அணு சக்தி-லோக்பால்

அணுசக்திக்கு மாற்று,,,,,,,,,,,,.
                                                                                                        -பேராசிரியர் கே. ராஜு
ஜப்பான் புகுஷிமா அணு உலையில் அண் மையில் ஏற்பட்ட விபத்து இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் அணு உலைகள் விரிவாக்கத்திற்கு ஒரு வேகத்தடையை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த நாடுகள் அணுசக்தித் துறையில் முன்னேற நினைத்தாலும் மக்களின் நியாயமான கேள்வி களுக்கும் அச்சங்களுக்கும் விடையளித்த பிறகே முன்னோக்கிச் செல்ல முடியும் என்ற நிலையும், மக்களின் உணர்வுகளைப் புறக்கணித்துவிட்டு அணுசக்தித் துறையில் இலக்குகளை நோக்கிச் சென்றுவிட முடியாது என்ற நிலையும் ஏற்பட்டி ருக்கிறது.மக்களின் அச்சங்களுக்கு சரியான விளக்கங் கள் கிடைக்கும் வரையில், இடைக்கால ஏற்பாடாக வேறுவகை ஆற்றல் களை நோக்கிய தேடல் தொடங்கியிருக்கிறது. இந்த கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, தொல்எரிபொருட்களில் மிகக் குறைந்த கெடுதலையே விளைவிக்கும் இயற்கை எரிவாயு முக்கியமான இடத்தைப் பெறுகிறது. நிலக்கரியில் உள்ள கார்பனில் பாதிக்கும் குறை வாகவே எரிவாயுவில் இருக்கிறது. பிற தொல்எரி பொருட்களால் வெளியிடப்படும் பசுங்கூட வாயுக் களோடு ஒப்பிடும்போது எரிவாயுவில் குறைவான அளவிலேயே கார்பன் இருக்கிறது. உலகை அச் சுறுத்திக் கொண்டிருக்கும் கார்பன் வெளியீடு களைக் குறைக்கும் முயற்சியில் எரிவாயு ஆற்றல் நமக்கு சிறந்த முறையில் கைகொடுக்கக் கூடி யது. கச்சா எண்ணெய், நிலக்கரியைப் போல எரி வாயுவும் பூமிக்கடியில் பரவலாகக் கிடைக்கும் ஓர் எரிபொருள். எரிவாயுவை ஆற்றலாக மாற்றும் போது நிலக்கரியையும் அணுசக்தியையும் விட குறைவான அளவிலேயே தண்ணீர் தேவைப்படும் என்பது கூடுதலான ஒரு நன்மை. எரிவாயு மூலம் மின் உற்பத்தி செய்வது அணுசக்தி மின்சாரம் தயாரிப்பதை விட மலிவானது.
எரிவாயு இருக்குமிடத்தைக் கண்டறிவது, உற் பத்தி செய்வது, திரவவடிவில் மாற்றி ஓரிடத்திலி ருந்து பிற இடங்களுக்குக் கொண்டு செல்வது ஆகிய பல்வேறு தொழில்நுட்பங்கள் இன்று கை கூடி விட்டன. மின்உற்பத்தி, தொழில்துறைப் பயன்பாடுகள், மோட்டார் போக்குவரத்து, உரங் கள், பெட்ரோகெமிக்கல்கள் தயாரிப்பு ஆகிய பல் வேறு துறைகளில் எரிவாயுவைப் பயன்படுத்த முடி யும். குழாய்கள் வழியாகவோ, எல்பிஜி சிலிண் டர்களாகவோ அனுப்பி அதை சமையல் எரிவாயு வாகவும் பயன்படுத்த இயலும்.
உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கும், எரிபொரு ளின் வெப்ப உள்ளடக்கத் திற்கும் உள்ள விகிதம், திறன் விகிதம் எனப்படுகிறது. நிலக்கரி யைப் பயன்படுத்தும்போது இது அதிகபட்சமாக 30 சதம் தான் இருக்கும். எரிவாயு வைப் பயன்படுத்தும்போது திறன் விகிதத்தை 60 சதம் வரை உயர்த்த முடியும். வெப் பத்தையும் மின்சாரத்தையும் அளிக்கும் ஆலைகளில், டர்பைன் களிலிருந்து கிடைக்கும் கழிவு வெப் பத்தை (றயளவந ாநயவ) வேறு தொழில்துறைச் செய்முறை களில் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த முறையில் திறன் விகிதத்தை மேலும் அதிகரிக்க இயலும். சூரியசக்தி ஒளிமின்விளைவு, அணுச்சேர்க்கை ஆகிய இரு வழிமுறைகள் மூலம் நமக் குத் தேவைப்படும் அளவு மின்சாரம் பெற சுமார் 50 ஆண்டுகள் தேவை என மதிப்பிடப்படுகிறது. அது வரை இடைக்கால ஏற்பாடாக இயற்கை எரிவாயுவை நாம் பயன்படுத்திக் கொள் வது சாலச் சிறந்தது.
        
