பாவம்...பரிதாபம்

                        

அமெரிக்கப்பொருளாதார வீழ்ச்சியைத் தரும் கடன் நெருக்கடிக்கு கடைசி நேரத்தில் தீர்வு காண வேண்டிய சூழலில்,வேறு வழியின்றி தனது பல்வேறு கோரிக்கைகளை விட்டுக் கொடுத்து எதிர்க்கட்சியினரின் நிர்ப்பந்தத்துக்கு அதிபர் பராக் ஒபாமா பணிந்து விட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், "இது நான் விரும்பிய ஒப்பந்தம் அல்ல' என தனது ஆதங்கத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தினார். இதை உறுதிப்படுத்தும் வகையில், எதிர்க்கட்சித் தலைவர் பாய்னர்"வரி உயர்வு வேண்டும் என, வெள் ளை மாளிகையின் கோரிக் கை முறியடிக்கப்பட்டது' என்று தெரிவித்துள்ளார்.

 அமெரிக்காவின் கடன் உச்சவரம்பை அதிகரிப்பது தொடர்பாக, கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக, அந்நாட்டு ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கிடையில் பல முறை பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன. ஆண்டுச் செலவைக் குறைப்பது, கடன் உச்சவரம்பை அதிகரிப்பது ஆகிய இரு விஷயங்களில் அவை ஒத்துப் போனாலும், எந்தெந்தச் செலவுகள் குறைக்கப்பட வேண்டியவை, கடன் உச்சவரம்பு எந்த விதத்தில் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதில் கருத்து முரண்பாடுகள் எழுந்தன.

 இதற்கிடையில், இப்பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் இரு கட்சிகளும் பல பரிந்துரைகள் அடங்கிய சில மசோதாக்களைத் தயார் செய்து, பிரதிநிதிகள் மற்றும் செனட் சபையில் தாக்கல் செய்தன. அதிபர் ஒபாமா, கடந்தாண்டு கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்களை எப்படியாவது சீர்குலைத்திட வேண்டும், குறிப்பாக வரி அதிகரிப்பின் மூலம் அதைச் சாதித்திட வேண்டும் என்பது எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியின் முக்கிய நோக்கமாக இருந்தது.அதை நிரூபிக்கும் வகையில் அக்கட்சி தயாரித்திருந்த மசோதாக்களில் சில பரிந்துரைகள் சேர்க்கப்பட்டிருந்தன. அதேபோல், அடுத்தாண்டு தேர்தலை எவ்விதச் சிக்கலும் இல்லாமல் ஒபாமா சந்திக்க வேண்டும் என்ற நோக்கில், ஆளும் ஜனநாயகக் கட்சியின் மசோதாக்களின் பரிந்துரைகள் இருந்தன.

அதிபர் வலியுறுத்தல்: பிரதிநிதிகள் சபையில் குடியரசுக் கட்சியும், செனட் சபையில் ஜனநாயகக் கட்சியும் பெரும்பான்மை பலத்துடன் இருந்ததால், பரஸ்பரம் ஒருவர் கொண்டு வந்த மசோதாவை மற்றொருவர் நிராகரித்துக் கொண்டே வந்தனர்.இதற்கிடையில் அதிபர் ஒபாமா அளித்த பேட்டியில்,"இப்பிரச்னைக்கு காணப்படும் தீர்வு இரு கட்சிகளும் இணைந்து கண்டதாக இருக்க வேண்டும்' என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தினார்.

