சீமான் பதில் என்ன?

சீமான் அண்ணே இது என்னாண்ணே ?

சென்னை: ‘திருமணம் செய்து கொள்வதாக கூறி மோசடி செய்த இயக்குனர் சீமான் மீது நடவடிக்கை எடுக்கும் வரை ஓய மாட்டேன்’ என்று நடிகை விஜயலட்சுமி கூறினார். 
‘பிரண்ட்ஸ்‘ படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் ஹீரோயினாக அறிமுகமானவர் விஜயலட்சுமி. பின்னர் ‘கலகலப்பு’, ‘ராமச்சந்திரா’, ‘மிலிட்டரி’, ‘சூரி’, ‘எஸ் மேடம்’, ‘வாழ்த்துக்கள்’ உட்பட பல்வேறு படங்களில் நடித்தார். சமீபத்தில் வெளியான, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் ஹீரோயின் நயன்தாராவின் அக்காவாக நடித்திருந்தார். கன்னடம், தெலுங்கு படங்களிலும், டிவி சீரியல்களிலும் விஜயலட்சுமி நடித்திருக்கிறார்.
இவர் கடந்த ஜூன் 1ம் தேதி போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். ‘நானும் இயக்குனர் சீமானும் காதலித்தோம். கணவன் மனைவியாக வாழ்ந்தோம். தற்போது திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று சீமான் கூறிவிட்டார். அவர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார். 
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வளசரவாக்கம் போலீசாருக்கு கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டார். அதன்படி நம்பிக்கை துரோகம், திருமணம் செய்து கொள்வதாக மோசடி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், புகார் கொடுத்து ஒன்றரை மாதமாகியும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நடிகை விஜயலட்சுமி கூறினார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டி:
இயக்குனர் சீமானும் நானும் 3 ஆண்டுகளாக நெருங்கிப் பழகினோம். பாண்டிச்சேரியில் இருந்த போது எனக்கு ஏராளமான கடிதங்களை எழுதி உள்ளார். 
மதுரையில் இருந்தபோது, 15 நாட்கள் நாங்கள் தனிமையில் இருந்தோம். தற்போது, சீமான் என்னை ஏமாற்றி இலங்கை பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்ள முயன்று வருகிறார். நானும் ஒரு பெண்தானே. என்னை ஏன் திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார் என்று தெரியவில்லை. என்னை போல ஏராளமான பெண்களை அவர் ஏமாற்றி உள்ளார். புகார் அளித்து ஒன்றரை மாதம் ஆகியும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு விழா நடத்தியதால்தான் சீமான் மீது நடவடிக்கை எடுக்கவில்லையோ என்னவோ தெரியவில்லை. தற்போது, சிலர் மறைமுகமாக என்னை மிரட்டுகிறார்கள். 
தமிழ்நாட்டை விட்டே வெளியேற்ற நினைக்கிறார்கள். மிரட்டலைக் கண்டு பயப்படமாட்டேன். அவருடன் வாழவே போராடி வருகிறேன். உரிய நடவடிக்கை எடுக்கும் வரை ஓயமாட்டேன். சீமானுடன் பழகியதற்கு 700க்கும் மேற்பட்ட ஆதாரங்கள் உள்ளன. இவ்வாறு நடிகை விஜயலட்சுமி கூறினார். பேட்டியின் போது, சீமானுடன் காதலர் தினம் கொண்டாடியது உள்ளிட்ட புகைப்படங்களையும் வெளியிட்டார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?