அடுத்த நிதியமைச்சர்?


------------------------


திருப்பூர் -தாராபுரத்தைச் சேர்ந்தவர் தொழிலதிபர் ராமலிங்கம்.
சாதாரண கொப்பறை,கடலை வியாபாரி.இவரது வீட்டில் வருமானவரித் துறையினர் மேற்கொண்ட சோதனையில் ரூ.27 ஆயிரம் கோடி மதிப்பிலான அமெரிக்க கடன் பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தப் பத்திரங்களின் உண்மை தன்மை குறித்து வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ramalingam

இதையடுத்துராமலிங்கம் கூறியது:
"வருமானவரித் துறையினர் என்னிடம் பல கோணங்களில் கேள்வி எழுப்பினர். அதற்கு உண்மையான பதிலை முழுமையாக அளித்துள்ளேன். வழக்கு விசாரணை முடிந்த பிறகு உண்மை வெளியாகும் [?]
ரூ.27 ஆயிரம் கோடி மதிப்பிலான கடன் பத்திரங்களை, பிரேசில் நாட்டைச் சேர்ந்த நண்பர் டெனியலிடம் வாங்கினேன்.
 2005ஆம் ஆண்டுவரை  கடும் கடன் பிரச்னையில் இருந்த நான், அறிவைப் [?]பயன்படுத்தி இந்த அளவு உண்மையாக முன்னேறி உள்ளேன்." என்றார்.
நம் அரசியல்வாதிகளுக்குத்தான் முதல் தேர்தலில் 10 லட்சமாக இருக்கும் சொத்து மதிப்பு அடுத்த தேர்தலில் அதுவரை அவர்கள் ஆற்றிய மக்கள் பணி மூலம் 10கோடிகளாக மாறியிருக்கும்.அது கடைசியில் லட்சம் கூடிகளாக உருக்கொள்ளும்.
ஆனால் இந்தியாவில் கடலை  போட்ட ஒரு கொப்பரை வியாபாரி 7 ஆண்டுகளில் தனது அறிவை பயன்படுத்தி உண்மையாக முன்னேற இயலும். என்பது இப்போதுதான் நடந்துள்ளது.
இவரின் அறிவுக்கும்  உண்மையான உழை ப்புக்கும் இவர் சிறையில் அடைக்கப்படுவதை விட இந்தியாவின்  நிதி அமைச்சராக்கி பெருமைப்படுத்துவதுதான் சாலச்சிறந்தது.
அப்படியாவது பொருளாதார புலிகள் சிதம்பரம் -மன்மோகன் சிங்-அலுவாலியா போன்றோரிடமிருந்து இந்தியா முன்னேறுமா என்று பார்க்கலாம்.
------------------------------------------------------------------------------------------------------------
48ஆண்டுகளுக்குப்பின்னரும் அதே நிலை?
-----------------------------------------------------
suran
காங்கிரஸ் ஆட்சியில் கண்டறியாதனவெல் லாம் காணலாம். திடீரென கிளாஸ்கோ, அமுல் புட்டி களுக்கு (குழந்தை உணவு) கால்கள் முளைத்து விடுகின்றன. சர்க்கரை மூடைகளுக்கு இறக்கை கள் முளைத்துவிடுகின்றன. வெளிச்சத்தில் இவை வராது.

இப்போது எரிபொருள் இருக்குமிடமும் இருட் டாக இருக்கிறது. சென்ற வாரத்தில் 2வது உலக யுத்தத்தில் நாஜிகள் தோற்கடிக்கப்பட்ட 20வது ஆண்டு விழாவைக் கொண்டாடினோம். ஆனால் யுத்த காலத்திலிருந்த மண்ணெண்ணெய் பஞ்சம் இப்போதும் தலைதூக்கியுள்ளது. இது செயற்கை பஞ்சம்தான் என்று மத்திய மந்திரி ஹுமாயூன் கபீர் கூறுகிறார்.

இதன் கடுமையைப் பற்றி மதுரை - ராமனாத புரம் வர்த்தக சேம்பர் மந்திரிக்குத் தந்தி அடித் துள்ளது. கோவையில் கலெக்டர் மண்ணெண் ணெய் வர்த்தகர்கள் கூட்டத்தைக் கூட்டி உபதே சம் செய்துள்ளார்.
திருநெல்வேலியில் பாட்டிலுக்கு 3 பைசா கூடு தலாக விற்கப்படுவதாகவும் திருச்சியில் 18 லிட்டர் கொண்ட டின் ரூ.10க்கு (நிர்ணய விலை ரூ. 6.65 தான்) விற்கப்படுவதாகவும் செய்திகள் வந்தன. ஆனால் இப்போது பல ஊர்களில் கடைகளில் மண்ணெண்ணெய் கிடையாது என்று கூறு கிறார்கள். தெருக்களில் மண்ணெண்ணெய் வண்டி கள் வருவது நின்றுவிட்டன. டீசல் எண்ணெய் கிடைக்காமல், நாட்டின் பல இடங்களில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ஒரு பக்கம் அன்றாட உபயோகப் பொருளான மண்ணெண்ணெய்க்கு கலால் வரியை உயர்த்தி சர்க்கார் ஏழைகள்பால் கருணையைக் காட்டியுள் ளது. மண்ணெண்ணெய்யை உபயோகத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காக இந்த வரி அதிகரிப்பு என்று மந்திரி கூறினார். கிராமங்களுக்கு மின்சாரம் சென்றிருந்தும் மண்ணெண்ணெய் உபயோகம் 1962ல் 5 லட்சம் டன்னாக இருந்தது. 1964ல் 18 லட்சம் டன்னாக இருப்பதாக அவர் கூறுகிறார். மண் ணெண்ணெய் வாங்க முடியாதவர்கள், மின் சாரத்தை உபயோகிக்க முடியுமா? அப்படியிருந்தும் துணை நிதிமந்திரி பகத் எந்த நிவாரணமும் அளிக்க முடியாது என்றும் பார்லிமெண்டில் கூறினார்.

