குற்றவாளிகள்,,,,,,


எதிர்பார்த்தது போலவே இலங்கைக்கு ஆதரவாக களத்தில் இறங்கியுள்ள இந்திய அரசு, நிபுணர்குழு அறிக்கையை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விவாதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசு போர்க் குற்றம் புரிந்துள்ளதாகவும், அப்பாவி மக்களை பாதுகாப்பு வலயத்திற்குள் வரவழைத்து இலங்கை இராணுவம் குண்டு வீசி கொன்றதாகவும் ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

போர்க் குற்றத்தில் பங்கு,,,,,,,,,,,,,,,
இலங்கை போர்க் குற்றம் புரிந்துள்ளது உண்மைதான் என்பதை ஒப்புக்கொள்ளும் ஐ.நா.வின் நிபுணர் குழு அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளிவந்தும்,மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கொன்று வீசும்போது கடைபிடிக்கும் அதே கள்ளமவுனத்தை கடைபிடித்தபடியே, தற்போது இலங்கையை போர்க் குற்றச்சாட்டிலிருந்து காப்பாற்றுவதற்காக கமுக்கமாக களமிறங்கி உள்ளது.
இந்தியாவின் ஆதரவு தங்களுக்கு கிடைத்துள்ளதை உறுதிபடுத்தியுள்ள இலங்கை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கையை, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விவாதிப்பதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.
இலங்கை இராணுவம் தமிழர்களை கொன்று குவிப்பதற்கு துணைபோன மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசு, தற்போது போர்க் குற்றச்சாட்டில் சிக்கி உள்ள ராஜபக்சவை காப்பாற்ற முட்டுக்கொடுக்க தொடங்கி இருப்பது, தமிழர்களுக்கு இழைக்கும் பச்சை துரோகம் என இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கு தமிழக தலைவர்கள் பலர் குற்றம்சாட்டியுள்ளனர்.
அதே சமயம் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்கள் இங்கே மற்றொன்றையும் குறிப்பிடுகிறார்கள்."போர்க் குற்றத்திற்காக இலங்கை மீது நடவடிக்கை எடுக்கப்படுமானால்,ஆயுத உதவி மட்டுமல்லாது போர் வியூகம் அமைத்து கொடுத்தது வரையிலான இந்திய அரசு அளித்த உதவியை இலங்கை காட்டிக்கொடுக்கும்.
அது மட்டுமல்லாது,கிளிநொச்சி வீழ்ந்தவுடன் போரை நிறுத்தி புலிகளை நிர்ப்பந்தத்தின் மூலம் சரணடைய செய்யவோ அல்லது பேச்சுவார்த்தைக்கு வரவோ செய்யலாம் என்ற முடிவுக்கு நாங்கள் வந்தோம்.ஆனாலும் அப்பாவி தமிழர்கள் உயிர் இழந்தாலும் பரவாயில்லை போரை தொடர்ந்து நடத்தி புலிகளை முற்றாக அழித்தொழிக்குமாறு இந்தியாதான் கூறியது.
எனவே போரில் பொதுமக்கள் பலியானதற்கு இந்தியாதான் காரணம் என்று கூறி காட்டிக்கொடுக்கவும் இலங்கை தயங்காது என்பதால்தான், இலங்கையை காப்பாற்ற பதறி துடித்துக்கொண்டிருக்கிறது மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு.
செய்தி தளம்
============================================================================
கே.பாலசந்தர்
கே.பாலசந்தர்
பிரபல தமிழ் திரைப்படத் தயாரிப்பாளரும் இயக்குநருமான கே. பாலசந்தர் இந்தியாவில் திரைப்படத்துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான தாதா சாகெப் பால்கே விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
2010-ம் ஆண்டுக்கான தாதா சாகெப் பால்கே விருது பாலசந்தருக்கு வழங்கப்படுகிறது. இது பற்றிய அறிவிப்பு வெள்ளியன்று வெளியிடப்பட்டது.
தங்கத் தாமரைப் பதக்கம் மற்றும் 10 லட்சம் ரூபாய் ரொக்கம் கொண்டது இந்த விருது .
மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு அடுத்தபடியாக தமிழ்த் திரையுலகிலிருந்து இந்த விருதைப் பெறுகிறார் பாலசந்தர்.
கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாகத் திரையுலகில் பங்காற்றிவருகிறார் பாலசந்தர்.
உலகநாயகன் கமல்,ரஜினி,பிரகாஷ்ராஜ்,விவேக்,சரிதா,சுஜாதா,ஜெய்கணேஷ்,சார்லி போன்றோர் இவரின் அறிமுகங்களே,.
===========================================================================



