முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

"தந்தி" யின் வியாபார புத்தி ?

"முசுலீம்கள் "
வாக்கு யாருக்கு ?
முசுலீம்களுக்கு நான்தான் சலுகைகள் செய்தேன் என்று ஜெ "யும் ,கருணாநிதியும் போட்டி போட்டு பரப்புரை செய்கின்றனர்.உண்மையில் யாரால் முசுலீகளுக்கு சலுகைகள் கிடைத்தது?

 முன்பெல்லாம் இஸ்லாமியர்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் கிடையாது. இஸ்லாமியர்களில் 'லெப்பை' மட்டும்தான் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உண்டு. அதற்காகவே இஸ்லாமியர்களில் 95%பேர் தங்களை 'லெப்பை' என்பதாக சாதிசான்றிதழ் வாங்கிவிடுவார்கள்....

(லெப்பை என்பது சாதி அல்ல. அது ஒரு தொழில். பள்ளிவாசலில் தொழுகை நடத்தும் பணிக்கு நியமிக்கப்படுபவர் லெப்பை என்றும், அவருக்கு உதவியாளர் போல் தொழுகைக்கு அழைப்பு விடுக்கும...் "பாங்கு" சொல்லுதல் போன்ற பணியை செய்பவர் மோதினார் என்றும் அழைக்கப்படுவார்கள். அது சாதி அல்ல. அதற்கான பயிற்சியை முடித்த யார் வேண்டுமானாலும் அந்தப் பணிக்கு செல்லலாம். அதனால் அது சாதிதானே என்று ஆரம்பித்து அதற்கு விளக்கம் சொல்லும்படி இந்த பதிவின் நோக்கத்தை திசைதிருப்பிவிடும் விதமாக தயவு செய்து யாரும் விவாதம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்)
suran
கலைஞர் ஆட்சியில்தான் முஸ்லீம்கள் அனைவரையும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தார். அதுமட்டுமல்ல திமுக பங்குபெற்ற தேசிய முன்னணி அரசின் பிரதமர் வி.பி.சிங் அமல் செய்த மண்டல் கமிஷன் அறிக்கையால்தான் அது இந்தியாமுழுவதும் உள்ள முஸ்லீம்களுக்கும் பயனுள்ளதாக இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் மீலாது தினத்திற்கு அரசு விடுமுறை அளித்தது கலைஞர் தலமையிலான திமுக ஆட்சியே. பிறந்த நாள் கொண்டாட்டம் இஸ்லாத்திற்கு ஏற்புடையதா இல்லையா என்பது ஒருபுறம் இருந்தாலும், முகமதுநபியை ஒரு ஆன்மீகத் தலைவராக மட்டும் பார்க்காமல், ஒரு ஆட்சியாளராக, மனிதகுலத்திற்கு அவர் ஆற்றிய சேவை இதை நினைவு கூறும் விதமாக விடுமுறை விடப்பட்டது. சமீபத்தில்தான் காங்கிரஸ் ஆட்சியில்தான் அது இந்தியா முழுவதும் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டது.

2001ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா மீலாதுதின விடுமுறையை ரத்து செய்தார். மீண்டும் 2006ல் கலைஞர் ஆட்சியில்தான் விடுமுறை கொண்டுவரப்பட்டது.

இதையெல்லாம் இஸ்லாமிய தோழர்கள் உணர்ந்து வரும் நாடாளுமன்றத்தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.
ஆனால் இதையெல்லாம் மறந்து விட்டு தவ்கீத் ,பீஜே போன்றவர்கள் அரசியல் வியாபாரிகள் ஆகிவிட்டதுதான் கொடுமை.

