விடுவிப்புகள் ,,,,,,,,

   $    1993-94-ம் ஆண்டுக்கான செல்வ வரிக் கணக்கை ஜெயலலிதா தாக்கல் செய்யவில்லை என்று வருமான வரித் துறை சார்பில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து, பொருளாதார குற்றங்களுக்கான எழும்பூர் கூடுதல் தலைமை பெருநகர நீதிமன்றத்தில், வருமான வரித் துறை சார்பில் 1997-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை, 8.7.2010-ல் முதன்மைப் பெருநகர நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா மனு தாக்கல் செய்தார்.அந்த மனுவில், செல்வ வரி கணக்கை தாக்கல் செய்யக் கூடாது என்று நான் வேண்டுமென்றே எந்தத் தவறும் செய்யவில்லை. குறிப்பிட்ட தேதிக்குள் நான் செல்வ வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என்றால், எனக்கு விளக்க நோட்டீஸ் அனுப்பி, என் தரப்பு கருத்தை தெரிவிக்க உரிய வாய்ப்பு தரப்பட்டிருக்க வேண்டும். ஆனால், வருமான வரித் துறை சார்பில் அத்தகைய விளக்க நோட்டீஸ் எதுவும் எனக்கு அனுப்பப்படவில்லை. எனவே, வேண்டுமென்றே நான் எந்தத் தவறும் செய்யாததால், இந்த வழக்கிலிருந்து என்னை விடுவிக்க வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தியிருந்தார்.இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி பி.ஆர். சிவகுமார், திங்கள்கிழமை தீர்ப்பளித்தார். செல்வ வரி கணக்கை தாக்கல் செய்யக் கூடாது என்று வேண்டுமென்றே ஜெயலலிதா எதுவும் செய்யவில்லை என்பது தெரிகிறது. எனவே, இந்த வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்படுகிறார். இந்த வழக்கு தொடர்பாக பொருளாதார குற்றங்களுக்கான எழும்பூர் தலைமைப் பெருநகர நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவும் ரத்து செய்யப்படுகிறது என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.
   ஒரு மாநில முதல்வருக்கு வரிகட்டுவதைப்பற்றி தெரியாமல்போனது மிகவும் வேடிக்கை.வரிகளைப்போட மட்டும்தான் தெரியுமோ? அவரது ஆடிட்டர் மிகவும் பரபரப்பாக செய்திகளில் அடி’பட்டாரே .அவர் கூட சொல்லாதது வேடிக்கை.
   அதை விட வேதனை அனைவருக்கும் முன் மாதிரியாக வேண்டிய முதல்வர்களே சட்டங்களை மீறுவது. 
முதல்வராகி விட்டார்.முதலில் செல்வ வரி வழக்கு தள்ளுபடி.
அடுத்து வாய்தா புகழ் சொத்துக்குவிப்பு வழக்குதானே?




      #  தமிழக முதல்வர் ஜெயலலிதா தொலைக்காட்சி பேட்டியில் ”:லோக்பால் சட்ட வரம்புக்குள் பிரதமர் பதவியைக் கொண்டுவருவது அவரது அதிகார வரம்பைக் குறைக்கும்; மத்திய அரசுக்கு இணையாக மற்றொரு அரசு நடப்பதற்கு இது வழிவகுக்கும்.ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பிரதமர் பதவி கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்கலாம். எனவே, லோக்பால் சட்ட வரம்புக்குள் பிரதமரைச் சேர்க்கக் கூடாது. இதில் பிரதமரைச் சேர்த்தால், வெளிநாட்டு சக்திகள் நாட்டின் ஸதிரத்தன்மையைக் குலைப்பதற்கு இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தக் கூடும்.அவர் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று நிரூபிக்கப்பட்டாலும் அவரது அதிகாரம் பாதிக்கப்படும். அவர் எப்போதும் தன்னை தற்காத்துக்கொள்வதிலேயே கவனம் செலுத்த நேரிடும்.இந்த விஷயத்தில் நான் எந்தவொரு தனிநபரையும் ஆதரிக்கவில்லை. பிரதமருக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டாலொழிய அவரால் செயல்பட முடியாது. பிரதமருக்கு உள்ள அதிகாரம் எதையும் குறைக்கக் கூடாது. வாழ்க்கையை அதன் போக்கிலேயே எடுத்துக்கொள்வேன். அரசியலுக்கு வருவேன் என்றோ, தமிழ்நாட்டின் முதல்வராக ஆவேன் என்றோ நினைக்கவில்லை; இருந்தாலும், தமிழகத்தின் முதல்வராக இப்போது பணியாற்றுகிறேன்.இந்தியா வல்லரசாக மாற வேண்டும் என்ற நோக்கம் எனக்கு உண்டு. அதற்கான திறமை நம்மிடம் உள்ளது. உறுதியான, தேசப்பற்று மிகுந்த தலைவர்தான் நமது நாட்டுக்குத் தேவை ”என்றார் ஜெயலலிதா. 
    அவரது தேசபக்திதான் பிரதமரை லோக்பாலில் சேர்க்கக்கூடாது எனக் கூற வைத்துள்ளது.
   ஆனால் நீதிபதிகளை பற்றி ஒன்றும் கூற வில்லையே.ஏன்?
அது போகட்டும் .
அடுத்தப் பேட்டியில் மறக்காமல் நீதிபதிகளையும் சேர்த்துடுங்கள்.நமது சொத்துக் குவிப்பு வழக்குக்கு உதவும்.
  அது போக “லோக்பாலில் முதல்வர்களையும் விடுவிக்க வேண்டும்.சேர்க்கக்கூடாது[கருணாநிதி  என்ற பெயர் உடையவர்களைத் தவிர] என்றும் மறக்காமல் கூறிவிடுங்கள்.நமக்கும் பாதுகாப்பாக இருக்கும்.
2016ல் என்ன நிலையில் இருக்கிறோமோ? 
==========================================================================
இந்தியாவுக்கு எதிரான விதிகள் :  இந்தியாவை ஏமாற்றிய மன்மோகன் அரசை அமெரிக்கா ஏமாற்றியது.  



