காங்கிரஸ் ஆட்சியும், ஊழல்களும் :


suran


 சுதந்திரமடைந்த பின்னரும் இந்தியா உயர் மட்ட ஊழல்கள் பலவற்றைக் கொண்ட வர லாற்றை கொண்டுள்ளது.
 பிரதான கட்சிகளாக அதிக காலம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் ஆனாலும், சில காலம் ஆட்சியில் இருந்த இன்றைய பிரதான எதிர் கட்சியான பா.ஜ.க. ஆனாலும் இரண்டுமே ஊழல் வரலாற்றில் முன்னணியில் தான் உள்ளன.
காங்கிரஸ் ஆட்சிகால ஊழல் வரலாறு1960லேயே துவங்கிவிட்டது. அப்போது வெளிவந்த தர்ம தேஜா கடனுதவி ஊழல் ரூ. 22 கோடி அளவிற் கான ஊழல்.
 இன்றைக்கு நடைபெறும் ஊழல் களின் தொகையை ஒப்பிட்டு பார்த்தால் அது மிக மிக சிறிய தொகையாகத் தோன்றும். ஆனால் அது அன்றைக்கு நாடாளுமன்றத் தைப் புரட்டி போட்ட ஒன்று. இந்திரா காலத்தில் நகர்வாலா ஊழல் என்பதும் மிக வும், பரபரப்பாக பேசப்பட்ட ஒன்று.
அது வெறும் 60 லட்சம் அளவிலானது.
 மிகவும் பரபரப்பான எதிர்பார்ப்போடு ஆட்சிக்கு வந்த ராஜீவ் காந்தி ஆட்சி காலத்தில் 1987 ல் மிகவும் பிர பலமடைந்த போபர்ஸ் பீரங்கி ஊழல் இன் றைக்கும் பேசப்படும் பிரபலமான ஒன்று.
அதில் திருமதி சோனியாவின் உறவினர் குத் ரோச்சி சம்பந்தப்பட்டிருந்தும், அவர் கைதா காமல் அரசின் பாதுகாப்போடு நாட்டை விட்டு அனுப்பப்பட்டதும், அவர் குற்ற தொடர்ப்பு அம் பலமான பின்னரும் கூட சி.பி.ஐ. அவரைக் கைது செய்யாமல் சால்ஜாப்பு சொல்லி கடை சியில் அவரைக் கைது செய்யும் வாய்ப்புகளை யெல்லாம் கைவிட்டு, இறுதியில் அதையேக் காரணமாக் கூறி அவரை குற்ற வழக்கி லிருந்து விடுவித்ததும் மறக்க இயலாத உண் மைகள். தற்போது குத்ரோச்சி மரணத்தின் மூலம் அதன் அத்தியாயம் முடிவுக்கு வந்து விட்டது.1992ல் ஹர்ஷத் மேத்தா என்பவர் சம் பந்தப்பட்ட பங்கு பத்திர ஊழல் மிகவும் பிரபல மானது. இதில் சுமார் ரூ.500 கோடிக்கு மேல் ஊழல் நடந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், அதற்கு பின்பலமாக இருந்தவர்கள் அனை வரும் தப்பிவிட்டனர்.
1996 சுக்ராம் தொலை தொடர்பு அமைச்சராக இருந்தபோது செய்த தொலை தொடர்பு ஊழலில் அவர் தண்ட னைக்கு உள்ளானார்.

