கொண்டாட்டமும்,மக்கள் திண்டாட்டமும்,

முதல்வர் ஸ்டாலின் ஆரம்பித்த 'முதல்வரின் காலை உணவுத் திட்டத்'தின் பெயரை மாற்றியது த.வெ.க. அரசு. பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம்.டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தில் மீண்டும் வெடித்த வன்முறை. போராட்டக்காரர்கள் மீது தடியடி, கண்ணீர் புகைகுண்டுகளை வீசியதால் பதற்றம்.டெல்லி ஜந்தர் மந்தரை சுற்றியுள்ள இடங்களில் மீண்டும் இணைய சேவை துண்டிப்பு. போராட்டத்துக்கு சமூக வலைதளங்களில் அழைப்பு விடுக்கப்பட்டதால் ஒன்றிய அரசு நடவடிக்கை.📰 கரப்பான் பூச்சி கட்சி போராட்ட களத்திற்கு சென்று திமுக எம்பி கனிமொழி ஆதரவு. மாணவர்கள் மீது அக்கறை இல்லாததால் வன்முறையை கட்டவிழ்த்து விட்டதாக குற்றச்சாட்டு.📰 பாஜக ஆட்சியில் 152 வினாத்தாள் கசிவுகளில் ஒருவர்கூட தண்டிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு. அமைதியாக போராடும் மாணவர்களை ஆயுதங்கள் காட்டி மிரட்டுவது ஏன்? என்றும் கேள்வி.📰 காலை உணவுத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டிலும் சர்ச்சையில் சிக்கிய தவெக அரசு. எஸ்.சி., எஸ்.டி., சிறப்பு நிதியை பயன்படுத்துவதா? என கல்வியாளர்கள் கண்டனம்.📰 நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை சிறைப்பிடித்தது இலங்கை கடற்படை. கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு மீனவர்கள் சிறையில் அடைப்பு.📰 த.வெ.க. அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம். கல்வி வளாகத்திற்குள் புகுந்து மாணவர்கள் கைது இதுவரை நடந்திராத செயல் எனக் காட்டம்.📰 காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது. காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கர்நாடகா திட்டவட்டம்.📰 காவிரியில் தண்ணீர் கிடைக்காமல் டெல்டா விவசாயம் கடுமையாக பாதிப்பு. நெல் தட்டுப்பாடு காரணமாக அரிசி விலையும் மள,மளவென உயர்வு.📰 விருதுநகர் அருகே பெண்ணை கட்டிப்போட்டு 21 சவரன் நகைக் கொள்ளையடித்த வழக்கு. தண்ணீர் கேட்பது போல் நடித்து, கைவரிசை காட்டிய த.வெ.க. நிர்வாகி உள்பட 3 பேர் கைது 📰 தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைக்க நிலம் கையகப்படுத்த உப்பு உற்பத்தியாளர்கள் எதிர்ப்பு. 📰 தெலுங்கானாவில் மதுபோதையில் அரசு பேருந்தை திருடிச்சென்ற நபரால் பரபரப்பு. சினிமா பாணியில் 18 கிலோ மீட்டர் விரட்டிச்சென்று போலீசார் பிடித்த காட்சி இணையத்தில் வைரல்.📰 சீனாவில் நெல் நாற்றுகளை நட்டு கண்கவர் ஓவியங்களாக மாற்றிய விவசாயிகள். 


 "நீட் "மோசடி

‘நீட்’ தேர்வு மிக­மிக மோச­டி­யா­னது, கொடூ­ர­மா­னது என்­பதை முத­லில் உணர்ந்து அதற்கு கடு­மை­யான எதிர்­வி­னையை ஆற்­றிய அர­சி­யல்

இயக்­கம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம். அந்­தத் தேர்வு 2016 ஆம் ஆண்டு தொடங்­கி­யது முதல் எதிர்த்து வரு­கி­றது. ‘இவர்­க­ளுக்கு வேறு வேலை இல்லை’, ‘ ஒன்­றிய அரசு எதைச் சொன்­னா­லும் இவர்­கள் அதனை எதிர்ப்­பார்­கள்’ என்று அப்­போ­தெல்­லாம் பதில் சொல்லி வந்­தார்­கள் சிலர். 