  • அணுத் தொழில்நுட்ப விநி யோகக் குழுமத்தைச் (என்எஸ்ஜி) சேர்ந்த நாடுகளிடம் இந்தியா தனது அணு உலைகளுக்கான தொழில்நுட்ப உதவிகளை பெற முடியாத வகையில் மேற்கண்ட குழுமம் புதிய விதிமுறைகளை வரையறுத்துள்ளது. இதன்படி, இந்திய நலன்களுக்கு எதிரான ஒப்பந்தங்களை ஏற்றுக் கொண் டால் மட்டுமே இந்தியாவுடன் அணு தொழில்நுட்பம் பரி மாறிக் கொள்ளப்படும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    அணுத் தொழில்நுட்ப விநி யோக நாடுகளின் (என்எஸ்ஜி) வருடாந்திரக் கூட்டம் நெதர் லாந்து நாட்டின் நூர்ஜ்விக் நகரில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில், என்எஸ்ஜி குழுமத்தில் உறுப்பினர்களாக உள்ள 42 நாடுகள் பங்கேற்றன. இதன் முடிவாக வெளியிடப் பட்ட செய்திக் குறிப்பில், “அணு செறிவூட்டல் மற்றும் மறுசுழற் சிக்கான உபகரணங்களையும், தொழில் நுட்பங்களையும் பரி மாறிக் கொள்வதற்கான விதி முறைகளைக் கடினமாக்க ஒப் புக்கொள்ளப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளனர்.

    அந்த விதிமுறைகள் இன் னும் இறுதிசெய்யப்படவில்லை, ஆனால், அக்கூட்டத்தில் சமர்ப் பிக்கப்பட்ட வரைவு அறிக்கை யின்படி அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தை (என்பிடி) ஏற்காத நாடுகளையும், உள் நாட் டின் அணுத் தொழில்நுட்ப வசதி களை சர்வதேச சோதனைக்கு திறந்துவிடும் வகையில் பாது காப்பு ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளாத நாடுகளையும், அணு தொழில்நுட்ப விநி யோகக் குழுமத்தில் இருந்து வெளியேற்ற முடிவு செய்யப்பட் டுள்ளது.

    இந்த வரைவு அறிக்கையில், “அணு தொழில்நுட்பம் அல்லது அணுசக்திப் பொருட்கள் பரி மாறிக் கொள்ள வேண்டுமா னால் அணுப்பாதுகாப்பு ஒப் பந்தத்தை ஏற்க வேண்டும்” என்ற வாசகமும், அப்படிக் கிடைக் கும் தொழில்நுட்பத்தைக் கொண்டு 20 சதவீதத்திற்கும் கூடுதலாக யுரேனியம் செறிவூட்டப் படாது என உறுதிப்படுத்த வேண்டும் என்பதும் கூடுதல் விதிமுறையாக இடம்பெற் றுள்ளன.

