பார'தீய' (தேர்தல் )ஆணையம்?
பார'தீய' தேர்தல் ஆணையம்? தேர்தல் ஆணையர்களே, தற்போதைய தேர்தல் ஆணைய அதிகாரிகளை விமர்சிக்கும் அளவிற்கு, தேர்தலின் போது பல்வேறு வகையான அட்டூழியங்கள் தலைவிரித்து ஆடுகின்றன. குழந்தைகளாலும், வில்லத்தனமான ஆட்களாலும், வாக்கு இயந்திரங்கள், விளையாட்டுப் பொறிகளாக கையாளப்படுகின்றன. ஆளும் கட்சி என்ற ஒற்றை காரணத்திற்காக, தாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து விடலாம் என்ற மனநிலையை எட்டியுள்ளனர் பா.ஜ.க.வினர். அதன் ஒரு பகுதியாகவே, பா.ஜ.க நிர்வாகிகள், தனது சிறுவயது மகன்களை, வாக்குச்சாவடிக்குள் கூட்டி சென்று வாக்களிக்க வைப்பது; 16 வயது சிறுவன் தானாகவே மற்றவர் அடையாளத்தை எடுத்துக்கொண்டு, பா.ஜ.க வேட்பாளருக்கு 8 முறை கள்ளத்தனமாக வாக்களிப்பது; வாக்களிக்க உதவுகிறேன் என இயலாதவர்களை கூட்டிச்சென்று, வாக்காளர்கள் விருப்பத்திற்கு மாற்றாக பா.ஜ.க.விற்கு வாக்களிப்பது; வாக்குச்சாவடிகளை சூறையாடுவது; சிறுபான்மையினர்களை வாக்களிக்க விடாமல் தடுப்பது; வாக்கு இயந்திரங்களுக்கு வழிபாடு செய்வது என ஜனநாயகத்தை சீரழிக்கின்ற அனைத்து செயல்களும் ஒன்றன் பின் ஒன்றாக அம்பலப்பட்டு வருகிறது. இவை அம்பலப்பட காரணமாய் இருப்பது கூட, குற்