"ஓய்வுகள்."ஜெயா-ஸ்டாலின்

ஒரு ஒப்பீடு?

---------------

கொடநாடு ஜெயலலிதா ஓய்வையும்,வெளிநாடு செல்லும் ஸ்டாலின் பற்றியும் நண்பர் ஒருவர் கூறும் போது ஜெயலலிதாவை குறை சொல்ல கூடாது என்றார் எ.
அவர் பற்றி ;ஏ ன் எதற்கு என்றெ தெரியாமல் கருணாநிதியையும்,திமுகவையும் பற்றி கண்மூடித்தனமான எதிர்ப்பை தனது தலையில் அவர் சுமந்து வருகிரரர்.கருணாநிதியை எதிக்கவென்றெ ஜெயலலிதா செய்யும் எல்லாவற்றையும் உட்காரணம் எதுவுமில்லாமல் அது பற்றிய விளைவுகளைப்பற்றியும் தெரியாமல் ஆதரவாக பேசுவதி பழக்கமாகக் கொண்டுள்ளார்.
suran

நான் திமுக அல்ல.
ஆனால் எம்ஜிஆர் உயிருடன் இருக்கும்வரை அவரால் கருணாநிதி ஊழல்வாதி ,திருடன் என்ற [மூட ] நம்பிக்கைகளை கொண்டிர்ந்த தீவிர எம்ஜியார் ரசிகன்.
கருணாநிதி தனது ஆட்சியில் காட்டிய நிர்வாகத்திறமையையும்,ஏழை மக்களுக்கு அவர் செய்த நன்மைகள்.பற்றி உணர முடியாத அளவு கருணாநிதி எம்ஜி ஆரை எதிர்க்கும் நம்பியார் தான் எனக்கு.
ஆனால் அதே எம்ஜி ஆர் தான் கருணாநி தியைப்பற்றி அறியவும் அவரின் ஆதரவாளனாகவும் செய்தார்.
அது ஜெயலலிதாவை தனது அரசியல் வாரிசாக்கியதுதான்.ஜெயலலிதா அதே எம்ஜிஆருக்கு எதிராக நடத்னது கொண்டது.எம்ஜிஆர் மறைவுக்குப்பின்னார் கட்சியை -ஆட்சியை கைப்பற்ற  நடந்து கொண்ட விதம் என்னை அதிமுகஆதரவை  விட்டு ஒதுங்க வைத்தது.அதுவரை இரட்டை இலையை மட்டும் பார்த்து வாக்கு செய்த நான் மற்ற சின்னங்களுக்கு மாறி,மாறி வாக்களித்தேன்.
அப்படியும் ஜெயாவின் கண்மூடித்தனமான எம்ஜிஆரை விட கருணாநிதியை அதிகம் எதிர்க்கும் தன்மை.அதன் உள்நோக்கங்கள் தெரிய தெரிய நான் கருணாநிதியை பற்றி கொஞ்சம் புரிய ஆரம்பித்தேன்
.ஜெயாவின் தரமற்ற எதிர்ப்பும் கருணாநிதியின் நாகரீகமான அரசியல் நடவடிக்கைகளும் ஆதாரப்பூர்வமான பதில் களும் அவர் பக்கம் திருப்பியது.
கருணாநிதியை விட ஸ்டாலின் தனது அரசியல் நடவடிக்கைகள்,நிர்வாகத்திறமை மூலம் என்னை மிக கவர்ந்துள்ளார்.
இவ்வளவு கூற  காரணம் நான் திமுக அல்லஎன்பதை கூறத்தான் .
இனி என் நண்பருக்கு நான் கொடுத்த பதில்.

