அறிக்கை என்னாச்சு?
🔹 சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக கோடை மழை. பகலில் வெயில் சுட்டெரித்த நிலையில், மாலைக்குப் பிறகு மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி.
🔹 தமிழ்நாட்டில் நேற்று 13 இடங்களில் வெயில் சதமடித்ததால், சிரமம் அடைந்த மக்கள். அதிகபட்சமாக திருச்சியில் 104 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது.
🔹 தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இரவில் மின் வெட்டு தொடருவதால், மக்கள் போராட்டம். புதுக்கோட்டை அரசு அலுவலகத்தில் அமைச்சர் முகமது பர்வேஸ் ஆய்வின்போதே மின்வெட்டு ஏற்பட்டதால் பரபரப்பு.
🔹 தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம். தற்போதைய டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம்.
🔹 தென்காசி, நெல்லை மாவட்டத்தின் இருவேறு பகுதிகளில், தெருக்களில் நின்ற மக்களை சரமாரியாக வெட்டிய மர்ம கும்பல். இருசக்கர வாகனங்களில் வந்து அட்டூழியத்தில் ஈடுபட்டவர்கள் ஒரே கும்பலா என அறிய, 4 பேரைஹப் பிடித்து போலீஸ் விசாரணை.
🔹 டாஸ்மாக் ஊழியர்களின் போராட்டம் முடிந்து கடைகள் திறக்கப்பட்டதால் அலைமோதிய கூட்டம். தனியார் பார்களில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் வாங்கியதாக மதுகுடிப்போர் வேதனை.
🔹 கடலூரில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம். தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு இருக்கிறதா எனவும் கேள்வி.
🔹 சி.பி.எஸ்.இ. பிளஸ் டூ விடைத்தாள் திருத்தும் பணியை கோயெம்ப்ட் நிறுவனத்திற்கு கொடுத்ததில் முறைகேடு. 18 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்களின் எதிர்காலம் தகுதியில்லா நிறுவனத்திடம் தரப்பட்டதாக குற்றசாட்டு,சி.பி.எஸ்.இ. பிளஸ் டூ விடைத்தாள் திருத்தும் பணி முறைகேடுகளை ஆதாரத்துடன் வெளியிட்ட மாணவர். ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானை அம்பலப்படுத்தியதாக 17 வயது மாணவருக்கு ராகுல் பாராட்டு.
🔹 மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சியை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் தஞ்சையில் ஆர்ப்பாட்டம். தமிழகஅரசு அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என வலியுறுத்தல்கீழடி..
அமர்நாத் அறிக்கை என்னாச்சு? வலுக்கும் கோரிக்கை!
கீழடியில் (Keezhadi) தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மேற்கொண்ட ஆய்வறிக்கையை (Amarnath Report) ஒன்றிய அரசு உடனே வெளியிட தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சமூக செயற்பாட்டாளர்களின் கூட்டறிக்கை: 2014 – 2016 காலகட்டத்தில் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் ( Archeological Survey of India – ASI ) சார்பாகக் கீழடி அகழாய்வு, தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களால் மேற்கொள்ளப் பட்டது. கீழடியில் கிடைக்கப் பெற்ற பொருட்கள் மற்றும் தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் 982 பக்கங்கள் கொண்ட அறிக்கையினை அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்கள் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்திற்கு 2023 ஜனவரி மாதத்தில் முறைப்படி சமர்ப்பித்துள்ளார்.
அறிவியல் அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் கீழடியின் காலம் கி.மு.800 – 500 வரை என்பதாக அவர் வரையறுத்துள்ளார்.
திருப்பி அனுப்பிய தொல்லியல் ஆய்வகம்
ஆனால், போதிய உண்மையான காரணங்களோ, மதிப்புயர் நியாயங்களோ இன்றி அமர்நாத் அவர்கள் சமர்ப்பித்த ஆய்வறிக்கையினை மறுத்து,
அவரின் ஆய்வறிக்கையை மேம்படுத்தி அனுப்புமாறு இந்தியத் தொல்லியல் ஆய்வகம் அவருக்கே திருப்பி அனுப்பியது.
இந்த அறிக்கையை அனுப்பிய இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் உறுப்பினர் குழுவில் உள்ள எவரும் கீழடிக்கு வந்ததே இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. மேலும் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் தனக்கு அனுப்பிய அறிக்கை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்ப அடிப்படையில் உருவாக்கப் பட்டதாக அமர்நாத் அவர்கள் தெளிவு படுத்துகிறார்.
அறிக்கையை மாற்ற சொல்வதா?
