தங்கம் தோன்றியது எப்படி?

உலகில் கிடைக்கக் கூடிய தங்கத்தில் பாதியளவு தென் ஆப்பிரிக்காவில் வெட்டி எடுக்கப்படுகிறது.
கனடா, அமெரிக்க, ஆஸ்திரேலியா, கொரியா ஆகிய நாடுகளிலும், தென் அமெரிக்காவிலும், இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் கோலார் என்னுமிடத்திலும் தங்கம் கிடைக்கிறது. இலங்கையிலுள்ள பூக்கொடை என்னுமிடத்தில் களனி ஆற்றுப் பகுதியில் ஆற்று மண் படிவுகளில் தங்கம் அண்மைக் காலமாக பெறப்படுவதாக கூறப்பட்டாலும், மிக குறைந்த அளவே அங்கிருந்து கிடைக்கிறது.
இந்த தங்க உலோகம் புவியில் தோன்றியது எப்படி?
 புவி தோன்றிய பல ஆண்டுகளுக்கு பின்னர், இருபது பில்லியன் டன்களுக்கு மேற்பட்ட எடையுடைய எரிகல் ஒன்று பூமியின் மீது தங்கத்தையும், பிளாட்டினத்தையும் மழை போல பொழிந்துள்ளது. அதிலிருந்து தான் இன்றளவும் கிடைக்கின்ற தங்கம், பிளாட்டினம் உள்ளிட்ட விலைமதிப்பற்ற பல தனிமங்கள் வந்துள்ளன என்ற புவியியலாளர்கள் கூறுகின்றனர். எரிகல் பொழிவால் தங்கம் தோன்றியுள்ளது என பொதுவாக நம்பப்படுகிறது. ஆனால், இது தொடர்பாக நடத்தப்படட புதிய ஆய்வில், காலாவதியான மிக அடர்த்தியான விண்மீன்களின் மோதல்களால் புவியிலுள்ள தங்கம் தோன்றியிருக்கலாம் என்று அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்கம் புவியில் கிடைக்கும் உலோகங்களில் மிக அரியது மட்டுமல்ல, இந்த பேரண்டத்திலும் அரியதே. கரி மற்றும் இரும்புப் பொருட்களை போல, தங்கம் விண்மீன்களிலே எளிதாக கிடைக்கக்கூடிய உலோகமல்ல. எனவே, மிக மோசமான அழிவுகளோடு மாற்றங்களை ஏற்படுத்துகிற அண்டவெளியில் ஏற்படும் மோதல்களால் தான் தங்கம் தோன்றிருக்க முடியும் என்று இந்த புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
இரு நியுட்ரான் விண்மீன்களின் மோதலால் ஏற்படும் சூப்பர் நோவா எனப்படும் விண்மீன் வெடிப்பு அல்லது காலாவதியான விண்மீன் மையங்களின் மோதல் போன்றவற்றால் தங்கம் தோன்றியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இரண்டு நியுட்ரான் விண்மீன்கள் மோதுகின்றபோது, பத்து நிலவுக்கு சமமான தங்கம் உற்பத்தியாகி வெளிப்படுகிறது என்று இந்த ஆய்வை மேற்கொண்டோர் மதிப்பிட்டுள்ளனர். ஜூன் மாதத்தில் அமெரிக்காவின் நாசா ஸ்விப்ட் செயற்கைக்கோள் கண்டறிந்த காமா கதிர்களின் வெடிப்பு என்று அறியப்படும் ஜிஆர்பி 130603பி-யில்  கண்டறிந்தவற்றை அடிப்படையாக வைத்து இந்த ஆய்வை நடத்தியுள்ளனர்.