இதோ ஒன்று ஒட்­டு­மொத்த இளை­ஞர், மாண­வர் சமு­தா­யமே நீட் தேர்­வுக்கு எதி­ரான போராட்­டத்­தைத் தொடங்கி விட்­டது.

‘நீட்’ தேர்வு என்­பது கோச்­சிங் செண்­டர்­கள் கொள்ளை அடிப்­ப­தற்­காக உரு­வாக்­கப்­பட்ட தேர்வு முறை. இதன் கொடுமை தாங்­கா­மல் தற்­கொலை செய்து கொண்­ட­வர்­கள் தொகை ஆண்­டு­தோ­றும் அதி­க­ரித்து வரு­கி­றது. இது ஒரு பக்­கம்.

இந்த தேர்­வை­யா­வது முறை­யாக நடத்­து­கி­றார்­களா என்­றால் இல்லை. வட மாநி­லங்­க­ளில் வினாத்­தாள் கசி­வது ஆண்­டு­தோ­றும் நடக்­கி­றது. லட்­சக்­க­ணக்­கான பணத்­துக்கு வினாத்­தாள் விற்­பனை ஆகி­றது. ஆள்­மா­றாட்­ட­மும் நடக்­கி­றது. சிபி.ஐ. விசா­ர­ணை­யில் சிக்கி சில மாண­வர்­கள், அவர்­தம்

பெற்­றோர்­கள் கைது செய்­யப்­பட்­டார்­கள். இது போன்ற முறை­கே­டு­களை

ஒன்­றிய பா.ஜ.க. அர­சால் தடுக்க முடி­ய­வில்லை.தேர்வை ரத்து செய்து மறு­ப­டி­யும் நடத்­து­வ­தைப் போன்ற வன்­முறை இருக்க முடி­யுமா? அதை­யும் கூச்­ச­மில்­லா­மல் செய்­கி­றார்­கள்.

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்­டும், அல்­லது தமிழ்­நாட்­டுக்கு விலக்கு அளிக்க வேண்­டும் என்று சொல்லி தமிழ்­நாடு சட்­ட­மன்­றத்­தால் நிறை­வேற்றி அனுப்பி வைக்­கப்­பட்ட சட்­ட­முன்­வ­டி­வு­களை ஒன்­றிய பா.ஜ.க. அரசு

மதிக்­கவே இல்லை. குப்­பைக் கூடை­க­ளுக்­குள் போய்­விட்­டது.

இவை அனைத்­தை­யும் ஒன்­றிய கல்வி அமைச்­சர் தர்­மேந்­திர பிர­தான் ஆண­வத்­து­டன் நிரா­க­ரித்­தார். தமிழ்­நாட்­டை­யும் மக்­க­ளை­யும் அர­சி­யல் தலை­வர்­க­ளை­யும் கொச்­சைப்­ப­டுத்தி நாடா­ளு­மன்­றத்­தில் பேசி­னார் தர்­மேந்­திர பிர­தான். ‘நீட்’ தேர்­வுக்­கான எதிர்ப்பை நாடா­ளு­மன்­றத்­தில் எழுப்­பி­ய­தன் மூல­மாக ஒட்­டு­மொத்த இந்­தி­யா­வுக்கே இத்­தேர்­வின் கொடூ­ரத்தை விளக்­கி­யது தி.மு.கழ­கம்.

இதைத்­தான் இப்­போது கையில் எடுத்­துள்­ளார்­கள் இளை­ஞர்­கள், மாண­வர்­கள். கரப்­பான்­பூச்சி ஜனதா கட்சி என்ற அமைப்பு ஒன்­றிய அமைச்­சர் தர்­மேந்­திர பிர­தானை பதவி வில­கச் சொல்­கி­றது.

