இதயமே.....!இதயமே....!!

அவசர உலகில் மோசமான உணவு பழக்க வழக்கம் மற்றும் உடல் உழைப்பின்மை காரணமாக பலருக்கும் ஏற்படும் நோய்களில் ஒன்றாக இதய நோய் உள்ளது.
உடல் உழைப்பின்மையும், நொறுக்குத் தீணி பழக்கமும், உடல் பருமனை ஏற்படுத்துகிறது. இதன் மூலமாக இதய நோய் ஏற்படும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.
இதனை தவிர்க்க மூன்று வழிகளை பின்பற்ற வேண்டும்.
அதாவது, ஆரோக்கியமான உணவு...

ஆலிவ் மற்றும் சுத்தமான எண்ணை வகைகள் , தானியங்கள், காய்கறிகள், கடல் உணவுகள் போன்றவற்றை ஆரோக்கியமாக தயாரித்து சுகாதாரமான முறையில் உண்ண வேண்டும்.
இன்னமும், க்ரிக் நாடுகளில் தங்களது பழமையான உணவுப் பழக்கத்தைக் கையாறும் மக்களுக்கு இதய நோய் ஏற்படுவதில்லை என்று ஆய்வுகள் சான்றளிக்கின்றன.
சிகரெட் பிடிக்காதீர்
இதயநோய்களை ஏற்படுத்தும் காரணிகளில் சிகரெட் பிடிப்பது முக்கியமான விஷயமாக உள்ளது.  இந்த காரணத்தால், அமெரிக்காவில் தற்போது புகைப்போரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.  
ஆனால், மோசமான செய்தி என்னவென்றால், மக்கள் தொகை அதிகமாக இருக்கும் இந்தியா, சீனாவில் புகைப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
புகைப்பதால் நுரையீரல் புற்றுநோய் மட்டுமே ஏற்படும் என்று எண்ணி வந்துள்ளோம். ஆனால், புகைப்பதால் இதய நோய் ஏற்படும் என்ற விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது.
நடையை ஓரம்கட்டாதீர்
பலருக்கும் இப்போது நடப்பதற்கான வாய்ப்பே குறைவாக உள்ளது. எங்கு செல்வதென்றாலும் வாகனத்திலும், ஆட்டோவிலும் செல்கிறோம். முன்பெல்லாம் வசதி இல்லாததால் அதிகம் நடந்தார்கள். அதனால் அவர்கள் ஆரோக்கியமாகவும் வாழ்ந்தார்கள்.
 இதய நோய் ஏற்பட்டு மருத்துவமனைக்கு நடையாய் நடக்க வேண்டாம் என்று விரும்பினால், இப்போதே ஆரோக்கியமாக நடைபயணம் மேற்கொள்வோம்.
"I hate violence, yes I do. It's kind of a dilemma, huh?" - Jackie
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
‘மிஸ்டர் ஜனாதிபதி,
நான் காஸ்ட்ரோ!’



