தகவல் தொழில் நுட்பம்




& கணினி துறை படிப்புகள் ,
==================================

 இன்று பல இளைஞர்களின் கை நிறைய சம்பளம் கனவுக்கு நினைவிடம் தந்தது தகவல் தொழில்நுட்பத் துறைதான்.
அமெரிக்காவின் சில நடவடிக்கைகளால் அச்சுறுத்தல்களுக்கு ஆளானாலும் அதில் இருந்து மீண்டு வரும் தகவல் தொழில் நுட்பத்துறை என்பது பலரின் எண்ணம்.
 இப்போதும்  தகவல் தொழில்நுட்ப துறைதான் அதிக அளவிலான நபர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் துறை .
 ஆனால் ஐடி நிறுவனங்களுக்கு அதிகளவில் மனிதவளம் தேவைப்படுகையில் அது கிடைப்பதில்லை என்பது ஒரு முக்கியமான உண்மை.
ஒரு ஐடி தொழில் நிபுணர் என்ற நிலையை தவிர்த்து அலுவலகங்களில் பணிபுரியும் ஒவ்வொருவருக்குமே அடிப்படையாக கணித அறிவு அவசியமாகிறது. இன்றைய நிலையில் ஒரு கல்லூரி மாணவன் படிப்பு முடிந்து பணிக்குச் செல்லும் முன்பாக அவனுக்கு அடிப்படையான கணினி அறிவு நிச்சயம் தேவையாக இருக்கிறது.
தகவல் தொழில் நுட்பத்துறையில்   3 விதமான பணி பிரிவுகள் உள்ளன.
1.மென்பொருள் மேம்பாடு (Software Development)
 2.தகவல் தொடர்பு அமைப்புகள் மேலாண்மை (Information Systems Management)
 3. வன்பொருள் நெட்வர்க்கிங் (Hardware Networking) .
ஒருவர் கணினி பயிற்சியை முடித்தவுடன் மென்பொருள் புரோகிராமிங் பணி (Software Programming Job), எம்.ஐ.எஸ் பணி (MIS Job) அல்லது நெட்வர்க்கிங் வகை பணி (Networking kind of Job) ஆகிய ஏதேனும் ஒன்றை பெறுகிறார்.
 இத்தகைய பணிகளில் உயர் நிலைகளும், கீழ் நிலைகளும் உண்டு. எனவே நீங்கள் முடித்த படிப்பின் கால அளவு மற்றும் உங்களின் திறமையைப் பொறுத்து பணிகள் வேறுபடுகின்றன. பொதுவாக குறுகிய கால படிப்புகள் மற்றும் நீண்டகால படிப்புகள் என்று இரு வகைகள் உள்ளன.
 குறுகிய கால படிப்புகள் 2 முதல் 5 மாதங்கள் கால அளவுகளைக் கொண்டு சான்றிதழ் அல்லது டிப்ளமோ நிலையில் உள்ளன. இந்த குறுகியகால படிப்புகள் ஒருவருக்கு அடிப்படை கணினி அறிவை வழங்குவது முதல் ஒன்று அல்லது பிற கணினி அம்சங்களில் சிறப்பு திறன்களை பயிற்றுவிப்பது வரை உள்ளன.
பல பொறியியல் கல்லூரிகளில், இந்த வகை படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு அவர்களின் வருங்காலப் பணிக்குத் தேவையான திறன்களை வழங்குவதற்கு உதவி புரிகின்றன. கம்ப்யூட்டிங் என்பதைப் பொறுத்த வரை பல கல்லூரிகளில் பாடத்திட்டங்கள் உள்ளன. ஆனால் போதுமான தொழில்நுட்ப வல்லுநர்கள் இல்லை மற்றும் இதுபோன்ற பல சிக்கல்கள் அங்கே உள்ளன. ஆனால் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் இதுபோன்ற திறன்களையே முக்கியமாக எதிர்பார்க்கப்படுகின்றன. இது போன்ற சிக்கலான நிலையயில்தான் மேற்கூறிய குறுகிறகால படிப்புகளை வழங்கும் நிறுவனங்கள் முக்கியப் பணியாற்றுகின்றன.
நீண்டகால படிப்புகள் என்பவை 1 முதல் 3 வருடங்கள் வரையான கால கட்டத்தினை கொண்டது. வகுப்புகள் ஒரு நாளைக்கு 4 முதல் 5 மணி நேரங்கள் நடைபெறும் மற்றும் வாரம் 5 நாட்கள். சில படிப்புகள் ஒரு நாளைக்கு 2 மணி நேரங்கள்  மற்றும் வாரத்திற்கு 3 நாட்கள் நடைபெறும். இந்த வகைப் படிபப்புகளில் எலக்ட்ரானிக் புத்தகங்கள், மற்ற மாணவர்களுடன் அளவீடுகள், பயிற்சி திட்டங்கள், பதிவு செய்யப்பட்ட விரிவுரைகள் மற்றும் நேரடி விரிவுரைகள் போன்ற அம்சங்கள் இருக்கும்.
மாணவர்களுக்கு டேட்டா கார்டுடன் லேப்-டாப் வழங்குவதால் மேற்கூறிய வசதிகளை அவர் எப்போதும் எந்த இடத்திலிருந்து ம் பெற முடியும். மேலும் பாடங்களை லேப்-டாப்பிலேயே இறக்கம் செய்து வைத்துக் கொள்ளலாம்.
மைக்ரோசாப்ட் சான்றிதழ் என்பது ஐடி தொழில்துறை  நிபுணர்களுக்கான ஒரு சிறந்த சான்றாகும்.
இந்த சான்றிதழ் ஒருவர் சிக்கல் வாய்ந்த ஐடி தொழில்நுட்பங்களை கையாளும் விதத்தில் அவருக்கு பயிற்சியளிக்கிறது.
 இவைத்தவிர வேறு பல முக்கிய சான்றளிப்புகளும் உள்ளன.
அவை Microsoft Certified Architect (MCA).
Microsoft Certified Master (MCM).
 Microsoft Certified IT Professional (MCITP),
Microsoft Certified Technology Specialist (MCTS) போன்றவையாகும்.

