செம்மொழியான[ மலையாளம்] மொழியாம் .
வழக்கு நிலுவையில் இருந்த போதும், சாகித்ய
அகடமியே பலமாக எதிர்த்த போதும், அத்தனையையும் மீறி, மலையாள மொழிக்கு,
செம்மொழி அந்தஸ்தை, மத்திய அரசு தந்துள்ளது. இதன்மூல செம்மொழி
வரிசையில், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளோடு, தற்போதுமலையாளமும்
சேர்ந்துள்ளது.
"ஒரு மொழியை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் எனில்,
குறிப்பிட்ட நிபந்தனைகளையும் விதிமுறைகளையும் உள்ளடக்கிய தாக, அந்த மொழி
இருக்கவேண்டும்' என, "யுனெஸ்கோ' அமைப்பு தெரிவித்துள்ளது.
அதன்படி" ஒரு மொழி, செம்மொழியாக அறிவிக்கப்பட வேண்டும் எனில், அந்த மொழியானது, குறைந்தது, 2,000ஆண்டுகள் பழமையானதாக இருக்க வேண்டும்.
அதன்படி" ஒரு மொழி, செம்மொழியாக அறிவிக்கப்பட வேண்டும் எனில், அந்த மொழியானது, குறைந்தது, 2,000ஆண்டுகள் பழமையானதாக இருக்க வேண்டும்.
அதே கால
அளவுக்கு, பேச்சுவழக்கிலும், அந்த மொழி இருந்திருக்கவேண்டும்.
வேற்று மொழி
சொற்கள் கலந்திருக்காமல், தனக்கே உரிய இலக்கண தொன்மையுடன், அந்த மொழி
உயரிய பழம்பெருமை வாய்ந்ததாக இருக்க வேண்டும"
இந்த நிபந்தனைகளை எல்லாம், பூர்த்தி செய்த மொழிகள் என்பதால், சமஸ்கிருதம், ரோமன், கிரேக்கம், சைனீஷ் போன்ற மொழிகள் செம்மொழி அந்தஸ்தை பெற்றன.
இந்த நிபந்தனைகளை எல்லாம், பூர்த்தி செய்த மொழிகள் என்பதால், சமஸ்கிருதம், ரோமன், கிரேக்கம், சைனீஷ் போன்ற மொழிகள் செம்மொழி அந்தஸ்தை பெற்றன.
இந்த மொழிகள்
அனைத்திற்கும், எந்த வகையிலும், குறைச்சல் இல்லாத பழமையும், பெருமையும்
வாய்ந்த மொழி தமிழ் என்பதால்,அதையும் செம்மொழியாகஅறிவிக்க வேண்டும் என்ற
கோரிக்கை எழுந்தது.
கடந்த, 2004ல், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின், முதல் ஆட்சிக் காலத்தில், இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. தி.மு.க., செல்வாக்குடன் திகழ்ந்த அந்த ஆட்சியில், தமிழை செம்மொழியாக்கும் நடவடிக்கைகள் துவங்கப் பெற்று, அமைச்சரவையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.அப்போது, மத்திய கலாசார துறை அமைச்சராக இருந்த, ஆந்திராவைச் சேர்ந்த ஜெய்பால் ரெட்டி, தெலுங்கையும் செம்மொழியாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஒரு தந்திரம் செய்தார்.
கடந்த, 2004ல், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின், முதல் ஆட்சிக் காலத்தில், இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. தி.மு.க., செல்வாக்குடன் திகழ்ந்த அந்த ஆட்சியில், தமிழை செம்மொழியாக்கும் நடவடிக்கைகள் துவங்கப் பெற்று, அமைச்சரவையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.அப்போது, மத்திய கலாசார துறை அமைச்சராக இருந்த, ஆந்திராவைச் சேர்ந்த ஜெய்பால் ரெட்டி, தெலுங்கையும் செம்மொழியாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஒரு தந்திரம் செய்தார்.
