செருப்புகளை துடைக்கிறேன்......,

நேற்றைய போல் இதுவும் மிதியடிகள் தொடர்பான செய்திதான். ஆனால் இது ஒரு பாடம் புகட்டும் செய்தி.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி ஸ்ரீதேவி கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றுபவர் செல்வக்குமார்.
திருச்சிக்கு வந்த அவர், ஸ்ரீரங்கம் ராஜகோபுரம், அமெரிக்கன் மருத்துவமனை, ரயில்வே ஜங்ஷன் ஆகிய இடங்களில் அமர்ந்து, பொதுமக்களின் ஷூ, செருப்புகளுக்கு பாலிஷ் போடும் பணியில் ஈடுபட்டார்.
சபாரி உடை அணிந்து பாலிஷ் போடும் பணியில் ஈடுபட்ட அவர், "நான் உங்கள் செருப்புகளை துடைக்கிறேன். நீங்கள் ஏழை குழந்தைகளின் கண்ணீரை துடையுங்கள்' என்ற வாசகம் அடங்கிய பேனரை வைத்திருந்தார்.
பேராசிரியர் செல்வகுமார் 
ஏழைக் குழந்தைகள் குழந்தைகள்  கல்வி கற்க நிதிசேகரிப்பது பற்றி அவர் கூறியதாவது:-
"சிறுவயதிலிருந்தே, மற்றவர்களுக்கு உதவ வேண்டும், என்ற எண்ணம் எனக்கு உண்டு. சென்னை லயோலா கல்லூரியில், பி.ஏ., தமிழ் படித்த போது, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுதற்காக, பகுதி நேரமாக வேலைகள் பார்த்தேன்.கேட்டரிங் முதல், கவுரவ ஆசிரியர் பணி என, இருபதுக்கும் மேற்பட்ட பணிகளை பகுதி நேரமாக செய்து, மூன்று சக்கரசைக்கிள், செயற்கை கால் போன்றவற்றை வாங்கி, உதவி தேவைப்படும் மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து வழங்கினேன்.
கடந்த, 1998 முதல், 2004ம் ஆண்டு வரை, மாற்றுத்திறனாளிக்கான சேவை செய்தேன். அப்போது, ஆதரவற்ற அனாதை குழந்தைகளுக்கும், சிறப்பான கல்வி கொடுக்க வேண்டும், என்ற எண்ணம்மேலோங்கியது.

அதையடுத்து பாடியநல்லூர் மருதுபாண்டியர் நகரிலிருந்த என் தந்தையின் நிலத்தில், கருணைக்கரங்கள் மற்றும் பள்ளியை துவக்கினேன். தற்போது, ப்ரீ கேஜி முதல், ஐந்தாவது வகுப்பு வரை,170 ஆதரவற்ற, அனாதை ,ஏழைக் குழந்தைகள்படிக்கின்றனர்.
 பள்ளியில் பணிபுரியும் எட்டு ஆசிரியர்களுக்கு சம்பளம், மின் கட்டணம், பராமரிப்புச் செலவு என, மாதந்தோறும்20 ஆயிரம் ரூபாய் வரைசெலவாகிறது.
நன்கொடை என்று பிரபலங்களிடம் கையேந்துவதை விட பொதுமக்களின் பங்களிப்பை பயன்படுத்த வேண்டும்அவர்களுக்கு இது தொடர்பாக விழிப்புணர்வை எற்படுத்த வேண்டும்  என்று நினைக்கிறேன்.

அதனால் தான், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அமர்ந்து, அவர்களின் ஷூ, செருப்புகளை பாலிஷ் செய்து, நன்கொடை வசூலிக்கிறேன். பாலிஷ் செய்வதற்கு, பொதுமக்கள் கொடுப்பதை வாங்கிகொள்கிறேன்."
என்றா ர்.
இவரது மனைவி பெயர்  மல்லிகா.இவர்களுக்கு  லிங்கேஸ்வரன்என்ற  3வயது  என்ற மகனும் உள்ளா ர்.

அவருடைய  எண்ணத்துக்கு உதவ எண்ணுபவர்கள்  98848 69566 என்ற செல்பேசி  எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தகவல்& நன்றி:தினமலர் 
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஒரு கொலையில்[?]கலை.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பர்மா என்று முன்பிருந்த தற்பொதைய மியான்மர் நாட்டில் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் பத்திரிகைகள் வெளியாகியுள்ளன.
 ராணுவ ஆட்சியின் கீழ் அரசு பத்திரிகைகள் மட்டுமே வெளிவந்தன.தனியார் பத்திரிகைகளுக்கு ராணுவம்  1964 முதல்  தடை விதித் தது.
2011ல் இருந்து ஜனநாயக முறைக்கு மியான்மர் திரும்பியதால்  நேற்று முதல் பத்திரிகைகள் வெளியிடப்பட்டன.வார இதழ்களும்  தினசரி பத்திரிகைகளாக மாறி வெளியாகியுள்ளன.ஆனால் வெளியான தேதி ஏப்ரல் 1 என்பதில்தான் ஒரு சந்தேகம்....,
--------------------------------------------------------------------------------------------------------------------------------------

" துளசி இலைகளை, வெயிலில் நன்கு உலர்த்தி பொடி செய்து, ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டால் பூச்சி, வண்டுக்கடி காரணமாக ஏற்படும் விஷம் இறங்கி விடும் .
 துளசி இலைகளை காய வைத்து இடித்து தயார் செய்த சாற்றுடன்  தேன், பசும்  பால் கலந்து குடிக்க  கணையச் சூடு அகலும்.
துளசி சாறு , சம அளவு தேன் கலந்து  ஐந்து நாட்கள் தொடர்ந்து  குடித்து வர  வாயு தொடர்பாக ஏற்படும் நோய்கள் குணமாகும்."

-------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் 


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?