கடந்த ஜூலை 30ம் தேதி இரவில், இரு கட்சிகளும் ஒருமித்த கருத்தை எட்டி விட்டதாக செய்திகள் வெளியாயின. ஆனால் அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.நேற்று முன்தினம், செனட் சபையில், செனட் பெரும்பான்மை (ஆளும் கட்சி) தலைவர் ஹாரி ரெய்டு தனது மசோதாவை தாக்கல் செய்தார். 49 பேர் ஆதரித்தும் 50 பேர் எதிர்த்தும் வாக்களித்தனர். இதனால் அம்மசோதா தோற்றது.இதையடுத்து, இருகட்சிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தை தீவிரம் அடைந்தது. நேற்று முன்தினம் இரவு இரு கட்சிகளுக்கிடையில் ஒருமித்த கருத்து ஏற்பட்டது.
ஒபாமா அறிவிப்பு: கடன் நெருக்கடிக்கு தீர்வு எட்டப்பட்டதை அதிபர் ஒபாமா செய்தியாளர்களிடம் அறிவித்தார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது:நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் கடன் நெருக்கடிக்கு இரு கட்சிகளும் இணைந்து ஒரு தீர்வு கண்டுள்ளனர். அதன்படி, அடுத்த 10 ஆண்டுகளுக்கு 1 டிரில்லியன் டாலர் செலவுகள் குறைக்கப்படும். இது நான் பரிந்துரைத்த ஒப்பந்தமா? இல்லை.எனினும், நிதிப் பற்றாக்குறையால் ஏற்படும் சிக்கலில் இருந்து இந்த உடன்பாடு நம்மைக் காப்பாற்றும். அதோடு இதேபோன்ற நெருக்கடியை அடுத்த ஆறு அல்லது எட்டு அல்லது 12 வது மாதங்களில் நாம் சந்திக்கப் போவதில்லை என்பதையும் இந்த உடன்பாடு உறுதி செய்கிறது.இவ்வாறு ஒபாமா தெரிவித்தார்.
பிரதிநிதிகள் சபை சபாநாயகர் ஜான் பாய்னர் அளித்த பேட்டியில்,"இது ஒன்றும் உலகின் மிகச் சிறந்த உடன்பாடு இல் லை தான். எனினும் தற்போதைய பிரச்னையைச் சமாளிக்க நாங்கள் எந்தெந்த பரிந்துரைகளை மாற்றினோம் என்பதைத் தான் இது காட்டுகிறது. வரி உயர்வு உள்ளிட்ட வெள்ளை மாளிகையின் கோரிக்கைகள் முறியடிக்கப்பட்டுள்ளன' என்றார்.இதன் மூலம் எதிர்க்கட்சியே தனது கோரிக்கைகளில் வெற்றி பெற்றுள்ளதாக அமெரிக்கப் பத்திரிகைகள் குறிப்பிட்டுள்ளன.

 நெருக்கடிக்குத் தீர்வு காணப்பட்டதாக அதிபர் ஒபாமா அறிக்கை வெளியிட்டதை அடுத்து, அமெரிக்க, ஐரோப்பிய, ஆசியப் பங்குச் சந்தைகள் நேற்று காலை துவங்கிய போதே ஏற்றம் கண்டன.

 கடன் நெருக்கடிக்குத் தீர்வு காணப்பட்டு விட்டதாக அதிபர் அறிவித்தாலும், இந்தத் தீர்வில், இரு கட்சியினருமே சில குறைகளைக் கண்டுபிடித்து குற்றம்சாட்டியுள்ளனர். இந்த தீர்வு மசோதாவாக வரையப்பட்டு, இரு சபைகளிலும் தாக்கல் செய்யப்பட வேண்டிய சூழலில் செனட் சபையில் வெற்றி பெற்று விடும் என்றும், பிரதிநிதிகள் சபையில் வெற்றி பெறுவது சந்தேகமே என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னும் 24 மணிநேரமே கெடு உள்ள நிலையில், நேற்று முன்தினம் எட்டப்பட்ட தீர்வு மசோதாவாக வெற்றி பெற்று, பின்னர் சட்டமாக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெறுப்பில் மக்கள்: அடுத்தாண்டு நடக்க உள்ள அதிபர் தேர்தலில், ஆதாயம் தேடுவதற்காக எதிர்க்கட்சியினர் இவ்விவகாரத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகள், பாதிக்கு மேற்பட்ட அமெரிக்க மக்களிடம்வெறுப்பையே உருவாக்கியுள்ளன.சமீபத்தில் சி.என்.என்., செய்தி நிறுவனம்நடத்திய கருத்துக் கணிப்பில், குடியரசுக் கட்சியினர் பொறுப்புடன் நடக்கவில்லை என 63 சதவீதம் பேரும், பொருளாதார வீழ்ச்சி நேரிட்டால்அதில் எதிர்க்கட்சிக்கும் பங்குண்டு என 51 சதவீதம் பேரும், இப்பிரச்னைக்கு காரணம் ஒபாமாதான் என 30 சதவீதம் பேரும், இரு கட்சிகளுமே தான் காரணம் என 15 சதவீதம் பேரும்கூறியுள்ளனர்.
                          
   கடன் பிரச்னை முடிந்த பின் 

===========================================================================================

வடிவேலையும் உள்ளே தள்ளுகிறார்கள்.

                 

காமெடி நடிகர் வடிவேலு மீது சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ராஜேஷ்தாசிடம் ஓய்வு பெற்ற வங்கி உதவி பொது மேலாளரான அசோக் நகரைச் சேர்ந்த பழனியப்பன் நில மோசடி புகார் அளித்துள்ளார். அவர் கொடுத்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:

 

2006-ம் ஆண்டில் தாம்பரம் அருகே உள்ள இரும்புலியூரில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு நிறுவனம் சார்பில் 34 சென்ட் நிலம் ஏலத்துக்கு வந்தது. இந்த சொத்தை ரூ.20 லட்சத்துக்கு நான் ஏலத்தில் எடுத்தேன். தாம்பரம் சார்பதிவாளர் அலுவலகத்திலும் பதிவு செய்தேன்.

