இடுகைகள்

அக்டோபர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வேதனையான சாதனை.

படம்
உலக அளவில் தென்கொரியாவில் ஹாலோவின் ஊர்வலத்தில் 112,பேர்கள்சோமாலியா குண்டு வெடிப்பில்110 பேர்கள் பலியான வரிசையில் குஜராத் மாநில மோர்சா தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 143பேர்கள் உயிரிழந்துள்ள நிகழ்வு இந்தியா மட்டுமல்லாமல் உலக. அளவில் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது. பாலம் இடிந்ததால் மோர்பி நகரில் உள்ள மச்சு ஆற்றில் நூற்றுக்கணக்கானோர் மூழ்கியுள்ளனர். பகுதியளவு நீரில் மூழ்கிய தொங்கு பாலத்தில் மக்கள் தொங்கிக்கொண்டு உயிர்பயத்தில் அலறுவதைக்  காணொளி காட்சிகளில் இயலா நிலையில் பார்க்க முடிகிறது. அந்த நேரத்தில் 400 பேர் கட்டிடத்தில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. . குஜராத் மாநிலம் மோர்பி பகுதியில் உள்ள மொச்சு ஆற்றின் மீது இருந்த கயிற்றுப் பாலம் அறுந்து விழுந்ததில் 400 க்கும் அதிகமானோர் ஆற்றில் மூழ்கியதாக கூறப்படுகிறது. பாலம் பழுதுபார்க்கப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் திறக்கப்பட்ட சில நாட்களில் இது நடந்திருக்கிறது பாலம் அறுந்து விழும்போது 500 க்கும் மேற்பட்டோர் அந்த பாலத்தின் மீது இருந்ததாகவும் பாலம் இரண்டாக உடைந்து ஆற்றில் விழுந்ததாகவும் கூறப்படுகிறது. "காயமடைந்தோர் எண்ணிக

அ.இ.அ.தி.மு.க பொற்கால ஆட்சி.

படம்
கமலைப் பார்த்து மிரண்ட நடிகர் திலகம்.  கமலை வைத்து சூப்பர் ஹிட் படமான சிங்காரவேலன் என்ற படத்தை கொடுத்தவர் ஆர்.வி.உதயகுமார்.  முதலில் இந்த படத்தை எடுப்பதில் கமலுக்கும் சரி உதயகுமாருக்கும் சரி சிறிய தயக்கம் இருந்ததாம். துணிந்து எடுத்து படத்தை வெற்றிபடமாக காட்டியுள்ளனர். மேலும் கமலை பற்றி ஒரு மேடையில் பேசிய உதயகுமார் கமலை பார்த்து சிவாஜி மிரண்ட ஒரு விஷயத்தை பகிர்ந்தார். ஒ ரு சமயம் சிவாஜி உடல் நிலை சரியில்லாத போது அவரை பார்க்க சென்றிருக்கிறார் உதயகுமார்.  அப்போது சிவாஜிக்காக ஏற்கெனவே தயாரித்து வைத்திருந்த கதையோடு சென்றிருக்கிறார். சிவாஜி காலடியில் அமர்ந்து காலை பிடித்து அமுக்கி கொண்டிருந்தாராம் உதயகுமார். அப்போது அந்த கதையையும் சொல்லியிருக்கிறார்.  அதை கேட்ட சிவாஜி ‘அது இருக்கட்டும், கமல்னு ஒரு பையன் இருக்கிறானே?  அவன் என்னம்மா நடிக்கிறான்? ஷட்டில் ஆக்டிங் அவன் கிட்ட இருக்கு, ஆனால் என்கிட்ட ஸ்டைலிஷான ஆக்டிங் தான், ’ என்று கூறினாராம். மேலும் அவர் கூறும் போது ‘ நான் இருந்தாலும் கொஞ்சம் ஓவராத்தான் நடிக்கிறேன், கமல் எவ்வளவு பிரம்மாதமாக நடிக்கிறான்’ என்று வியந்து கூறினாராம்.  அந்த அளவுக்கு நடிப