suran
 2002ல் ரூ. 2000 கோடிக் கான முத்திரை தாள் மோசடி வெளி வந்து மிக பரபரப்பாக பேசப்பட்டு, சில நாட்களில் ஓய்ந்து போனது. பொதுவாக ஒன்றை ஒன்று மிஞ்சி வெளிவரும் பெரிய ஊழல்களால் முந்தைய ஊழல்களின் பரபரப்பு சிறிது நாட்களில் மங்கிப் போவது இந்திய அரசியலில் தொடர் நிகழ்ச்சியாகிவிட்டது.
2010 ல் வெளி வந்த 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் ஒரு பெரிய சூறாவளியையே ஏற்படுத்தி மலைக்க வைத்தது. 1,76,000 கோடி ரூபாய் என்பது யாரா லும் கற்பனை செய்ய முடியாத தொகையாக இருந்தது. அதில் அரசியல்வாதிகள், அதிகாரி கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் இணைந்து கூட்டணி அமைத்து நாட்டின் வளத்தை எப்படி கொள்ளை அடிக்க முடியும் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியது.
உச்சநீதிமன்ற கிடுக்கிப்பிடியால் அமைச்சர் ராஜா பதவி இழந்ததோடு, சுமார் ஒரு ஆண்டு சிறையிலும் கழித்தார். கலைஞரின் மகள் கனிமொழி சில மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். தற் போது கூட அதன் முழு பரிமாணமும் வெளி வராமல் உள்ளன. வழக்கு என்னவாகும் என்பதும் புதிராகவே உள்ளது.
சாக்கோ தலைமையிலான நாடாளுமன்றக் குழு ராஜா வையோ, பிரதமர் மன்மோகன் சிங்கையோ விசாரிக்காமலேயே பிரதமருக்கு சம்பந்த மில்லை என்று கூறி தனது கடமையை முடித்துக் கொண்டுள்ளது. எதிர் கட்சி உறுப் பினர்களின் குரல் மறைக்கப்பட்டே அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதை ஒட்டியே தான் 2010ல் ரூ.7000 கோடி அளவிற்கான காமன்வெல்த் விளை யாட்டு முறைகேடுகள், ஆதர்ஸ் வீட்டு வசதி ஒதுக்கீட்டு ஊழல் போன்றவைகளும் வெளி வந்துள்ளன. சுரேஷ் கல்மாடி எனும் காங் கிரஸ் எம்.பி. சில மாதங்கள் சிறையில் இருந் தார். இவையேல்லாம் புதிய தாராளமயக் கொள்கைகளும், உலகயமாக்கலும் ஊழலை எந்த அளவிற்கு வளர்த்தியிருக்கிறது என்ப தை வெளிப்படுத்துகிறது.
suran
 பிரதமரின் நேரடி பொறுப்பிலிருந்த நிலக்கரி படுகை ஒதுக் கீட்டு ஊழலில் ரூ.1,86,000 கோடி முறைகேடு நடந்துள்ளது அம்பலமாகி தற்போது சி.பி.ஐ. உச்சநீதிமன்றத்திடம் குட்டு வாங்கியுள் ளதைப் பார்த்தோம்.
அதுபோல் தான் பிரதமர் மன்மோகன் சிங்கின் நேரடி பொறுப்பிலுள்ள இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் எஸ் பேன்ட அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழலில் சுமார் ரூ. 200,000 கோடி சம்பந்தப்பட்டுள்ளது. இதுவும் உச்சநீதிமன்றத்தின் ஆய்வில் உள்ளது.
இந்தியாவில் பிரதமராக இருக்கும் மன்மோகன் சிங் தாராளமயக் கொள்கையின் பிதாமகன் மட்டுமல்ல இந்தியாவின் செல்வ வளத்தையெல்லாம் பெருமுதலாளிகளும், கார்ப்பரேட் நிறுவனங்களும் தங்களுக்குள் பங்கிட்டு, கொள்ளை அடிக்க உதவுவதிலும் முதன்மையானவராகவே உள்ளார் என்பது தற்போது வெளிவரும் முறைகேடுகளி லிருந்து புலனாகிறது. இந்த ஊழல்கள் எல்லாம் முதன்மை தணிக்கை அதிகாரியால் தான் வெளிக்கொண்டு வரப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