"ஏகப்பட்ட நிர்வாகப்பணிகள்,மக்களை கொல்லும்  மின்தடை இவைகளை ஒன்றும் கண்டு கொள்ளாமல் கோட்ட நாடு சென்று ஓய்வெடுக்க இவர் வெட்டி முறித்ததென்ன?ஸ்டாலின் சாலைகளில் வாகனத்தில் சென்று மக்களை சந்தித்து பரப்புரை செய்தார்.இவரோ ஹெலிகாப்டரில் சென்று கொண்டு வந்து அடைக்கப்பட்ட மக்களிடம் எழுதியதை வாசித்தார்.யாருக்கு ஒய்வு தேவை?
அதுவும் ஸ்டாலின் வெளிநாடு செல்வது உடல் நிலை காரணம்.காசு அவரின் சொந்த காசு.ஆனால் ஜெயா செல்லுவது நம்ம வரிப்பணம்.
ஓய்வுக்கும் ஓய்வு?
அதுமட்டுமல்ல.தினசரி கோப்புகள் -அலுவலர்கள் விமானத்தில் சென்று வரும் செலவு எவ்வளவு ஆகிறது.
எல்லாம் நம்ம அப்பன் வீட்டுப் பணம்.அவரது அல்ல.இங்கிருந்தால் மட்டும் தினமும் கோட்டைக்கா செல்லுகிறார்?
போயஸ் வீடு குளிரூட்டட்ப்பட்டது.
கோட்டைக்கு வரும் வாகனமும் குளீருட்டப்பட்டது.
அவர் அறையும் அப்படியே.
அதுவும் அங்கிருந்து கோப்புகளை பார்ப்பது இரண்டு மணி நேரமே.அதற்கே ஓய்வு எடுக்க கோட்ட நாடா?இதற்கு வக்காலத்து வாங்க உங்களைப்போல் சிலர்.முதலில் உங்களின் கண் மூடித்தனமான திமுக-கருணாநிதி  எதிர்ப்பை புறந்தள்ளி ஏ ன்?எதற்கு?எப்படி?என்று பகுத்தறியப்பாருங்கள்.இந்த எதிர்ப்பை இன்றைய ஊடகங்கள்தான் உங்களுக்கு படிபடியாக ஊட்டியது என்று தெரிய வரும்.அப்படி அவை செய்ததற்கான காரணமும் வெளிப்படை.அவை ஒரே இனம் சார்ந்தவை என்பது முக்கிய காரணம். முன்பு நமது பகுத்தறிவின்மையை முடக்கி வைத்து ஆளுமை செய்த வர்க்கம் தங்கள் ஆள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியிருக்கும் போது அதை இழக்கும்படி செய்வார்களா ஏன்ன?
suran
ஒய்வு?
------------------------------------------------------------------------------------------------------------
suran

---------------------------------------------------------------------------------------------
குண்டுவெடிப்பு!
------------------
செ ன்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 9-வது பிளாட்பாரத்தில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 
பயங்கர சப்தத்துடன் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கவுஹாத்தி-பெங்களூரு விரைவு ரயில் 9-வது நடைமேடைக்கு வந்த போது இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
suran
இந்த ரயிலின் எஸ் 4 பெட்டியில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்ததாகவும் தகவல் தெரிவிக்கின்றன. இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 10 பேர் காயமடைந்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். படுகாயமடைந்த 10 பேரும் சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்பில் 2 ரயில் பெட்டிகள் முற்றிலும் சேதமடைந்துவிட்டதாகவவும் தெரிகிறது.

 குண்டுவெடிப்பில் குண்டூரைச் சேர்ந்த சுவாதி என்ற  பெண் பயணி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாக  தெரிவித்துள்ளனர். 
பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ உளவாளி ஜாகீர் உசேன் நேற்று முன்தினம் சென்னையில் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது சென்னை சென்ட்ரல் நிலையத்தில் குண்டுவெடித்துள்ளது. தீவிரவாதிகள் சதியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

suran
சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு வெடிப்பு தொடர்பாக அறிக்கை தர தமிழக அரசுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கு ண்டுவெடிப்பு தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த ஒருவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யட்ட நபரிடமிருந்து பெரிய பை ஒன்றை போலீஸ் பறிமுதல் செய்துள்ளது. கைது செய்யப்பட்ட நபர் ரயில் பெட்டியின் கழிவறையில் ஒளிந்து கொண்டிருந்ததாக தகவல் தெரிவிக்கின்றன.  
குண்டுவெடிப்பில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சமும், படுகாயமடைந்ததோருக்கு ரூ.25,000, லேசான காயமடைந்தோருக்கு ரூ.5,000 இழப்பீடு வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ராதெரிவித்தார்.

 குண்டுவெடிப்பு தொடர்பாக தொலைபேசியில் ரயில்வே அமைச்சர் விசாரித்ததாக ரயில்வே அதிகாரி தெரிவித்தார். பிற ரயில்கள் வழக்கம் போல இயக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். ரயில் குண்டுவெடிப்பு தகவல்களை பெற 044 25357398 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.
---------------------------------------------------------------------------------------------------------
suran

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?