தலைகளை உருட்டாமல் ஓயாது

படம்
  தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கு இப்போது சி.பி.ஐ வசம் இருக்கிறது.  ஆனால் அந்த வழக்கில் அடிபட்டவர்கள், குண்டு பாய்ந்தவர்கள் என பாதிக்கப்பட்ட எல்லோரையும் குற்றவாளிகளாகவும், மக்களைச் சுட்ட, துப்பாக்கிச்சூட்டுக்குக் காரணமான காவல்துறையினரையெல்லாம் சாட்சிகளாகவும் போட்டிருக்கிறது சி.பி.ஐ..  அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையோ, காவல்துறை,வருவாய்துறையின் முறை தவறிய செயல்களை துணிச்சலாக சுட்டிக் காட்டியுள்ளது. தவறு செய்த அதிகாரிகளின் பெயர்களை சுட்டிக்காட்டி அரசை நடவடிக்கை எடுக்கக் கூறியுள்ளது. அவர்கள் தலைகளை உருட்டாமல் ஓயாது என்கிறார்கள் காவல்துறையில். சம்பவத்தின்போது, தென்மண்டல ஐ.ஜி-யாக இருந்த சைலேஷ் குமார் யாதவ், நெல்லை சரக டி.ஐ.ஜி-யாக இருந்த கபில் குமார் சி சரத்கர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க உள்துறையிலிருந்து கிரீன் சிக்னல் கிடைத்திருக்கிறதாம்.  விரைவில் நடவடிக்கை என்பதால், கலக்கத்தில் இருக்கிறார்கள் அந்த ஐ.பி.எஸ் அதிகாரிகள். -------+------------+---------+-----------+-----------

டவ் ஷாம்பு அபாயம்

படம்
புற்றுநோய் தரும் ஷாம்புகள். தற்போது ரசாயனங்கள் எதுவுமேயில்லாமல் எந்தவொரு தயாரிப்பும், இப்போதெல்லாம் தயாரிக்கப்படுவதில்லை..  இந்த பொருள்கள் கெடாமல் இருக்க ரசாயனம், நீண்டநாள் வரை புதிதாக இருக்க வேறுவகையான ரசாயனம் என ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. அந்தவகையில், பிரபலமான பிராண்டான டவ் உட்பட பல ஷாம்பூக்கள், யூனிலீவர் பிஎல்சி நிறுவனத்தால் திரும்ப பெறப்பட்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது..  இதற்கு காரணம், இந்த தயாரிப்புகளில் புற்றுநோயை உண்டாக்கும் பென்சீன் எனப்படும் ரசாயனம் கலக்கப்பட்டுள்ளதாக ப்ளூம்பெர்க் என்ற நியூஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது. ஃபுட் அண்ட் ட்ரக் அத்தாரிட்டி நிறுவனத்தின் வெப்சைட்டில், நெக்சஸ், சாவ், ட்ரெசமே மற்றும் டிஐஜிஐ (Nexxus, Suave, Tresemmé, and Tigi) போன்ற பிராண்டுகளும் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன..  அமெரிக்காவில் விற்பனையாகும் ஷாம்பூ உள்ளிட்ட பல பொருட்களும் வேதியியல் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன...  அப்படித்தான், சமீபத்தில் கனெக்டிகட்டில் உள்ள நியூ ஹேவனில் உள்ள வேலிஷ்யூர் என்ற ஆய்வு நடத்தப்பட்டுள்ளது..  இந்த ஆய்வில், இந்துஸ்தான் யூனிலிவர் தயாரி

பத்தாண்டு மர்மம்

படம்
  ரிஷி சூனக் சென்ற முறை தனக்கு கிடைக்க வேண்டிய. பிரதமர் பதவி நூலிலையில் தவற விட்ட ரிஷிக்கு தற்போது கிடைக்கும் சூழல். அவரது பின்னணி:- ரிஷி சூனக்கின் பெற்றோர் கிழக்கு ஆஃப்ரிக்காவில் இருந்து இங்கிலாந்துக்கு வந்தவர்கள்.  இருவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். அவரது தந்தை தற்போதைய கென்யாவில் பிறந்து வளர்ந்தார், அதே நேரத்தில் அவரது தாயார் தங்கனிகாவில் (பின்னர் தான்சானியாவின் ஒரு பகுதியாக மாறியது) பிறந்தார். இவரது தாத்தாக்கள் இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் பிறந்தவர்கள் மற்றும் கிழக்கு ஆஃப்ரிக்காவில் இருந்து 1960களில் தங்கள் குடும்பங்களுடன் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தனர். ரிஷி சூனக், 1980இல் செளத்தாம்டனில் பிறந்தார். அங்கு அவரது தந்தை பொது மருத்துவராக இருந்தார்.  இவரது தாயார் சொந்தமாக மருந்தகத்தை நடத்தி வந்தார்.வின்செஸ்டர் கல்லூரியில் பயின்ற இவர் பின்னர் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரம் படிக்க ஆக்ஸ்போர்டு சென்றார். ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிக்கும் போது, ​​இந்திய கோடீஸ்வரரும், ஐடி சேவை நிறுவனமான இன்ஃபோசிஸின் இணை நிறுவனருமான நாராயணமூர்த்தியின் மகளான அக்ஷதா மூர்த்தியைச்