 காங்கிரஸூக்கு எதிர்க்கட்சியாக இருந் தாலும் பா.ஜ.க.வும் தாராளமயக் கொள்கை களிலோ, ஊழல் நடவடிக்கைளிலோ சற்றும் மாறுபட்டதல்ல என்பதை தொடர்ந்து நிரூ பித்தே வந்துள்ளது.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது தான் அக்கட்சியின் அகில இந்திய தலைவர் பங்காரு லட்சுமண் கைநீட்டி லஞ்சம் பெறும் அரிய காட்சியை டெகல்கா அம்பலப்படுத்தியது. அதற்காக அவர் பதவி யை இழந்தது மட்டுமல்ல, தண்டிக்கப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார்..
ஆளும் பா.ஜ.க ஆட்சியினர் ஆயுத பேரம் நடத்தி முறை கேடாக லஞ்சம் பெற்ற காட்சிகள் அனைவரை யும் ஸ்தம்பிக்க வைத்தது. வித்தியாசமான கட்சி என்னும் முழக்கத்தோடு ஆட்சிக்கு வந்தவர்கள் வெளிப்படுத்திய வித்தியாசமான ஒரே காட்சி அதுமட்டுமே. சவப்பெட்டி ஊழல் சந்தி சிரிக்க வைத்தது. தென் இந்தியாவில் தாமரை மலர்ந்து விட்டது என்று பெருமை யோடு பேசிக் கொண்ட பா.ஜ.க.வினர் எடி யூரப்பா நில ஒதுக்கீடு ஊழலில் சிக்கி பதவியை இழந்தது மட்டுமன்றி கட்சியி லிருந்து தானாக வெளியேறும் அளவிற்கு அந்த கட்சி அம்பலப்பட்டு போய் நின்றது.
பா.ஜ.க. ஆட்சியில் கர்நாடகத்தில் சுரங்க முறைகேடுகளும், அதில் அமைச்சர்களே தலைமை தாங்கியதும் கூட அந்த கட்சியின் நிலையை வெளிப்படுத்தியது. காங்கிரஸூக்கு மாற்றாக பா.ஜ.க. வர இயலாது என்பதை இந்த நிகழ்ச்சிகளெல்லாம் பறை சாற்றின.
suran
 சமீபத்தில் ரயில்வேத் துறை அமைச்சர் பன்சால் தன் பதவியை இழக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். அவரது மருமகன், அவர் வீட்டில் இருந்து கொண்டே ரயில்வே போர்டு உயர் அதிகாரியின் பதவி உயர்விற்காக ரூ. 2 கோடி பேரம்பேசி ரூ. 90 லட்சம் லஞ்சம் பெற்ற போது கையும், களவுமாக பிடி பட்டார். இத்தகைய உறவுகள் மாட்டுவதும், லஞ்சக் குற்றச்சாட்டுக்கு உள்ளாவதும், அதிகார மையங்களாகத் திகழ்வதும் புதிதல்ல. வாஜ் பாய் பிரதமராக இருந்த போது அவரது வளர்ப்பு மகளின் கணவர் ரஞ்சன் பட்டாச்சாரியா அதி கார மையமாகத் திகழ்ந்து பல முறைகேடு களில் ஈடுபடுவதாக ஏராளமான புகார்கள் வந்தன.
அது போல் தான் காங்கிரஸ் திருமதி சோனியாவின் மருமகன் வதேரா மீதும் இத்தகைய புகார்கள் வெளிவந்துள்ளன. இப்படி ஆட்சியாளர்களின் உறவு முறைகள் அதிகாரத்தைப் பயன்படுத்தி தங்களை வளப் படுத்திக் கொள்ளும் ஏராளமான செய்திகள வந்து கொண்டே தான் உள்ளன.
மக்கள் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய ஊழல்களிலிருந்து ஆட்சியாளர் கள் தப்பிக்க பல வித யுக்திகளையும் கை யாள்கிற போது பல நேரங்களில் நீதி மன்றங் களின் தலையீடு காரணமாகவே வழக்குகள் தொடரப்படுவதும், சி.பிஐ கடுமையான உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் செயல்பட வேண் டிய நிலை ஏற்படுவதையும், அதனால் தான் குற்றவாளிகள் பலரும் வழக்குகளில் சிக்கி யுள்ளதையும் நாம் பார்த்துக் கொண்டிருக் கிறோம்.
நீதி துறையிலும் கூட சில கறுப்பு ஆடுகள் இருக்கின்றன என்ற நிலை இருந் தாலும், அவைகளை களையெடுக்க உச்சநீதி மன்றம் உரிய முறையில் தலையீடு செய்வதில் லை என்ற உண்மை இருந்தாலும் கூட உச்ச நீதிமன்றங்களின் தலையீடுகள் ஊழலுக்கு எதிரானப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
suran

