நாற்காலி கனவுகள்


விஜயகாந்த்


 
                                          எதிர்வரும் சட்டமன்றத்தேர்தல்களில் அஇஅதிமுக போட்டியிடவிருக்கும் 160 தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் பட்டியலை அஇஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூட்டணிக் கட்சிகளை கலந்தாலோசிக்காமல் வெளியிட்டமையால் அதிருப்தியில் இருக்கும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வியாழனன்று கூடி தங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதித்தனர்.
ஆனால் இவர்களிடையே கருத்தொற்றுமை எதுவும் எட்டப்பட்டதாகத் தெரியவில்லை. 
       கூடிக்,கூடி பேசியும் இவர்கள் ஒரு முடிவும் எடுக்கவில்லை.எடுக்கவும் மாட்டார்கள். கார்திக்கிடம் உள்ள தில் இவர்களிடம் கிடையாது
 இவர்கள் புத்தியறிந்தே தனது பிரசாரத்தைத்தள்ளிவைத்து விட்டு ஜெ,இவர்கள் வருகைக்காகக்காத்திருக்கிறார்.
      இப்பவே இப்படி. இவர்கள் ஜெயித்து ஜெ ,ஆட்சியிலும் அமர்ந்துவிட்டால் பாவம் இவர்கள். இவர்கள் தோட்டம் வாசல் அருகே வரிசையாகக் காத்திருக்கும் அழகு இப்பவே மனக்கண்ணில் தெரிகிறது.
 இப்போது துள்ளும் விஜயகாந்த் அப்பொது ஜெ,யை எதிர்த்து வெளியிடும் அறிக்கைக்காகக் காத்திருங்கள்.
        அவசரப்பட்டு ஜெ, உருவப்பொம்மையை விஜயகாந்த் ரசிகர்கள் மன்னிக்கவும் தொண்டர்கள் எரித்திருக்கவேண்டாம். நாளை இவர் ஜெயை சந்திக்கும்போது எப்படி மூஞ்சியை பார்த்து தைரியமாகப் பேசமுடியும்.
        ஜெ,யின் குணம் தெரிந்துதானே வைகோ எந்த சத்தமும் எழுப்பாமல் இருக்கிறார்,விஜயகாந் கொஞ்சம் வைகோவிடம் பொடா அனுபவங்களைக்கேட்டுத் தெரிந்து கொள்வது நல்லதாகப்படுகிறது.
  இவர்கள் போகிறப்போக்கைப்பார்த்தால் எங்கே நான் மீண்டும் சுய மரியாதை[அ]சிங்கங்கள் இடுகை இட வேண்டிய இக்கட்டான நிலைவருமோ என்று பயப்படுகிறேன்,,,

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?