இலங்கை{பிரச்சினை}தீர்ந்த காரணம்,,


”சிறீலங்காவில் இந்திய அமைதிப்படை தரையிறங்கிய காலத்தில் இந்தியாவின் புலனாய்வுத்துறை அதிகாரியாக பணியாற்றிய நாராயணன் பின்னர் வன்னிப் போர் நடைபெற்றபோது இந்திய அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றியிருந்தார்.
நாராணயனும், சிவசங்கர் மேனனும் இணைந்தே வன்னிப்போரின் இந்த முடிவுக்கான காரணிகளை வகுத்திருந்ததாக” சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் அதிகாரி 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்காவுக்கு அனுப்பிய தகவலில் தெரிவித்துள்ளார்.
இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா கந்தியின் பணிப்பின்பேரில் அதிகளவான துணைஇராணுவக்குழுக்களின் அதிகாரத்தை நாராயணன் ஏற்படுத்தியிருந்தார்.
சோனியா கந்தியுடன் தனிப்பட்ட உறவுகளை பேணியவாறு நாராயணன் முன்னாள் தூதுவர் டிக்சித் என்பவரை போலவே செயற்பட்டிருந்தார்.
ராஜீவ் காந்தியின் பரம்பரைக்கு அவர் விசுவாசமானவர். இந்திய காவல்துறையில் 1955 ஆம் ஆண்டு இணைந்த நாராயணன் இந்திய புலனாய்வுப்பிரிவில் பல காலம் பணியாற்றியிருந்தார்.
அவர் 40 வருடங்கள் காந்தி குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பை கொண்டவர்.இவர் விடுதலைப்புலிகளின் மீது வெறுப்பைக்கொண்டவர்.அவர்களை அழிப்பது என்பதை தனது குறிகோளாகக் கொண்டவர் போல் செயல் பட்டார்”என அமெரிக்கா தனது தகவலில் மேலும் தெரிவித்துள்ளதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
      இப்படிபட்ட கேரள மாபியாக்களை நாம் இலங்கை பிரச்சினைக்காக தூது அனுப்பிக்கொண்டும், கடிதம் எழுதிக்கொண்டும் இருந்தால் பிரச்சினையின் முடிவு இப்போதையது போன்றுதானே இருக்கும்.
       தங்கள் சொந்த கருத்தின் படி அரசின் வெளியுறவுக்கொள்கைகளை வகுத்து செயல்படும் இதுகளைப்போன்றவர்களால்தானே இன்னும் காஸ்மீர் போன்ற பிரச்சினைகள் தீராமலே உள்ளன.  

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?