மோசடியின் பலன் யாருக்கு?

 கனமழை காரணமாக தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு.

50 பணயக்கைதிகளை விடுவிக்கிறது ஹமாஸ் காசாவில் 4 நாள் போர் நிறுத்தம்:-இஸ்ரேல் ஒப்புதல்.

திருச்சி அருகே வெடிகுண்டு வீசி எஸ்.ஐயை அரிவாளால் வெட்டி தப்ப முயன்ற பிரபல ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை.5 கொலை வழக்கு உட்பட 53 வழக்குகளில் தொடர்புடையவன்.

ஜம்முவில் தீவிரவாதிகள் தாக்குதல். 2 ராணுவ கேப்டன்கள் உள்பட 4 வீரர்கள் பலி: கூடுதல் படைகள் குவிப்பு.கடும் சண்டை .

உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி இறுதிக்கட்டத்தை நெருங்கியது.இன்னும் 12 மீட்டர் துளையிட வேண்டும்.

ஆவின் பச்சை பால் பாக்கெட் இனி இல்லை! ஊதா நிற ஆவின் டிலைட் பாலை முன்னிலைப்படுத்துவது தொடர்பாக அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்.

நடுக்கடலில் துல்லியமாக இலக்கை தகர்த்த பிரமோஸ் ஏவுகணை.இந்தியக் கடற்படையில் இணைப்பு.

பெரும்பாக்கம் ஏரி மதகு உடைந்து நீர் வெளியேற்றம்.200 ஏக்கர்  நீரில் மூழ்கியது .


மோசடியின் பலன் யாருக்கு?

இணைய,டிஜிட்டல் பயன்பாடு அதிகமான பின் தற்போது நாடு முழுவதும் ஏதாவது ஒரு வகையில் விதவிதமாக மோசடிகள் அரங் கேற்றப்படுகின்றன. 

அந்த மோசடிகளில் ஈடு படுபவர்கள் எல்லாம் பெரும்பகுதி பாஜகவில் நிர்வாகிகளாக உள்ளனர். 

அல்லது ஏற்கெனவே மோசடி, கொலை, கொள்ளையில் ஈடுபட்டவர் கள் பெரும்பாலும்  பாஜகவிலேயே இருக்கின்ற னர். மோசடி என்றாலே பாஜக, பாஜக என்றாலே மோசடி எண்ணுமளவிற்கு மக்களிடையே பாஜக ‘சிறப்புப்’ பெற்றிருக்கிறது.

ஒன்றிய அரசு புதிய தாராளமயக் கொள் கையைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்துறையை ஏற்கெனவே கை கழுவிவிட்டது. கட்டுப்பாடற்ற அந்நிய நிறுவனங்களின் போட்டி ஒரு புறம், மறுபுறம் உயர் பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி என பலமுனை தாக்குதலால் இந்தத் துறையே நிலைகுலைந்திருக்கிறது. 

கடந்த 5 ஆண்டுக ளாக இந்தத் துறையின் வளர்ச்சி பூஜ்ஜியம். 

ஏற்கெனவே வாங்கிய கடனை திரும்பச் செலுத்த முடியாமல் பலரும் தற்கொலை செய்து வருகின்றனர். 

தொழில் உரிமையாளர்கள் கூலித் தொழிலாளியாக மாறியிருக்கின்றனர். 

இந்நிலையில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று இவர்களைக் குறிவைத்து பாஜக கும்பல் இந்தியா முழுவதும் இதுபோன்ற மோசடிகளில் ஈடுபட்டிருக்கிறது.  

சமீபத்தில் தமிழகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவன ப்ரமோஷன் கவுன்சில் என்ற பெயரில் பல நூறு கோடிகளை பாஜக நிர்வாகிகள் சுருட்டியிருக்கின்றனர்.

 இந்த மோசடியின் வலைப்பின்னல் பாஜக மாநிலத் தலைமை வரை பரந்து விரிந்திருக்கிறது என்பதுதான் சிறப்பு. 

இந்த போலி அமைப்பின்  நிகழ்ச்சிகளை பாஜக வின் தமிழக ஊடகப் பிரிவே நடத்தியிருக்கிறது.

ஆனால் தற்போது ஒன்றிய அமைச்சர்  நாராயண் டி.ரானே, எம்எஸ்எம்இ புரோமோசன் கவுன்சில் என்கிற அமைப்பு ஒன்றிய அரசின்  அங்கமோ, அங்கீகாரமோ பெற்றது இல்லை. 