சமீபத்தில் இத்தகைய ஊழல் பேர்வழிகள் பதவிகளில் அமர்ந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதையும், அதை ஆளும் கட்சிகள் தங்க ளுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதை யும் தடுக்கும் முகத்தான் இரண்டு முக்கிய தீர்ப்புகளை உச்சநீதிமன்றம் அளித்துள்ளது. வழக்கறிஞர் லல்லி தாமஸ் என்பவர் தொடர்ந்து வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அளித்த தீர்ப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நீதிபதிகள் ஏ.கே. பட்நாயக் மற்றும் எஸ்.ஜே. முகோபாத்யாயா வழங்கிய தீர்ப்பில் 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அளிக்கப்பட்ட உடனேயே மக்கள் பிரிதிநிதி களாக அவர்கள் நீடிக்க முடியாத நிலைமை வரும்.
 மேல் முறையீடு செய்யப்போவதாகக் கூறி எம்.பி.யாகவோ, எம்.எல்.ஏ. வாகவோ பதவியில் நீடிக்க முடியாது என்று கூறியுள் ளனர்.
 அரசியல் சட்டத்தில் உள்ள ஒரு பிரிவையே சட்ட விரோதம் என்றும் அறிவித் துள்ளனர். நாடாளுமன்றத்தில் தற்போது எம்.பிக்களாக உள்ள 543 பேரில் 162 பேர் மீது நீதிமன்றங்களில் கிரிமினல் வழக்குகள் உள்ளன. 1460 எம்.எல்.ஏக்கள் மீது கிரிமினல் வழக்குகள் நடைபெற்று வருகின்றன. அரசிய லில் கிரிமினல்கள் நுழைவதைத் தடுக்க கடு மையான சட்டங்கள் தேவையென்றாலும் கூட இந்த தீர்ப்பு அரசியல் பழிவாங்குதலுக்கு பயன் பட்டு, ஜனநாயக அமைப்புக்கே சீரழிவை ஏற்படுத்தி விடும் ஆபத்து உள்ளது.மேலும் மற்றொரு வழக்கில் உச்ச நீதி மன்றம் ஒருவர் குற்ற வழக்கில் கைது செய்யப் பட்டு நீதிமன்ற காவலிலோ அல்லது காவல் துறையின் பிடியிலோ இருந்தால் கூட அவர் கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்று தீர்ப்பளித்துள்ளது. பொதுவாக இந்த தீர்ப்பு நல்ல நோக்கத்துக்காக அளிக்கப்பட்டிருந் தாலும் கூட இன்றைக்கு சி.பி.ஐ. போன்ற மத் திய புலனாய்வு அமைப்புகளே ஆளும் அர சின் பகடைக்காய்களாக பல நேரங்களிலும் பயன்படுத்தப்பட்டு, எதிர்க்கட்சியினரை வேட்டையாடவும், பொய் வழக்குகளில் சிக்க வைக்கவும் பயன்படுத்தப்படுகின்ற போது இத்தீர்ப்பு அவர்களுக்கு மிகவும் பயன்படும் ஒன்றாக அமைந்து விடும். மாநிலங்களில் காவல்துறையினர். எப்போதுமே ஆளும கட்சி யின் எடுபிடிகளாகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.
