காத்திருப்போர் பட்டியல்

இது ஏதோ பதவிக்காக காத்திருப்போர் பட்டியல் அல்ல.

முருகன்,பேரறிவாளன்,சாந்தன் உட்பட தூக்கை எதிர்பார்த்து ஒவ்வொரு நாளும் செத்துப் பிழைப்பவர்கள்எண்ணிக்கை  பட்டியல்.
இந்தியாவில் தற்போது 1455 பேர் தூக்கு தண்டனையை எதிர்நோக்கியுள்ளதாக தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றது.
 2001 முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 4,321 தூக்கு தண்டனை கைதிகளுக்கு மன்னிப்பளிக்கப்பட்டு, அவர்களின் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.

உ லகில் 140 க்கும் அதிகமான நாடுகள் மரண தண்டனையை முற்றாக ஒழித்து விட்டன.
ஆனால் இந்தியா சில கடுமையான குற்ற  வழக்குகளில் மட்டுமே மரண தண்டனைகளை அளிப்படு கிறது.
ஆனாலும் இந்தியாவில்  மூன்று நாட்களுக்கு ஒருவருக்கு என்ற வகையில் தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது. அதாவது ஆண்டுக்கு 132 பேருக்கு தூக்கு தண்டனை கொடுக்கப்படுகிறது.
 காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேவுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது.அவருக்குப்பின் அரசியல் கொலைகளாக இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, பஞ்சாபின் முதல்வர் பியாந்த் சிங், நாடாளுமன்ற உறுப்பினர் லலித் மாகேன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
மரண தண்டனைகள் மூலமாக அந்த பயத்தில் குற்றங்கள் குறைந்துள்ளதாக தெரியவில்லை.
 2001 ஆம் ஆண்டில் இந்தியாவில் 36,202 பேர் கொலை செய்யப்பட்டு இறந்துள்ளனர்.
 2011 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 34,305 ஆக உ ள்ளது. இந்தக் கால கட்டத்தில் இந்தியாவின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 19 கோடியாக உயர்ந்துள்ளது .ஆனால்  கொலைகளின் வளர்ச்சி எண்ணிக்கை வீழ்ச்சியில்  உ ள்ளது என தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் புள்ளி விபரங்களில் இருந்து தெரிகிறது.
சென்ற  15 ஆண்டுகாலத்தி ல் 4 பேர் இந்தியாவில் தூக்கிலிடப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் கடந்த நான்கு மாதங்களில்தான்  தூக்கிலிடப்பட்டனர்.
கே ஆர் நாராயணன், அப்துல் கலாம், பிரதீபா பாடில் ஆகிய மூன்றுகுடியரசுத் தலைவர்களும்  கருணை மனுக்களை ஆய்வு செய்யவோ -தள்ளுபடி செய்வதிலோ ஈடு பட வில்லை.
பிரணாப் முகர்ஜி பதிவியேற்ற 7 மாதங்களில் வீரப்பன் கூட்டாளிகள் 4 பேர் உட்பட 7 பேரின் கருணை மனுக்களை நிராகரித்துள்ளார்.
 இவர்களில் இருவர்கசாப்,அப்சல் குரு  ஏற்கனவே தூக்கிலிடப்பட்டுவிட்ட னர்.
இன்னமும்  9 பேரின் கருணை மனுக்கள் தொடர்பாக குடியரசுத் தலைவரிடம்  உள்துறை அமைச்சகம் தனது பரிந்துரையை கொடுத்துள்ளது.அதன் பேரில் அவர் தூக்கை முடிவு செய்ய வே ண்டும்.....,
இந்த பட்டியலில் தர்மபுரியில் மாணவிகளை பேருந்தில் வைத்து கொளுத்தி கொலை செய்த மூன்று கொலையாளிகள் பெயரும் இருக்கிறதா?
 ----------------------------------------------------------------------------------------------------------------------------------
150 ஆண்டுகால சேவை 
---------------------------------------------------

1859 இல் பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரியர்களுக்கு இடையே நடந்த போரின் போது சொல்பெரினோ மோதலில் காயமடைந்தர்கள் அடைந்த அவல த்தை பார்த்து , அத் தகையவர்களுக்கு உதவுவதற்காக 1863 இல் செஞ்சிலுவை சங்கம் என்று  இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.

ஜெனிவாவை சேர்ந்த வணிகரான ஹென்றி டுனண்ட் அவர்கள் இதனை ஆரம்பித்தார்.
இன்று உலகின் பல யுத்த முனைகளிலும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் செயற்படுகிறது.
நவீன ஆயுதங்களால் ஏற்படும் சவால்கள் தமது பணிகளை மேலும் கடினமாக்கியுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மிகவும் உயரமான இடத்தில் வைத்து மதிக்கப்படுகின்ற போதிலும், அதன் செயற்பாடுகள் தொடர்பில் நாம் முழுமையாக திருப்தி அடைய முடியாது.
காரணம் சில இடங்களை அதன் செயல்பாடு சரிவர அமையவில்லை.குறிப்பாக இலங்கையில் ஈழத்தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்ட போது சங்கத்தின் செயல்பாடுகளும்,ஐநா வின் செயல்பாடுகளும் ஒருதலைபட்சமாக இருந்ததாக குற்றசாட்டுகள் எழ்ந்துள்ளன.அது உண்மையும் கூட.அதேபோல் 
நாசிக்களின் சித்ரவதை முகாம்கள் குறித்து கண்டு கொள்ளாமல்  இருப்பது என்று அந்த நேரம் செஞ்சிலுவை சங்கம் ஒதுங்கிக் கொண்டது கடுமையான எதிர்ப்பை உண்டாக்கி கடைசி யில்  அது மன்னிப்பு கோரியதும்  நடந்துள்ளது.
எனினும் தன்னுடைய பல சேவைகளுக்காக அது பாராட்டையும் பெற்றுள்ளது.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்தற்போது  தனது 150 வது ஆண்டு நிறைவை கொண்டாடி  வருகிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

மறைந்த நகரம் மச்சு பிச்சு கண்டு பிடிக்கப்பட்டபோது 

 ,

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?