காமா கதிர்களின் வெடிப்பு இரண்டு நியுட்ரான் விண்மீன்களின் மோதலால் ஏற்படுவதாக நம்பப்படுகிறது. அப்படியானால், புவியிலிருந்து 3.9 பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் இடம்பெறும் இந்த காமா கதிர் வெடிப்பு வினாடியில் பத்துக்கு இரண்டு என்ற அளவிலான சொற்ப நேரமே நீடிக்கிறது. காமா கதிர்கள் மிக விரைவாக மறைந்து விட்டாலும், அந்த வெடிப்பு மெதுவாக மறையும் கனல் ஒளி அகச்சிவப்பு ஒளியால் பரவி நிலைபெற்றை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அந்த ஒளியும், பண்புகளும் உயர்வேக ஜெட் விமானம் வெளியேற்றும் துகள்கள் சுற்றுச்சுழலில் மெதுவாக மறைவது போன்ற உண்மையான கனல் ஒளி மறையும் நிலைமையை வெளிப்படுத்தவில்லை. அந்த கனல் ஒளி நியுட்டரான் விண்மீன்கள் மோதலில் வெளியான நியுட்ரான் செறிந்த பொருளால் உற்பத்தியாகும் வேறொரு கதிரியக்க தனிமம் போன்று தோன்றியது.
நியுட்ரான் விண்மீன் மோதலையும், அதனோடு உருவாகும் காமா கதிர்களின் வெடிப்பையும் இணைத்து விளக்குவதற்கு மறுக்க முடியாத உறுதியான சான்றை தேடிக் கொண்டிருந்த ஆய்வாளர்களுக்கு ஜிஆர்பி 130603பி-லிருந்து கிடைத்த கதிரியக்க கனல் ஒளி மறுக்க முடியாத உறுதியான சான்றாகிவிட்டது. ஏறக்குறைய நூறில் ஒரு பங்கு சூரிய நிறை அளவுக்கான பொருட்கள் காமா கதிர் வெடிப்பில் வெளியாகிறது.
அந்த பொருட்களில் தங்க உலோகமும் இடம்பெறுகிறது. ஒரு காமா கதிர் வெடிப்பில் உருவாகும் தங்கத்தையும், பேரண்ட காலத்தில் ஏற்பட்டுள்ள அதுபோன்ற வெடிப்புக்களையும் கணக்கிட்டு பார்த்தபோது, இவ்வுலகிலுள்ள எல்லா தங்கமும் காமா கதிர்களின் வெடிப்பால் தோன்றியிருக்கலாம் என்று இந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நாம் அனைவரும் விண்மீன்களால் அதாவது நட்சத்திர இராசியால் வழிநடத்தப்படுகிறோம் என்றால், நாம் அணியும் அணிகலன்கள் அனைத்தும், விண்மீன் மோதலால் உருவான பொருட்கள் என்னலாம்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
தேய்மானத்தில் தேசத்தின் ஆலயங்கள்
------------------------------------------------------------------------------------------.

