”மகாத்மாக்கள் “ அபாயம்,,,.










மேலே உள்ளது விக்கிலீக்ஸ் வெளியிட்டதாகக் கூறி ஈரோட்டில் அ.தி.மு.க,வினர் கொடுத்துவரும் கைப்பிரதி.
உண்மையில் இதில் காண்பவை இருப்பின் மத்திய அரசு உடன் நடவடிக்கை எடுத்து அத்தனை கடத்தல் -கறுப்புப்பணத்தையும் இந்தியாவுக்கு கொணர வேண்டும்.
பட்டியலில் முக்கிய பெயர் விபரங்கள்.                           
  

1.rajeev காந்தி-198000
2.a ராஜா 7800
3.harshad மேத்தா-135800
4.ketan பரேக்-8200
5.hd kumarswamy 14500
6.laluprsd யாதவ்-29800
7.j.mscindia-9000
8.karunanidhi-35000
9.kalanidhi மாறன்-15000
10.sharad pawer-28000
11.chidambaram -32000
12.rajfoundation-189008.



-_____________________________________________________________________________
மக்கள் ஆதரவு... மக்கள் ஆதரவு... என்கிறார்கள். இந்த 'மக்கள்' கடந்த 10 ஆண்டுகளாக, ஆயுதப் படைகளுக்கு வழங்கிய சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி பட்டினிப் போராட்டம் மேற்கொண்டு வரும் இரோம் ஷர்மிளாவுக்கு ஆதரவளிக்கும் மக்கள் அல்ல.
        
              

இந்த, 'மக்கள்' பாஸ்கோ திட்டத்துக்கு எதிராக, கடந்த ஆறு வருடங்களாகப் போராடி வரும் ஜகத்சிங்பூர் மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் மக்கள் அல்ல.

இந்த 'மக்கள்', 'கங்கை ஆறு மாசுபட்டு வருகிறது அதனால், சுரங்கத் தொழிலைத் தடை செய்ய வேண்டும்!' என்று கூறி பட்டினிப் போராட்டம் நடத்திச் செத்துப்போன சுவாமி நிகாமானந்த்துக்கு ஆதரவு அளித்தவர்கள் அல்ல.

இந்த 'மக்கள்' நியாம்கிரி மலையில் வேதாந்தா நிறுவனம் நடத்தி வருகிற சுரண்டலுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் பழங்குடியினருக்கு ஆதரவு அளிப்பவர்கள் அல்ல.

இந்த 'மக்கள்' கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராகத் தொடர் உண்ணாவிரதம் இருக்கும் மக்களுடன் நிற்பவர்கள் அல்ல.

இந்த 'மக்கள்' ஹரியானாவிலும், நொய்டாவிலும் தற்கொலை செய்து சாகும் விவசாயிகளின் நிலையைக் கண்டு மனம் கொதித்தவர்கள் அல்ல.

இந்த 'மக்கள்' நர்மதா அணையால் இடப்பெயர்வுக்கு உள்ளாகும் ஆதிவாசிகளின் நிலையை உணர்ந்தவர்கள் அல்ல.

ஆனால், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மக்கள் ஆதரவு பெருகுகிறது என்கிறார்கள்.
உண்மையில் இது வெறும் நாடகப் பிரசாரம்!" என்று காட்டத்தோடு வெடித்திருக்கிறார் அருந்ததி ராய்.

உண்மைதானே. இந்த கோரிக்கைகளை லோக்பாலில் சேர்க்க வேண்டும் என்பதும்.
தான் சொன்னதைத்தான் மக்களவையில் நிறைவேற்ற வேண்டும் என்பதும் வேறானவைகளதானே.
இன்று அசாரே போராட்டம் ஊழலுக்கு எதிரானது மட்டுமே ஒழிய மற்றைய சீர்கேடுகளுக்கு எந்த தீர்வும் போராட்டமும் இல்லையே?
அருந்ததிராய் வரிசையிட்டுள்ளவைகளுக்கு அன்னா கசரேயை இன்னொரு மகாத்மா என கனவில் வைத்திருப்போரின் பதில் என்ன?
திட்டமிட்டு அன்னாவை ஒரு குறியீடாக்கி பலன் பெற ஒரு பிரிவினர் முயலுகின்றனர்.அதற்கு மக்கள் பலியாகிவிடக்கூடாது.ஊழலுக்கு எதிரான மனப்பான்மையுடையோர் ஒன்று திரண்டிருப்பது நல்லவிடயம் .அதற்கு அன்னா உதவியுள்ளார்.ஆனால் அன்னாவின் மற்ற கொள்கைகளை நன்கு பகுத்துணர்ந்து ஆதரியுங்கள்.
நிகாமானந்தாவுக்கும்,வேதாந்தாவுக்கும்,பட்டிணிசாவு விவசாயிகளுக்கும் தராத ஆதரவை-எதிர்ப்பை இங்கு மட்டும் கொட்டுவது சரியல்ல.அது பின்னணியில் உள்ளோரின் நோக்கங்களுக்கு ஆதரவாகி விடும்.
விளைவுகள் நேர்மாறாகிவிடும் அபாயம் உள்ளது.
====================================================================================
    யாகூ திரைப்படம்,.                                     