பல்வேறு தரவுகளின் அடிப்படையில் கீழடியின் தொன்மையைக் கணித்த அமர்நாத் அவர்களின் காலத்தை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் ஏற்கத் தயாராக இல்லை.
அதை மாற்ற வேண்டும் என அது வலியுறுத்துகிறது.
இதுதான் இச்சிக்கலின் சாரம்.
அமர்நாத்தின் திட்டவட்டமான முடிவுஆனால், எவ்விதப் புறச் செல்வாக்கிற்கும் உள்ளாகாமல், உண்மையான மற்றும் சரியான அறிக்கையைக் கடமை உணர்வோடும் மனச்சாட்சியோடும் சமர்ப்பித்ததாகக் கூறி, தனது ஆய்வறிக்கையை மாற்றி அமைக்கும் பேச்சுக்கே இடமில்லை என அமர்நாத் அவர்கள் திட்டவட்டமாக எழுத்து வடிவில் தெரிவித்து விட்டார்.
ஆனால் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் அறிக்கையைத் திருத்துமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருவதை ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பொதுவெளியில் பகிரங்கப்படுத்துக
துறைவாரியான கடிதப் போக்குவரத்தோடு இந்த முக்கியமான செய்தி முடங்கி விடுவது ஏற்புடையதல்ல! அமர்நாத் அவர்கள் தனது ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்து மூன்று ஆண்டுகளாகியும் கீழடி ஆய்வறிக்கையை வெளியிடாமல் இருப்பது பெரும் ஐயத்தை உண்டாக்குகிறது.
இதனால் உண்மை நிலை என்ன என்பதை அறிய முடியாமலும் இருக்கிறது.
எனவே இத்தகைய குழப்பத்தைப் போக்கும் வகையில், அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களின் கீழடி ஆய்வறிக்கையின் மூலப்பிரதியை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் உடனடியாகப் பொதுவெளியில் வெளியிட்டு, அனைவரின் ஐயத்தையும் போக்க வேண்டும்.
மேலும், அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களின் நிலைப்பாட்டை ஆதரித்தும், இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தொல்லியல் அறம், விதிகள், விழுமியங்களுக்கு எதிராகத் தமிழர் நாகரிகத்தின் தொன்மையை ஏற்க மனமின்றிச் செயல்படும் போக்கினைக் கண்டித்தும் முந்தைய மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசு, தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவித்திருந்தது.தமிழகத்தின் தொன்மையை அறிவியல் வழியில் நிறுவும் அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களின் கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட அரசும் உரிய அனைத்து வழிகளிலும் முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டுகிறோம்.
கூட்டறிக்கை ஒருங்கிணைப்பு : கண. குறிஞ்சி (தமிழ்நாடு மக்கள் உரிமைப் பேரவை)
குழந்தைத் தொழிலாளர் நடவடிக்கை?
சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தது, பெற்றோரை தங்கள் கட்சிக்கு வாக்களிக்கும்படி குழந்தைகள் மூலமாக அறிவுறுத்தியது தொடர்பாக விசாரணை நடத்தக் கோரிய வழக்கில் தேர்தல் ஆணையம், தவெக, திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் புவனகிரியைச் சேர்ந்த வழக்கறிஞர் வாசுகி தாக்கல் செய்த பொது நலமனுவில், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக திமுக, அதிமுகவுக்கு எதிராகவும், பெற்றோரை தங்கள் கட்சிக்கு வாக்களிக்கும்படி குழந்தைகளிடம் செல்வாக்கை செலுத்தியதாக தவெகவினருக்கு எதிராகவும் குற்றஞ்சாட்டி இருந்தார்.
இது தொடர்பாக திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகளுக்கு எதிராக சுதந்திரமான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, “தவெக தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.முரளிதர் ஆஜராகி, வெறும் செய்தியின் அடிப்படையில் மட்டுமே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்டுவிடும். தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக தேர்தல் வழக்குதான் தாக்கல் செய்ய முடியும்” எனத் தெரிவித்தார்.
திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, “குழந்தைகளை பிரச்சாரத்தில் பயன்படுத்தியதாக தங்களுக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் இல்லை.
ஊழல் நடவடிக்கையை பொறுத்தவரை வெற்றிபெற்ற வேட்பாளரை எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும்” என தெரிவித்தார்.
அதிமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபாலும் இதே வாதங்களை முன்வைத்தார். தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன், மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனுவுக்கு பதிலளிக்கும்படி தவெக, திமுக, அதிமுக தேர்தல் ஆணையம் ஆகியோருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 1-ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.