நன்றி: முகமது முகைதீன் 
suran
--------------------------------------------------------------------------------------------------------------------------
மலேசிய விமானக்கடத்தலில் ஆரம்பம் முதல் நடந்தது என்ன? 
 விமானம் காணாமல் போனது இன்னமும் மர்மமாகவே இருக்கிறது.
இதோ சில தகவல்கள்.
மலேசிய விமானம் மார்ச் 8ஆம் தேதி காணாமல் போனது. ஆனால் மார்ச் 7ஆம் தேதி அந்த விமானத்தின் முக்கிய பைலட் சிறையில் இருக்கும் மலேசிய எதிர்க்கட்சி தலைவரை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். எனவே விமானக்கடத்தலுக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கும் சம்மந்தம் இருக்குமா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

1. மார்ச் 7ஆம் தேதி விமானத்தின் முக்கிய பைலட் கோலாலம்பூரில் இருந்து 15 மைல்கள் தூரமுள்ள Putrajaya என்ற நகரில் உள்ள சிறையில் எதிர்க்கட்சி தலைவர் Anwar Ibrahim என்பவரை சந்தித்து பேசியுள்ளார்.

2. மார்ச் 8ஆம் தேதி மிகச்சரியாக 12.41க்கு MH370 என்ற விமானத்தை பைலட்  Zaharie Ahmad Shah விமானத்தை டேக் ஆப் செய்துள்ளார்.

3. விமானம் கிளம்பி சரியாக 45 நிமிடங்கள் கழித்து அதாவது அதிகாலை 1.30மணிக்கு விமானம் விமானக்கட்டுப்பாட்டு அறையின் தொடர்பில் இருந்து விலகியுள்ளது. அப்போது அந்த விமானம் 35000 அடி உயரத்தில் தாய்லாந்து தீபகற்பம் அருகே பறந்துள்ளது.
4. விமானத்தின் உள்ள பைலட் கட்டுப்பாட்டு அறைக்கு செல்லும் தகவல் தொடர்பை துண்டித்துள்ளார். விமானத்தின் எந்த்வொரு தகவலும் கட்டுப்பாட்டு அறைக்கு செல்லும் வழிமுறைகளை திட்டமிட்டு தடுத்துள்ளார்.

5. சில நிமிடங்களில் விமானம் மேற்கு நோக்கி திரும்பியதாக ராணுவ ரேடார் தகவல் அளித்துள்ளது.

6. காலை 7.24 மணிக்கு விமானம் காணாமல் போனதாகவும், வியட்நாம் அருகே விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்றும் மலேசிய விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

7. ஆனால் உண்மையில் விமானம் மேற்கு நோக்கி பறந்து இந்திய பெருங்கடல் பகுதியில் சென்று அதன்பின்பு பாகிஸ்தானை நோக்கி சென்றுள்ளது என்பதை அமெரிக்க உளவுத்துறையின் ரேடார் தகவல் தெரிவிகின்றது.

தற்போது விமானத்தை கடத்திய பைலட்டிடம் இருந்து என்ன கோரிக்கை வரும் என உலகமே எதிர்பார்த்து காத்திருக்கின்றது.
suran
---------------------------------------------------------------------------------
தந்தி டி .வியின் வியாபார புத்தி

அல்லது  
இதுதாண்டா நடு நிலை ?


