அணு உலை ஆபத்து.


 கூடங்குளம் அணுமின் நிலையம் மின் உற்பத்தியை துவங்கும் நிலையில் அதன் பணிகளை திடீரென நிறுத்தினால் பெரும் ஆபத்து ஏற்படும் என்று அணுசக்தி விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
                     நெல்லை மாவட்டம், கூடங்குளம் அணு மின் நிலையத்தில் கட்டமைப்பு பணிகள் முடிந்து மின் உற்பத்தி தொடங்கும் நிலையில் உள்ளது. ஆனால்  இப்போது திடீரென கூடங்குளம் பகுதி மக்கள் அணுமின் நிலையத்தை மூடக் கோரி அப்பகுதியில் மக்கள் போராட்டம் துவக்கி பணியாளர்களை பணிக்கு செல்ல விடாமல் தடுத்ததால் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.தமிழகக் காவல்துறையினரும் பணியாளர்கள்,விஞ்ஞானிகளை பணிக்கு செல்ல வேண்டாம்.தங்களால் பாதுகாப்பு தர இயலாது என்றதால் வெளிநாட்டு விஞ்ஞானிகளும் தங்கள் நாடுகளுக்குத் திரும்ப ஆரம்பித்து விட்டனர்.
மத்திய அரசோ தமிழக அரசிடம் பாதுகாப்பு வழங்கிடக் கோரியும் ஒன்றும் நடக்காததால் செய்வதரியாமல் தவிக்கிறது.ஆய்வுக்குழு அனுப்பி நிலமையை மதிப்பிட செய்து மக்களுக்கு விளக்கிக் கூற முயற்சி செய்தும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மதிபீடுக் குழுவை ஏற்க மறுத்து விட்டனர்.
தற்போது சென்னையில் நடக்கும் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக இந்திய அணுசக்தி கழக தலைவர் மற்றும் மத்திய அணுசக்தி துறை செயலாளர் ஸ்ரீகுமார் பானர்ஜி, மும்பையில் இருந்து விமானம் மூலம் நேற்று சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் அணு உலை அமைக்கும் பணி நிறைவடைந்து விட்டது. அதில், யுரேனியம் நிரப்பப்பட்டு மின் உற்பத்திக்கான ஒத்திகை துவங்கியுள்ளது. இந்த நேரத்தில் திடீரென வேலைகளை நிறுத்தினால் பெரும் ஆபத்து ஏற்படும். இதனால், மக்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, அணு உலை பணிகளை நிறுத்துவதற்கான சாத்தியக்கூறு இல்லை. அணு உலை பணிக்கு செல்லும் தொழில்நுட்ப வல்லுனர்கள், விஞ்ஞானிகள், இன்ஜினீயர்களை உள்ளே அனுமதிக்க மறுப்பது தவறானது. கூடங்குளம் அணு உலையால் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இவ்வாறு ஸ்ரீகுமார் பானர்ஜி கூறினார்.

  மும்பையில் நிருபர்களிடம் தேசிய அணு மின்சக்திக் கழக தலைவர் எஸ்.கே.ஜெயின்பேசும்போது’டாடாவின் நானோக்கார் தொழிற்சாலையை போல் திடீரென அணுமின் நிலைய பணிகளை நிறுத்தி விட்டு செல்ல முடியாது. அது மிகவும் ஆபத்தானது. கம்ப்யூட்டர் மற்றும் எலக்ட்ரானிக் சிஸ்டம், வென்டிலேசன் சிஸ்டம் போன்றவற்றை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். எனவே, விஞ்ஞானிகளும், இன்ஜினியர்களும் பணியில் இருந்தாக வேண்டும். அவர்களை பணியாற்ற விடாவிட்டால், அது பெரும் ஆபத்தை ஏற்படுத்தலாம். கூடங்குளம் பகுதியில் உள்ள 27 கிராமங்களில் 22 கிராமங்களை சேர்ந்த மக்கள் போராட்டத்தில் பங்கேற்வில்லை என்றும், குறிப்பிட்ட பிரிவினரே வெளிநாட்டு தூண்டுதலில் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.10ஆண்டுகள் கட்டுமானப்பணியின் போது இவர்கள் சும்மா இருந்து விட்டு தற்போது உற்பத்தி ஆரம்பிக்கும்போதுபோராட்டம் என்பது நிச்சயம் உள்நோக்கத்துடன் கூடியதுதான் எனத்தெரிகிறது. கூறினார்.



                      
---------------================----------------------------=====
 மாபெரும் ஏ.டி.எம்.மோசடி.