"செம்மொழியாக
அறிவிக்கப்படுவதற்கு, 2,000 ஆண்டுகள் பழமையாக இருக்க வேண்டும் என்ற விதியை,
1,500 ஆண்டுகள், பழமையானதாக இருந்தால் போதும்' என மாற்றினார்.
இந்த திருத்தம் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு வந்த போத யாரும் எதிர்க்கவில்லை. இதன்காரணமாக, தமிழுக்கு நிகரான அந்தஸ்தை பிற மொழிகள் பெற வழி ஏற்பட்டது. தொன்மை குறித்த நிபந்தனை, 2,000 ஆண்டுகளாகவே இருந்திருக்க வேண்டும் என தமிழறிஞர்கள் குறைபட்டனர்.அதனால், செம்மொழிஅந்தஸ்தை, தமிழின் பெருமைக்கும், தொன்மைக்கும் சற்றும் நெருக்கத்தில் வர முடியாத, பிற மொழிகளும் பெற நேர்ந்தது.
தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டதற்காக, பெரிய விழாக்கள் எடுக்கப்பட்டன. ஆனால், செம்மொழியான
தமிழ்மொழி, பத்தோடு பதினொன்றாக ஆன கதை, பெரிதாக பேசப்படவில்லை.தமிழுக்கு பிறகு, ஜெய்பால் ரெட்டி நினைத்தபடியே, தெலுங்கும் செம்மொழி ஆக்கப்பட்டது. பின், கன்னடமும் செம்மொழியானது. தென் மாநில மொழிகளில், மலையாளம் மட்டுமே பாக்கி இருந்தது. இது கேரள மக்களுக்கு, பெரும், "ஈகோ'பிரச்னையாக உருவெடுக்கவே, மலையாள மொழிக்கு, செம்மொழி அந்தஸ்து பெறுவதற்கான நடவடிக்கைகளை,மளமளவென துவக்கினர்.
இந்த திருத்தம் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு வந்த போத யாரும் எதிர்க்கவில்லை. இதன்காரணமாக, தமிழுக்கு நிகரான அந்தஸ்தை பிற மொழிகள் பெற வழி ஏற்பட்டது. தொன்மை குறித்த நிபந்தனை, 2,000 ஆண்டுகளாகவே இருந்திருக்க வேண்டும் என தமிழறிஞர்கள் குறைபட்டனர்.அதனால், செம்மொழிஅந்தஸ்தை, தமிழின் பெருமைக்கும், தொன்மைக்கும் சற்றும் நெருக்கத்தில் வர முடியாத, பிற மொழிகளும் பெற நேர்ந்தது.
தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டதற்காக, பெரிய விழாக்கள் எடுக்கப்பட்டன. ஆனால், செம்மொழியான
தமிழ்மொழி, பத்தோடு பதினொன்றாக ஆன கதை, பெரிதாக பேசப்படவில்லை.தமிழுக்கு பிறகு, ஜெய்பால் ரெட்டி நினைத்தபடியே, தெலுங்கும் செம்மொழி ஆக்கப்பட்டது. பின், கன்னடமும் செம்மொழியானது. தென் மாநில மொழிகளில், மலையாளம் மட்டுமே பாக்கி இருந்தது. இது கேரள மக்களுக்கு, பெரும், "ஈகோ'பிரச்னையாக உருவெடுக்கவே, மலையாள மொழிக்கு, செம்மொழி அந்தஸ்து பெறுவதற்கான நடவடிக்கைகளை,மளமளவென துவக்கினர்.
மத்திய அரசிடம், இந்த கோரிக்கை தீவிரமாக வைக்கப்பட்டது.
அப்போது, நாட்டின் மிகப்பெரிய அமைப்பான, சாகித்ய அகடமியின் மொழிகள் பிரிவு
பரிசீலனைக்கு, இந்த கோரிக்கை எடுத்துச் செல்லப்பட்டது. "மலையாளத்திற்கு,
செம்மொழி அந்தஸ்து பெற தகுதி இல்லை' என்ற, கடுமையான எதிர்ப்பை, சாகித்ய
அகடமி பதிவு செய்தது.