 குறிப்பாக ஒரு குறிப்பிட்ட எதிர் கட்சி வேட்பாளர் போட்டியிடாமல் தடுக்க காவல்துறையைப் பயன்படுத்தி ஒரு பொய் வழக்கை சூட்டி, கைது செய்து அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதையே தடுத்து விடலாம். பின்னர் அவர்கள் குற்றவாளிகள் அல்ல என்று விடுதலையானாலும், குற்ற வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டாலும் கூட ஆளும் கட்சியின் நோக்கம் நிறைவேறிவிடும். எனவே தான் மார்க்ஸிஸ்ட் கட்சி உள் ளிட்ட இடதுசாரி கட்சிகளும் இத்தீர்ப்புகள் குறித்த தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தி யுள்ளன. 34 ஆண்டுகாலம் மேற்கு வங்க இடதுசாரி ஆட்சியில் தோழர்கள் ஜோதிபாசு, புத்ததேவ் பட்டாச்சாரியா ஆகியோர் முதல்வர் களாக இருந்தபோதும் அவர்கள் மீதோ அவர் களது அமைச்சரவை சகாக்கள் மீதோ அடா வடி அரசியல் நடத்தும் மம்தாவால் கூட ஊழல் குற்றசாட்டு சுமத்த இயலவில்லை.
suran
 கேரளத் தில் 1957 ல் துவங்கி பல தடவை இடது ஜன நாயக முன்னணி ஆட்சிக்கு வந்து, தோழர்கள் இ.எம்.எஸ்., இ.கே.நாயனார், வி.எஸ்.அச்சு தானந்தன் ஆகியோர் முதல்வர்களாக ச் செயல்பட்ட போதும் எவ்வித ஊழல் குற்றச் சாட்டுக்கும் உள்ளாகவில்லை. திரிபுராவில் அதிசயம் ஆனால் உண்மை என்று தினமணி யால் புகழாரம் சூட்டப்பட்ட தோழர் நிருபன் சக்கரவர்த்தி துவங்கி இன்றை முதல்வர் மாணிக் சர்க்கார் வரை எந்த ஊழல் குற்றச் சாட்டும் இல்லை.
அரசியல் வழக்குகளைத் தவிர்த்து யார் மீதும் கிரிமினல் வழக்குகளும் இல்லை. எனவே மார்க்ஸிஸ்ட் கட்சிக்கு பயப்பட எதுவும் இல்லை. இருந்தாலும் இன் றைய இந்திய அரசியல் சூழ்நிலையில் ஆட்சிக்காக எத்தகைய பாதகமும் செய்ய தயாராக உள்ள கட்சிகளுக்கு இந்த தீர்ப்புகள் ஆயுதமாக மாறி விடக் கூடாதே என்ற கவலை ஜனநாயக சக்திகள் அனைத்துக்கும் உள்ளது.
 ஊழல் பேர்வழிகளைக் கண்காணித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் வகை யில் ஊழல் கண்காணிப்பு ஆணையம், சி.பி.ஐ உள்ளிட்ட அமைப்புகளை சுயேட்சையான தாக மாற்றி, அதிக அதிகாரம் வழங்குவது, ஊழல் வழக்குகள் மற்றும் கிரிமினல் வழக்கு களை விரைந்து நடத்தி தண்டனை வழங்கு வதை உத்தரவாதப்படுத்துவது, முதன்மை தணிக்கை அலுவலர்களுக்கு உரிய பாது காப்பை உத்தரவாதப்படுத்துதல், சுவிஷ் நாட்டு வங்கிகளில் முடங்கி கிடக்கும் ஊழல் பணத்தை வெளிக்கொண்டு வந்து கைப்பற்று வது, தேர்தல் சீர்திருத்தங்களின் மூலம் தேர்த லில் பணத்தின் திருவிளையாட்டை தடுத்து நிறுத்துவதற்கான ஆக்க பூர்வமான நடவடிக் கைகள் போன்றவைகளே ஊழலையும், அரசி யலில் கிரிமினல்களின் ஆதிக்கத்தையும் ஒழிக்க உதவும்.