புதுவை கவர்னர் இக்பால் சிங் ஒரு பிக்பாக்கெட்டாமே!
'பிக்பாக்கெட்' இக்பால் சிங்?



ந்தியாவின் தேசிய கௌரவங்கள் லிஸ்ட்டில் கவர்னர்களுக்கு முக்கிய இடமுண்டு. அரசியல் சட்டத்தின் ஆட்சியை அவர்தான் பாதுகாக்கிறார் என்ற பில்டப்பும், கவர்னர் மாளிகை, குடியரசு தின மரியாதை என்று ஏகப்பட்ட அயிட்டங்களும் அதில் அடக்கம்.
அப்பேற்பட்ட மரியாதை கொண்ட இந்த பதவியை பிக்பாக்கெட் என்று அழைப்பதில் சில அப்பாவி தேசபக்தர்களுக்கு வருத்தம் இருக்கும். போகட்டும், வருத்தத்தை கொஞ்சம் தாங்கிக் கொண்டு மீதியைப் படியுங்கள், நீங்களே கும்முவீர்கள்!
வெளியே குதிரை வளர்ப்பு தொழிலைக் காட்டிவிட்டு உள்ளுக்குள் முதலாளிகள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் கறுப்புப் பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கியிருக்கும் ஹசன் அலியை அமலாக்கப்பிரிவு கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. இந்த ஹசன் அலி சிங்கப்பூர் போவதற்கு பாஸ்போர்ட் வாங்கிக் கொடுத்தவர் தான் தற்போது புதுச்சேரியில் கவர்னராக இருக்கும் இக்பால் சிங். அப்போது பீகார் மாநில காங்கிரஸ் எம்.பியாக இருந்தவர்.
இந்த சிங்கப்பூர் விஜயம் மூலமும் கருப்புப் பணம் வெளியேறிக்கிறது என்பதால் ஹசன் அலிக்கும், கவர்னர் சிங்குக்கும் உள்ள தொடர்பை தற்போது விசாரித்து வருகிறார்கள். எனினும் காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த கவர்னர் என்பதால் சிங் அப்படி சுலபமாக சிக்கவிடமாட்டார்கள்.
நேற்று அ.தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் புதுச்சேரி பந்த் நடந்திருக்கிறது. நோக்கம் ஊழல் கவர்னரை மாற்றச் சொல்வது. அதிலும் கூட அந்த சிங்கை தண்டிக்க வேண்டும் என்று கூட அவர்கள் கோரவில்லை. சரி, ஊழல் கட்சியான அ.தி.மு.கவே மக்கள் ஆதரவுடன் பந்த் நடத்துமளவுக்கு சிங் என்ன செய்தார்?
இவரது அப்பா லால்சிங், ஜாலியன் வாலாபாக் படுகொலையின் போது அடிபட்டவராம். அந்த தகுதியை வைத்து அரசியலில் ஆளான இக்பால் சிங் மோசடிகளின் மூலம் சொத்து பத்துக்களை பெருக்கி வருகிறார். சரக்குக்கு பேர் போன புதுச்சேரியில் இவர் குடிக்கும் சீமைச்சாராய விஸ்கியின் ஒரு ஃபுல்லின் விலை ஒரு இலட்சமாம். கவர்னரின் உதவியாளரான அதிகாரிகளே இதை புரோக்கர்கள் மூலம் வாங்கி வைப்பார்களாம். என்ன விடயமாக இருந்தாலும் கவர்னரோ அவரது உதவியாளரான எஸ்.கே.சிங்கோ இலஞ்சத்தை வெளிப்படையாக கேட்டு வாங்குவார்களாம்.
வீட்டுவசதித் துறையில் பெரும் ஊழல் நடந்ததாக ஒரு புகார் கவர்னருக்கு வர சிங் என்ன செய்தார் தெரியுமா? உடனே அந்த மந்திரியை தொடர்பு கொண்டு பங்கு கேட்டு மிரட்டினாராம். இவையெல்லாம் சில பத்திரிகைகளில் வந்துள்ளன. ஒருவேளை இதற்கெல்லாம் என்ன ஆதாரம் என்று தேசபக்தர்கள் கேட்கக்கூடும். அதற்காகவே ஒரு 70mm ஸ்பெஷல் கொள்ளை ஒன்று நடந்து ஆதாரப்பூர்வமாக அனைத்து பத்திரிகைகளிலும் வந்திருக்கிறது.