9 மாதங்கள் கழித்து அந்த மாமனிதனை ஹவானா நகரத்து மக்கள் நேரில்பார்த்து உரையாடி மகிழும் வாய்ப்பினைப் பெற்றார்கள்.தனது இல்லத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள ஒரு கலை அருங்காட்சியகத்தை திறந்துவைப்பதற்காக கியூபப் புரட்சியின் மகத்தான தலைவர் பிடல் காஸ்ட்ரோ வருகை தந்தார். காஸ்ட்ரோவின் வீட்டிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில், “கெட்சோ ஸ்டூடியோ ரோமெரிலோ” என்ற, லாப நோக்கற்ற கலை அருங்காட்சியகத்தை ஹவானாவைச் சேர்ந்த நவீன ஓவியக் கலைஞர்கள் வில்பிரடோ மற்றும் லெய்வா ஆகியோர் உருவாக்கியிருக்கிறார்கள். கலை ஆர்வலர்களின் வேண்டுகோளை ஏற்று இந்நிகழ்ச்சிக்கு வருவதற்கு ஒப்புக் கொண்ட பிடல் காஸ்ட்ரோ,
கடந்த புதன்கிழமை மாலை வேளையில் கைத்தடியை ஊன்றியவாறு தனது உதவியாளர்களின் துணையோடு வீட்டிலிருந்து வெளியே வந்தார்.
நிகழ்விடத்திற்கு வந்த அவர், அங்கு கூடியிருந்த மக்களிடையே ஒரு தந்தையாக நலம்விசாரித்து அனைவரையும் வாழ்த்தினார். அருங்காட்சியகத்தை திறந்துவைத்த பின்னர், உள்ளே சென்று நூலகத்தை பார்வையிட்டு, அங்கு சற்று நேரம் அமர்ந்து அருங்காட்சியகம் பற்றிவிபரங்களை கேட்டறிந்தார்.
அப்பகுதி முழுவதும் குடியிருக்கும் அனைத்து மக்களும் குழந்தைகளோடு வந்து பிடல் காஸ்ட்ரோவை சந்தித்துவாழ்த்துக்களை பெற்றுக் கொண்டனர்.
இந்தக் காட்சிகளை கியூபக் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான கிராண்மா வெளியிட்டிருந்தது.இந்த நிகழ்ச்சியின் போது எதேச்சையாக அமைந்த ஒரு மாபெரும் வரலாற்று நிகழ்வும் உண்டு. கியூபத் தீவில்அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவு பெற்ற சர்வாதிகாரி பாடிஸ்டா ஆட்சியை தூக்கியெறிந்த அந்த மகத்தான கியூபப் புரட்சி பிடல் காஸ்ட்ரோ தலைமையில் நடந்து 55 ஆண்டுகள் ஆகின்றன.
 ஜனவரி மாதம் முழுவதும் அந்த கொண்டாட்டங்கள் கியூபாவில் நடக்கின்றன.55 ஆண்டுகளுக்கு முன்பு ஹவானா மாநகரின் வீதிகளில் புரட்சிப் படையோடு வெற்றிப் பேரணியாக வலம் வந்த அந்த மகத்தான தலைவர், இப்போது தனது தள்ளாத வயதிலும் தனது நேசத்திற்குரிய மக்களைச் சந்திப்பதற்கு கிடைத்த ஒரு சிறிய வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்டார்.
உடல் நிலை காரணமாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத நிலையிலும், 87 வயது ஆகிற பிடல் காஸ்ட்ரோ இப்போதும் தன்னைச் சந்திக்க வருகிற தலைவர்களை, கலைஞர்களை, எழுத்தாளர்களை, இளைஞர்களை சந்திக்கிறார். சிறிது நேரம் உரையாடுகிறார். Antony Michael's photo.
சமீபத்தில் அவரை வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ சந்தித்து பேசினார். எனினும் இந்த சந்திப்புகள் வீட்டிலேயே நடக்கின்றன.இதற்கு முன்பு கடைசியாக கடந்தஆண்டு ஏப்ரல் மாதம் ஹவானாவில் தனது இல்லத்திற்கு அருகில் கட்டப்பட்ட ஒரு பள்ளியை காஸ்ட்ரோ திறந்துவைத்தார்.வெளி நிகழ்வுகளில் பங்கேற்க உடல்நிலை அனுமதிக்கவில்லை என்ற போதிலும், தன்னால் இயன்ற நேரத்தில் அவ்வப்போது எழுத்துப் பணியை காஸ்ட்ரோ தொடர்கிறார்.
சமீபத்தில் தென்னாப்பிரிக்காவின் மகத்தான தலைவர் நெல்சன் மண்டேலா மறைவுக்குஇரங்கலும், அஞ்சலியும் தெரிவித்துநீண்ட குறிப்பு ஒன்றை பிடல் காஸ்ட்ரோ எழுதியிருந்தார்.
மண்டேலாவை இன்று கொண்டாடுகிற மேற்கத்திய ஊடகங்கள், தனது வாழ்நாள்முழுவதும் மண்டேலா வெள்ளையர்களின் நிறவெறி ஆதிக்கத்திற்கு எதிராக போராடினார் என்பதையும், நிறவெறி சர்வாதிகாரம் இந்த உலகில் ஆட்சி செலுத்தியது என்பதையும் திட்டமிட்டு மறைப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
மண்டேலாவின் நினைவேந்தல் நிகழ்ச்சியை தென்னாப்பிரிக்க அரசுஜோகன்னஸ்பர்க் நகரில் நடத்திய போது, அதில் பங்கேற்று உரையாற்றிய உலகின் முக்கிய தலைவர்களில் ஒருவராக சோசலிச கியூபாவின் ஜனாதிபதியும், பிடல் காஸ்ட்ரோவின் சகோதரருமான ரால்காஸ்ட்ரோவும் மேடையில் அமர்ந்திருந்தார்.
 அப்போது அங்குவந்த அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா, ரால் காஸ்ட்ரோவை நேருக்கு நேர் பார்த்தவுடன் அவருடன் கைகுலுக்கினார். உலக ஊடகங்கள் எல்லாம் அதைப் படம்பிடித்துள்ளன. உடனடியாக அறிக்கை வெளியிட்ட அமெரிக்காவின் வெள்ளை மாளிகை, ஒபாமாகைகுலுக்கிவிட்டார் என்பதால் கியூபாவுடன் நட்புறவு என்று அர்த்தமல்ல என்று தனது பகைமையைக் கொட்டியது.ஆனால், கம்யூனிஸ்ட்டுகள் எத்தனை நாகரிகம் படைத்தவர்கள் என்பதை பிடல் காஸ்ட்ரோ உணர்த்தினார்.
அந்த சமயத்தில் என்ன நடந்தது என்பதை சில நாட்கள் கழித்து தனது கட்டுரையின் வாயிலாக பிடல் காஸ்ட்ரோ எழுதினார்.“தோழர் ரால் காஸ்ட்ரோ அந்தமேடையில் ஒபாமாவுக்கு கைகொடு த்து வாழ்த்து பரிமாறிக் கொண்டதை நான் பாராட்டுகிறேன். இது மிகச்சிறந்த நாகரிகத்தை வெளிப்படுத்துகிற மாண்பு.
நாம் எப்போதுமே நட்புறவையும், நாகரிக மாண்புகளையும் மதிக்கிறோம் என்பதை அமெரிக்க ஜனாதிபதிக்கு தெரிவித்த அந்த பாங்கு நல்லது” என்று எழுதினார் பிடல் காஸ்ட்ரோ. அந்த நிகழ்வின் போது ஒபாமாவுக்கு கைகொடுத்துக் கொண்டே ரால் காஸ்ட்ரோ கூறிய வார்த்தைகளையும் பிடல்காஸ்ட்ரோ குறிப்பிட்டுள்ளார்.
அந்த வார்த்தைகள் இவைதான்: ‘மிஸ்டர் ஜனாதிபதி, நான் காஸ்ட்ரோ.’
 