மரியாதைக்குரிய தந்தி டி.வி.மேலாண்மை இயக்குநர் அவர்களுக்கு,
தினத்தந்தி குழுமத்திலிருந்து ஒரு தொலைக்காட்சி வருகிறது என்ற செய்தி அறிந்தவுடன் மகிழ்ந்தவர்களில் நானும் ஒருவன்.காரணம் உயர்ஜாதி ஆதிக்கவாதிகளின் ஒருதலைப்பட்சமான செய்தி ஊடகங்களில் இருந்து மாறுபட்டு தந்தி டி.வி பணியாற்றும் எனக்கருதினோம்.
A
ஆனால்,நிலைமை என்னவோ மிகவும் மோசமாக ஆகிவிட்டது.
நான் தி.மு.க.உறுப்பினர் இல்லை;
ஆனால்,ஆதரவாளன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
விவாத நிகழ்ச்சிகளை நடத்தும் ரங்கராஜ் (பாண்டே)(பாண்டே என்பது ஜாதிப்பெயர்-அதனை எப்படி தந்தி டி.வி.யில் அனுமதிக்கிறீர்கள் என்று தெரியவில்லை-ஆதித்தனார் எங்கேயாவது தனது பெயருக்கு பின்னால் தனது ஜாதிப்பெயரைப் போட்டுக்கொண்டதுண்டா?சிவந்தி ஆதித்தனார்தான் அப்படிச் செய்ததுண்டா?)மற்றும் ஹரிஹரன் என்ற இருவரும் தி.மு.க.வை நோக்கியே எல்லாக் குற்றச்சாட்டுகளையும் வைக்கிறார்களே தவிர,அதே கேள்விகளை பா.ஜ.க.,அ.தி.மு.க.வை நோக்கி எழுப்புவதில்லை.இதுதான் நடுநிலையா?வெட்டவெளிச்சமாக இவர்களது ஜாதிப் பற்று தெரியுமளவிற்கு கேள்விகள் அமைந்தபோதும்,தந்தி டி.வி.தமிழர்களின் டி.வி.என்கிற காரணத்தாலும்,ஜனநாயகத்தை மதிக்கும் மாண்பு உள்ள காரணத்தாலும் தி.மு.க.வினர் தந்தி டி.வி.விவாதங்களில் பங்கேற்று வருகின்றனர்.
இன்றைய தினத்தந்தியில் தி.மு.க.பொருளாளர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பேட்டி ஒளிபரப்பு குறித்த விளம்பரம் வந்துள்ளது.அதன் தலைப்பே என்னை இந்தக் கடிதம் எழுதவைத்தது.