‘நீட்’ தேர்வு வினாத்­தாள் கசிவு உள்­ளிட்ட தேர்வு முறை­கே­டு­க­ளுக்­குப் பொறுப்­பேற்று ஒன்­றிய கல்வி அமைச்­சர் தர்­மேந்­திர பிர­தான் பதவி விலக வேண்­டும், இது போன்ற தேர்வு முறை­யில் சீர்­தி­ருத்­தங்­கள் மேற்­கொள்­ளப்­பட வேண்­டும், இத்­தேர்வு முறை­யால் தற்­கொலை செய்து கொண்ட மாண­வர்­கள் குடும்­பத்­துக்கு ஒரு கோடி ரூபாய் தர வேண்­டும் என்­பது உள்­ளிட்ட கோரிக்­கை­களை வலி­யு­றுத்தி கரப்­பான்­பூச்சி ஜனதா கட்­சி­யி­னர் கடந்த ஜூன் 20-ம் தேதி முதல் டெல்லி ஜந்­தர் மந்­த­ரில் போராட்­டங்­களை நடத்தி வரு­கின்­ற­னர். இவர்­க­ளது போராட்­டத்­துக்கு சமூக ஆர்­வ­லர் சோனம் வாங்­சுக் ஆத­ரவு தெரி­வித்­தார். 

உண்­ணா­வி­ர­தம் தொடங்­கி­னார். அவ­ரது உடல்­நிலை கடந்த 18 ஆம் தேதி­யன்று மிக­வும் மோச­மா­னது. வலுக்­கட்­டா­ய­மாக அவ­ரைத் தூக்­கிச் சென்று மருத்­து­வ­ம­னை­யில் சேர்த்­தது டெல்லி காவல் துறை. இவ­ரது போராட்­டம் இந்­தியா முழு­மைக்­கும் கவ­னத்தை ஈர்த்­தது.

நேற்­றைய தினம் ( ஜூலை 20) அன்று நாடா­ளு­மன்­றத்தை நோக்கி அவர்­கள் பேர­ணி­யா­கச் செல்ல இருந்­த­னர். நாடா­ளு­மன்­றம் கூடும் நாள் என்­ப­தால் இவர்­கள் பேர­ணியை தடுக்க அனைத்து வகை­யி­லும் முயற்­சித்­தது காவல் துறை. 

இணை­யத்­தள சேவை­களை முடக்­கி­யது அரசு. நாடா­ளு­மன்ற வளா­கத்­துக்­குள் இளை­ஞர்­கள் வரு­வ­தைத் தடுக்க முக்­கி­ய­மான ஐந்து மெட்ரோ ரயில் நிலை­யங்­களை பூட்­டி­னார்­கள். 

ஆனா­லும் சாலை­கள் வழி­யாக ஜந்­தர் மந்­தர் பகு­திக்கு இளை­ஞர்­கள் குவி­யல் குவி­ய­லாக வந்து விட்­டார்­கள். நாடா­ளு­மன்­றத்தை நெருங்க விடா­மல் இரும்பு வேலி அமைக்­கப்­பட்டு இருந்­தது. 

அதை தாண்­டி­னார்­கள் இளை­ஞர்­கள். அவர்­கள் மீது தண்­ணீர் பீச்சி அடிக்­கப்­பட்­டது. அப்­போ­தும் இளை­ஞர்­கள் முன்­னே­றி­னார்­கள்.

நாடா­ளு­மன்­றத்தை ஒட்­டிய ரயில் பவன் பகு­திக்கே இளை­ஞர்­கள் முன்­னேறி வந்­த­த­தும் தடி­யடி நடத்­தி­யது காவல் துறை. பல­ருக்­கும் ரத்­தம் ஒழு­கி­யது.

குண்­டுக்­கட்­டாக அவர்­களை தூக்­கிச் சென்­றது போலீஸ். எந்த நேர­மும் நாடா­ளு­மன்ற வளா­கத்­துக்­குள் அவர்­கள் நுழை­ய­லாம் என்ற நிலை ஏற்­பட்­டது. எனவே நாடா­ளு­மன்­றத்­தில் வெளிப்­புற நுழைவு வாயில்­கள் அனைத்­தும் மூடப்­பட்­டது. 