நன்றி:தீக்கதிர்.
Smile for the birdie! 

Parakeet peers into speed camera for a quick selfie over one of the UK's busiest motorways.

http://dailym.ai/1aftfle
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இ - பிசினஸ்
 இருக்கும் வாய்ப்புகள்
இணைய வழி வியாபாரம் (E Business) இன்று பிரபலமாகி வருகிறது. இன்று கர்ச்சீப்பிலிருந்து கார் வரை இணையத்திலேயே வாங்கிவிட முடியும். இந்த இ பிசினஸில் பொருட்கள் விற்பனை, சேவை என்று பல உண்டு. நாம் அறிந்த, BPO, LPO, KPO இவை எல்லாமே சேவை வகையில் அடங்கும், ஈ பிசினஸ்தான். இ  பிசினஸில் என்னென்ன சாத்தியம்? அதற்கு என்னென்ன செய்ய வேண்டும்? அது பற்றி சிறிய அறிமுகம்...

ஆன...
்லைன் பிசினஸ் நிறுவனம் துவங்க:

நீங்கள் செய்யப்போவது, சர்வீசா, பொருள் விற்பனையா, தரகு வேலையா என்பதை நிர்ணயித்துக் கொண்டு, அதற்கொப்ப கம்பெனிகள் சட்டப்படி பதிவு செய்துகொள்ள வேண்டும்.

அதை MSME (Micro,Small மற்றும் Medium Enterprises) உடன் பதிந்து கொள்ளலாம். வரி முதல், தொழிலாளர் நலச் சட்டங்கள் வரை இதற்கு இந்தியச் சட்டங்களே செல்லுபடியாகும். தொழில் முழுதும் ஆன்லைனிலேயே நடப்பதால், நெட்வொர்க் செக்யூரிட்டிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அவ்வப்போது நெட்வொர்க் ஆடிட்டிங் செய்தேயாக வேண்டும்.

டிஜிட்டல் சிக்னேச்சர்.

நமக்கு வரும் மெயில்கள் அழிக்கப்பட, மாற்றப்பட வாய்ப்பு உள்ளதால் டிஜிட்டல் சிக்னேச்சர் பயன்படுத்தப்படுகிறது. இந்தச் சேவையை நமக்குச் செய்பவர் சர்டிஃபையிங் அதாரிட்டி ஆவார். இவர் ஒரு மெயிலின் நம்பகத்தன்மையை சில பல டெக்னாலஜி மூலம் (keys) அறுதியிட்டு ஒப்பமிட்டுத் தருவார். இந்த நபர் அரசிடம் இதற்கான சிறப்பு அனுமதி பெற்றவராக இருப்பார். இந்த விற்பன்னர்களிடம் நாம் பதிந்து வைத்துக்கொண்டால், நம் குறிப்பிடும் மெயில்களுக்கு இவர்கள்தான் பொறுப்பு, பாதுகாப்பு.