வளர்ந்த நாடுகளில் மேற்கொள்ளப்படும் ஆற் றல் உற்பத்தியில் மூன்றில் ஒரு பகுதி இயற்கை எரிவாயு மூலமே கிடைக்கிறது. இந்தியாவில் பல ஆண்டுகளாக இது 10 சதம் என்ற அளவிலேயே தேங்கி நிற்கிறது. 1960-களில் மேற்குக் கடற் கரைப் பகுதியில் காம்பே படுகையில் கணிசமான அளவில் எரிவாயு இருப்பு கண்டுபிடிக்கப்பட்ட பிறகு மேற்கு, வடக்குப் பகுதிகளில் மின் உற்பத்தி யிலும் உரங்கள் தயாரிப்பிலும் எரிவாயுவைப் பயன் படுத்த மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண் டது. 1990-களின் தொடக்கத்தில் ஓ.என்.ஜி.சி. , ஓ.ஐ.எல். போன்ற அமைப்புகள் தனியார் துறையுடன் இணைந்து செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டன. எரிவாயு கண்டுபிடிப்பில் அந்நிய முதலீட்டாளர்களும் ஈடுபடுத்தப்பட்டனர். கிருஷ்ணா-கோதாவரி படுகை உட்பட 68 பகுதி களில் எரிவாயு இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நிலக்கரி அடுக்குகளுக்கு மேல் உள்ள கோல் பெட் மீத்தேன்  என்ற வெப்ப சக்தி அதிகம் கொண்ட எரிவாயு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் எரிவாயு கிடைக்கும் வேறு பல இடங்களைக் கண்டுபிடிப் பது, எரிவாயு தேவைக்கு இறக்குமதி செய்து கொள்வது என்ற இரட்டை அணுகுமுறையை நாம் கடைப்பிடிக்கத் தொடங்கினால் நம்முடைய மின்தேவையை நாம் நிச்சயம் நிறைவேற்றிக் கொள்ள முடியும்.
                                                                                                                                                                                                                          ஆதாரம் : தி இந்து
=================================================================================================================

  ஹாலிவுட்டில்  ஈழ தமிழ் இயக்குனர்.

இலங்கைத் தமிழரும், படத் தயாரிப்பாளரான சந்திரன் இரத்தினம், புலிகளினால் கொழும்பு நகரம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படுவது போன்ற ஹாலிவுட் திரைப்படமொன்றை இயக்கியுள்ளதாக தெரிகிறது.
இத்திரைப்படத்தின் பெயர் ஏ காமன் மேன். ஆஸ்கார் விருது பெற்ற ஹாலிவுட் நடிகர் சர்  வன் கிங்ஸ்லி நடித்திருந்த பாத்திரம் ஒன்றை சார்ந்ததாக திரைக்கதை நகர்கின்றது.
இப்படம் இலங்கை மற்றும் ஹாலிவுட் கூட்டுத் தயாரிப்பாக உருவாகி உள்ளது. படத்தின் திரைக் கதை, இயக்கம் ஆகியவற்றை இலங்கைத் தமிழரான சந்திரன் இரத்தினம் மேற்கொண்டு உள்ளார்.
ஹாலிவுட் படம் ஒன்றை முதன் முதல் இயக்கி இருக்கின்ற இலங்கைத் தமிழர் என்கிற பெருமையை இப்படத்தின் மூலம் இவர் பெறுகின்றார். 27 நாட்களில் படப் பிடிப்பு முடிந்துள்ளதாக தெரிகிறது.
==
==========================================================================