இவை தவிர  மல்டிமீடியா, ஏவியேசன் மற்றும் விருந்தோம்பல் மேலாண்மை போன்ற பல பிரிவுகளும் உள்ளன.
 இதற்காக தமிழகத்திலுள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்துடன் இணைந்து ஒரு அமைப்பை ஏற்படுத்தியிருப்பதாக ஆப்டெக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தகவல் தொழில் நுட்பத்தில் பொறியாளராக இருந்தாலும், பொறியாளராக பணியாற்றப் போகிறவராக இருந்தாலோ சில கூடுதல் டிப்ளமோ படிப்புகள் தேவைப்படுகின்றன. எனவே கூடுதல் கணினி படிப்புகள் பெற்றிருந்தால் தாங்கள் விரும்பிய தொழில்நுட்ப துறைகளில் பணியாற்ற உதவியாக இருக்கும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
   தமிழர் பழமையின் அடையாளம் போற்றுவோம் .
--------------------------------------------------------------------------------------

தஞ்சாவூர்-விக்கிரவாண்டி சாலையில் உள்ள "ராஜ ராஜ சோழன்" மகன் "ராஜேந்திர சோழனால்' கட்டப்பட்ட 1000 வருட பழமையான கோயில் ஒன்று இடிக்கப்பட உள்ளது.