கண்­ணீர் புகை குண்­டு­களை வீசி­யது காவல் துறை. இதன் பிறகு தான் கூட்­டம் ஓர­ளவு கலைந்­தது. பேச்­சு­வார்த்தை நடத்த இறங்கி வந்­தது பா.ஜ.க. அரசு.

போராட்­டம் தொடங்­கு­வ­தற்கு முன்­ன­தா­கவே பேச்­சு­வார்த்தை நடத்தி இருக்க வேண்­டும் அரசு. இளை­ஞர்­க­ளும், மாண­வர்­க­ளும் கட்­டுப்­ப­டுத்த முடி­யாத அள­வுக்கு வேக­மாக இருக்­கி­றார்­கள் என்று தெரிந்த பிற­கு­தான்

பேச்­சு­வார்த்தை நடத்தி இருக்­கி­றது பா.ஜ.க. அரசு. சுகா­தா­ரத் துறை அமைச்­சர் ஜே.பி.நட்டா, கரப்­பான்­பூச்சி ஜனதா கட்சி பொறுப்­பா­ளர்­க­ளி­டம் பேச்­சு­வார்த்தை நடத்­தி­னார். 

இரண்டு மணி நேரம் தங்­களை காக்க வைத்­தார் அமைச்­சர் என்று அக்­கட்­சி­யி­னர் குற்­றம் சாட்டி இருக்­கி­றார்­கள். தர்­மேந்­திர பிர­தான் பதவி விலக வேண்­டும், 

தற்­கொலை செய்து கொண்ட மாண­வர் குடும்­பத்­துக்கு ஒரு கோடி தர வேண்­டும் என்ற கோரிக்­கை­களை வைத்­துள்­ளது இக்­கட்சி. ஒன்­றிய அர­சின் கவ­னத்­துக்கு கொண்டு செல்­வ­தா­கச் சொல்லி இருக்­கி­றார் ஜே.பி.நட்டா.

‘‘தர்­மேந்­திர பிர­தான் பதவி வில­கும் வரை போராட்­டம் தொட­ரும். மீண்­டும் நாடா­ளு­மன்­றம் நோக்கி போராட்­டம் நடக்­கும்” என்று கரப்­பான்­பூச்சி ஜனதா கட்சி அறி­வித்­துள்­ளது.நேற்­றைய போராட்­டத்­தில் போலீ­ஸார் நடத்­திய தடி­யடி, கண்­ணீர் புகை குண்டு வீச்சு சம்­ப­வங்­க­ளில் 300-க்கும் மேற்­பட்ட மாண­வர்­கள் காயம் அடைந்­துள்­ள­தா­க­வும், 70 மாண­வர்­களை டெல்லி போலீ­ஸார் கைது செய்­துள்­ள­தா­க­வும் அக்­கட்சி சொல்­கி­றது. எனவே அவர்­கள் போராட்­டம் தொடர இருக்­கி­றது.

இளை­ஞர்­கள்­தான் எங்­கள் மீது முத­லில் கல்­வீ­சி­னார்­கள் என்று பொய் சொல்லி அவர்­கள் மீது அரா­ஜ­க­மான தாக்­கு­தலை காவல் துறை நடத்தி

இருப்­பது கண்­டிக்­கத்­தக்­கது. லத்­தி­கள் வீசு­வ­தாலோ, கண்­ணீர் புகை போடு­ வ­தாலோ மக்­கள் போராட்­டங்­களை அடக்கி விட முடி­யாது.

‘நீட்’ தேர்வை முழு­மை­யாக ரத்து செய்­வது தான் போராட்­டக்­கா­ரர்­க­ளின் முழு­மு­தல் கோரிக்­கை­யாக இருக்க வேண்­டும். அவர்­கள் அர­சுக்கு வைக்­கும் கோரிக்­கை­யா­னது முழு­மை­யா­ன­தாக அமைய வேண்­டும்.