முதல் இடமா?மூன்றாவது இடமா? என்பதுதான் அந்தத் தலைப்பு.
நேயர்களை பார்க்கத்தூண்டுவதற்காக இப்படிக் கேள்வியைக் கேட்டிருக்கலாம்.அதனையே விளம்பரத்துக்கும் பயன்படுத்தலாம்.
அது பத்திரிகை உத்தி.தவறில்லை.இதற்கு மு.க.ஸ்டாலின் என்ன பதில் சொன்னார் என்பதும் எனக்குத் தெரியாது.இன்று அந்நிகழ்ச்சியைப் பார்க்கும்போதுதான் அறியமுடியும்.
என் கேள்வி இதேமாதிரி இன்னொரு பெரிய கட்சியின் தலைமையிடம் கேட்டுவிடமுடியுமா?குறிப்பாக உங்களது பத்திரிகைக்கு விளம்பரம் தரும் அ.தி.மு.க.அரசின் தலைவர் ஜெயலலிதாவிடம் கேட்கமுடியுமா?
உங்கள் நிருபரை அழைத்து தேர்தல் அறிக்கை கொடுத்தாரே அவரிடம் இதுபோல ஒரு பேட்டிக்கு அழைப்பு விடுக்கமுடியுமா?அப்படி அழைப்பு விடுக்கும் நெஞ்சுரம் உங்களுக்கு உண்டா?ஒரு வேளை அப்படி அழைத்து அவரும் வந்து உட்கார்ந்தால்...
அம்மையார் ஜெயலலிதா அவர்களே...
1) சொத்துக் குவிப்பு வழக்கை நீங்கள் இழுத்தடிக்கிறீர்கள் என்று நீதிபதி கூறுகிறாரே.இதற்கு உங்கள் பதில் என்ன?
2)அரசு வழக்கறிஞரையே உங்களுக்கு ஆதரவாளராக மாற்றிவிட்டீர்களே.இதுபோல நீதிமன்ற வரலாற்றில் நடந்ததில்லை என்கிறார்களே.உங்கள் பதில் என்ன?
3)உங்களைப்போலவே அரசு வக்கீலும் உடல்நிலை சரியில்லை என்று கூறியதை ஏற்காத நீதிபதி,அவருக்கு 65 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளாரே?இது பற்றி உங்கள் கருத்து என்ன?
4)நீங்கள் நிரபராதி என்றால்,எந்தக் குற்றமும் செய்யாதவர் என்றால் ஏன் வழக்கில் ஆஜராகி பொய்க்குற்றச்சாட்டு என்பதை நிரூபித்து விடுதலை பெற்றிருக்கலாமே?
5)இந்த முறை ஆட்சி பொறுப்பேற்ற போது அளித்த முதல் பேட்டியில்,
இனிமே வாரந்தோறும் நிருபர்களை சந்திப்பேன் என்றீர்களே?கடந்த 3 ஆண்டுகளில் 150 வாரங்கள் கடந்துவிட்டன.இதுவரை எத்தனை வாரங்கள் நிருபர்களைச் சந்தித்தீர்கள்?
6)இலவசங்களே கூடாது என்பதுதான் எனது இலட்சியம் என்றீர்களே?ஏன் இலவசப் பொருட்களை இன்னும் கொடுத்துக் கொண்டிருக்கிறீரீகள்?
7)சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று 2004 ஆம் ஆண்டு அ.தி.மு.க.தேர்தல் அறிக்கையில் கூறினீர்களே?இப்போது ஏன் வேண்டாம் என்கிறீர்கள்?சேது சமுத்திரத் திட்டம் வந்தால் அது இலங்கைக்கு பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறதே.அப்படியானால் நீங்கள் இலங்கை அரசின் ஆதரவாளரா?
8) ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தபட்டு உங்களைப்போல நீதிமன்றங்களுக்குப் பயந்து பதுங்காமல்,வழக்கைத் துணிச்சலாகச் சந்தித்துவரும் ஆ.ராசாவுக்கு தி.மு.க.சீட்டுக் கொடுத்ததைக் கண்டிக்கும் நீங்கள்,டான்சி வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு உள்ளாகி,மீண்டும் அரசிடமே வாங்கிய நிலத்தை ஒப்படைத்ததன் மூலம் நீங்களே குற்றச்சாட்டை ஒத்துக்கொண்டீர்களே.
அப்படியானால் இப்போது எப்படி நீங்கள் முதல்வர் பதவியில் நீடிக்கலாம்?பிரதமர் பதவிக்கு ஆசைப்படலாம்?
9)உங்களை நம்பிய கம்யூனிஸ்டு கட்சிகளை கடைவரை கூடவே வைத்துக்கொண்டும்,சட்டமன்றத்தில் அவர்களை உங்களுக்கு லாலி பாட வைத்துகொண்டும்,அவர்களின் டெல்லி தலைவர்களை உங்கள்வீட்டுக்கு அழைத்து வந்து கம்யூனிஸ்டுகள் எங்களோடு கூட்டணி வைத்துள்ளார்கள் என்றெல்லாம் பேட்டி கொடுத்து விட்டு,40 தொகுதிக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டு,ஒரு தொகுதிதான் என்று அவர்களை அழைக்கழித்து தூக்கி எரிந்துவிட்டீர்களே.இது உங்கள் மீதான நம்பகத்தன்மையைக் குறைத்துவிடாதா?
10)கடந்த முறை உங்கள் ஆதரவில் ஆட்சி அமைத்த வாஜ்பாய்,நீங்கள் ஆட்சியைக் கழித்த அன்று இரவுதான் நிம்மதியாகத் தூங்கினேன் என்று கூறினாரே.அது பற்றி தங்களின் கருத்து என்ன?இதே போல இந்த முறை நீங்கள் ஆதரிக்கும் கட்சிக்கும் நம்பகமான ஆதரவைத் த்ருவீர்களா?
------- இந்தக் கேள்விகளை தந்தி டி.வி.பத்திரிகை ஊடகப் புலிகளால் ஜெயலலிதாவுக்கு நேருக்கு நேராகக் கேட்க முடியுமா?