கூகிள் தனது ஆன்லைன் வீடியோ தளமான யூடியுபில் (Youtube) புதிய இந்தித் திரைப்படங்களை முழுதும் பார்த்து ரசிக்கும்படி Box Office என்ற புதிய சேனலை அறிமுகப்படுத்தியது.
யூடியுபில் பலரால் ஏற்றப்பட்ட முழுநீளப் படங்கள் இருந்தாலும் புதிய ஹிட் படங்களை மாதமொரு முறை ஒவ்வொன்றாகப் பார்க்கும் படி கொண்டு வந்தது. மற்றொரு பிரபல தளமான யாகூவும் (Yahoo) தன் பங்குக்கு என்ன செய்வது என்று கூகிளின் சேவையைப் பின்பற்றி ஒன்றைக் கொண்டு வந்துள்ளது.

யாகூவின் இந்த புதிய சேவை MoviePlex என்று அழைக்கப்படுகிறது. இந்த இணையதளத்தில் முழுநீள பாலிவுட் இந்தித் திரைப்படங்களை உங்கள் கணினியில் எப்போதும் எங்கேயும் பார்த்துக் கொள்ள முடியும். கூகிளின் BoxOffice இல் மாதத்திற்கு ஒரு புதிய படத்தை மட்டுமே வெளியிடுவார்கள். ஆனால் இதில் தரவேற்றப்பட்ட எல்லாப் படங்களையும் எப்போது வேண்டுமானாலும் பார்க்க முடியும். தற்போது 8 திரைப்படங்களைத் தரவேற்றியிருக்கிறார்கள்.

மேலும் பல படங்கள் விரைவில் இணைக்கப்பட உள்ளன. ஆனால் இதில் உள்ள குறை என்னவென்றால் இதில் இணைக்கப்படும் திரைப்படங்கள் Standard Version இல் இருப்பதால் பிளாஷ் வசதி இல்லாத கருவிகளில் பார்க்க இயலாது என்பதே. ஐபேடு மற்றும் சில மொபைல்களில் பிளாஷ் வசதி இருப்பதில்லை. கணினியில் பார்ப்பதற்கு எந்தத் தடையும் இல்லை.

இங்கே சொடுக்கவும் : யாகூ மூவி பிளக்ஸ்
========================================================================
அடையாள அட்டை தவறுகள் திருத்தப்பட வேண்டும்,
நாடு முழுவதும் இந்திய குடிமகன்களுக்கு பிரத்யேக அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. ஆதார் ப்ராஜக்ட் என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்துக்கு இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் நீல்கேனி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆதார் அடையாள அட்டைக்காக பொதுமக்களின் கைவிரல் ரேகைகள் மற்றும் விழித்திரைகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.                                                                  

இதற்கு கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் பயோமெட்ரிக் தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படுவதற்கான அபாயம் இருப்பதால் பல நாடுகளில் இதுபோன்ற திட்டம் அறிமுக நிலையிலேயே ரத்து செய்யப்பட்டதாக அச்சுதானந்தன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு அச்சுதானந்தன் கூறியபடி இத்திட்டத்தைக்கைவிட்ட நாடுகளுடன்  தொடர்பு கொண்டு அவை கைவிட்டதற்கான காரணத்தைக் கேட்டறிந்து இத்திட்டத்தை மேற்கொள்ள வேண்டும்.
-------------------------------------------------------------------------------------------------------
செவ்வாய் கிரகப் பெண்.
  கீழே உள்ளப் படம் செவ்வாய் கிரகத்தில் எடுக்கப்பட்டப் படம்.
http://puthiyaulakam.com/wp-content/uploads/2011/08/mars-girl.jpg
அதில் பாறை மீது கால் நீட்டி ஒரு பெண் ஒருவர் இருப்பது போல் தெரிகிறது.கையை நீட்டி எதையோ காட்டுவது போல் உள்ளது.
இது பாறையின் வடிவம்தான் என்றும் ,பாறை நிழல் கலந்து பெண்போன்ற வடிவத்தைக் காட்டுகிறது எனவும் அறிவியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
ஆனாலும் செவ்வாய் கிரகத்தில் பெண் என்ற பெயரில் இப்படம் வேகமாகப் பரவி வருகிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


கடைசி ஆசை,,,,கேட்கப்பட்டது,.