தமிழக முன்னாள் கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலாவின் மகன் சுகன்ஜித்சிங்கும், இந்த இக்பால் சிங்கின் மூத்த மகனும் சேர்ந்து ஒரு அறக்கட்டளையை (கொள்ளையடிக்கிறதெல்லாம் இப்ப இந்த பேரில்தான்) துவங்கி அதன்மூலம் ஒரு மருத்துவ கல்லூரியை தொடங்க திட்டமிட்டனர். டாக்டர் கல்லூரியென்றால்தான் நன்கொடையை வைட்டமின் சி-யில வாங்க முடியும். இதற்கு காரைக்கால் அருகே நெடுங்காட்டில் 50 ஏக்கர் நிலத்தை வளைத்திருக்கின்றனர். அடுத்து புதுவை அரசின் அனுமதி கோரிய போது சுகாதார செயலாளர் விஜயன் மறுத்திருக்கிறார்.
உடனே அவரை விடுமுறையில் அனுப்பிவிட்டு வேறு அதிகாரியைப் போட்டு காரியத்தை சாதித்த போது விசயம் வெளியே வந்து நாறத் துவங்கியிருக்கிறது. இதில் பேரு ரிப்பேரு ஆனதும் நம்ம இக்பால் சிங், அப்போது கூட மனமில்லாமல் கல்லூரிக்கான அனுமதியையும், இடத்தையும் விற்பதற்கு முயற்சி செய்கிறாராம். இது நடந்தால் ஊழல் செய்யாத மாதிரியும் இருக்கும். நிஜத்தில் பல பத்து கோடிகளை சாப்பிட்ட மாதிரியும் இருக்கும்.
கடைசியாக்த்தான் இந்த சர்தார்ஜியோட நட்பு கருப்புப் பணக்குதிரை ஹசன் அலியோட இருக்கிறது என்பது தெரிய வந்தது. இதற்க்காக டெல்லி சென்று விளக்கம் கொடுத்த சர்தார்ஜி இன்னும் பதவி விலகாமல் ஜம்மென்று இருக்கிறார். அப்படியே அவர் பதவி விலகினாலும் அது ஒன்றும் தண்டனை இல்லையே? கொள்ளையடித்த பணம் இருக்கையில் அடுத்து மேகலாயாவிற்கு கூட கவர்னராக செல்லலாம்.
கவர்னர் மாளிகை என்று எல்லா மாநிலங்களிலும் ஒரு பெரும் நிலப்பரப்பை வளைத்து மாளிகைகளை கட்டி, நூற்றுக்கணக்கான வேலையாட்கள், அதிகாரிகளைப் போட்டு, இவர்களுக்கு செய்யப்படும் மரியாதை என்ன, போற்றுதல் என்ன, புடலங்காய் என்ன…
புதுச்சேரி போன்ற சிறு மாநிலங்களிலேயே இவர்கள் இப்படி ஆட்டம் போட்டால் பெரிய மாநிலங்களில் எப்படி ஆட்டம் போடுவார்கள்? ‘ரப்பர் ஸ்டாம்பு’ என்று கேலி செய்யப்படும் இந்த ஜந்துக்களே இப்படி என்றால் அதிகாரம் கொண்ட அமைச்சர்களைப் பற்றி சொல்லவா வேண்டும்?
காங்கிரசு கட்சி தனது பழைய பெருச்சாளிகள் பலருக்கும் இப்படித்தான் வாழ்வும், தொழிலும் அளித்து வருகிறது. ஹைதராபாத்தில் என்.டி.திவாரி போட்ட குத்தாட்டம் உங்களுக்கு நினைவிருக்கலாம். இப்போது அந்த குத்தாட்டம், வழிப்பறிக் கொள்ளையாக புதுச்சேரிக்கு வந்திருக்கிறது. நீங்கள் மிகவும் மதிக்கும் இந்திய அரசியல் சட்டத்தின் பாதுகாவலர்களான கவர்னர்களின் நடைமுறை இப்படித்தான் இருக்கிறது. இவர்களை தண்டிக்க வேண்டுமென்றால் இந்த பெருச்சாளிகளை உருவாக்கும் அரசியல் அமைப்பை தகர்க்க வேண்டும். தேவையில்லை என்பவர்கள் என்ன செய்யலாம் சொல்லுங்கள்!                                                                                                                                                                  *  வினவு தளத்தில் இருந்து நன்றியுடன் மீள் பதிவு.
===============================================================================================================
ஒரு கண்ணாடி மொ[மு]ழி பெயர்க்கிறது...


