ஜெ,குழப்பம்

"கேட்கிறவன் கேனையன்னா கேழ்வரகில் நெய் வடியும்,ஜெ,யின் ஆணவமும்,பிடிவாதமும்,பிறரை மதியாத் திமிரும் உலகப்பிரசித்தம்,முன்பு எப்படியோ இப்போது எதையாவது செய்துவிட்டு அவர் மாட்டிக்கொண்டு முழிக்கும் போது அவரின் வர்னாசிரமப்பத்திரிக்கைகள் ஒரே குரலில் சசி வகையராக்கலால்தான் இது ,என்று கூறி ஜெ,யை உத்தமப்புத்திரியாக்கிவிடுகின்றன,ஜெ,திருந்தவே இல்லை,திருந்தவும் முயற்சிக்க மாட்டார்.அவரைத்தேர்தலில் தேர்ந்தெடுத்தவர்களுக்கு,பைபிளில் வருவதுபோல் “அய்யோ” தான்."

  

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update

கூட்டணிக் கட்சிகளின் திடீர் போர்க்கொடியை தொடர்ந்து, அதிமுக பணிந்தது. அவர்கள் கேட்ட தொகுதிகளை விட்டுக் கொடுத்துள்ளது. நேரில் அழைத்து அவர்களுக்கான தொகுதிகளின் பட்டியல்களையும் ஜெயலலிதா வழங்கினார்.
சில நாட்களாக பரபரப்பை ஏற்படுத்திய ஜெ,கூட்டணி பரப்பு இப்போது சற்று தெளிவடைந்துள்ளது.
அந்தத்தொகுதிதான் வேண்டும்,இந்தத்தொகுதிதான் வேண்டும் என்று கூட்டணிக்கட்சிகள் தரப்போகும் தொல்லையைத் தவிர்க்க இப்படி ஒரு பட்டியலை வெளியிட்டால் அக்கட்சிகள் விழுந்தடித்துக்கொண்டு வந்து பேசி நாம் ஒதுக்கும் தொகுதிகளை என்னைப்போலத்”திருட்டு முழி”த்துக்கொண்டு வாங்கிக்கொண்டுப் போய்விடும் என்று ஒரெழுத்து பத்திரிக்கக்கார நண்பர் யோஜனா மஹாசமுத்திரம் கூறினாராம். அதை செயல்படுத்திவிட்டு இப்பொது அவரின் முழியை அ.தி.மு.க,த் தலைவி கடனுக்கு வாங்கியுள்ளார்.
            ஆனால் அவரினம் சார்ந்தபத்திரிகைகளோ ஜெ, செய்தத்தவரை ஒத்துக்கொள்ளவில்லை. என்பதுடன் அதை சரிக்கடும் வேளையிலும் இறங்கியுள்ளன.இவைகளைப்பார்க்கும் போது முதல்வர் கருணாநிதி கூறிய அவாள் பத்திரிக்கைகள் கருத்து உண்மை என்றேத்தெரிகிறது.
     கருணாநிதியையும்,ஜெயலலிதாவையும் விமர்சிப்பதில் இரட்டை தராசு அளவு இவ்வூடகங்கள் பயன் படுத்துவது புலனாகிறது.
    நாம் நடுநிலை என்று எண்ணும் துக்ளக்,ஆனந்தவிகடன் குழுமம் ஆ.வி,ஜூ.வி,தினமணி,கல்கி,தினமலர்,ஹிந்து,எக்ஸ்பிரஸ், என்.டி.டி.வி,போன்றவைகளின் ஒருசார்பு மிகப்பட்டவர்த்தனமாகத்தெரிகிறது. என்.டி.டி.வி.,தி.மு.க.&காங் கூட்டணி இழுபறியை செய்திகள் மூலம் துவைத்து காயப்போட்டது.ஆனால் இபபோதைய பரபரப்பான அ.தி.மு.க, இழுபறியை பற்றி கண்டு்கொள்ளவேயில்லை.
சசிகலா உறவினர் பட்டியலை மாற்றிவிட்டராம்.அது தெரியாமல் வெளியிட்டாராம்.[மேலே உள்ள பழமொழியை மீண்டும் படித்துக் கொள்ளவும்] இவர் ஒருவேளை நாளை முதல்வராக வந்தால் அரசாணைகளுக்கும் இதே கதிதானோ?
வெளியிடும் முன் சரிபார்க்கவேண்டாமா/சாதாரண சலவைக்கணக்கைக்கூட இருமுறை சரி்பார்ப்பது வழக்கமாயிற்றே.ஒரு பெரிய கட்சியை வழிநடத்துபவர் இப்படி இருந்தால் இவரின் ஆட்சி எப்படி இருக்கும்.இவரின் ஆட்சி சென்ற முறையிலேயே நடக்கும் என்பதற்கு இது ஒரு மோசமான முன்னுதாரணமாகக் கொள்ளலாமா?
எல்லா மோசமான செயல்களையும் செய்துவிட்டு சசிகலா மேல் பழிபொடுவதன் மூலம் ஊடக உறவினர்கள் உதவுகின்றனர்.அது உண்மையாகவே இருக்கட்டும்,சசிகலாவே மோசமான செயல்களை செய்கின்றார் என்றால் அவரை இன்னும் ஏன் தோட்டத்தில் வைத்துக்கொண்டிருக்கிறீகள்.சசிகலா ,அவர் உறவினர்களை தோட்டத்தைவிட்டு அப்புறப்படுத்த வேண்டியதுதானே?அதை யார் தடுக்கிறார்கள்,அல்லது எது தடுக்கிறது?
மொத்ததில் ஜெயலலிதா கொஞ்சம்கூட மாறவில்லை,மாறவும் மாட்டார்.பிறவிக்குணம் மாறா,.அவர் தன்னைவெளீப்படுதிக் கொண்டார் .அவர் சொந்தமாகவோ,அல்லது சசிகலா சொந்தங்கள் மூலமாகவோ இப்படியே எடுத்தேன்,கவிழ்த்தேன் பாணியில்தான் செயல்படுவார்,
இவைகளை கூட்டணிக்கட்சிகள் மட்டுமல்ல வாக்களிப்பவர்களும் சிந்தித்து செயல்படவேண்டும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?