எரியும் செய்தி

வ்வப்போது மத்திய அரசு தான் இருப்பதாக காண்பிக்க ஏதாவது செய்கிறது.
அப்படி செய்ததுதான் பெட்ரோல் விலையை உயர்த்த அந்தந்த நிறுவனங்களுக்கு
அனுமதி அளித்தது.
                   இப்போது  வலைகுடா நாடுகளுக்கு லேசாக தலைவலித்தால் கூட இந்தியாவில்
பெட்ரோல் விலையை இவர்கள் உயர்த்திவிடுகிறார்கள்.
                 இந்தவிலை உயர்வால் விலைவாசி உயர்வதை தவிர வேறு நன்மை இல்லை.
இருப்பினும் அம்பானி வகையறாக்கள்,நன்மை அடைகிறார்கள்.என்பதாலே இது அனுமதிக்கப்படுகிறது.
                வேறுவழி.இன்று அரசாங்கம் அவர்கள் நன்மைக்காகத்தானே நடக்கிறது.
மக்கள் ஓட்டு போடமட்டும் தானே தேவை.வாக்குஎந்திரம்போல் மக்கள்  காசைவாங்கிக்கொண்டு வாக்களிக்கும் மற்றோர் எந்திரம்.
                 அது சரி.விலையை ஏற்ற இவர்கள் கூறும் காரணம் அதைவிட கேவலமான ஒன்று.
எண்ணை நிறுவனங்கள் இழப்பை சந்திக்கிறதாம். எந்த இடத்தில் வைத்து சந்தித்தது என்று கூறினால் நன்றாக இருக்கும்.
                   இந்திய எண்ணை நிறுவன்ங்கள் ஆயிரக்கோடிக்கணக்கில் லாபம் சம்பாதித்து அதில்
அரசுக்கான ஈட்டுத்தொகையாக கணிச மான, கோடிக்கணக்கான தொகையை அரசிடம் கொடுக்கிறது.இப்படி பொய்கூறும் அமைச்சர்தான் அதிலும் பல்லைக்காட்டிக்கொண்டு
காசோலையை வாங்கி போஸ் கொடுக்கிறார். என்ன கொடுமைங்க இது?
                     நம்ம பக்கத்து நாடுகளில் நம் நாட்டை விட பெட்ரோல் விலை குறைவு.அதை விடுங்க
நம்ம சட்டாம்பிள்ளை அமெரிக்காவில் விலை என்ன என்று நம் ம[ண்]ன்மோகன்ஜிங் மன்னிக்கவும் சிங்கை விசாரிக்கசொல்லுங்க,,,,,

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?