  • லோக்பால் அதிகாரம் தேவை
    லோக்பால் மசோதாவில் பிரதமர் மற்றும் நீதிபதிகளை கொண்டுவர அரசு தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் தயாரிப்பு குழுவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.இந்நிலையில் லோக்பால் மசோதா தயாரிப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார். அவர் இது பற்றி கூறுகையில், நேற்று நடந்த லோக்பால் மசோதா தயாரிப்பு குழு ஆலோசனை கூட்டத்தில் பல முக்கியமான சர்ச்சைக்கூறிய விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டது. இந்த ஆலோசனை ஆக்கப்பூர்வமாக அமைந்தது. இந்த மசோதா குறித்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசைன நடத்த உள்ளது. இந்த மசோதா தொடர்பாக மத்திய நிதியமைச்சர் மாநில அரசுகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு கடிதம் எழுத உள்ளார். பிரதமர். நீதிபதிகள் மற்றும் பார்லிமென்டில் எம்.பி.,க்கள் செயல்பாடுகள் குறித்து லோக்பால் மசோதா வரம்பில் கொண்டு வருவது குறித்து அரசியல் கட்சிகள் மற்றும் மாநில அரசுகளுடன் ஆலோசனை செய்ய வேண்டியுள்ளது. இந்த மசோதா தயாரிப்பு குழுவில் இடம்பெற்றுள்ள அமைச்சர் குழுவில் கருத்து வேறுபாடு ஏதும் இல்லை.
    லோக்பால் வரைவில் பிரதமர்,நீதிபதிகள்,மக்களவை உறுப்பினர்களை கொண்டுவர என்ன யோசனை வேண்டியிருக்கிறது.அவர்கள்தானே அதிக
    முறைகேடுகளுக்குக் காரணம்.இப்போது கூட ராஜா 2ஜி ஒதுக்கீட்டில் பிரதமர்
     அமைச்சர்கள் சிதம்பரம்,பிரணாப் ஆகியோரிடம் கடிதம் மூலம் தொடர்பு கொண்டு பின்னரே ஒதுக்கீடுகள் செய்துள்ளேன்.
               அதற்கான கடிதங்கள்18 என்னிடம் உள்ளது.அதை வைத்து இனி நானே
     வாதாடப் போகிறேனெனக் கூறியுள்ளாரே.
                 மக்களவையில் கேள்வி கேட்கக் கூட பணம் வாங்கும் உறுப்பினர்கள்.
     வாக்களிக்க காங்கிரசே எத்தனை முறை பணத்தை கொடுத்துள்ளது.இவர்களைக்
     கண்டிப்பாக லோக்பால் விசாரணைக்கு உட்படுத்தவேண்டும்.
                பிறந்த தேதியையே மாற்றியவர்கள்,அரசு பணத்தில் பொருட்கள் வாங்கியவர்கள்,அளவுக்கதிகமாக சொத்து குவித்தவர்கள்,புறம்போக்கு நிலத்தை
     ஆட்டையை போட்டவர்கள்,தீர்ப்பை சாதகமாகக் கூற பணம் பெற்றவர்கள்.என நீதிபதிகளிலும் கள்ள ஆடுகள் நிறைய இப்போது வந்து விட்டன ,.அவர்களையும் இதில் சேர்ப்பது அவசியம் .முக்கியமாக ”எனக்கு ஒன்றும் தெரியாது”என பிரதமர்
     கள் தப்பிவிடாமல் இருக்க அவர்களுக்கும் லோக்பால் தாங்கள் ”ஐயா வெள்ளை”
    [மிஸ்டர் வொய்ட்] என நிருபிக்க இது உதவும்.
                         எனவே கண்டிப்பாக பிரதமர்,நீதிபதிகள், மக்களவை உறுப்பினர்கள் ,இன்னும் சொல்லப் போனால் ராணுவத்தளபதிகள்,ஏன் குடியரசுத்தலைவரைக்கூட விசாரிக்கும் 
    அதிகாரம் லோக்பாலுக்கு கொடுக்க வேண்டியது  மிகக்
    கட்டாயம்,.


     

    இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

    விகடானந்தா நிலவரம்

    பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

    கட்டுமானம் ஆரம்பம்?