ஆனாலும், கேரள முதல்வர் உம்மன் சாண்டியின் தலைமையில், இதற்கென குழு அமைக்கப்பட்டு, மத்திய அரசில் உள்ள மலையாள செல்வாக்கை, பயன்படுத்தும் பணிகள் ஆரம்பமாகின.
ஆனாலும், கேரள முதல்வர் உம்மன் சாண்டியின் தலைமையில், இதற்கென குழு அமைக்கப்பட்டு, மத்திய அரசில் உள்ள மலையாள செல்வாக்கை, பயன்படுத்தும் பணிகள் ஆரம்பமாகின.
இதற்கிடையில்,
"மலையாள மொழியை செம்மொழி ஆக்கக் கூடாது. அதற்கான தகுதி அந்த மொழிக்கு
இல்லை' என்று வலியுறுத்தி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, அந்த
வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
ஆனால் மலையாள அதிகாரிகள் -அரசியல்வாதிகள் ஆதிக்கம் மத்தியில் அதிகம் இருப்பதால்
பிரதமர்
மன்மோகன் சிங் தலைமையில் கூடிய மத்திய
அமைச்சரவை கூட்டத்தில், மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்குவது என
முடிவெடுக்கப்பட்டது.
செம்மொழிக்கு மலையாளம் வந்தது பற்றி பலர் குறைபட்டுக்கொண்டுள்ளனர்.கருணாநிதிதான் காரணம் என்று கூட குறைப்பட்டுக்கொள்கிறார்கள்.தமிழ் செ ம்மொழியானதால் இதுவரை என்ன நன்மை?ஆரம்ப பள்ளிகளில் கூட ஆங்கிலம் தமிழை விரட்டுகிறது.கல்லூரிகளிலும் தமிழின் இடம் பறி போகிறது.செம்மொழியான தமிழ் மொழியாம் என்ற பாட்டு மட்டுமே மீதம் .
தமிழக அரசே தமிழை துரத்தியடிக்கும் போது அதற்குரிய முக்கியத்துவத்தை அழித்துக் கொண்டிருக்கையில் செம்மொழி தகுதியினால் தமிழுக்கு என்ன பயன்.
தமிழ்த் தாய்க்கு 100 கோடியில் சிலையை வைத்து பார்த்து ரசித்து காலத்தை ஓட்ட வேண்டியதுதான் .செம்மொழியாக மலையாள மொழியானால் என்ன? சிங்கள மொழியானால் என்ன?
தமிழ் நாட்டில் தமிழுக்கே மரியாதை இல்லையே?பள்ளி,கல்லூரிகளில் மற்றும் வேலைக்கான போட்டித் தேர்வுகளில் இருந்து தமிழ்
விலக்கப் பட்டு வருகிறதே.அதையும் தமிழக அரசே முன்னின்று செய்கிறதே .அதை தடுக்க வழியின்றி கருணாநிதியையும் ,கேரள லாபியையும் குறை சொல்லி என்ன பயன்?செம்மொழி தகுதியினால்தான் என்ன பயன்?
பள்ளிகளில் இருந்து தமிழை எடுத்து விட்டு 100 கோடிகளில் சிலை செய்யும் அரசைத்தான் குறை சொல்ல வேண்டும்.!
----------------------------------------------------------------------------------------------------------------------------------
கரும் விதவைகள்'
ரஷ்யாவின் தெற்கு குடியரசான டஜெஸ்தானில் ஒரு பெண்
தற்கொலைக் குண்டுதாரியின் தாக்குதலில் 11 பேர் காயமடைந்ததாக ரஷ்ய
அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தலைநகர் மக்கச்கலாவில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.அண்மைய வருடங்களில் பெரும்பாலும் ''கரும் விதவைகள்'' என்று அழைக்கப்படுகின்ற பெண் தற்கொலைதாரிகளின் தாக்குதல்களை ரஷ்யா எதிர்கொண்டு வருகின்றது.
பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் மனைவிகளாக அல்லது உறவினர்களாக இந்த தற்கொலைதாரிகளில் பெரும்பாலானோர் இருக்கிறார்கள்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------