இது போன்ற அமைப்புகளை நம்பி மக்கள் ஏமாறக் கூடாது என அறிவுரை கூறியிருக்கிறார். 

அப்படி யென்றால் அந்த அமைப்பினர் மீது புகார் வந்த பின்னரும், ஏன் அந்த அமைப்பினர் ஒன்றிய அரசின் நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டனர்?  

எதற்காக பாஜக தலை வர்கள் மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் அவர்க ளோடு போஸ் கொடுத்து அந்த அமைப்பை புரோ மோட் செய்தனர்?  

மோசடிக் கும்பலுக்கு ஒன்றிய அரசின் குற்றத்தீர்ப்பாயங்களின் வழக்கறிஞரும், பாதிக்கப்பட்டவருக்காக ஒன்றிய  அரசின்அமலாக் கத்துறை வழக்கறிஞரும் ஏன் ஆஜராக வேண்டும்?  

இந்த மோசடி பணம் பாஜக தலைவர் அண்ணாமலை நடத்திய என் மண், என் மக்கள் நடை பயணத்திற்கும் சென்றிருப்பதாக இந்த போலி அமைப்பின் தேசிய தலைவரே உண்மையைப் போட்டுடைத்திருக்கிறார். 

இதிலிருந்தே ஏன் பாஜக பதறு கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். தமிழகக் காவல்துறை இந்த மோசடிக் கும்பலை கூண்டோடு பிடிக்க வேண்டும். 


கிரிக்கெட்டையும் கெடுத்த பா.ஜ.க.ஒன்றிய அரசு!

ல­கக் கோப்­பையை இந்­திய கிரிக்­கெட் அணி­யால் இம்­முறை பெற முடி­ய­வில்லை. அத­னால் என்ன? 

இரண்டு முறை உல­கக் கோப்­பையை வென்ற நாடு இந்­தியா. 

இம்­முறை பெற முடி­யா­மல் போய்­விட்டது. அடுத்­த­முறை வெல்­லும். எனவே, இத்­தோடு அனைத்­தும் முடிந்து­வி­டப் போவது இல்லை.

ஆனால் இப்­படி யோசித்­துப் பாருங்­கள்... உல­கக் கோப்­பையை இந்­திய அணி வென்­றி­ருந்­தால் என்ன நடந்­தி­ருக்­கும்? 

ஏதோ மொத்த ரன்­னை­யும் பிர­த­மர் நரேந்­திர மோடி தான் எடுத்­த­தைப் போலக் குதித்­தி­ருப்­பார்­கள்.

குஜ­ராத்­தில் நடந்­த­தால் இந்த வெற்றி –- நரேந்­திர மோடி மைதா­னத்­தில் நடந்­த­தால் இந்த வெற்றி –- மோடி பிர­த­ம­ராக இருப்­ப­தால் வெற்றி –- அவர் விளை­யாட்­டைப் பார்க்க வந்­த­தால் வெற்றி –- அமித்ஷா மகன் ஜெய்ஷா கிரிக்­கெட் போர்டு செய­லா­ள­ராக இருப்­ப­தால் வெற்றி -– என்று சொல்லி உயி­ரைக் கொடுத்து விளை­யா­டிய மொத்த வீரர்­க­ளை­யும் அவ­மா­னப்­ப­டுத்தி இருப்­பார்­கள்.

‘உல­கம் வென்ற மோடி –- உல­கக் கோப்­பையை வென்­றார்’ என்று சொல்லி இருப்­பார்­கள். 

இரண்டு ஆண்­டு­க­ளுக்கு வரும் 2ஜி மாநா­டு­க­ளின் தலை­மைப் பத­வி­யையே பெரிய சாத­னை­யைப் போலக் காட்டி ஓராண்டு முழுக்க -– அனைத்து மாநி­லங்­க­ளி­லும் விழா எடுத்­த­வர்­கள், உல­கக் கோப்­பை­யில் வென்­றால் விட்டு வைப்­பார்­களா?

 ‘2023 உல­கக் கோப்பை– -2024 மூன்­றா­வது முறை­யாக பிர­த­மர்’ என கற்­ப­னை­யில் மிதப்­பார்­கள்.