தேசத்தின் ஆலயங்கள் என்று நேரு போற்றிய பொதுத்துறை நிறுவனங் களைத் தனியார் சொத்துகளாக மாற்றுவ தில் மத்திய அரசு பிடிவாதமாக இருக் கிறது. என்எல்சி போன்ற நிறுவனங் களின் பிரச்சனைகளும், போராட்டங் களும் ஊடக வெளிச்சத்திற்கு வந்தன. ஆனால் மக்கள் கவனத்திற்கு வராமல் பல பொதுத்துறை நிறுவனங்களில் தனி யாரின் ஆதிக்கம் மேலோங்கிக் கொண்டி ருக்கிறது.
 கடந்த 1992 ஆண்டு முதல் 2012-13 வரை 1,36,970 கோடிக்கு பங்கு கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மேலும், 16 பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் வசமாகியுள்ளன. மக்களின் வரிப் பணத்தில், பொதுத் துறை நிறுவனங்கள் நாட்டின் பெரிய சொத்துக்களாக உருவாக்கப்பட்டன.
ஆனால் இன்றோ அந்த பொதுச் சொத்து கள் தனியாரின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் ஒரு நிறுவனத் தின் பங்குகள் 5 சதவீதம், 10 சதவீதம் என கூறி பங்குகள் விற்பனை செய்யப்படுகின் றன. பின்னர், நாளடைவில் அந்த நிறுவனமே மொத்தமாக தனியார் பிடியில் சிக்கிவச மாகி விடுகிறது. 1992 ஆண்டு முதல் 2012-13 வரை 1,36,970 கோடிக்கு பங்கு கள் விற்கப்பட்டுள்ளன. மேலும், 16 பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்வச மாகியுள்ளன. இதில், பெரும்பான்மை யான நிறுவனங்கள் பெரிய அளவில் லாபத்தை ஈட்டியவை. மேலும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும்போது, அந்தந்த நிறு வனங்கள் ஈட்டுகிற லாபம் தனியார் வச மாகிறது.
அடுத்து, அந்த நிறுவனங்களால் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு தனி யாரே விலையை தீர்மானிக்கின்றனர். இத னால், பொருட்களின் விலையும், சேவை களுக்கான கட்டணமும் உயர்கிர்கின்றன.இதுவே, பொதுத்துறை நிறுவனங் களாக இருக்கும் போது, மக்களின் நலன் கருதி விலையை கட்டுப்படுத்த முடியும். அல்லது குறைந்தபட்ச விலைக்கு பொருட்கள் அல்லது சேவைகளை வழங்க முடியும்.பங்குச் சந்தை நிலவரம் கண் காணிப்பு, நிறுவனங்களின் செயல்பாடு கள் உள்ளிட்டவற்றை நிர்வகிக்கும் முக் கிய அமைப்பாக இந்திய பங்குச் சந்தை நிறுவனம் (செபி) இருக்கிறது.
இது மத்திய அரசின் கீழ் செயல்படுகிறது. 2010ம் ஆண் டில் செபி நிறுவனம் தனது சட்டத்தில் புதிய மாற்றத்தை செய்தது. அதன்படி தனியார் நிறுவனங்கள் 25 சதவீதத்திற்கு அதிகமாகவும், பொதுத்துறை நிறுவனங் கள் 10 சதவீதம் வரையிலும் பங்குகளை விற்பனை செய்து கொள்ளலாம். செபியின் சட்ட திட்டங்களை மாற்ற மத்திய அரசுக்கு முழு அதிகாரம் இருக்கிறது. ஆனால், பொதுத்துறை பங்குகளை விற்கும் நோக் கத்துடன் செயல்படுவதால், இதில் தலை யிடாமல் மத்திய அரசு மவுனமாக உள்ளது என்றும் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.இது தொடர்பாக அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளன பொதுச் செயலா ளர் ரா. முத்துசுந்தரம், “மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து வரக்கூடிய உபரி நிதியை பொதுத்துறை நிறுவனங்களின் விரிவாக்கத்திற்கும், நவீனப்படுத்துவதற்கும் பயன்படுத்த வேண்டும். ஆனால் அரசு உபரி நிதியை பட்ஜெட் பற்றாக்குறைக்கு பயன்படுத்து கின்றது. கடந்த ஆண்டு பட்ஜெட் பற்றாக் குறை 5.23 லட்சம் கோடி. ஆனால் அரசு தனியார் பெரும் நிறுவனங்களுக்கு வழங்கி யுள்ள வரிச் சலுகை 5.83 லட்சம் கோடி. இப்படி பெரும் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை அளிக்காமல் இருந்தாலே கடந்த பட்ஜெட் உபரி பட்ஜெட்டாக அமைந் திருக்கும். அரசின் தவறான தாரளமய பொருளாதரக் கொள்கையே இதற்கு காரணம்,” என்றார்.“அரசின் பற்றாக்குறையை சரிசெய்ய பல்வேறு வழிமுறைகள் உள்ளன.
கறுப்புப் பணத்தை மீட்டெடுக்கலாம், வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக் கும் 25 லட்சம் கோடி ரூபாயை இந்தியா விற்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் நிறுவனங் களிடமிருந்து வங்கிகளுக்குத் திரும்பி வர வேண்டிய கடன் 1.50 லட்சம் கோடி ரூபாய். அந்த வாராக்கடனை வசூலிக்க அரசியல் உறுதியுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு பொதுத் துறை பங்குகளை தனியாருக்கு விற்பதை நிறுத்த வேண்டும். பொதுத் துறை நிறு வனங்களை விரிவுபடுத்தி, மேம்படுத்தி வேலை வாய்ப்பை உருவாக்குவதின் மூலம் சமூக நீதி காக்கப்படும். மேலும் மக் களின் வாங்கும் சக்தி அதிகரித்து, பொரு ளாதார வளர்ச்சிக்கும் அது உந்து சக்தியாக அமையும்,” என்றும் அவர் கூறினார்.தொழிற்சங்கத் தலைவர்கள் மட்டுமல் லாமல் பல பொருளாதார வல்லுநர்களும் இதையே வலியுறுத்துகிறார்கள். காது கொடுத்துக் கேட்கத்தான் மத்திய அர சுக்கு மனமில்லை.


