வருகிறது புதிய ஆபத்து

     சமச்சீர் கல்வி ஏன் வேண்டாம்,,,,                                                                                   திமுக தலைவர் கருணாநிதி நேற்று
வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் மாநில கல்வித்திட்டம், மெட்ரிக் கல்விமுறை, ஆங்கிலோ இந்தியன் கல்விமுறை, கீழ்த்திசை கல்விமுறை என நான்கு வகையாக பள்ளிக்கல்வி இருந்தது.

நான்கிலும் உள்ள சிறப்புக் கூறுகளை உள்ளடக்கி, சமச்சீர் கல்விமுறையை   நடைமுறைப்படுத்த அரசு முடிவு எடுத்தது. இதற்காக பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

அது சில ஆலோசனைகள் வழங்கியது. அதிகாரிகளை கொண்ட கல்வியாளர் குழு ஒன்று, பிற மாநிலங்களின் பாடத்திட்டங்கள், தேர்வு முறைகளை ஆய்வு செய்து தன் பரிந்தரையை வழங்கியது.

அவற்றின் அடிப்படையில் சமச்சீர் கல்வித் திட்டம் தயாரானது. அதை நடைமுறைப் படுத்த அவசர சட்டம் போடப்பட்டது. பின்னர் சட்டப்  பேரவையில் சட்டம் இயற்றப்பட்டது.

சமச்சீர் கல்வி சட்டத்தை தள்ளுபடி செய்யக் கோரி சில தனியார் பள்ளிகள் மற்றும் சங்கத்தினரால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. கடந்த ஆண்டு ஏப்ரல் 30 ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

தமிழக அரசு இயற்றிய இச்சட்டம் செல்லும் என உறுதி செய்யப்பட்டது. முதல் கட்டமாக 2010 & 11 கல்வியாண்டில் 1ம் வகுப்பு மற்றும் 6ம் வகுப்புகளுக்கு பாடத் திட்டங்கள் வரையறுக்கப்பட்டு, பாட புத்தகங்கள் தயார் செய்யப்பட்டு, முதலாம் வகுப்புக்கு 61 லட்சம் புத்தகங்களும் ஆறாம் வகுப்புக்கு 84 லட்சம் புத்தகங்களும் அச்சிடப்பட்டு மாணவர்களும் கடந்த ஆண்டு அந்த புத்தகங்களை படித்து முடித்துள்ளார்கள்.

எஞ்சிய 2,3,4,5,7,8,9 மற்றும் 10ம் வகுப்புகளுக்கான புத்தகங்கள் ஸீ200 கோடி செலவில் அச்சிடப்பட்டு, மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு விட்டன.

இந்த நிலையில் திடீரென்று அந்த திட்டத்தை  கிடப்பில் போடப்போவதாக அறிவித்து, ஸீ200 கோடிக்கு மேல் செல்வழித்து தயார் செய்யப்பட்ட புத்தம் புதிய புத்தகங்களை  வீணடிப்பதும், மேலும் ரூ.200 கோடி செலவழித்து புதிய புத்தகங்களை  அவசரமாக தயாரித்து, அச்சடித்து விநியோகிப்போம் என்பதும் சரியான நடைமுறை தானா என்பதை அரசு எண்ணிப் பார்க்கவேண்டும்.

மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்திய கல்வி திட்டம், ஓ.எஸ்.எல்.சி. பயிலும் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களோடு ஒப்பிடும்போது ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் போட்டியிட முடியாமல் இருந்ததை போக்குவதற்காகத்தான் சமச்சீர் கல்வி கொண்டுவரப்பட்டது. 

இது குறித்து அதிமுகவின் கூட்டணி கட்சிகளில் ஒன்றான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ‘சமச்சீர் கல்வி முறையை இந்த ஆண்டு நிறுத்தி வைத்திருப்பதும், ஸீ200 கோடிக்கு மேல் செலவிட்டு அச்சிடப்பட்டுள்ள பாடப்புத்தகங்கள் முழுமையாக கை விடப்படுவதும் மாணவர்கள் மத்தியில் குழப்பத்தையும், ஆசிரியர்கள்&கல்வியாளர்கள் மத்தியில் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது’’ என்று தெரிவித்துள்ளது.

மற்றொரு தோழமை கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ‘சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக கல்வி துறையில் சமச்சீர் கல்வி கொண்டு வரப்பட்டது’’ என்று குறிப்பிட்டுள்ளது.

அதிமுக அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்டுள்ள பொது நல வழக்கில், ‘‘சமச்சீர் கல்வி சட்டத்தின் நோக்கம் தெளிவானது. அதை எளிதாக புறக்கணித்து விட முடியாது.  ஏற்கனவே அமலில் உள்ள ஒரு சட்டத்தை & இந்த நீதி மன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்ட சட்டத்தை & அமைச்சரவை கூட்டத்தின் கொள்கை முடிவு மூலம் நிறுத்தி வைக்க முடியுமா என்ற கேள்விகளுக்கு அரசு விரிவாக பதில் தாக்கல் செய்ய வேண்டும்” என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

திமுக அரசால் கொண்டு வந்ததை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோள்தான் இந்த அரசின் அறிவிப்புக்கு காரணம் என்றால் அதை புரிந்து கொள்ள முடியும். மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய “நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்’’ என்று தொடங்கும் பாடலில் ‘‘ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து சிதையா உன்’’ என்ற வரியை நீக்கிவிட்டுதான் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அரசு சார்பில் அங்கீகரித்தேன். அந்தப் பாடல் தற்போது சமச்சீர் கல்வி புத்தகங்களில் இருப்பதால் இன்றைய அரசு சமச்சீர் கல்வி திட்டத்தையே எதிர்த்திட முனையுமா?