 

 

இந்த நிலத்தை தாம்பரத்தைச் சேர்ந்த டி.கே. ராமச்சந்திரன் என்பவர் தொழில் முதலீட்டு நிறுவனத்தில் அடமானமாக வைத்து கடன் பெற்று இருந்ததாக தெரிய வந்தது. கடனை அவர் திருப்பி செலுத்தாததால் நிலம் ஏலத்துக்கு வந்தது. அதை நான் எடுத்தேன்.

 

 

ராமச்சந்திரன் இறந்த பிறகு எனது நிலத்தை அபகரிக்க போலி மற்றும் மோசடியாக ஆவணங்கள் தயாரித்து உள்ளனர். ராமச்சந்திரன் மகன் பிரபு போலி ஆவணம் மூலம் நடிகர் சிங்கமுத்துக்கு விற்றதாக கூறப்படுகிறது. சிங்கமுத்து அந்த நிலத்தை நடிகர் வடிவேலுக்கு விற்றாராம். நிலத்தை சிலர் ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் கட்டுவதாக அறிந்து சென்றேன்.

 

 

அப்போது வடிவேல் இந்த சொத்தை வாங்கி தனது மனைவி விசாலாட்சிக்கு கொடுத்தது தெரிய வந்தது. இதுபற்றி கேட்டபோது, தி.மு.க. ஆட்சியாளர்களின் ஒத்துழைப்பு எங்களுக்கு இருக்கிறது என்று சொல்லி மிரட்டினார்கள். எங்கள் நிலத்தை மீட்டு தரவேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.

 

 

இதுபற்றி சிங்கமுத்துவிடம் கேட்டபோது, அவர் கூறிய தாவது:

 

வடிவேலுவும் நானும் சண்டை இல்லாமல் ஒற்றுமையாக இருந்தபோது எனது மேற்பார்வையில் நிறைய நிலங்களை வாங்கினார். இப்படி வாங்கும் நிலங்களை நேரடியாக அவரது பெயரில் பத்திரப்பதிவு செய்ய மாட்டார். வருமான வரி சிக்கல் வரும் என்பதால் என் பெயரிலும், வேண்டியவர்கள் பெயரிலும் பவர் வாங்கி வைத்துக் கொள்வார்.      


 

 

பிறகு எங்களை அழைத்து அவர் குறிப்பிடும் நபர் பெயரில் பத்திரப்பதிவு செய்து கொள்வார். இது போல் வாங்கிய இடங்களில் இதுவும் ஒன்று. அதில் இப்படி வில்லங்கம் இருப்பது எனக்கு தெரியாது. இவ்வாறு அவர் கூறினார்.

 

 

வடிவேலு மீதான புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க மத்திய குற்ற நிலமோசடி பிரிவுக்கு கமிஷனர் ராஜேஷ்தாஸ் உத்தரவிட்டார். மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

வடிவேலு சிங்கமுத்துவை நம்பி சுடுகாடு வரை வாங்கி ஏமாந்து காவல்துறை வழக்குவரை வந்தது பகிரங்க செய்தி. 

 

அவருக்கு நிலம் வாங்கிக்கொடுத்தே பணக்காரர் ஆனவர் சிங்கமுத்து.இதுதான் அனைவரும் அறிந்த விடயம்.

ஆனால் நிலம் விடயத்தில் சிங்கமுத்துவை விட்டு விட்டு பணம் கொடுத்து ஏமாந்த நடிகர் வடிவேலுவை ஊள்ளே தள்ள முயற்சிப்பது காழ்ப்புணர்ச்சி-பழிவாங்கல் நடவடிக்கைதானே?

  இப்போதைய நிலமோசடிவழக்கின் பலதின் பின்னணி பழிவாங்கும் நோக்கம் மட்டுமே கொண்டது.நிலம் வாங்கியவர் தி.மு.க ,வைச் சேர்ந்த பிரமுகர் என்றால் நிலம் விற்றவரை காவல் துறையினர் அணுகி 10 லட்சம்  தாறேன் என அவர் வாங்கிவிட்டு 5லட்சம் மட்டுமே தந்தார் என புகார் கொடு 5 லட்சம் பெற்றுத்தருகிறோம் எனவும் பேசுவதாகக் கூறப்படுகிறது.

எப்படியோ நிலம் விற்றவர்களுக்கு நல்ல நேரம்தான்.சில சமயம் நிலமே மீண்டும் கிடைத்துவிட வாய்ப்புள்ளது.

 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?