-----------------------------------------------------------------------------------------------------------------------------------
அதிக சம்பளம் பெறும் சிஇஓ பட்டியலில் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் அவரது மனைவி காவேரி ஆகியோர் முதலிடத்தில் உள்ளனர்.
 கடந்த நிதி ஆண்டில் இவர்களது ஆண்டு சம்பளம் ரூ. 56.25 கோடியாகும். 
இவர்களுக்கு அடுத்தபடியாக ஜின்டால் ஸ்டீல் நிறுவனத்தின் நவீன் ஜின்டால் ரூ. 54.98 கோடியுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். 
suran
முந்தைய நிதி ஆண்டில் (2011-12) ஜின்டால் பெற்ற சம்பளம் ரூ. 73.42 கோடியாகும். கடந்த நான்கு ஆண்டுகளாக முதலிடத்துக்கான போட்டி கலாநிதி மாறன், ஜின்டால் இடையேதான் உள்ளது.
ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லாவின் சம்பளம் ரூ. 49.62 கோடி. ஹீரோ குழுமத்தின் பிரிஜ்மோகன் லால் முன்ஜால் ரூ. 32.72 கோடி, பவன் முன்ஜால் ரூ. 32.80 கோடி மற்றும் சுநீல் முன்ஜால் ரூ. 31.51 கோடியோடு அடுத்தடுத்த இடத்தைப் பிடித்துள்ளனர். ராம்கோ சிமென்ட்ஸ் பிஆர்ஆர் ராஜா, மாருதி சுசுகி முன்னாள் நிர்வாக இயக்குநர் ஷின்ஸோ நகானிஷி, டிவிஸ் லேப் ரவி கே திவி ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். பிஜிஆர் எனர்ஜி பிஜி ரகுபதி, டாடா மோட்டார் முன்னாள் தலைவர் கால் பீட்டர் பார்ஸ்டர் ஆகியோர் இம்முறை பட்டியலில் இடம்பெறவில்லை.
தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, அஸிம் பிரேம்ஜி ஆனந்த் மஹிந்திரா. சுநீல் மித்தல் ஆகியோர் அதிகம் சம்பளம் பெறுவோர் பட்டியலில் முதல் 10 இடங்களில் இடம்பெறவில்லை.
-------------------------------------------------------------------------------------------------------------------------------