இவை எது­வும் நடக்­க­வில்லை. 

அத­னால்­தான் கிரிக்­கெட் தோல்வி கூட, வாழ்க்­கைத் தோல்­வி­யாக உரு­வ­கப்­ப­டுத்­தப்படு­கி­றது.

உல­கக் கோப்பை கிரிக்­கெட் விளை­யாட்­டுப் போட்­டியை வைத்து அர­சி­யல் செய்ய நினைத்­தது பா.ஜ.க. இறு­திப் போட்­டியை நடத்த புகழ்­பெற்ற மும்பை வான்­கடே மைதா­னம், கொல்­கத்தா ஈடன் கார்­டன் மைதா­னம், டெல்லி மைதா­னம் ஆகி­யவை இருக்­கி­றது.

 இவை அனைத்­தை­யும் விட்டு விட்டு அக­ம­தா­பாத் அழைத்­துச் சென்­றார்­கள். 

பிர­த­ம­ரின் மாநி­லத்­தில், பிர­த­மர் பெய­ரால் அமைந்த மைதா­னத்­தில் நடந்­தப்­பட்டு இந்­தியா வெற்றி பெற்­றால் ‘மோடியே வெற்றி பெற்­ற­தாக அர்த்­தம்’ என காட்ட நினைத்­தார்­கள்.

அந்த மைதா­னம் உல­கக் கோப்பை விளை­யாட்டு நடக்­கு­ம­ள­வுக்கு இன்­னும் முழு­மை­யா­கத் தயார்படுத்ப்படவே­வில்லை. 

இறு­திப் போட்டி நடத்­தப்­படும் மைதா­ன­மா­னது, கிரிக்­கெட் விளை­யாட்­டுக்கு நன்கு பழக்­கப்­பட்டிருக்க வேண்­டும். 

ஆனால் அக­ம­தா­பாத் மைதா­னத்­திலோ வெறும் 32 போட்­டி­கள் மட்­டுமே நடத்­தப்­பட்­டுள்­ளது. 

அங்கே விளை­யா­டி­யாக வேண்­டிய நெருக்­க­டியை உரு­வாக்­கி­னார்­கள். இதே­போல், இறு­திப் போட்­டிக்கு முன்பு போர் விமா­னங்­கள் சாகச நிகழ்ச்சி, டிரோன்­கள் மூலம் ஒளி வடி­வம், கலை நிகழ்ச்சி ஆகி­யவை நடத்­தப்­பட்­ட­தும் இந்­திய வீரர்­களுக்­குத் தேவை­யில்­லாத அழுத்­தத்­தைக் கொடுத்­து­விட்­டது என்­றும் சொல்­லப்­ப­டு­கி­றது.

இறு­திப் போட்­டி­யைக் காண பிர­த­மர் மோடி நேரில் வந்­த­தால், அவரைமகிழ்­விக்க கிரிக்­கெட் வாரி­ய­மும், குஜ­ராத் பா.ஜ.க. அர­சும் செய்த பல்­வேறுஏற்­பா­டு­க­ளால் கவன திசை திருப்­பல்­கள் அதி­கம் நடத்­தப்­பட்­டன. 

இந்­தியா, ஆஸ்­தி­ரே­லியா உல­கக் கோப்பை இறு­திப் போட்­டிக்கு முன்பு, உல­கக் கோப்­பையை ராம­ருக்கு மோடி அர்ப்­ப­ணிக்­கும் வகை­யில் புகைப்­ப­டம் வெளி­யா­கி­யி­ருந்­தது.

நீல நிற உடையே இந்­திய வீரர்­க­ளது அடை­யா­ளம். ஆனால் பயிற்­சி­யின் போது காவி நிற பனி­யன்­களை அணி­யக் கட்­டா­யப்­ப­டுத்­தப்­பட்­டார்­கள். 

இதனை அர­சி­யல் தலை­வர்­கள் கண்­டித்து கருத்­து­களை வெளி­யிட்­டார்­கள். மேற்­கு­வங்க மாநி­லம் மத்­திய கொல்­கத்­தா­வில் நடந்த ஜக­தாத்ரி பூஜை­யில் கலந்து கொண்ட அம்­மா­நில முதல்­வர் மம்தா பானர்ஜி பேசு­கை­யில்,“ஒன்­றிய பா.ஜ.க. அரசு, நாடு முழு­வ­தும் காவி வர்­ணம் பூச முயற்­சிக்­கி­றது. 

