+2 முடித்த அனைவருக்கும்

 +2 முடித்த அனைவருக்கும் அடுத்து என்ன படிப்பை தேர்ந்தெடுப்பது என்பதில்தான் குழப்பம் அதிகமாக இருக்கும்.
குழப்பத்தை தீர்ப்பதற்கு நம்மை நாமே ஓர் ஆய்வுக்கு உட்படுத்தினால் எளிதாக விடை கண்டுகொள்ளலாம்.
அதற்கு முதலில் நம்மிடம் உள்ள திறன்கள் என்ன என்பதை நாமே அலசி ஆராய  வேண்டும்.

உங்களுக்கு எந்த துறையில் ஈடுபாடு உள்ளது என  இனங் கண்டு கொள்ளுங்கள்.
மற்றவர்கள் கூறியதால்  திடீரென்று அந்தத் துறையின் மேல் ஆர்வம் வந்ததா?
 அல்லது முன்பிருந்தே இயற்கையாக அந்தத்துறையில் உங்களுக்கு ஆர்வம் இருந்திருக்கிறதா என்பதை முதலில் முடிவு செய்யுங்கள்.
எடுத்துக்காட்டாக சிறு வயதில் இருந்தே அதிக அக்கறையுடன் பணம் மற்றும் நிதி நிர்வாகத்தை சிறப்பாக மேற்கொண்டிருக்கிறீர்கள் எனில், அந்ததுறையின் மீதும் ஈடுபாடும் இருக்கிறது என்றால் நிதித்துறையை தாராளமாக தேர்ந்தெடுக்கலாம்.

உங்கள் தனித்திறமையை உங்களுக்கு கற்று தந்த உ ங்கள்  மீது அக்கறை கொண்ட ஆசிரியர்கள் கண்டுகொண்டிருப்பதற்கு  வாய்ப்புகள் அதிகம்..
 நீங்கள் கணிதத்தில் திறமையுள்ளவர்களாக இருக்கிறீர்களா? அல்லது அறிவியலில் ஈடுபாடு கொண்டவரா? மொழித் திறமையுடையவரா? என்பதை ஆசிரியர்கள் கண்டுகொள்ளலாம்.
அதே போன்று சிறு வயதில் இருந்து உங்களை கவனித்து வரும் பெற்றோரிடம் உங்கள் தனிப்பட்ட திறமைகள், கவனம், ஈடுபாடு குறித்து ஆலோசனை செய்வதால், சரியான வழியை கண்டுகொள்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
+2 வில் 1189 மதிப்பெண் பெற்ற ஜெயசூர்யா 
 பல்வேறு வகைகளில் உங்களை பரீட்சித்து பார்த்து, நீங்கள் அந்த குறிப்பிட்ட துறைக்கு ஏற்றவரா? என்பதை ஆராய்ந்து கண்டறிபவர்களாக இருக்க வேண்டும். உங்கள் திறமையை, ஆளுமையை கண்டு கொள்பவர்களாக இருக்க வேண்டும்.
 உங்களிடம் இருக்கும் திறமைகள் எந்த துறைக்கானவை என்பதை கண்டுகொண்டு அந்தத்துறையில் என்ன பாடத்தை தேர்ந்தெடுக்கலாம் என்பதை தெளிவாக சொல்லக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.
1189 மதிப்பெண்கள் பெற்று முதலாம் இடம் பிடித்த இருவர் அபினேஷ், ஜெயசூர்யா 

அல்லது நீங்களே அதை முடிவு செய்திருக்கலாம்.அதை மனதில் வைத்து மேல் படிப்பை தேர்வு செய்யுங்கள்.அதில் அப்போது நீங்கள் முழு மனதுடன் பயின்று வெற்றி பெற வாய்ப்புகள் அதிகரிக்கும்.
இப்போது எல்லா துறையிலுமான படிப்புகளுக்கும் வாய்ப்புகளும், வேலைகளும், முன்னேறும் வழிகளும் அதிகரித்துள்ளது. அதையும் மனதில் கொள்ளுங்கள்.நீங்கள் தேர்ந்தெடுத்த துறை-படிப்பை யாராவது குறையாக கூறி மனதை நோகடித்தாலும் நீங்கள் அதை கவனத்தில் கொள்ள வேண்டாம் .எதிர் காலத்திலை எண்ணி பயம் வெண்டாம்.அந்த துறை,படிப்பு நீங்கள் முழுமனதுடன் தேர்வு செய்தது.அதில் நிச்சயம் உங்கள் தனித்திறமை பளிச்சிடும்.நிச்சயம் வெல்வீர்கள்.

படிப்புகள் அனைத்துமே அதிகம் வருமானம் தரக்கூடியதுதான்.
படித்த படிப்பினை எப்படி நம் திறமையின் மூலம் பயன்படுத்துகிறோம் என்பதில் தான் இருக்கிறது.
அதனால் இந்தப் படிப்புதான் வருமானம் தரக்கூடியது என யாரும் இன்றைய காலகட்டத்தில்  கூற முடியாது.காரணம்.வளரும் இந்தியாவில் எல்லாத்துறைகளிலும் வாய்ப்புகள் கொ ட்டிக்கிடக்கிறது.
மிகுந்த ஈடுபாடு.
அர்ப்பணிப்பு உணர்வு.
படிப்பின் மேல் காதல்.
புரிந்து கொள்ளும் ஆர்வம்.
சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை.
இவை இருந்தால் போதும்.இந்த உலகமே உங்கள் கையில்தான்.
வாழ்த்துக்கள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?