மொழி தெரியாதவர்களுக்கு மொழிபெயர்க்கும் ‘மூக்கு கண்ணாடி’..! மக்களிடையே தொடர்புக்கு அடிப்படையானது மொழி. இன்று அறிவியல் வளர்ச்சியால் உலகமே சுருங்கிவிட்டது. அதனால் பலமொழிகளை அறிந்து வைத்திருப்பது நமக்க அவசியமாகிறது.
இப்போது நமக்கு  உதவும்வகையில் மொழிபெயர்க்கும் கண்ணாடிவந்திருக்கிறது. இந்தமூக்குக்கண்ணாடியுடன்இணைந்துஒருடிரான்ஸ்லேட்டர் (மொழிபெயர்க்கும்)  கருவிஇருக்கும்.  இதுஒருகேமராவும்,  மைக்ரோ போனும் இணைந்தகருவியாகும். இந்தகண்ணாடியை அணிந்துகொண்டு நீங்கள் வாசிக்கும்போது மைக்ரோபோன் வேலைசெய்து அதை மெமரிகருவிக்கு அனுப்பும். அங்கிருந்து அதற்கான மொழிபெயர்ப்பு வார்த்தை உங்களுக்குத்தெரியும்படியாக காட்டப்படும். இதனால் நீங்கள்எளிதில் அறிவிப்புகளையோ, பத்திரிகைகளையோ வாசித்துஅறிந்துகொள்ளமுடியும். புதியஉலகம்- அறிவித்தல்  எமது செய்திகளை எமது அனுமதியின்றி  பிரதியிடுபவர்கள்  பிரதியிடுவதாயின் தயவுசெய்து எமது தளமுகவரினை இறுதியில் சேர்த்துக்கொள்ளல் வேண்டும். உங்கள் ஆதரவுக்கு நன்றி. இந்தக்கருவி ஜப்பான் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இதற்கு சோதனை முறையில் வெற்றி கிடைத்துவிட்டது. ஆனால் நாம் வாசிக்கும் வேகத்துக்கு மொழி பெயர்க்கும் வேகம் இல்லை. எனவேஇதன் வேகத்தை அதிகரிக்கவும், வார்த்தைகளை மொழிபெயர்த்து உச்சரித்து சொல்லும் வகையில் மாற்றவும் ஆய்வுகள் நடந்து வருகிறது. படிக்கும் குழந்தைகளுக்கு மட்டுமல்லாது, மொழித்தடுமாற்றம் உடைய பலருக்கும் இந்தக் கண்ணாடி உபயோகப்படும்.
                                                                                                                                நன்றி:புதிய உலகம்.கொம்
===============================================================================================================,
1995-ல் மேற்கு வங்கத்தில் ஆயுதங்கள் வீசப்பட்டதில் மத்திய காங்கிரசு அரசுக்கும் பங்கு......
பிரகாஷ் காரத்