வேலூர் சிறையில், செப்., 9ம் தேதி தூக்கிலிடப்பட இருக்கும் மூவரிடமும், கடைசி ஆசை தெரிவிக்கும்படி கேட்கப்பட்டு, அவர்களுக்கான தூக்கிலிடும் நேரமும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரையும், செப்., 9ம் தேதி தூக்கில் போட, சிறைத் துறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து, வேலூர் மத்திய சிறைக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சிறை உள்கேட் வரை, பத்திரிகையாளர்கள், போட்டோ கிராபர்கள் செல்ல, நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறை அலுவலர்கள் வாகனங்கள், சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. சிறையைச் சுற்றி நான்கு இடங்களில் தடுப்புகள் அமைத்து, 24 மணி நேரம் வாகனச் சோதனை நடக்கிறது. வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில், 19 இடங்களில் உள்ள இலங்கைத் தமிழர் முகாமில், 7,500 பேர் தங்கியுள்ளனர். அவர்களும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். காட்பாடி, அரக்கோணம், ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேஷன்களில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பேரறிவாளன் கடிதம்: "என்ன தவறு செய்தோம் என்று தெரியாமல் சாவின் மடியில் இருக்கிறேன். இவ்வழக்கில் உள்ள குளறுபடிகளை சரி செய்து, மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற வேண்டும்' என, தமிழக முதல்வருக்கு நேற்று, பேரறிவாளன் கடிதம் எழுதியுள்ளார். ராஜிவ் கொலையாளிகளை தூக்கில் போடும் வரை, பார்வையாளர்கள் சிறைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு, மூவரின் ரத்த உறவு சம்பந்தப்பட்டவர்கள், அவர்களது வழக்கறிஞர்கள் மட்டுமே சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தூக்கிலிடும் நேரம்: செப்., 9ம் தேதி அதிகாலை, 4.30 மணி, 5:00 மணி, 5.30க்குள் என, அடுத்தடுத்து மூன்று பேரையும் தூக்கில் போட முடிவு செய்துள்ளனர். முதலில் யாரை தூக்கிலிடுவது என்பது, குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும். ஒரே சமயத்தில் இருவரை மட்டுமே, வேலூர் சிறையில் தூக்கு போட வசதி உள்ளதால், சேலம் சிறையில் ஒருவரை தூக்கில் போட, அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

கடைசி ஆசை: மூன்று பேரிடம், "கடைசி ஆசை என்ன?' என்று தெரிவிக்கும்படி, எழுத்து மூலம் கேட்கப்பட்டுள்ளது. முருகன் தினமும் காலை, 6 மணிக்கு வாக்கிங் செல்வார். நேற்று முதல், வாக்கிங் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறைத் துறை கண்காணிப்பாளர் அறிவுடையநம்பி நேரடி கண்காணிப்பில், தனித்தனி செல்களில் அடைக்கப்பட்ட இம்மூவருக்கும், சிறை கண்காணிப்பாளர் ஆய்வு செய்த பின் உணவு தரப்படுகிறது.

பத்திரிகைகள் படிக்க, "டிவி' பார்க்க, ரேடியோ கேட்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதோடு, தினம் 4 மணி நேரத்திற்கு ஒருமுறை, மருத்துவப் பரிசோதனை செய்யப்படுகிறது. ஐ.ஜி., சைலேந்திர பாபு நேற்று சிறைக்கு வந்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, டி.ஐ.ஜி., மற்றும் எஸ்.பி.,யுடன் நான்கு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

28 ஆண்டுகளுக்கு பின் மூன்று பேருக்கு தூக்கு : சென்னை மாம்பலத்தைச் சேர்ந்த சேட்டு என்ற சந்துரு, 35. நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை குத்திக் கொன்று, குழந்தை தலையில் அம்மிக் கல்லை போட்டு கொலை செய்தார். வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட இவருக்கு, 1983, நவம்பர் மாதம் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
28 ஆண்டுகளுக்கு பின், செப்., 9ம் தேதி, ராஜிவ் கொலை வழக்கில் கைதான மூவருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காத்திருக்கும் கைதிகள்: ராஜிவ் கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன்; தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் ரவிச்சந்திரன், நெடுஞ்செழியன், முனியப்பன்; சென்னை சிறுவன் கொலை வழக்கில் மோகனரங்கன், கோபி ஆகிய எட்டு பேருக்கு, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வேலூர் சிறையில் இவர்கள் தூக்கு கயிற்றை எதிர்நோக்கியுள்ளனர்.