வேலைவாய்ப்பு

படம்
  தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பணிக்காக முழு நேர ஊழியர்களைத் தேர்வு செய்யவும், அவர்களுக்கு மாத ஊதியம், வாகனம் வழங்கவும் மாவட்ட தலைவர்களுக்கு பாஜக மேலிடம் உத்தரவிட்டுள்ளது.  தமிழகத்தில் 2024-ல் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் 39 தொகுதிகளில் 25-ல் வெற்றிபெற பாஜக இலக்கு வைத்துள்ளது. இதையடுத்து தொடக்க கட்ட தேர்தல் பணிகளை பாஜக முடுக்கிவிட்டுள்ளது. முதல் கட்டமாக தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் ஒன்றிய அரசின் திட்டப்பணிகளை மக்களிடம் நேரில் விளம்பரப்படுத்தும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.  இதற்காக ஒன்றியஅமைச்சர்கள் தமிழகத்துக்கு படையெடுத்தவாறு உள்ளனர். மத்திய அமைச்சர்கள் அனைவரும் அடுத்தடுத்து தமிழகம் வரவுள்ளனர். அடுத்தகட்டமாக, மக்களவைத் தேர்தல் பணிக்காக பாஜகவில் முழு நேர ஊழியர்களைத் தேர்வு செய்யுமாறு மாவட்டத் தலைவர்களுக்கு பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளது.  தலைவர்கள் வருகை பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டம், போராட்டங்களின்போது மட்டும் கட்சியினர் தலைகாட்டிவிட்டு போய்விடுகின்றனர்.  தேர்தல் நெருங்கும் வேளையில் மட்டும் தேர்தல் பணிக்கு திரும்புகின்றனர். இதனால் முழு நேரமும் தேர்தல் பணி மேற்கொள்ள ஆர்வமாக உள்ள

பொறுப்பானவர்

படம்
  எந்த ஒரு மாநில அர சாங்கமாக இருந்தாலும் அது மக்களுக் காக செயல்படும் பொழுது வருவாய் பற்றாக் குறை ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்று.  மக்கள் நலன் மற்றும் வளர்ச்சி திட்டங்களுக்காக கடன் பெறு வதும் தவிர்க்க முடியாதவை. ஆனாலும், இவை அனைத்தும் ஒரு வரம்புக்குள் அடங்க வேண்டும். அது எல்லையை தாண்டக்கூடாது.  அப்போதுதான், அந்த மாநில மக்களும் மாநிலமும் வளர்ச்சி பாதைக்கு செல்லும். இதில் சில ஏற்றத் தாழ்வுகள் இருக்கத்தான் செய்கிறது. மாநிலத்தின் ஒட்டுமொத்தமான வருவாய் வரவை காட்டிலும், அரசின் செலவு அதிகரிக்கும்போது வரு வாய் பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்த பற்றாக்குறை யால், தினசரி தேவைகளுக்கும் பணம் இல்லாமல் தத்தளிக்கும் நிலை உருவாகிறது. வருவாய் பற்றாக்குறை, நிதி பற்றாக்குறை, முதன்மை பற்றாக்குறை என்ற இந்த மூன்று நடை முறையும் அதிமுக ஆட்சியின் கடைசி ஐந்து ஆண்டு காலத்தில் முறையாக பின்பற்ற தவறியதால் வருவாய் பற்றாக்குறை 380.76 விழுக்காடாக உயர்ந்ததை தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்த இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறைத் தலை வரின் அறிக்கை தெளிவாகக் காட்டியிருக்கிறது.  அதிமுக ஆட்சியின் கடைசி ஐந்தாண்டு கால