மறுபக்கம் தனியார் எண்ணெய் கம்பெனிகளுக் கும் சர்க்கார் துறையிலுள்ள இந்தியன் எண்ணெய் கார்ப்பரேசனுக்கும் தகராறு. இதன் காரணமாக மண் ணெண்ணெய்க்குச் செயற்கை பஞ்சம் 5 சதவீதத் தேவையைக்கூட இந்தியன் எண்ணெய் கார்ப்ப ரேசன் நேரடியாக விநியோகிக்க முடியாது என்றும், இறக்குமதியாகும் எண்ணெய் ஏற்கெனவே எம் முறையில் விநியோகிக்கப்பட்டு வந்ததோ, அம் முறையில்தான் விநியோகிக்க வேண்டுமென்றும் அகில இந்திய பெட்ரோலியம் வர்த்தகர்கள் சம் மேளனத் தலைவர் எச்சரிக்கிறார்.

மந்திரி கபீரோ சென்ற வருடத்தைப் பார்க்கிலும் இவ்வருடம் மண்ணெண்ணெய் ஸ்டாக் அதிகம் இருப்பதாகவும் சரிவர விநியோகமாவதற்கு ராஜ்ய சர்க்கார்கள்தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறுகிறார்.

அடுத்த 10 வருடங்களுக்கு சில்லரை விற் பனையைச் சர்க்கார் மேற்கொள்ள முடியாது என் றும் அவர் கூறுகிறார். வர்த்தகர்களே மண்ணெண் ணெய் பஞ்சத்துக்குக் காரணம் என்று மந்திரியே ஒப்புக்கொள்ளும்போது, பொறுப்பை அவர் தட்டிக் கழிக்கிறார். இவ்வாறு உணவுநெருக்கடிக்கும் ராஜ்ய சர்க்கார்கள்தான் ஒத்துழைக்கவில்லை என்று மந்திரி சுப்பிரமணியம் கூறினார். வர்த்தகச் சூதாடி களை அடக்க ராஜ்ய சர்க்காரும் தயாராக இல்லை. மத்திய சர்க்காரும் தயாராக இல்லை. காரணம் என்ன? காங்கிரஸ் கட்சிக்குத் தானே ரூ.98 லட்சம் கம்பெனிகளிடமிருந்து நன்கொடை கிடைத்தது.

நந்தாவின் வெள்ளை அறிக்கையில் இரண்டு மூன்று இடங்களில் என்னை பற்றி கூறப்பட்டிருக்கிறது.

சீனா அணுகுண்டு வெடித்தது இந் தியாவுக்கு எதிராக அல்ல என்று நான் கூறியது குற்றமாக கொள்ளப்பட்டது. ஆனால் என் பேச்சின் ஒரு பகுதியை மட்டும் நந்தா ஆதாரமாகக் காட்டியுள்ளார்.

இந்தியாவுக்கு ஆபத்து அணுகுண் டால் அல்ல என்றும், ராணுவத்திட மிருந்துதான் ஆபத்து என்றும் நான் கூறி யிருப்பது “ஸ்டேட்ஸ்மன்” பத்திரி கையில் வெளியாகியுள்ளது. அதற்கு மட் டும் நந்தா கத்தரிக்கோல் போட்டுவிட் டார். நான் கூறிய கருத்தை பிரதமர் சாஸ் திரியும் வெளியிட்டிருக்கிறார். இந்தியா அணுகுண்டு செய்ய வேண்டியதில்லை என்றும் சீன ராணுவத்திடமிருந்தே இந் தியாவுக்கு ஆபத்து என்றும் திரு .சாஸ் திரி கூறியிருக்கிறார்.

பிரதமர் சாஸ்திரியும் தேசத்துரோகி தானா ?

                                                                                                          -ஜோதிபாசு

இது 25-5-65ம் தேதி சென்னை கூட்டத்தில்பேசியது.நன்றி:தீக்கதிர். 
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
suran
 



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?