    கடந்த 2008ல் இடதுசாரிக் கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி, அமெரிக்காவுடனான அணு சக்தி உடன்பாட்டில் கையெ ழுத்திட்டு மன்மோகன்சிங் அரசு, உடன்பாட்டை ஏற்படுத்தியது. இதையொட்டி, அணுப் பொருள் ஏற்றுமதிக்காக பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடு வதில் இருந்து இந்தியாவிற்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. அணு ஆயுதப் பரவலைத் தடுப் பதில் இந்தியாவின் தன் முனைப் பான செயல்பாடுகளையும், நட வடிக்கைகளையும் அடிப்படை யாகக் கொண்டு இந்த விலக்கு அளிக்கப்படுவதாக மேற்கண்ட என்எஸ்ஜி குழுமம் கூறியது. இதுபற்றி மிகுந்த புளகாங்கி தத்துடன் நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன்சிங் அறி வித்திருந்தார்.

    ஆனால், தற்போது ஏற்படுத் தப்பட்டுள்ள புதிய விதிமுறை கள், எந்த ஒரு நாடும் என்எஸ்ஜி-யின் புதிய விதிமுறைகளை ஏற் றுக் கொண்டால் மட்டுமே அதன் உறுப்பினராக முடியும். அதில் முதல்கட்டம் அணு ஆயுதப் பரவல் தடையை ஏற்றுக் கொள்வதாகும். தற்போது, இதில் உறுப்பினராகும் முயற்சி யில் உள்ள நாடுகள் (இஸ்ரேல், பாகிஸ்தான் மற்றும் வட கொரியா) ஏற்கனவே வெளி யேறிவிட்டன. தற்போது ஏற் படுத்தப்பட்டுள்ள புதிய விதி முறைகள், இந்தியாவிற்கு அளிக் கப்பட்ட விலக்கை காலாவதி யாக்குவதற்காகவே சேர்க்கப்பட் டுள்ளன.

    சர்வதேச அணுசக்தி முகமை யின் (ஐஏஇஏ) அணுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடு வதன் மூலம், நம் மீது விதிக்கப் பட்டிருந்த தடைகளில் இருந்து இந்தியா விலக்குப் பெறும் என கடந்த 2006 ஆம் ஆண்டு மன் மோகன் சிங் நாடாளுமன்றத் தில் உறுதியளித்தார். அது ஒருமுறை நீக்கப்பட்டுவிட்டா லும், மீண்டும் திணிக்கப்பட லாம் என்பது இப்போது தெரிய வந்துள்ளது.
    சமீபத்தில் வெளியாகியுள்ள புதிய விதிமுறைகளுக்கான வழி காட்டுதல்களின் அடிப்படை யில், என்எஸ்ஜி உறுப்பு நாடு களிடமும், பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவுடனும் இந்தியா மேற் கொண்டுள்ள “பரஸ்பர அணு சக்தி ஒத்துழைப்புக்கான” ஒப் பந்தங்கள் நிறுத்தப்படலாம் என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்னும் அந்த விதிமுறைகள் இறுதிப்படுத்தி வெளியிடப் படாத நிலையில், இந்தியா என்ன நிலை மேற்கொள்ளும் என்பது கேள்வியாக எழுந் துள்ளது.

    இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகளிடம் கேட்ட போது, அனைத்து பரஸ்பர ஒத்து ழைப்பு ஒப்பந்தங்களும், அது என்எஸ்ஜி நாடுகளின் 2008 ஆம் ஆண்டு முடிவாக இருப்பினும், அல்லது இரு நாடுகளுக்கிடை யிலான ஒப்பந்தங்கள் என்றா லும் “இந்தியா இதற்கு ஒப்புக் கொள்கிறது” என்பதுடன் “அத் துடன் உங்களிடமிருந்தும் நாங் கள் அதையே எதிர்பார்க்கி றோம்” என வலியுறுத்தப்பட் டுள்ளதென தெரிவித்தனர். பரஸ் பர ஒத்துழைப்புக்காக ஏற்று கொண்ட உத்தரவாதங்களை அந்த நாடுகள் நிறைவேற்ற வேண்டுமென இந்தியா வலி யுறுத்தும் என அவர்கள் தெரி வித்தனர்.
    அணுசக்தி ஒப்பந்தத்தில் பிரணாப் -காண்டலிசா கையெழுத்து
    pranab-with-condoleezza-rice.jpg

    =========================================================================

    இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

    விகடானந்தா நிலவரம்

    பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

    கட்டுமானம் ஆரம்பம்?