வேலூர் சிறையில் தூக்கு மேடை தயார் : முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு, செப்டம்பர் 9ம் தேதி, வேலூர் மத்திய சிறையில் தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. இதற்காக, சிறை மதில் சுவர்களுக்கு வெளியே, சிறை வளாகத்திற்குள் அமைக்கப்பட்ட தூக்கு மேடை சரிபடுத்தும் பணி, நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு துவங்கி, நேற்று மாலை 3 மணிக்கு முடிந்தது. சிறைக்கு வெளியே உள்ள தோட்டப் பகுதியை ஒட்டி, தூக்கு போடும் இடம் சிறிய கொட்டகையில் அமைக்கப்பட்டுள்ளது.
கடைசியாக, இங்கு சேட்டு என்பவரை தூக்கில் போட்டனர். அதன் பின், 28 ஆண்டுகளாக இங்கு யாரையும் தூக்கில் போடவில்லை. இதனால், இந்த இடம், காடு போல இருந்தது. பொதுவாக இந்த இடத்தில், ஒருவரை தூக்கில் போட்டு விட்டால், அதற்குப் பின் யாரும் பார்க்க முடியாதபடி, துணியால் மூடி வைத்திருப்பர். கடந்த 28 ஆண்டுகளாக இந்த இடம் மூடி இருந்ததால், துணியும் கிழிந்து கந்தை போல தொங்கிக் கொண்டிருந்தது. சில மாதங்களுக்கு முன், தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் மூன்று பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால், தூக்கு மேடை கம்பிகள் சரிப்படுத்தப்பட்டன.

ஆனால், மூன்று பேரும் ஜனாதிபதிக்கும், தமிழக முதல்வருக்கும் கருணை மனுக்கள் அனுப்பியதால், தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை.
இப்போது, ராஜிவ் கொலையாளிகள் மூவருக்கும், செப்டம்பர் 9ம் தேதி தூக்கில் போடுவது நிச்சயமான பின், அவசர கதியில் இந்த இடம் சரி செய்யும் பணி துவங்கியது. இதற்காக, 16 அடி ஆழத்தில் கிணறு போல காணப்படும் தூக்கு மேடையின் கீழ்ப் பகுதி, சுண்ணாம்பால் வெள்ளையடிக்கப்பட்டது. மேடையைத் தாங்கி நிறுத்தப்பட்டுள்ள இரும்புக் கம்பி, தூக்கு பள்ளத்தில் இருந்து கீழே உடல் விழும் போது தூக்கும் இரும்புத் தகடுக்கும், கறுப்பு வர்ணம் பூசப்பட்டுள்ளது. மேலும், தூக்கு போடும் இரும்பு விசை, கிரீஸ் போட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

தூக்கு மேடையின் மேற்கூரையும் சரிசெய்யப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்கள் காலத்தில் மிகவும் வலுவான நிலையில், இரு தூண்கள், அதனிடையே பலமான இரும்புக் கம்பியும் அமைக்கப்பட்டன. அவை இன்றும், நல்ல கண்டிசனில் இருப்பதாக, சிறை அதிகாரிகள் கூறினர். தற்போது, ஒரே நேரத்தில் இரண்டு பேருக்கு தூக்கு போடும் நிலை இங்குள்ளது. தூக்கு மேடை தயாராக இருப்பதாக, வேலூர் சிறைத்துறை அதிகாரிகள், சிறைத் துறை தலைவருக்கும், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும் தகவல் அனுப்பியுள்ளனர்.

தூக்கு மேடை சீர் செய்ய பூஜை : ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்த சிறைச்சாலையில், ஆரம்பம் முதல் இந்த தூக்கு மேடை மட்டும் தான் உள்ளது. இங்கு இதுவரை, 1,500க்கும் மேற்பட்டவர்களை தூக்கில் போட்டிருப்பதாக, சிறைத் துறையினர் கூறினர். தற்போது, இந்த தூக்கு மேடையை சரிப்படுத்த வேண்டும் என, சிறைத் துறையினர் பல மேஸ்திரிகள், இரும்புக் கம்பிகளை சரிசெய்பவர்களிடம் கேட்ட போது, அவர்கள் மறுத்து விட்டனர்.
25க்கும் மேற்பட்ட கான்ட்ராக்டர்களிடம் கேட்டும், யாரும் முன்வரவில்லை. இதனால், வெறுத்துப் போன சிறைத்துறை அதிகாரிகள், சிறை வார்டன்களை கொண்டே இதை சரிசெய்தனர். உள்ளே செல்லும் முன், சூடம் ஏற்றி பூஜை செய்தனர். பின்னர், பணி முடிந்ததும், இதே போல பூஜை செய்தனர். சரிசெய்து முடிக்கும் வரை, 50 சிறைக்காவலர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.
 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?