தமிழகத்தில் இன்று உள்ள தலைவர்களின் இவரைப்போல தியாகம் செய்தவர் இல்லை என்று கூறுமளவிற்கு உயர்ந்து நிற்கும் தளபதி ஸ்டாலின் அவர்களை நோக்கிக் கேட்கும் கேள்விகள் கண்ணியமாக இருக்கவேண்டாமா?ஒரு மூன்றாந்தர அரசியல் பேச்சாளரிடம் கேட்கும் கேள்விகளைப் போலக் கேட்பதுதான் உங்கள் பத்திரிகை அறமா?
உங்கள் நிறுவனத்தின் நிறுவனர் அய்யா ஆதித்தனாரை சபாநாயகராக,அமைச்சராக அமரவைத்து அழகு பார்த்த தி.மு.க.வுக்கு நீங்கள் காட்டும் மரியாதை இதுதானா?
நீங்கள் மட்டுமல்ல,எம் இன எதிரிகள்,இனத்துரோகிகள் கேட்கும் எந்தக் கேள்விக்கும் பதில் அளிக்கும் தெம்பும் திராணியும் தி.மு.க.வுக்கு உண்டு.அதன் தலைமைக்கு உண்டு.தளபதிக்கும் உண்டு.ஆனால்,என் கேள்வியெல்லாம் ஒரு பத்திரிகையாளன் என்றால் கேள்விகளில் கண்ணியமும்,கடுமையான கேள்விகளையும் மென்மையான வார்த்தைகளால் கேட்கும் பக்குவமும் இருக்கவேண்டும் என்பதே.
தந்தி குழுமத்தில் இத்தகைய தரக்குறைவுகள் கூடாது என்பதே எனது விருப்பம்.
கருத்துக் கணிப்புகள் பொய்யானவை;அவை ஒரு பகுதியினருக்கு சார்பாக வெளியடப்படுபவை;நடுநிலையில் இருக்கும்,வாக்களிப்பது பற்றி முடிவு செய்யாமல் இருக்கும் எந்தக் கட்சியையும் சாராத வாக்காளனை குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாகத் திசைத்திருப்பும் விளம்பரத்தந்திரம் என்பது என் கருத்து.ஆகவே,அதனை முற்றிலும் ஏற்கமுடியாது.ஒரு வாதத்துக்கு அதனை ஏற் றார்கூட இன்றைய என்.டி.டி.வி.கருத்துக் கணிப்பில் அ.தி.மு.க.27 தி.மு.க.10 என்று கூறியிருக்கிறார்கள்.
முதல் இடமா?மூன்றாவது இடமா?என்று கேட்ட ஞானசூனியங்களே...
பொய்யான கருத்துக் கணிப்பிலேயே கூட தி.மு.க.வை மூன்றாவது இடத்திற்குத் தள்ளமுடியவில்லை.நீங்கள் எப்படி மூன்றாவது இடம் என்று கேட்கலாம்?இது கண்ணியமானதுதானா?
வெட்கம்...வெட்கம்...
தமிழகத்தில் பத்திரிகை நியாயம் பேச ஒருவர் கூட இல்லையா?

