கோடை காலத்தை ....


suran

ஆரோக்கியத்துடன் கடத்திட....,

ஆண்டுக்கு,ஆண்டு நாம் சொல்லும் வார்த்தை இந்த ஆண்டு வெயில் அதிகம் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரத்துக்கு முன்பே இந்த வெட் கையா?என்பதுதான்.
ஆனால் இந்த ஆண்டு வெயில் கொடுமை மிக அதிகமாகத்தான் இருக்கப்போகிறது.அப்படித்தான் வானிலை ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன.
தமிழ் நாட்டில் 113 முதல் 115வரை வெப்ப நிலை இருக்கலாம்.இருக்கும் என்கிறது அந்த அறிக்கைகள்.
ஆண்டுக்கு ஆண்டு வெப்ப நிலை கூட .மழை அளவு குறைய மரங்களை வெட்டி சாய்ப்பதும்,நீர் நிலைகளை முழுக்க மனைகளாக்கி விற்றதும்தான் காரணம் என்பதை எத்தனை தடவைதான் கூறுவது.இதை கண்காணிக்க வேண்டிய அரசுதான் சாலை ஒர மரங்களை எல்லாம் நெடுஞ்சாலை விரிவாக்கம் என்று வெட்டித்தள்ளுகிறது.
suran
குளங்கள்,ஏரிகளை மழை நீர் இல்லாத காலங்களில் அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகள் மூலம் பட்டா போட்டு வீடுகளாக்கி விட்டனர்.
இந்நிலையில் இந்த அரசிடமே நாம் மரங்களை ,குளங்களை பாதுக்காக கூற முடியுமா?
இவ்வளவு பட்டும் திருந்தாத அரசுகள் இனியும் திருந்தும் என்று தெரியவில்லை.
காற்றுக்கு வீச பான் ஓலை விசிறி கூட கடைகளில் கிடைப்பதில்லை.மின் விசிறியால் வெப்பத்தை போக்கலாம் என்பதையும் மின்வெட்டு கனவாக்கி விட்டது.

இந்த வெயில் கொடுமையிலிருந்து எப்படி நம்மை காப்பாற்றிக் கொள்வது...? என்பது பற்றி யோசிப்பதே நல்லது.

* வெயில் காலத்தில் உடலில் ஈரப்பதத்தை சீராக வைத்துக்கொள்ளுவது முக்கியம். அவசியம். 
குளிப்பதற்கு முன், தலையில் எண்ணெய் தேய்த்து 15 நிமிடம் ஊற வைத்த பிறகு குளிக்க வேண்டும். அப்போதுதான், நாள் முழுவதும் தலையில் ஈரப்பதம் இருக்கும். அதனால், சூரிய வெப்பம் நேரடியாக உங்களை தாக்குவதில் இருந்து தப்பிக்கலாம்.

வெளியில் செல்லும் பொது,வாகங்களை ஊட்டும் போதும் குளிர் கண்ணாடிகளை மாட்டிக்கொள்வது நமக்கு அழகைத் தருகிறதோ இல்லையோ நம் கண்களை பாதுகாத்து தரும்.

* சூரிய வெப்பம் நேரடியாக உடலில் படுவதால் சரும நிறம் மாறுபடும். வெயில் படாத இடங்களில் ஒரு நிறமும், வெயில் படும் இடங்களில் சருமம் கறுத்தும் போய்விடும். 

* வியர்வையுடன் இருக்கவே கூடாது. 
அடிக்கடி கைக்குட்டையால் துடைத்தோ,தண்ணீர் ஊற்றி கழுவியோ  வியர்வையை அப்புறப்படுத்த வேண்டும். 
suran
* வெயில் காலங்களில் பெப்சி,கோலா போன்ற மென்பானங்கள்  குடிப்பதை விரும்புவார்கள். 
இது தவறு. 
இது போன்ற பானங்களை  குடிப்பதால், அதில் அடைக்கப்பட்டுள்ள வாயு , உடலில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும். 
இதனால், நன்னாரி சர்பத்,பதநீர்,நெல்லிக்காய் சர்பத்  இளநீர் போன்றவற்றை குடிப்பதே நல்லது. காதி ,சர்வோதாயா கடைகளில் இயற்கையான நன்னாரி,நெல்லிக்காய்,அண்ணாச்சி,ஆப்பிள்,திராட்சை சாறு வகைகள் கிடைக்கிறது.அதை வாங்கி வைத்து தண்ணீர் கலந்து சாப்பிடலாம்.

இல்லை என்றால்  அதிகளவு தண்ணீர் ,நீராகாரம் [சிறு வெங்காயத்துடன் ]குடிப்பது உடலுக்கு குளிர்ச்சியை தருவதுடன் ஆரோக்கியத்தையும்,உற்சாகத்தையும் தரும்.
வெயிலில் வியர்க்க ,வியர்க்க அலைந்து வந்து உடனே குளிர் நீரை பருகாதீர்கள்.கை மேல் பலனாக சளி பிடித்துக்கொள்ளும்.வெது,வெதுப்பான நீரை சிறிது குடித்து பின்னர் சிறிது நேரம் கழித்து குறி நீரை குடியுங்கள்.அது மண் பானை நீராக இருந்தால் மிக நன்று.
முயற்சித்துப்பாருங்கள்.
இந்த கோடை காலத்தை ஆரோக்கியத்துடன் கடத்திட வாழ்த்துக்கள்.. 
suran

                                  "வெப்பத்தை தணிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கு?"
----------------------------------------------------------------------------------------------------------------------------------
suran

suran

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?