அனைத்து ஜனநாயக சக்தி களும் இதற்காக மக்கள் மத்தியில் விழிப்புணர் வை ஏற்படுத்தி, அதற்கான வலுவான குரலை யும், இயக்கங்களையும் உருவாக்க குரல் கொடுப்பதுமே இன்றையத் தேவை.


                                                                                                                         --எஸ்.நூர்முகம்மது

 பீ போன் வைரஸ்

மிக வேகமாகப் பரவி, அதிக அழிவினை ஏற்படுத்தக் கூடிய பீ போன் (‘Beebone’ ) வைரஸ் இந்தியாவில் வேகமாகப் பரவி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது ஏறத்தாழ 20 பெயர்களில் கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் தங்குகிறது.
suran
இந்தியாவில் கம்ப்யூட்டர் வைரஸ்களைக் கண்காணிக்கும் Computer Emergency Response TeamIndia (CERTIn) என்ற அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
 இது ட்ரோஜன் வகை வைரஸ் என்றும், பயனாளரிடம் அவருக்கே தெரியாத வகையில், அவரின் அனுமதி பெற்று, மற்ற வைரஸ்களையும் கம்ப்யூட்டரில் பதிக்கும் தன்மை கொண்டதாக இது உலவுகிறது.
டிஜிட்டல் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த வல்லுநர்கள், இந்த வைரஸ் பரவுவதைத் தடுக்க, கூடுதல் பாதுகாப்பு வழிகளை மேற்கொள்ளுமாறு, கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர். குறிப்பாக கம்ப்யூட்டரில் இணைத்து, எடுத்து பயன்படுத்தும் ஸ்டோரேஜ் சாதனங்களைப் பயன்படுத்துவதில் அதிகக் கவனம் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். விண்டோஸ் சிஸ்டத்தில் உள்ள ஆட்டோ ரன் வசதியினை முடக்கி வைப்பது ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாக இருக்கும்.
விண்டோஸ் சிஸ்டம் பைல்கள் அவ்வப்போது மேம்படுத்தப்பட வேண்டும்.
நம்பிக்கைக்கு சந்தேகம் தரும் இணைய தளங்களைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
 மிக வலுவான பாஸ்வேர்ட் மற்றும் யூசர் நேம்களைப் பயன்படுத்த வேண்டும் எனவும் இவர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.
பீ போன் வைரஸுடன் இணைந்து வோப்பஸ் (Vobfus) என்ற வைரஸும் செயல்படுவதாக காஸ்பெர்ஸ்கி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒன்றை ஒன்று அழிக்கவிடாமல் காப்பாற்றும் தன்மை கொண்டுள்ளதால், இரண்டையும் தயாரித்த குழுக்கள் ஒருவருக்கொருவர் ஒரே தீய நோக்கத்துடன் இந்த வைரஸ்களைத் தயாரித்து அனுப்பி உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
suran
பீ போன் வைரஸ் பல பெயர்களில் பரவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டு, அவற்றின் பெயர்களும் தரப்பட்டுள்ளன. அவை
(Kaspersky), W32/Autorun.worm.aaeh!gen (McAfee), W32/VobFusBX (Sophos), Trojan horse ( Symantec), TrojanFBZZ! 41E0B7088DD9 (McAfee), Trojan. Win32.SelfDel.aqhh (Kaspersky), Trojan. Win32.Jorik.Fareit.qsl (Kaspersky), BeeboneFMQ! 039FA2520D97 (McAfee), W32.Changeup! gen40 (Symantec) and Worm.Win32.Vobfus.dxpf (Kaspersky).
கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் அனைவரும் இந்த பெயர்களில் பைல்கள் தென்பட்டால் மிகவும் கவனமாகச் செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
 மேலே, வைரஸின் பெயர்களைக் கண்டறிந்த ஆண்ட்டி வைரஸ் நிறுவனங்களின் பெயர்கள் அடைப்புக் குறிக்குள் தரப்பட்டுள்ளன.
suran

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

உலகில் விற்பனைச் சந்தை குறித்து கருத்துக் கணிப்பு மற்றும் ஆய்வு நடத்தி வரும் இப்ஸாஸ் (IPSOS) என்னும் நிறுவனம், ஸ்மார்ட் போன் வழியே இணையத்தைப் பார்க்கும் இந்தியர்களின் எண்ணிக்கை, இதே வகையில் இயங்கும் அமெரிக்க மக்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகம் என அறிவித்துள்ளது.
ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களில், 36 சதவீதம் பேர், 18 முதல் 29 வயதினராக இருக்கின்றனர்.
 சமூக தளங்கள் இளைஞர்களின் வாழ்வில் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகவும் இந்த அமைப்பு கண்டறிந்துள்ளது.
இந்தியாவில் இண்டர்நெட் பயன்படுத்தும் 11 கோடி பேர்களில், 6 கோடியே 20 லட்சம் பேர், பேஸ்புக் தளத்தினைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர் என்றும் அறிவிக்கபட்டுள்ளது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
suran



suran


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?