அதிகம் படிச்சவங்க ,

  அதிகம் படிச்சவங்க  உள்ள நாடுகள்  விபரம்:

இது முதல் 10 நாடுகள் மட்டுமே,
 
1,கனடா 

2,இஸ்ரேல் 

3,ஜப்பான் 


4,அமெரிக்கா 

5,நியுசிலான்ட் 

6,தென் கொரியா 

7,இங்கிலாந்து 

8,பின்லாந்து 

9,ஆஸ்திரேலியா 

10, அயர்லாந்து 

கண்ணுக்கெட்டிய தூரம் வரை இந்தியா பெயரைக் காணமுடியவில்லை.
______________________________________________________________________________________________
இறக்குமதி சவப்பெட்டி  
 ===================
 தாராள மயமாக்கல் மூலம் எதுவெல்லாம் இறக்குமதி செய்யலாம் என்ற வரைமுறை இல்லாமல் போய் விட்டது.
, கடந்த 20 ஆண்டுகளாக கடைபிடித்து வருகிறது.இதனால் அமெரிக்கா ஒரு பக்கம் தனது பொருட்கள்-நிறுவனங்கள் என்று தாக்க  பக்கத்து  நாடான சீனா தனது, மலிவு விலை பொருட்கள்,மூலம்  இந்தியாவை ஆக்கிரமித்து  வருகினறது .
 எதை எடுத்தாலும், சீனப் பொருள் என்று மாறி விட்ட நிலையில், சவப்பெட்டிக்கு மட்டும் என்ன விதிவிலக்கு, என்று நினைத்த கேரள வியாபாரிகள், சீனாவில் இருந்து இவற்றை வாங்கிக் குவிக்க ஆரம்பித்து விட்டனர். 
சீனாவின் ஷாங்காய் நகரில் இருந்து 170 சவப் பெட்டிகள், ஆலப்புழை மாவட்டத்துக்கு வந்து சேர்ந்துள்ளன. இதற்கு, "சொர்க்க பெட்டி' என, பெயரிட்டுள்ளனர். சீனாவில் அதிகளவு வளரும், "பாலோனியா' எனப்படும் மரத்தில் இருந்து, சவப் பெட்டிகள் தயாராகின்றன. இதுகுறித்து, சவப்பெட்டிகளை இறக்குமதி செய்யும் வர்த்தகர் சதீஷ் தாமஸ்கூறியதில் இருந்து: 
"சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சவப்பெட்டி, சுற்றுப்புறச் சூழலுக்கு உகந்தது; உறுதியானது. 
அதே நேரம இந்த மரம் , ஒரு வார காலத்தில் மண்ணில் மக்கிப் போகும் தன்மை கொண்டது. இந்தியாவிலேயே முதல் முறையாக, கேரளாவில்தான் சவப்பெட்டிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. 
இதன் விலை, 20,000 ரூபாய் முதல் இரண்டு லட்சம் ரூபாய் வரை இருக்கும்.
[அதற்கு இந்திய சவப்பெட்டிகள் விலையே குறைவாகத்தான் உள்ளது ].

 எதிர்காலத்தில், அதிகளவில் சவப்பெட்டிகளை இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ளோம். இதற்கு தேவையான மரங்கள் மற்றும் மூலப்பொருட்களை வரவழைத்து, இங்கேயே தயாரிக்கும் திட்டமும் உள்ளது. 
அதன் மூலம், சவப்பெட்டியின் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது. கேரளாவில், சவப் பெட்டி செய்வதற்கு மரம், மற்றும் தொழிலாளர் கிடைப்பதில் சிரமம் உள்ளது. 
சீனாவில், காட்போர்ட் சவப்பெட்டிகளும்  கிடைக்கிறது .அது மிகவும் விலை மலிவு 500 
ரூபாய்கள்  மட்டும்தான் ஆகும்., இந்திய மக்கள் விரும்புவதாக தெரியவில்லை."
என்று  அவர் கூறினார்.
சீ னா  சவப்பெட்டி நல்லா வசதியா இருக்கிறதா என்று கேட்கவா முடியும்?
-______________________________________________________________________________________________

 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?