பதிவிற்கு ஒரு வருட காலத்திற்கு தோராயமாக 2,250 ரூபாய் வரை ஆகிறது. மெயில்கள் தவிர வெவ்வேறு எலெக்ட்ரானிக் தகவல் தொடர்புப் பாதுகாப்புகளும் செய்யப்படுகின்றன. நம் தேவைக்கேற்ப பதிந்து கொள்ளலாம். இந்தச் சேவையில், TCS சேவை குறிப்பிடத்தகுந்ததாக இருக்கிறது.

இந்த சர்டிஃபையிங் அதாரிட்டிக்கான கோர்ஸ் மிகத் தேவை உள்ள ஒன்றாக இருப்பதால், இந்தத் துறையில் விருப்பமிருப்பவர்கள் முயற்சிக்கலாம்.

ஃப்ரீலான்சர்

ஆன்லைனிலேயே செய்து முடிக்கக்கூடிய சில வேலைகளை பகுதி நேரமாகவோ, முழு நேரமாகவோ எடுத்துச் செய்ய ஆட்களின் தேவை உலகளவில் இருக்கிறது. பல வளர்ந்த நாடுகளில், சின்னச் சின்ன வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. இதைக் கணக்கில்கொண்டு, வேலை தருபவர்களுக்கும், வேலை செய்யத் தயாராக இருப்பவர்களுக்கும் பாலமாக சில இணையதளங்கள் செயல்படுகின்றன.

அவற்றில், ஒரு அக்கவுண்ட் உங்களுக்கு இருந்தால் போதும். உங்கள் தகுதிகளை, உதாரணமாக, வேகமாக டைப் செய்ய இயலும், புகைப்படம் எடுக்கத் தெரியும், இசை கம்போஸ் செய்வேன் என உங்கள் திறமைகளைப் பட்டியலிடுங்கள் (அவர்களும் உங்கள் உதவிக்கு ஒரு பட்டியல் வைத்திருப்பார்கள்.)
அதே வேலை செய்து தர ஆள் தேடும் நிறுவனங்களுடன் அவர்களுக்குள்ள தொடர்பால் உங்களுக்கு வாய்ப்பு அளிப்பார்கள். இன்ன வேலைக்கு இன்ன விலை என நீங்களே நிர்ணயம் செய்யலாம். பணம் வேலை முடிந்ததும் சர்வீஸ் சார்ஜ் போக உங்கள் அக்கவுண்ட்டுக்கு வந்து சேரும்.

ஃபிரீலான்ஸ் செய்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை:

சிலர் சின்னக் குழந்தைகளுக்கான கதை எழுதித் தருமாறு அல்லது ஒரு தலைப்பு கொடுத்து அதில் கட்டுரைகள் எழுதித்தரச் சொல்லுவார்கள்.

ஆனால், நீங்கள் அறிந்திருக்க வேண்டியது அந்தக் கட்டுரைகளின் முழு உரிமையும் அவர்களுடையதே. அதாவது, சட்ட உரிமையுடன், மாரல் ரைட்ஸ் எனச் சொல்லப்படுகின்ற அந்தக் கதையின் எழுத்தாளராகவும் தன் பெயரையே போட்டுக் கொள்வார்கள். இதை முதலிலேயே அக்ரிமெண்ட்டில் சொல்லி விடுவார்கள்தான். உங்கள் அறிவால் விளைந்த அந்தச் சொத்து கை மாறுவது குறித்து நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.


அது ஓவியமாக இருப்பின், உங்கள் ஓவியத்தை தன் ப்ராண்ட் பெயரின்கீழ் வெளியிடுவார்கள்.

இந்தத் தளங்களில் இணையக் கட்டணம் ஏதும் இல்லை. ஆனால் நீங்கள் புராஜக்ட் செய்ய ஆரம்பித்ததும், ஒவ்வொரு புராஜக்ட் முடிவிலும், உங்களுக்கு புராஜக்ட் கொடுத்தவர்கள் அதற்கான பணத்தை அந்த இணையதளத்தில் கட்டிவிடுவார்கள். அந்த இணையதளம் உங்களுடைய அக்கவுண்ட்டில் போட்டுவரும். பணம் குறிப்பிட்ட தொகை சேர்ந்ததும், அதன் பின் சேரும் தொகையை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம் (அதாவது உங்கள் அக்கவுண்ட்டுக்கு மாறும் முன், அதில் முதலில் அக்ரிமெண்ட்டில் குறிப்பிட்ட அளவு தொகை சேவைக் கட்டணமாகக் கழிக்கப்படும்).

