மோசடிகள் தொடர்கின்றன.....

துக்கையாண்டி ஐ.பி.எஸ் தான் ஓய்வு பெறுவதற்கு முதல் நாள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீதும் நில அபகரிப்பு மோசடிதான் குற்றமாகக் கூறப்படுகிறது.
ஆனால் இந்த மோசடிக்குப் பின்னாள் ஏதோ மோசடி இருக்கலாம் என்றே தெரிகிறது.
சுரன்

முதல்வர் ஜெயலலிதா தனது எதிரிகளை வீழ்த்தும் ஆயுதமாகவே நில அபகரிப்பு மோசடியை வைத்திருக்கிறார்.
கைது செய்து விட்டு பின்னர் யாரிடமாவது புகாரை முன் தேதியிட்டு பதிவு செய்து கொள்ளலாம்.
அது சரி .திமுக வினர் மீது நில அபகரிப்பு மோசடி வழக்கு போடுவதில் அர்த்தம் இருக்கிறது.
துக்கையாண்டி மீது ஏன்?
'டான்சி" நில மோசடி வழக்கு ஞாபமகமிருக்கிறதா? ஜெயலலிதாவுக்கு எதிரான அந்த மோசடி வழக்கில் விசாரணை அலுவலராக இருந்த குற்றத்தை துக்கையாண்டி செய்துள்ளார்.
அந்த விசாரணையில் அவர் நியாயமாக நடந்து குற்றத்தை வெளிக்கொண்டு வந்ததுதான் அவர் செய்த மன்னிக்க முடியாகுற்றம்.
இது போதாதா?அவர் மீதும் நில மோசடி வழக்கு வர .
_______________________________________________________________________________ 
அதிசயமாகும் வெற்றி....?

ஒன்று மட்டும் நிச்சயம் .சங்மா தனது தோல்வியை அறிந்து கொண்டுதான் இருக்கிறார்.
ஆனால் ஏதாவது அதிசயம் நடக்கும்.நான் வெற்றி பெறுவேன் என்கிறார் சங்மா.
அதிசயங்கள் நடப்பது பற்றி தனக்கு நம்பிக்கை அதிகம் என்றும் சொல்லுகிறார்.
பார்ப்போம்.அதிசயங்களை.
சுரன்

அவர் மேலும் கூறுகையில்:
"மன்னிப்பதே கிறிஸ்தவம். பாஜக, அதிமுக ஆகிய கட்சிகள் முன்பு கிறிஸ்தவர்களுக்கு எதிராக செயல்பட்டுள்ள நிலையில் அந்த மதத்தைச் சேர்ந்த நீங்கள் அவர்களது ஆதரவைப் பெறுவது முறையானதுதானா என்று பலர் கேட்கின்றனர். "மதத்தை அரசியலுடன் இணைக்கும் பிரச்னை அனைத்து நாடுகளிலும் உள்ளது.
பிறர் செய்யும் தவறுகளை மன்னிப்பது என்பது கிறிஸ்தவ மதத்தின் அடிப்படை. எனவே நாங்கள் எந்த கசப்புணர்வுகளையும் மனதில் வைத்துக் கொள்வது இல்லை.
உலகிலேயே மிகப்பெரிய மதம் கிறிஸ்தவம். அதற்கு விசாலமான இதயம் உண்டு. எனவே இங்கும், அங்கும் நடக்கும் சிறு விஷயங்களைப் பெரிதுபடுத்த விரும்பவில்லை."
என்று கூறியுள்ளார்.
பேசாமல் குடியரசுத்தலைவர் பதவி போட்டியை விட்டு ,விட்டு மதப்பிரசாரம் செல்லலாம் சங்மா.தோற்கும் என்று தெரிந்தும் போட்டியிடுவதற்கு ஒரு வீரம் அல்லது வீராப்பு வேண்டும் அது சங்மாவிடம் அதிகம் இருக்கிறது.
அதுவும் சுப்பிரமணியன் சாமி,ஜெயலலிதாவை நம்பி களம் இறங்க ரொம்பவே துணிச்சல் வேண்டும்.
'பிதாவே .இவர் அறிந்தே செய்கிறார்.இவரை மன்னியும்.அதிசயங்களை நிகழ்த்திக்காட்டி இவரை வெற்றி பெறச்செய்யும்."
இதுதான் நாங்கள் செய்யக்கூடிய உதவி.
சங்மா ரொம்ப நல்லவர் என்பது தெரிகிறது.ஆனால் இந்திய அரசியலில் அது தேவையில்லாத ஒன்றாகிற்றே.
சுரன்    

டெங்கு கொசுவிடம் இருந்து தப்பிக்க இது சரி வருமா?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?