”1995ஆம் ஆண்டு டிசம்பரில் மேற்குவங்கத்தின் புருலியா மாவட்டத்தில் விமானம் மூலம் ஆயுதங்கள் வீசப்பட்ட சம்பவமா னது நம் நாட்டின் இறையாண் மையின் மீதான மோசமான தாக் குதலாகும். அப்போது நடை பெற்ற புலனாய்வுகளும், நீதி மன்ற விசாரணையும், புருலியா வில் ஆயுதங்கள் வீசப்பட்டதானது அப்பகுதியில் இயங்கிக் கொண்டி ருந்த ‘ஆனந்த மார்க்கம்’ என்னும் அமைப்புக்காகத்தான் என்பதும், மேற்குவங்க இடதுமுன்னணி அர சாங்கத்தைப் பலவீனப்படுத்தி வன் முறை மூலம் வீழ்த்துவதற்காகவே இவ்வாறு ஆயுதங்கள் வீசப்பட்டது என்பதும் நிரூபிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பான குற்றத்துடன் பிணைக்கப்பட்டு இன்றளவும் தலைமறைவாக வுள்ள நீல்ஸ் கிறிஸ்டியன் நீல்சன் என்கிற கிம் டேவி என்பவனும், இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தண்டனை பெற்று, பின்னர் விடுதலையாகியுள்ள பீட்டர் பிளீச் என்பவனும் இப்போது வெளியிட்டுள்ள புதிய தகவல்கள் இதன் பின்னணியில் உள்ள சதிச் செயல்கள் குறித்து எண்ணற்ற கேள்விகளை எழுப்பியுள்ளன.

புருலியாவில் ஆயுதங்கள் வீசப்பட இருப்பது தொடர்பாக, பிரிட்டிஷ் உளவு ஸ்தாபனமான எம்ஐ5 என்னும் அமைப்பு இந்தி யாவின் ‘ரா’ (ரிசர்ச் அண்டு அனா லிசின் விங்) அமைப்பிற்கு 1995 நவம்பரிலேயே தெரிவித்திருந் தும், சம்பவம் டிசம்பரில் நடை பெற்று ஒரு வாரம் கழித்துத்தான் மத்திய அரசு, மேற்கு வங்க அர சுக்கு இந்தத் தகவலைப் பதிவுத் தபாலில் அனுப்பி வைத்தது.

புருலியாவில் ஆயுதங்கள் வீசப்பட்ட சமயத்தில் அப்பகுதியில் கலைக்குண்டா என்னும் பகுதியில் வைக்கப்பட்டிருந்த ரேடார் செயல் படவில்லை.
விமானம் மூலம் ஆயுதங்கள் வீசப்பட்டபின்னர், அந்த விமானம் சென்னையில் தரையிறக்கம் செய்யப்பட்டு மீண்டும் செல்வ தற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

இந்த சதித் திட்டம் குறித்து மத் திய அரசுக்கு முன்னமேயே தெரிய வந்திருந்தும், அது தொடர் பான தகவலை, மத்திய அரசு மேற்கு வங்க மாநில அரசுக்கு பதிவுத் தபாலில் அனுப்பி, சம்பவம் நடைபெற்ற பின்னர்தான் அது மாநில அரசால் பெறப்பட்டிருக் கிறது.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப் பட்ட கிம் டேவி, டென்மார்க்கில் கடந்த பத்தாண்டுகளாக வாழ்ந்து கொண்டிருந்தபோதிலும், அவ னை மீண்டும், இந்தியாவிற்குக் கொண்டுவர இந்திய அரசு எவ் வித முயற்சியும் மேற்கொள்ள வில்லை.