உலக தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்காக நான் தொகுத்து எழுதிய வாழ்த்துப் பாடல் அந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. அதுதான் அரசின் இந்த முடிவுக்கு காரணமா? ஆம் என்றால் அந்தப் பாடல் நான் தொகுத்து எழுதியது என்பதையே எடுத்து விட்டு அல்லது அந்தப் பாடலையே முழுமையாக எடுத்து விட்டு சமச்சீர் கல்விக்கான புத்தகத்தை வெளியிடுவதில் தவறு ஒன்றுமில்லையே? இவ்வாறு அந்த அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.
===========================================================================

 ஈ-கோலி பாக்டீரியா



பறவை காய்ச்சல்,கோழிக் காய்ச்சல்[சிக்கன் குனியா] இப்போது ஈ-கோலி இரண்டும் சேர்ந்த பாக்டீரியாவா,,,,


உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் ஈ – கோலி பாக்டீரியா தற்போது ஐரோப்பாவை அலற வைத்துக் கொண்டிருக்கிறது. இதுவரை பல நூற்றுக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுவிட்டார்கள். ஜெர்மனியில் ஆறு பேர்கள் இதுவரை இக்கிருமி பாதிப்பால் மரணமடைந்துள்ளனர். டென்மார்க்கில் மூன்றுபேர் இந்தக் கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.                 ஈ -கோலி பாக்டீரியா மனிதர்களில் இருந்து மனிதர்களுக்கு பரவும் தன்மையுடையது என்பதால் விரைவாக இந்நோய் பரவி விடும் அபாயம்  உள்ளது. இந்நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு முதலில் வயிற்று நோய் ஏற்படும். சிறு நீரகங்கள் பாதிக்கப்படும். மலத்துடன்  இரத்தப்போக்கும் காணப்படும். நீண்ட கால உடல் நலமின்மையை[காய்ச்சலை]ஏற்படுத்தும். அதைவிட முக்கியம். மரணத்தையும் ஏற்படுத்திவிடும் அபாயம் உள்ளது. சிறு நீரகங்களையும் செயற்படாமல் முடக்கி வைக்கும் அபாயம் நிறைந்த பாக்டீரியாவாக இது.
இதுவரை  இறைச்சியில்காணப்பட்ட இக்கிருமி தற்போது காய்கறிகளிலும் உருவாகி பரவ ஆரம்பித்துள்ளது. பறவைக் காய்ச்சலுக்குப் பிறகு இந்த ஈ-கோலி கிருமிகள் உலகத்தை கதிகலங்க வைத்துள்ளது. இந்தக் கிருமி வேகமாகப் பரவி வருவதாக உலக சுகாதாரநிறுவனம் எச்சரித்துள்ளது. ஜெர்மனியில் இதனால் பாதிக்கப்பட்டவர்கள்   அதிகம் பெண்கள்தான். ஜெர்மனி, டென்மார்க், ஹாலந்து, சுவீடன், பிரிட்டன் ஆகிய ஐந்து நாடுகளில் இது இப்போது வேகமாக பரவி வருகிறது.இந்தியாவுக்கு எப்போது இறக்குமதியாகிறது என தெரியவில்லை.  =

 ======================================================================== 
நிலவில் நீர் இருக்கிறது,,,,              பூமியின் துணைக்கிரகமான சந்திரனில் நிறைய கனிம வளம் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஆனால் தண்ணீர் வளம் உள்ளதா என்பது பல தடவை ஆராய்ச்சிகள் செய்யப்பட்ட பிறகும் உறுதிப்படுத்தப்படாமல் இருந்தது. சந்திரனை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பிய சந்திராயன் மிகத்திறமையாக ஆய்வு செய்து சந்திரனில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்தது. அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகளும் இதை உறுதி செய்து உள்ளனர்.இதையடுத்து சந்திரனில் என்ன என்ன வளங்கள் உள்ளன என்பதை கண்டுபிடிக்க நாடுகளிடம் ஆர்வம் ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக அமெரிக்கா, சீனா, ரஷியா, இந்தியா ஆகிய நாடுகள் இடையே கடும்போட்டி நிலவுகிறது. இதற்கிடையே சந்திரனிலும் நாம் எதிர்பார்த்ததை விட அதிக தண்ணீர் வளம் இருப்பதாக அமெரிக்காவில் உள்ள கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் யுனிவர்சிட்டி, கர்ஜினி அறிவியல் கழகம், பிரவுன் யுனிவர்சிட்டி விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். இதுவரை கணிக்கப்பட்ட அளவை விட 100 மடங்கு அதிக சுத்தமான தண்ணீர் நிலவில் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறி உள்ளனர். இது விஞ்ஞானிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

==================================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?