கச்சத்தீவு அருகே எண்ணெய் கிணறுகள் 

இந்தியா, சீனா, ரஸ்யா கடும்போட்டி.
  

 
மன்னார் கடற்பகுதியில் எண்ணெய் அகழ்வை மேற்கொள்ளவதில் இந்தியா, சீனா, ரஸ்யா உள்ளிட்ட பல நாடுகளுக்கடையில் கடும் போட்டி ஆரம்பமாகியுள்ளது.
மன்னார் கடற்படுக்கையில் எண்ணெய் மற்றும் எரிவாயு வளம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள பகுதிகளை சிறிலங்கா அரசாங்கம் எட்டுத் துண்டங்களாகப் பிரித்துள்ளது.
இவற்றில் இரண்டு துண்டங்கள் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
முன்னதாக இந்திய அரச நிறுவனமான ‘கெய்ன் இந்தியா‘ என்ற நிறுவனத்துக்கே இந்த துண்டம் ஒன்று வழங்கப்பட்டதாக கூறப்பட்டது.
ஆனால் சீனாவுக்கும் ஒரு துண்டம் வழங்கப்பட்டுள்ளதாக தற்போது வெளியாகும் செய்திகள் கூறுகின்றன.
ஏனைய ஐந்து துண்டங்களையும் விரைவில் அனைத்துலக மட்டத்தில் ஏலத்தில் விற்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
கடந்த ஆண்டுத் தொடக்கத்தில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச ரஸ்யா சென்றிருந்த போது நடத்தப்பட்ட பேச்சுக்களில் மன்னார் கடற்படுக்கையில் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வை மேற்கொள்வதற்கு ரஸ்ய அரச நிறுவனம் இணங்கியிருந்தது.
இந்தநிலையில், மன்னார் கடற்படுக்கையில் எஞ்சியுள்ள ஐந்து எண்ணெய் அகழ்வுத் துண்டங்களுக்கு அனைத்துலக அளவில் கேள்விபத்திரம் கோரும் போது இந்தியா, சீனா, ரஸ்யா உள்ளிட்ட பல நாடுகள் கடும் போட்டியில் இறங்கவுள்ளன.
இதற்கிடையே இந்தியாவின் கெய்ன் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட துண்டத்தில் எதிர்வரும் ஜுலை மாதம் எண்ணெய் கிணறு துளையிடும் பணிகள் மேற்கொள்ளப்பபடவுள்ளன.
இதற்கென ஆழ்துளையிடும் கப்பல் ஒன்று மன்னார் கடற்பகுதிக்கு கொண்டு வரப்பட்டு அது சார்ந்த ஆய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கெய்ன் இந்தியா நிறுவனம் அறிவித்து.
இப்போதாவது தெரிகிறதா கச்சத்தீவின் முக்கியத்துவம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?