கிம் டேவி தற்சமயம் அளித் துள்ள விவரங்களில், தான் எப்படி மும்பை விமானத் தளத்திலிருந்து நேபாளத்திற்குத் தப்பிச் சென் றேன் என்பதையும் தனக்கு அப் போது நாடாளுமன்ற உறுப்பின ராக இருந்த பப்பு யாதவ் எப்படி முழுமையாக உதவினார் என்ப தையும் தெரிவித்திருக்கிறான். பீகா ரைச் சேர்ந்த இந்த பப்பு யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பீகார் சட்டமன்ற உறுப்பினர் அஜித் சர்க்காரை கொலை செய்த தற்காக ஆயுள் தண்டனை அனுப வித்துக் கொண்டிருக்கிறார்.

மேலும், மேற்படி பிளீச்சும், கிம் டேவியும் இந்தியாவில் அதிகாரி கள் பலர் தங்கள் சதித்திட்டத்திற்கு உடந்தையாக இருந்தார்கள் என்றும் கூறியிருக்கிறார்கள்.

மேற்கு வங்கத்தில் இடது முன் னணி ஆட்சியிலிருப்பது சர்வ தேச சக்திகள் பலவற்றாலும், இந்தி யாவிலேயே பல்வேறு சக்திகளா லும் தாங்கிக் கொள்ள முடியவில் லை. அன்றைய தினம் ‘ஆனந்த மார்க்கம்’ என்றால், இன்றைய தினம் மாவோயிஸ்ட்டுகளைப் பயன்படுத்தி எப்படியாவது இடது முன்னணியை வீழ்த்த வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக் கிறார்கள்.

மாவோயிஸ்ட் வன்முறையா ளர்களுக்கு மத்திய ஆட்சியில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் உதவியும், ஆதரவும் அளித்து வருகிறது. மத்திய உள் துறை அமைச்சரே, மேற்குவங்கத் தில் நடைபெறும் ‘‘கொலைபாதகச் செயல்களுக்கு’’, மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் இடது முன்னணியைச் சேர்ந்த 265 முன்னணி ஊழியர் கள் கொல்லப்பட்டதற்கு, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையே குறை கூறுகிறார்.

புருலியாவில் விமானம் மூலம் ஆயுதங்கள் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக முழுமையான வகை யில் மீண்டும் புலனாய்வு மேற் கொள்ளப்பட வேண்டும். இது தொடர்பாக பப்பு யாதவ் விசார ணைக்கு உட்படுத்தப்பட வேண் டும். நம் நாட்டிலிருந்து கிம் டேவி தப்பிச் சென்ற விதம் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவன் தப்பிச் செல்ல உதவிய அனைவரும் குற்றவாளிக் கூண் டில் ஏற்றப்பட வேண்டும்.

இந்த சதித் திட்டம் குறித்து மத்திய அரசுக்கு முன்னமேயே தெரிய வந்திருந்தும், அது தொடர் பான தகவலை, மத்திய அரசு உடனடியாக மாநில அரசுக்குத் தெரிவித்து உஷார்படுத்திட முன் வரவில்லை. மாறாக தகவலை பதிவுத் தபால் மூலமாக அனுப்பி வைத்தது. அது சம்பவம் நடை பெற்ற பின்னர்தான் மாநில அர சால் பெறப்பட்டிருக்கிறது.

இவ்வாறு இந்த சம்பவம் தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்புகள் மெத்தனமாக நடந்து கொண்டிருப்பதால், இப்போது மீண்டும் மத்திய புலனாய்வு அமைப்புகளிடமே இப்பொறுப் பைக் கொடுப்பதில் அர்த்தம் ஏது மில்லை. எனவே பணியில் உள்ள உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் மூலம் நீதித்துறை விசாரணை மேற்கொள்ளப்பட்டு, இதன் பின் னால் உள்ள சதித்திட்டங்களுக் கான வலைப்பின்னல் வெளிக் கொணரப்பட வேண்டும்.

பாருங்கையா,
தனது நாட்டிலேயே தனக்குப்பிடிக்காத கட்சியின் மாநில அரசை வீழ்த்த இந்த காங்கிரசு எப்படியெல்லாம் செய்கிறது.தேசத்தின் பாதுகாப்பே போனாலும் பரவாயில்லை தனது எதிரியை ஒழிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம்.
இப்படியே மெய்ண்டென் பண்ணிகிட்டு போங்க, நாடு வெளங்கிடும். 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?