இங்கே வேலை கொடுப்பவர், செய்து தருபவர் இருவருக்கும் ஒரு மீடியமாக இந்தத் தளங்கள் செயல்பட்டாலும், இருவரையும் நேரடியாக சந்திக்க விடாமல் முடிந்தவரை பார்த்துக்கொள்ளும்.

ஒருவர் தன் இ மெயில் ஐடியை, அந்தத் தளத்தில் போஸ்ட் செய்து இந்த முகவரிக்கு உங்கள் புராஜக்ட்களை நேரடியாக அனுப்பவும், செய்துதருகிறேன் எனச் சொல்லிவிட்டால் இந்த ஃப்ரீலான்சர் நிறுவனங்களுக்கு நட்டம்தானே..? அதனால் எங்கெல்லாம் @ எனும் குறியீடு வருகிறதோ அங்கெல்லாம் அந்த வரி முடக்கப்படும் (@ எனும் குறி இ மெயில் முகவரிக்கு பயனாகும் என்பதால்).

இதற்கு மாற்றாக @ வரும் இடங்களில் at எனக் குறிப்பிட்டு, தன் முகவரியைச் சொல்வதால் அந்த மாதிரி சொல்லும் நபர்களின் கணக்கு மொத்தமாக முடக்கப்படும். வழக்கிடவும் வாய்ப்புண்டு.
 
நன்றி:புதிய தலை முறை 

-----------------------------------------------------------------------------------------------------
.சுவாமி விவேகானந்தர் அவர்களின் பிறந்த தினம் இன்று.

ஒரே மதம்தான் இருக்க முடியும், ஒரே தீர்க்கதரிசிதான் இருக்க முடியும், ஒரே அவதாரம்தான் இருக்க முடியும் என்று மனிதன் நினைக்கிறான். ஆனால் அது உண்மையல்ல. இந்த இறைத் தூதர்களின் வரலாறுகளை நாம் படிக்கும்போது, ஒரு விஷயம் தெரிய வருகிறது: அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு பங்கை, அதுவும் ஒரே பங்கை வகிக்கத்தான் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு தனித்த சுவரத்தில் அல்ல, சுவரங்களின் சங்கமத்தில்தான்இசையின் இயைபு உள்ளது.

--சுவாமி விவேகானந்தர்...

~அலெக்ஸ் மகா தேவ்
இன்று இளைய சமுதாயத்தை தனது சுய முன்னேற்ற .நம்பிக்கை வார்த்தைகளால் செயல்பட வைக்க முயன்ற விவேகானந்தரின் பிறந்த நாள்.
ஒரு மதத்தை சார்ந்திருந்தாலும் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக செயல்பட்ட சமதர்மவாதி.
dinakaran daily newspaper's photo.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆற்றங்கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழும் அன்றே - என்று அவ்வையார் கூறியது போல எதுவும் நிலை இல்லாதது இந்த வாழ்வும் கூட ஆகையால் போலி வழக்கை முறையை விட்டு ஒரு வீட்டினுள் தென்னை தோரணங்கள் போல உறவுகளும் அலங்காரங்களும் அன்பும் போல சொந்தங்களும் பண்டிகை காலங்களில் இருந்தாலே வீடு இனிமையாகும்
பொங்கல் வந்துடுச்சு.
 
Photography's photo.
மரங்களை எல்லாம் போட்டுத் தள்ளினால் நாங்கள் எங்கே போக?
இதெல்லாம் வாங்கித்தராம .இத்தனை நாள் டிவி முன்னாலேயே உட்கார வச்சுட்டீங்களே .
 
சென்னையில் முதல்வர் தினமும் செல்லும் வழியில் அனுமதி இன்றி நடைபாதையை மறித்து வைக்கப்பட்டிருந்த பேனர்களை நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் அகற்றாததை கண்டித்து பேனர்களை கிழித்து எறியும் டிராபிக் ராமசாமி. முடிந்தால் கைது செய்து வழக்கு போட்டு பார் என சவால்.

உங்க தைரியத்தில் 10% எங்களுக்கு இருந்திருந்தால் நாடு என்றோ உருப்பட்டு இருந்திருக்குமே !!
 
அஞ்சா  நெஞ்சன் யாருன்னு தெரியுதா?

அதையாவது ஒழங்கா படம் எடுத்து தொலையும்.
 
மேலே இருந்து பார்த்தாதான் உலகத்துலே எவ்வளவு அநியாயங்கள் நடக்குதுன்னு தெரியுது.அட கர்மமே.
 
 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?