காமெடி விரதம்.


சேவை வரிக்கெதிராக திரையுலகினர் மேற்கொண்ட உண்ணாவிரதத்தில் கடைசி வரை கமல்ஹாச ன் பங்கேற்கவில்லை. 
காலை 9 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கியது.
 மாலையில் கமல் வந்து உண்ணாவிரதத்தை முடித்து வைப்பார் என்று தெரிவித்தனர். 
 மாலை 5 மணிவரை கமலுக்காகக் காத்திருந்தனர். ஆனால் கமல் கடைசி வரைவே இல்லை. அவர் அமெரிக்காவுக்குக் கிளம்பிவிட்டார் என்று கடைசியில்தான் சொன்னார்கள்
". இந்த உண்ணாவிரதத்துக்கு அனைவரும் வந்தே தீர வேண்டும். இல்லாவிட்டால் நடவடிக்கை எடுப்போம்" என்று நடிகர் சங்கம் அனைவருக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருந்தது .
kamal
ஆனால் கமல் கடைசிவரை பெப்பே காட்டி விட்டார்.நடிகர் ரஜினி 9.30க்கு வந்து விட்டு 12 மணிக்கு போய்விட்டாராம்.எங்கே சாப்பிடத்தானே?பின் என்ன உண்ணாவிரதப் போராட்டம்?
விஸ்வரூபம் பிரச்னையில்  தனக்கு ஆதரவாக நடிகர் சங்கம்  கூட்டம் போடுவதாகக்கூறி விட்டு கடைசியில் பெப்பே காட்டியதற்கு இது சரியாகப் போயிற்று என்று நினைத்து விட்டார் போல் இருக்கிறது.
ஆனால் 'கோடிக்கணக்கில் வியாபாரம் செய்யும் திரை உலகில் கேளிக்கை வரியும்,சேவை வரியும்தான் அரசுக்கு செல்லும் பணம்.மற்றவை எல்லாம் கருப்பில்தான்.
அப்படி இருக்கையில் வரியை நீக்கக் கூறுவதுஎன்பது சரி அல்ல.,கருப்பு பணத்தை ஒழிக்க வே ண்டும்என்று கருப்பு பணத்தில் குளித்து வரும் திரை உலகத்தினர் சொல்வது கேலிக்குரியதாக்கி விடும்  "என்பதும் தான் கமல்ஹாசனின் கருத்தாம்.அதனால்தான்  தன்னிடம் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ள கே ட்டுக்கொண்டவர்களிடம் அவர்இந்தகருத்தைக்கூறி  உண்ணாவிரதத்தை தவிர்த்து விட்டார்  என்று கூறப்படுகிறது.
திரை உலகம் இந்தியாவில் கருப்பு பணம் விளையாடும் தளங்களில் ஒன்று என்பது சின்ன பாப்பாவுக்கு கூட தெரியும்.
suran
உண்மையில் தான் வாங்கும் நடிப்புக்கான சம்பளத்தை கணக்கில் காட்டி வருமான வரி கட்டும் நடிகர்கள்,திரை உலகத்தினர் யார் இருக்கிறார்கள்.
இப்போ ராட்டத்தில் கலந்து கொண்டவர்களில்  ஒழங்காக வரியை கட்டியுள்ளேன் என்று ஒருவராவது சொல்ல முடியுமா? இதில் வருமானவரி சோதனை நடத்தப்படாத நடிகர் யார் உட்கார்ந்திருக்கிறார்கள்?
இவர்களில் வெள்ளையில் மட்டுமே வாங்கி ஒழுங்காக வருமான வரி கட்டுபவர் என்று பெயர் உள்ளவர் கமல் மட்டும்தான்.
அதனால்தான் 50 ஆண்டுகளுக்கும் மேல் திரை உலகில் முன்னணி நடிகராக இருந்தும் சொல்லிக்கொள்ளும்படியான சொத்து இல்லாதவராக-கடனாளியாக  இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
இந்த போராட்டத்தால் வேடிக்கை பார்க்க வந்த கூட்டத்தால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதுதான் மிச்சம்.இவர்கள் ப.சி.யை வரி விளக்கு தொடர்பாக பார்க்கப் போகிறார்களாம்.அவர் இவர்களுக்கு வரிச்சலுகை கொடுத்தாலும் கொடுப்பார்.இப்போது அரசை ஏமாற்றும் பெரும் பணக்காரர்களுக்குத்தானே மத்திய அரசு வரித்தள்ளுபடிகளை செய்து வருகிறது.
அவர் இது போ ன்ற கவர்ச்சி போராட்டங்களை  தவிர்ப்பது -தவிர்த்தது சரிதான்.
நடிகர் சங்கம்  நடவடிக்கை எடுப்பது என்னவாக இருக்கும்.?
suranபார்ப்போம்.!


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?