முகனூலில் பிரகாஷ் ஜே.பி.
suran

இவ்வளவு நாள் தமிழ் நாட்டில் இருந்தும் தந்திகாரர்களின் ஆளுங்கட்சி பாசம் தரியாமல் இருப்பதுதான் உங்கள் தவறு.யார் ஆண்டாலும் அவர்களை போய் சந்தித்து அளாவளாவி[?]தங்கள் பத்திரிக்கைக்கு விளம்பரம் எள் முனையளவு கூட குறையாமல் பார்த்திருப்பது அவர்களின் வியாபார புத்தி.
தமிழ் வெல்க என்பது சும்மானாச்சும்தான்.அவர்கள் தொலைக்காட்சியில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் அனைவரும் பிராமணர்கள்,வட மொழி வம்சதார்கள்தான் .
எம்ஜியார் கட்சி ஆரம்பித்தப் புதிதில் நடிகர் கட்சி என்றும் கருத்துப் படங்களில் எம்ஜியாரை கிழவனாகவும்
காண்பித்தவர்கள் அவர் ஆட்சியை பிடித்ததும் எம்ஜியாரை காயகல்பம் சாப்பிட்ட மார்க்கண்டேயனாக மாற்றியவர்கள் தந்தி நிர்வாகம்.
அடுத்து கலைஞர் ஆட்சிக்கட்டிலில் எறி விட்டால் கருத்துக்கணிப்பில் திமுக தான் முதலிடம்.
சோ ,தினமலர் ,தினமணி போன்றவர்கள் அப்படித்தான் எழுதுவார்கள் .அவர்கள் எதிர் தரப்பினர் என்று தெரியும்.அவர்களை சமாளிப்பது எளிது.
தமிழ் வாழ்க என்று கூறிக்கொண்டு நடுநிலை வாதி வேடத்தில் இருக்கும் தந்தி போன்றவர்களிடம் கண்டிப்பாக எல்லா  கட்சியினரும் பாதுகாப்பாக இருக்க வேண்டியது கட்டாயம்.
அவர்கள் செய்திகள் விள்ம்பரதார்,ஆளுங்கட்சிகளுக்கே ஆதரவாக இருக்கும் நடுநிலையை கொண்டது.
இன்று அதிகம் விளமபர்ங்களைத்தாங்கி வருவது தினத்தந்தி நாளிதழ்தான் ஆனால் விளம்பரக் கட்டணம் அதிகம் உள்ளது அதில்தான்.அவர்கள் தினம் பெறும் விளம்பரங்களை வைத்து தினத் தந்தியை இலவசமாவே கொடுக்கலாம்.ஆனால் தினமலர்,தினகரன் நாளிதழ்களை விட அதிகம் விலை.
அதிலேயும்  தினகரன் -தினமலர் -தினமணி போன்றவைகள் விளம் பரதார் பக்கங்கள் அதிகமானால் விலையைக் கூட்டுவதில்லை.ஆனால் கொள்ளை லாபம் சம்பாதிக்கும் தினத் தந்தியோ இரண்டு பக்கங்கள் அதிகமானால் கூட அன்றைய விலையை கூட்டி விடும் .இவர்கள் பணம் வாங்கி வெளியிடும் வெறும் விளம்பரப் பக்கங்களை வாசகன் கைக் காசைப் போட்டு வாங்கி விளம்பரங்களை படிக்க வெண்டிய தலை எழுத்து.
தினகரன் ஒரு ரூபாயில் வெளியான போது தென்மாவட்டங்களில் அதிக சாதனை தினகரன் விற்பனைதான்.அப்போது வெறு வழியே இல்லாமல் தினத்தந்தியும் விலை குறைப்பு செய்தது.ஆனாலு விற்பனை கூட வில்லை.அப்போது நெல்லை,தூத்துக்குடி ,குமரி மாவட்டங்களில் அதிகம் உள்ள நாடார் சமூகத்தினர் சங்கக் கூட்டங்களை கூட்டி "தினகரனை வாங்கக் கூடாது,சின்னையாவின் தினத் தந்தியை மட்டுமே வாங்க வேண்டும் என்று தீர்மானங்களை போட்டு அதை கடுமையாகக் கடை பிடித்து தினகரன் வளர்ச்சியை தடுத்து நிறுத்திய வரலாறை கொண்டதுதான் நமது தினத்தந்தி.
அதற்கு பணம்தான் முக்கியம்.
இன்று குறைந்த சம்பளத்தில் தொழிலாளர்கள் வேலை பார்க்கும் ஒரே பத்திரிக்கை நிறுவனம் அதுதான்.
அங்குதான் பகுதி நேர நிருபர்கள்,எழுத்தாளர்கள் குறிப்பாக ஒரே சமுகத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
suran

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?