"கங்கை முதல் கடாரம் வரை வென்று தமிழர்களின் புகழை உலகிற்கு எடுத்துக்காட்டிய ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட கோயில் இது. இதில் வேடிக்கை என்னவென்றால் ராஜேந்திர சோழன் இளவரசர் பட்டம் ஏற்று அரியணையில் அமர்ந்து வரும் 2014 ஆம் ஆண்டு சரியாக ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைய உள்ளது.
 அதற்கு அன்பளிப்பாக தமிழர்கள் அவருக்கு தரும் மிகப் பெரிய பரிசு அவர் கட்டிய கோயிலை இடிப்பதாகவே இருக்கும்!
பத்திற்கும் மேற்பட்ட சோழர்களின் கல்வெட்டுகளை தாங்கி நிற்கும் இந்த கோயிலை இடிக்க விடாமல் காப்பாற்றுவது ஒவ்வொரு தமிழனின் கடமை. 
 இது கோயில் என்பதற்காக இடிக்கவேண்டாம் என்று சொல்லவில்லை.
1000 ஆண்டுகள் தமிழர் சமுதாயத்தின் பழமை யின் அடையாளம்.
 இப்படிப்பட்ட அடையாளங்கள் தமிழனுக்கு அதிகம் இருப்பதில்லை.
இந்த கோயிலில் ராஜேந்திர சோழன் தன் மனைவிகளுடன் இறைவனை தொழுவதை போன்ற சிற்பம் ஒன்றும் உள்ளது. 
இது போன்று தன் இன வரலாற்றச் சின்னங்களை அந்த இனமே அழிப்பது போன்ற கொடுமை எந்த நாட்டிலும் நடக்காது.கிரேக்க,ரோம,இங்கிலாந்து பொன்ற மேலை நாடுகள் நம்மை விட பழமை குறைந்தாலுமதற்கான சரித்திர அடையாளங்கள்.சின்னங்களை அழியாமல் மட்டுமல்ல,புதுப்பித்து பேணி பாதுகாக்கின்றன.
இந்திய தோல் பொருள் துறையினர் பாதுக்காக்க் வேண்டிய இந்த கோயிலை முறைப்படி அது தனது பொறுப்பில் எற்க வேண்டும்.
 தேசிய நெடுஞ்சாலை எத்தனையோ கரங்களையும்,சாலையோர வாய்க்கால்களையும் பலி கொண்டு வருகிறது.
அந்தப்பட்டியலில் இந்த 1000 ம் ஆண்டு பழைய கோவிலும் சேர்ந்து விடக்கூடாது.
அதை தடுப்பது நமது ஒவ்வொருவரின் கடமையாகும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள சொடுக்கில் உங்களது ஆதரவை பதிவு செய்யுங்கள்:

https://www.change.org/petitions/stop-demolishing-1000-years-temple

அல்லது

தஞ்சாவூர் ஆட்சியர் அவர்களுக்கும், 

 இந்திய தேசிய நெடுஞ்சாலை துறைக்கும் [NHAI ]விற்கும் உங்களின் புகாரை தயவு செய்து பதிவு செய்யுங்கள். இதை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
 உங்களின் ஒவ்வொரு புகாரும் அவர்களின் இந்த பணிக்கு கடுமையான நெருக்கடியை கொடுக்கும்.

திரு K. பாஸ்கரன். IAS

District Collector
Collectorate,
Thanjavur - 613 001

Phone: 04362-230102 (O)
04362-230201 (R)
Fax: 04362-230857 (O)
04362-230627 (R)

E-Mail: collrtnj@nic.in.


1,000-year-old Chola-era temple facing threat of demolition !.

A 1,000-year-old Siva temple at Manambadi village near Kumbakonam is facing the threat of demolition for expansion of a road under the Thanjavur-Vikkiravandi four-way project of the National Highways Authority of India (NHAI).
The State government's Archaeology Department declared it a protected monument 30 years ago but neglected it, leaving the temple’s vimana in a dilapidated condition and enveloped by creepers. The stone structure below the vimana, with intricate sculptures, and the sanctum sanctorum with a Siva lingam are intact.
The temple has an entrance without a gopuram. The prahara has flower plants. A broken compound wall is also around the temple.
The NHAI has now decided to demolish this temple for widening the highway and has already marked the portion to be demolished. While the compound wall on the northern side, the Amman temple and the Chandikeswarar temple will be demolished, the road will come very close to the main structure, which may result in its falling apart once the road is put to use.
The people of the village, historians and archaeologists have opposed the move and appealed to the State government and NHAI to divert the road project to the extreme northern side of the temple, sparing the structure and protecting the monument.
According to Kudavayil Balasubramanian, epigraphist and historian, this temple was constructed by Rajendra Chola (1012-1044 AD). During Chola rule, the village was called ‘Elaichikudi’, and ‘Veeranarayanapuram’. The temple’s name was ‘Sri Kailasam’. 

“This temple possesses more than ten inscriptions of the Chola period. Some of the sculptures on the walls of the main structure are those of Nataraja, which is an outstanding one. Another sculpture depicting Rajendra Chola worshipping the Lord with his wives is seen. Other sculptures depict Ganapathi, Dakshinamurthy, Ligotpava, Vishnu, Brahma, Gangadharamurthy, Durga and Arthanari. Among Chola sculptures, they are the unique ones,” Balasubramanian said.
In a memorandum to the Chief Minister Jayalalithaa and NHAI, Mr. Balasubramanian pleaded for steps to stop the demolition of the temple. “The irony is that the 1,000th year celebration of the coronation of Rajendra Chola, son of Raja Raja Chola, will take place in 2014. The demolition of a temple constructed by him will be shameful for the entire Tamil community,” Mr. Balasubramanian said in his letter.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?