               


கிரெடிட், டெபிட் கார்டு விவரங்களை நவீன கருவிகள் முலம் திருடிபோலி அட்டைகள் தயாரித்து பணம் எடுத்து மோசடிசெய்து கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, 1,800 வெளிநாட்டு வங்கி வாடிக்கையாளர்களின் விவரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனால், 100 கோடி ரூபாய்மோசடியாகாமல்காப்பாற்றப்பட்டுள்ளது.  தூதரகங்கள் மூலம், வெளி நாட்டு வங்கிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது, தமிழகத்தில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள் மட்டுமல்லாது, வெளிநாட்டு மற்றும் தனியார் வங்கிகள் என, அனைத்து வங்கிகளுக்கும், ஏ.டி.எம்., வசதி உள்ளது. ஆன்-லைன் வசதி வந்ததும், நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் வசதியும் வந்துவிட்டது. இது, மோசடியாக பணத்தை திருடும் கும்பலுக்கு, மிகுந்த வசதியாக அமைந்துவிட்டது.
 கடந்த, 2009ல், ஸ்கிம்மர் இயந்திரத்தை பயன்படுத்தி, வணிக நிறுவனங்கள் மற்றும் பெட்ரோல் "பங்க்'களில் பணியாற்றுவோர், வாடிக்கையாளர்கள் கார்டு விவரங்களை திருடி, வெளியில் விற்பனை செய்து வந்தனர். இதை கொண்டு, புதிய கார்டு தயாரித்த, மகேஷ், உமேஷ் உள்ளிட்டோர் அடங்கிய மூன்று கும்பல் பிடிபட்டது. இதில், உமேஷ், ஒரே மாதத்தில் ஜாமினில் வெளிவந்துள்ளான். அவ்வழக்கு நடந்து கொண்டிருந்த நிலையில், தற்போது மீண்டும், உமேஷ் கும்பலைச் சேர்ந்தவர்கள் பிடிபட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.
               
 கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு விவரங்களை, ஏ.டி.எம்., மையம், வர்த்தக நிறுவனம், பெட்ரோல் பங்க், கூரியர் மூலம் திருடுகின்றனர். இப்படி திருடப்படும் விவரங்களை, ஸ்கிம்மரில் இருந்து, கம்ப்யூட்டரில் பதிவு செய்து, என் கோடர் இயந்திரங்களுக்கு மாற்றுகின்றனர். மலேசியா, சிங்கப்பூரில் இருந்து வரவழைக்கப்பட்ட காலி கார்டுகளை, என் கோர்டர் இயந்திரத்தில் வைத்து, அதில் பதிவு செய்கின்றனர். இந்த கார்டுகளை, எம்போசர் இயந்திரத்தில் வைத்து, பெயர் உள்ளிட்ட விவரங்களை மீண்டும் பதிவு செய்து, புதிய கார்டு தயாரிக்கின்றனர்.
வங்கி வாடிக்கையாளர்கள், தங்கள் கணக்கில் உள்ள பணம் திருடப்பட்டதை அறிந்து, ஒவ்வொருவராக புகார் கொடுக்க ஆரம்பித்தனர். போலீசார், முதலில், பெட்ரோல் "பங்க்'கள் மூலம் விவரங்களை திருடிய, இலங்கையைச் சேர்ந்த ஜாட்டி உள்ளிட்ட மூவரை கைது செய்தனர். மேலும், உமேஷ் உள்ளிட்ட ஐவரையும், விக்னேஷ் உள்ளிட்ட நால்வரையும் கைது செய்துள்ளனர். இதில், வினோத்குமார் உள்ளிட்ட சிலரை, தேடி வருகின்றனர்.
இது தொடர்பாக, பத்திரிகைகளில் செய்திகள் வந்ததைத் தொடர்ந்து, தினமும், 10க்கும் மேற்பட்டவர்கள் புகார் அளித்து வருகின்றனர். நேற்று முன்தினம், 22 பேர் புகார் கொடுத்துள்ளனர். அதில், உலக வங்கி அதிகாரி ஒருவரும் அடக்கம். அவரது வங்கிக் கணக்கில் இருந்து, 1 லட்சம் ரூபாய் திருடப்பட்டுள்ளது. முன்னதாக, 110 புகார்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி தடுப்புப் பிரிவினர், எப்.ஐ.ஆர்., பதிவு செய்துள்ளனர்.
மோசடி செய்யப்பட்டதாக வாடிக்கையாளர்கள், போலீசில் புகார் அளித்த பின்பே, வங்கிகள் பணத்தை திரும்ப அளிக்கின்றன. இதனால், புகார் கொடுப்பவர்கள் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை, மூன்று கோடி ரூபாய் வரை, மோசடிதாரர்கள் எடுத்திருக்கலாம் என, போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
உமேஷ் கும்பலிடமிருந்து இரண்டு கார்கள், ஐந்து கம்ப்யூட்டர்கள் உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றினர். அதை ஆய்வு செய்ததில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் உள்ள வங்கிகளின், 1,800 வாடிக்கையாளர்களின் கார்டு விவரங்கள் கைப்பற்றப்பட்டன.
இதில், அமெரிக்காவின் பெடரல் உள்ளிட்ட வங்கிகளின், 1,010 வாடிக்கையாளர்களின் கார்டு விவரங்களும் அடக்கம். மோசடி கும்பல் இதை பயன்படுத்தியிருந்தால், வாடிக்கையாளர்கள் பணம், 100 கோடி ரூபாய் வரை பறிபோயிருக்கும் என, கூறப்படுகிறது.
வெளிநாடுகளில் இதுபோன்ற கும்பல்கள் அதிகளவில் இருப்பதால், தமிழகத்தில் கைது செய்யப்பட்டவர்களின் நெட்-ஒர்க், எங்கு வரை செயல்படுகிறது என்பதை, போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது சிக்கியுள்ள, 1,800 கார்டு விவரங்களை, அந்தந்த நாடுகளின் தூதரகம் மூலம், வங்கிகளுக்கு அனுப்பி, அவர்களை எச்சரிக்கும் முயற்சியில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் இறங்கியுள்ளனர்.
 வங்கி ஏ.டி.எம்.,களில் ஸ்கிம்மர் பொருத்திய விவகாரத்தில், கனரா வங்கியின் ஏ.டி.எம்., இயந்திரத்தில் இருந்தே, அதிகளவில் விவரங்கள் திருடப்பட்டுள்ளன. குறிப்பாக, கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள கனரா வங்கியின் ஏ.டி.எம்., இயந்திரம் ஒன்றில், ஸ்கிம்மர் இயந்திரம் பொருத்தப்பட்டது, கண்டுபிடிக்கப்பட்டது. இதைக் கொண்டே, உமேஷ் கும்பல் பிடிபட்டது. இதையடுத்து, வங்கிகளிடம், ஏ.டி.எம்., இயந்திரம் உள்ள பகுதியில், பாதுகாப்பை பலப்படுத்த, போலீசார் வலியுறுத்தியுள்ளனர்.
 தற்போது, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு குற்றங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் மீது, மோசடி, கூட்டுச் சதி, பிறரது கார்டை பயன்படுத்தி, மோசடியில் ஈடுபட்டது உள்ளிட்ட, பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. ஒவ்வொரு வங்கியின் வாடிக்கையாளர்கள் புகார் அனைத்தும், ஒரே எப்.ஐ.ஆர்.,ராக பதிவு செய்யப்படுகிறது. குற்றங்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில், ஏழு முதல், 10 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும் என, கூறப்படுகிறது.
மத்திய குற்றப்பிரிவு, வங்கி மோசடி தடுப்புப் பிரிவு உதவி கமிஷனர் ஜான் ரோஸ் கூறியதாவது: கிரெடிட், டெபிட் கார்டு மோசடியில் இதுவரை, 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எங்களுக்கு வரும் புகார்கள் தொடர்பாக, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம். ஏ.டி.எம்., இயந்திரங்கள் பயன்படுத்தும் முறை குறித்தும், வங்கிகளின் நடவடிக்கை குறித்தும், பல ஆலோசனைகளை, பொதுமக்களுக்கு வழங்கியுள்ளோம்.
ஏ.டி.எம்., மையங்களில் காவலாளி இல்லாதது குறித்து, கனரா வங்கிக்கு அறிவுறுத்தியதன் பேரில், இதுவரை 28 மையங்களில், வசதிகளை ஏற்படுத்திவிட்டனர். அனைத்து வங்கி ஏ.டி.எம்.,களையும், தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மோசடி தொடர்பாக மேலும் சிலரை கைது செய்ய வேண்டியுள்ளது. அவர்கள் பிடிபட்டால், வெளிநாட்டு தொடர்பு குறித்த தகவல்கள் கிடைக்கும். இவ்வாறு ஜான் ரோஸ் கூறினார்.
                   ஏ.டி.எம்., மூலம் கார்டு விவரங்களை திருடும் தொழில்நுட்பம், தமிழகத்தில் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் செயல்படுகிறது. இப்பிரச்னையை போக்க, வெளிநாடுகளில் பலவற்றில், "ஜிட்டர்' தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
வங்கி ஏ.டி.எம்.,களில் கார்டு நுழைக்கும் பகுதியில் அடிப்படையில் உள்ள இயந்திரத்துடன், இந்த தொழில்நுட்பத்துடன் கூடிய, "சிப்' பொருத்தப்பட்டிருக்கும். இதன்மூலம், ஏ.டி.எம்., இயந்திரங்களில், வேறு கருவிகளை யாராவது பொருத்தினால், அந்த வங்கியின் தலைமையகத்தில், அலாரம் அடிக்கும்; சம்பந்தப்பட்ட ஏ.டி.எம்., இயந்திரத்தின் செயல்பாடும் முடங்கிவிடும்.
இந்த தொழில்நுட்பத்தை, தமிழகத்திலும் பயன்படுத்தும்படிதமிழ்நாடு குற்றப்பிரிவு போலீசார், வங்கிகளுக்கு பரிந்துரைசெய்துள்ளனர். வங்கிகள், கூடிய விரைவில் இதை செயல்படுத்தினால் ஏ.டி.எம்.மோசடி தடுக்கப்படும்.அப்பாவிகள் பணம் காப்பாற்றப்படும்.
               

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?