------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆப்பிள் நிறுவனம் திடீரென நேற்று தங்கத்திலான மாடல் ஐபோன் வெளியிட்டது.
வெளியிட்ட சில மணி நேரத்தில் நியூயார்க ஷோரூமில் 1400 பேர்  அள்ளிச்சென்றனர்.
5எஸ் மற்றும் மலிவு விலை என்று கூறி 5சி மாடல் மொபைல்களை சமீபத்தில் வெளியிட்ட ஆப்பிள் நிறுவனம், திடீரென தங்கம் மாடல் மொபைல் வெளியிட்டது.
suran
கியூவில் நின்ற பாதி பேருக்கு மொபைல் போன் கிடைக்கவில்லை.

ஆன்லைனில் பதிவு செய்து பெற்றுக்கொள்ளும் படி அறிவுறுத்தப்பட்டனர்.
இந்த மொபைல் விலை 55 ஆயிரத்தை தாண்டும் என தெரிகிறது. இதையும் இந்தியா, சீனாவில் தங்கம் மோகம் அதிகம் என்பதால் அங்கு சந்தையை பிடிக்க சரியான வழி  என்று ஆப்பிள் நிறுவனம் இப்படி திடீர் இன்ப அதிர்ச்சி தந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தங்கம் மாடல் போனில் மேல் தகடு மட்டும் தங்க முலாம் பூசப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஸ்மார்ட் போன் பயன்பாட்டிலும், விற்பனைச் சந்தையிலும், இந்தியா, வேகமாக வளர்ந்து வரும் நாடாக உள்ளது. புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில் நுட்ப வசதிகளுக்கு நம் நாட்டவர் எப்போதும் தீராப் பசியோடுதான் இருப்பார்கள் என்பதனை, வெளிநாட்டு மொபைல் போன் தயாரிப்பாளர்கள் அறிந்து வைத்துள்ளனர். அதனாலேயே, மொபைல் போன் உற்பத்தி மற்றும் விற்பனை குறித்து முடிவெடுக்கையில், இந்தியர்களின் எண்ணங்களுக்கு அதிக மதிப்பு கொடுத்து வருகின்றனர்.
ஆனால், தற்போது ஒரு சின்ன பிரச்னை இதில் எழுந்துள்ளது. 
இந்தியாவில் மொபைல் போன் தயாரிப்பில் ஈடுபடும் இந்திய நிறுவனங்கள், பட்ஜெட் விலையில், மிகவும் குறைவான விலையில், போன்களைத் தயாரித்து வழங்கத் தொடங்கி உள்ளனர். இதனால், பல பன்னாட்டு நிறுவனங்களும், தங்கள் போன்களை குறைந்த விலையிட்டு விற்பனை செய்யத் தொடங்கி உள்ளனர். குறைந்த விலையிட்டு விற்பனை செய்வதற்காகவே, போன்களின் வடிவமப்பையும், இந்தியாவில் விற்பனை செய்வதற்கென மாற்றி வருகின்றனர்.

இத்தகைய சூழ்நிலையில், ஆப்பிள் போன்ற உயர் ரக போன்களைத் தயாரித்து, உயர்ந்த விலையிட்டு விற்பனை செய்திடும் ஆப்பிள் போன்ற நிறுவனங்களின் நிலை என்ன? இதன் போனின் சராசரி குறைந்த விலை ரூ.40,000 ஆக உள்ளது. இது உயர்நிலையில், ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவரின், ஒரு மாத கால ஊதியமாக உள்ளது. இதனாலேயே, ஆப்பிள் நிறுவனம் அண்மையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கும் ஐபோன் 5 எஸ் மற்றும் ஐபோன் 5 சி ஆகியவை உயர் மத்திய வகுப்பினர் மட்டும் செல்வந்தருக்குக் கூட கிடைக்காத நிலையை உருவாக்கியுள்ளன.
சாம்சங் மற்றும் எல்.ஜி. போன்ற நிறுவனங்கள், இந்த வகையில் அதே வசதிகள் கொண்ட போன்களை வடிவமைத்து விற்பனை செய்தாலும், அவை அனைவரும் வாங்கும் நிலையிலேயே விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. ஆனால், ஆப்பிள் நிறுவனம் இந்த மத்திய தர வகுப்பினர் வாங்கும் நிலையில் எந்த போனும் கொண்டிருக்கவில்லை. முன்பு வெளியான பழைய போன்களைத்தான் விலை குறைத்து விற்பனை செய்கிறது.

