிஇஎன்1/ 2019 என்ற விளம்பரத்தின் அடிப்படையில் விண்ணப்பித்த இந்த தேர்வர்களுக்கு இப்படி வெளிமாநிலங்களில் மையங்களை ஏற்படுத்துவது வேற்று மொழி பேசும் இடங்களில் தமிழக விண்ணப்பதாரர்கள் திணற வைப்பதற்கு வழிவகுக்கும். மாற்றுதிறனாளியான ஒரு விண்ணப்பதாரருக்கு

ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கொட்டு

படம்
  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில், கொலையாளிகளுக்கு பேட்டரி வாங்கிக் கொடுத்ததாக கூறி 1991 ஆம் ஆண்டு கைதானார் பேரறிவாளன். 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்ட பேரறிவாளன் தற்போது ஜாமீனில் இருக்கிறார். இவருக்கு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டனை கடந்த 2014 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. கிடப்பில் போட்ட ஆளுநர் பேரறிவாளன் உட்பட 7 தமிழர்களை விடுதலை செய்யக்கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார். தொடர்ந்து பேரறிவாளனின் பரோல் நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில் அவருக்கு கடந்த மார்ச் 9 ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இந்த நிலையில் தன்னை விடுதலை செய்திடக்கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. . . ஏன் நீதிமன்றமே விடுவிக்கக்கூடாது? அப்போது 'தன்னை விடுதலை செய்யக்கோரி அமைச்சரவை ஒப்புதல் அளித்த பிறகும் கூட ஆளுநர் எந்த விதமான முடிவையும் எடுக்காமல் இருக்கிறார்.' என பேரறிவாளன் தரப்பு தெரிவித்தது. இதைக்கேட்ட நீதிபதிகள், 'விடுதலை தொடர்பாக குழப்பம் நீடித்து வருகின்றன்.

இதுவும் கடந்து போகும்

படம்
  முதல் பல் பிடுங்கப்பட்டது பல்கலைக்கழகங்களுக்கான துணை வேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்ய வகை செய்யும் மசோதா தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தமிழக சட்டசபையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். துணை வேந்தர்களை மாநில ஆளுனர் மட்டுமே நியமனம் செய்ய அதிகாரம் இருக்கும் நிலையில், அவரது அதிகாரத்தை அரசுக்கு மாற்றும் வகையில் சட்டத் திருத்தம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநருக்கு அளிக்கக்கூடாது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில், பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கே உள்ளது என்றார் முதல்வர் ஸ்டாலின். ----------------------------------------------------------------------------- இதுவும் கடந்து போகும்  கடந்த புதன்கிழமையன்று மத்திய மின்தொகுப்பிலிருந்து 750 மெகாவாட்  மின்சாரம்  தமிழகத்திற்கு திடீரென்று வரவில்லை.  இதனால் ஏற்பட்ட பிரச்சினைகளை 15 நிமிடத்திற்குள் சரி செய்தத