இடுகைகள்

ஜூலை, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முன்தோன்றி மூத்த தமிழினம்.

படம்
  தமிழ்நாட்டின் பல இடங்களில் மாநில தொல்லியல் துறை ஆய்வுகளை செய்துவருகிறது. நீண்ட வாள், வெள்ளிக்காசு, முதுமக்கள் தாழி என புதைந்துகிடந்த வரலாற்றின் எச்சங்கள் மாநிலத்தின் பல இடங்களிலிருந்தும் மேலெழ ஆரம்பித்துள்ளன. 2015ஆம் ஆண்டில் மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் நடந்த அகழாய்வில் பெரும் கட்டடத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, தமிழ்நாட்டின் தொல்லியல் வரலாறு மற்றும் அகழாய்வுப் பணிகள் மீதான ஆர்வம் வெகுவாக அதிகரித்தது. ஆனால், கீழடி அகழாய்வை நடத்திவந்த இந்தியத் தொல்லியல் துறை, மூன்றாம் கட்ட அகழாய்வுகளுக்குப் பிறகு, தமிழ்நாட்டில் வேறு அகழாய்வுகளை நடத்தவில்லை. நடத்தப்பட்ட அகழாய்வின் முடிவுகளையும் வெளியிடவில்லை. பட மூலாதாரம், DEPARTMENT OF ARCHAEOLOGY, TAMILNADU படக்குறிப்பு, கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும் பாறையில் கிடைத்த பானை. இதற்குப் பிறகு எழுந்த கோரிக்கைகளால், நான்காம், ஐந்தாம், ஆறாம் கட்ட அகழாய்வுகளை மாநிலத் தொல்லியல் துறையே நடத்தி முடித்தது. இதற்குப் பின் கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வை நடத்த முடிவுசெய்தபோது, கீழடி மட்டுமல்லாமல் ஆதிச்சநல்லூர், சிவகளை உள்ளிட்ட தமிழ்நாட்டின் தொல்லியல் மு

நமது பூமி எதிர்கொள்ளவிருக்கும் ஆபத்துகள்.

படம்
  பேய் மழையும் பெருவெள்ளமும் ஒரு பக்கம் பல நாடுகளை உருக்குலைக்கின்றன. மறுபுறம், காட்டுத் தீயும், வெப்பமும் பல நாடுகளை கதிகலங்கச் செய்கின்றன. இயற்கை பேரிடர்கள் பேரபாயமாக உருவாகிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் இவற்றால் புவி என்ன மாதிரியான ஆபத்தை எதிர்கொண்டிருக்கிறது?  தீர்வு என்ன என்பது குறித்து மிக மிக முக்கியமான, விரிவான அறிவியல் அறிக்கையை உருவாக்கும் பணியைத் தொடங்கியுள்ளது ஓர் ஐ.நா. அமைப்பு. இந்த அறிக்கை இன்னும் இரண்டு வாரத்தில் வெளியாகும். இது போன்ற தீவிர பேரிடர்கள் தோன்றுவதற்கான காரணம் என்ன? பருவநிலை மாற்றத்துக்கும் அவற்றுக்கும் என்ன தொடர்பு? எந்த அளவுக்கு பருவநிலை மாற்றம் ஆபத்தான கட்டத்துக்கு பூமியை கொண்டு சென்றிருக்கிறது? தீர்வு என்ன என்பது குறித்தெல்லாம் உலக அளவில் உள்ள விஞ்ஞானிகள் ஒன்று கூடி ஒரு அறிக்கையை உருவாக்குகிறார்கள். பருவநிலை மாற்றம் தொடர்பான பன்னாட்டு அரசுகளின் குழு என்ற ஐ.நா. அமைப்பு இந்த விரிவான அறிக்கையை உருவாக்கி வருகிறது. பருவநிலை மாற்றம் புவியை எதிர்நோக்கும் அடுத்த கட்ட ஆபத்தாக உருவாகி வருகிறது என்று விஞ்ஞானிகள் கருதும் நிலையில், இந்த ஆபத்தை எதிர்கொள்வதற்கு ப

உளவு பார்ப்போம் வாரீர்.

படம்
  பெகாசஸ் என்ற ஸ்பைவேர் மூலம் இந்தியாவில் பத்திரிக்கையாளர்கள், அமைச்சர்கள் உட்பட உலகம் முழுக்க பலர் வேவு பார்க்கப்பட்ட செய்தி வெளியான நிலையில், மீண்டும் பெகாசஸ் பற்றிய விவாதமும் சர்ச்சையும் எழுந்துள்ளது. பெகாசஸ் எனப்படும் ரகசிய மென்பொருள், இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஒ எனும் இணையப் பாதுகாப்பு (சைபர் செக்யூரிட்டி) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. வங்கதேசம், மெக்சிகோ, சௌதி அரேபியா போன்ற பல நாடுகள், என்எஸ்ஒ நிறுவனத்திடம் இருந்து பெகாசஸ் மென்பொருளை வாங்கிப் பயன்படுத்துகின்றன. இந்த வேவு பார்க்கும் மென்பொருளை அரசுகள் பயன்படுத்துவது குறித்துப் பல முறை கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அத்துடன் ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் என்எஸ்ஒ நிறுவனத்துக்கு எதிராக வழக்கும் தொடர்ந்துள்ளன. ஆனால், இந்தியா இந்த மென்பொருளை வாங்கியதா இல்லையா என்பது அதிகாரப்பூர்வமாகத் தெரியவில்லை. நாட்டின் பாதுகாப்புக்காகவே பெகாசஸை வாங்குவதாகப் பல நாட்டின் அரசுகள் கூறினாலும், அவை மக்களை வேவு பார்க்க இந்த மென்பொருளைப் பயன்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. பெகாசஸ் எப்படி வேலை செய்கிறது? பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் ஒருவரின் ஐபோன் அல்லது ஆண்டிராய்