இந்­திய கிரிக்­கெட் அணி­யின் ஜெர்­சி­யின் (வீரர்­க­ளின் உடை) நிறத்தை மாற்­றி­யது ஒரு அர­சி­யல் நட­வ­டிக்­கை­யா­கப் பார்க்­கிறேன். விளை­யாட்டை காவி நிற­மாக்க ஒன்­றிய அரசு முயற்­சிக்­கி­றது. 

இந்­திய கிரிக்­கெட் வீரர்­களை நினைத்­துப் பெரு­மை­ய­டை­கி­றோம். அவர்­கள் உல­கக் கோப்­பை­யில் வெற்றி பெறு­வார்­கள் என்று நம்­பு­கி­றேன். 

வீரர்­க­ளுக்கு ஜெர்சி நிறத்தை மாற்­றி­யது போன்று, மெட்ரோ ரயில் நிலை­யங்­க­ளுக்கு காவி வர்­ணத்தை பூசி­யுள்­ளார்­கள்” என்­றார் மேற்கு வங்க முத­ல­மைச்­சர் மம்தா பானர்ஜி.

கிரிக்­கெட் விளை­யாட்டு வீரர்­க­ளின் வெற்­றியை தங்­க­ளது வெற்­றி­யா­கக் காட்ட பா.ஜ.க. நினைப்­பது பொது­வெ­ளி­யில் அம்­ப­லம் ஆனது.

சிவ­சே­னைக் கட்­சி­யின் (உத்­தவ் தாக்­கரே பிரிவு) மாநி­லங்­க­ளவை உறுப்­பி­னர் சஞ்­சய் ராவத் கூறும்­போது, “நரேந்­திர மோடி பந்­து­வீசி, அமித் ஷா பேட்­டிங் செய்­வ­தைப் போல உல­கக்­கோப்பை இறு­திப்­போட்­டியை ஒரு காவி கட்­சி­யின் நிகழ்வு போன்ற போலித் தோற்­றத்தை ஏற்­படுத்தி ரு­கின்­ற­னர் பா.ஜ.க.வினர். 

கிரிக்­கெட் விளை­யாட்­டில் அர­சி­ய­லைக் கொண்டுவர­வேண்­டிய அவ­சி­ய­மில்லை. ஆனால் அக­ம­தா பாத்­தில் நடை­பெ­றும்போட்­டி­யில் அர­சி­யல் கலக்­கப்­ப­டு­கி­றது. 

பிர­த­மர் மோடி கலந்­து­கொண்­ட­தால்­தான் இந்­தியா உல­கக்­கோப்­பையை வென்­றது என பா.ஜ.க.வினர் கூறு­வ­தற்­கும் வாய்ப்­புள்­ளது. அவர்­கள் அப்­ப­டிக் கூறி­னா­லும் எனக்கு ஆச்­ச­ரி­ய­மில்லை. 

இந்த நாட்­டில் எது வேண்­டு­மா­னா­லும் நடக்­க­லாம்.” என்று சொன்­னார். இவை அனைத்­தும் உண்­மை­யில் நடக்க இருந்­த­வை­தான்.

“ஆளும் பார­திய ஜனதா கட்சி ‘அர­சி­யல் நிகழ்வை’ நடத்த விரும்­பி­ய­தால், கிரிக்­கெட் விளை­யாட்­டில் நாட்­டின்பாரம்­ப­ரிய அதி­கார மைய­மாக இருந்த மும்­பை­யி­லி­ருந்து குஜ­ராத்­தில் உள்ள அக­ம­தா­பாத்­திற்கு மாற்­றி­யது” என்­றும் அவர் சொன்­னார்.

 அந்த வகை­யில் தனது நரேந்­திர மோடி ஸ்டேடி­யத்­தில் தோற்­றது இந்­திய வீரர்­கள் அல்ல. பா.ஜ.க.வின் அர­சி­யல் தந்­தி­ரங்­கள்­தான் தோற்­றுள்­ளது.

விளை­யாட்­டுப் போட்­டியை அர­சி­ய­லாக ஆக்க நினைத்த பா.ஜ.க. தோற்­றி­ருக்­கி­றது. அதன் தொடரும் தோல்­வி­களில் இது­வும் ஒன்று.

------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?