ஐபோன் 5 சி ,

ஆப்பிள் அண்மையில் அறிமுகப்படுத்திய இரண்டு போன்களில், ஐபோன் 5 சி, பட்ஜெட் விலை போன் எனத் தெரிவிக்கப்பட்டது. 
ஐபோன் 5 எஸ் போனுடன் ஒப்பிடுகையில், இதன் விலை குறைவாக இருக்கலாம். ஆனால், ஐபோன் 5 சி இந்தியாவிற்கான பட்ஜெட் விலை போனாக இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால், வெளிநாடுகளில், மொபைல் சேவை நிறுவன ஒப்பந்தத்தில் இல்லாத ஐபோன் 5 சி போன் ஒன்றின் விலை 549 டாலர் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நியச் செலவாணி மாற்றத்தின் படி பார்த்தால், இதன் இந்திய விலை ரூ. 35 ஆயிரமாக இருக்க வாய்ப்புண்டு. மேலும், ஐபோன் 5 மற்றும் ஐபோன் 5 எஸ் ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில், ஐபோன் 5 சியின் பிளாஸ்டிக் கவர் சற்றாக இதன் தரத்தினைக் குறைக்கிறது. எனவே, மக்கள் இதே வசதிகளைத் தரும், பிற நிறுவனங்களின் குறைந்த விலை போன்களை நாடிச் செல்லும் வாய்ப்புண்டு.
எனவே, ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 5 சி, இந்தியாவில் அதிகம் விற்பனை ஆக வேண்டும் எனில், அதன் விலை ரூ.15,000 முதல் ரூ.25,000க்குள் இருக்க வேண்டும். பழைய மாடல் ஐபோன்4, 8 ஜிபி திறன் கொண்டதாக இருந்தால், ரூ.22,000 எனத் தற்போது விற்பனை செய்யப்படுகிறது. எனவே, புதிய போனின் விலை இந்த அளவைக் காட்டிலும் சற்று அதிகமாக இருப்பதே நல்லது.

பிளாக்பெரி 9720

பிளாக் பெரி நிறுவனம் தன் பிளாக்பெரி 9720 மாடல் மொபைல் போனை இந்தியாவில், விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. 
இது ஒரு பட்ஜெட் விலையிலான ஸ்மார்ட்போன். QWERTY கீ போர்ட் கொண்டு, பிளாக்பெரி ஓ.எஸ்.7.1 சிஸ்டத்தில் இயங்குகிறது. இதன் திரை 2.8 அங்குல அகலத்தில், கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் திரையாக உள்ளது. 
06 MHz திறன் கொண்ட ப்ராசசர் இந்த போனை இயக்குகிறது. இதன் கேமரா 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்டு, எல்.இ.டி. ப்ளாஷ் கொண்டு இயங்குகிறது. இதன் தடிமன் 12 மிமீ. எடை 120 கிராம். பல பார்மட்களில் ஆடியோ மற்றும் வீடியோவினை இயக்கலாம். 3.5 மிமீ ஆடியோ ஜாக், எப்.எம்.ரேடியோ, 512 எம்பி ராம் மெமரி, அதே அளவில் ஸ்டோரேஜ் மெமரி, 32 ஜிபி வரை அதனை அதிகப்படுத்தும் வசதி, வை-பி, புளுடூத், ஜி.பி.எஸ். ஆகியவையும் குறிப்பிடத்தக்க வசதிகளாகும். 
கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் கிடைக்கும் இந்த பிளாக் பெரி மாடல் போனின் அதிக பட்ச விலையாக ரூ. 15,990 எனக் குறிக்கப்பட்டுள்ளது.
Click Here
 ------------------------------------------------------------------------------------------------------------------------------------
                          
                                                   அரசு தொல் [லை ]க்  காட்சி ?
 
suran

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?