நரேந்திர மோடி & அமைச்சர்கள் .

மத்திய பாஜக கூட்டணி அரசின் அமைச்சர்கள் இலாகா விபரங்கள் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
. பிரதமராக  நரேந்திர  மோடி பொறுப்பேற்றுக் கொண்டார்.
மற்ற அமைச்சர்கள் துறைவாரி  விபரம்:
கேபினட் அமைச்சர்கள்1.ராஜ்நாத் சிங்- உள்துறை
2.அருண் ஜெட்லி- நிதி, பாதுகாப்பு மற்றும் கார்ப்பரேட் விவகாரத்துறை
3.சுஷ்மா ஸ்வராஜ்- வெளியுறவு
4.வெங்கய்யா நாயுடு- நகர்ப்புற வளர்ச்சி, வீட்டுவசதி, வறுமை ஒழிப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை
5.கோபிநாத் முண்டே- பஞ்சாயத்து ராஜ், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகங்கள்
6.ராம் விலாஸ் பஸ்வான்- நுகர்வோர் விவகாரத்துறை மற்றும் உணவு, வழங்கல் துறை
7.நிதின் கட்கரி- போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை
8.மேனகா காந்தி- பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னேற்றத் துறை
9.கல்ராஜ் மிஸ்ரா- சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை
10.நஜ்மா ஹெப்துல்லா- சிறுபான்மை விவகாரத்துறை
11.ஆனந்த் குமார்- ரசாயனம் மற்றும் உரத்துறை
12.ரவிசங்கர் பிரசாத்- தொலைதொடர்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் சட்டம், நீதித் துறை
13.ஆனந்த கீதே- கனரக தொழில்துறை மற்றும் பொதுத் துறை
14.உமா பாரதி- நீர் வள மேலாண்மை
15.அசோக் கஜபதி ராஜூ- விமான போக்குவரத்துத் துறை
16.ஹர்சிம்ரத் கவுர் பாதல்- உணவு பதப்படுத்துதல் துறை
17.நரேந்திர சிங் தோமர்- சுரங்கம் மற்றும் இரும்புத் துறை; தொழில் மற்றும் வேலைவாய்ப்பு
18.ஜூவல் ஓரம் - பழங்குடியினர் விவகாரத்துறை
19.ஹர்ஷ வர்த்தன்- சுகாதாரத் துறை
20.ஸ்மிருதி இராணி- மனித வள மேம்பாடு
21.ராதா மோகன் சிங்- விவசாயம்
22.தாவர்சந்த் கெலாட்- சமூக நீதி
23. சதானந்த கவுடா- ரயில்வே
suran

இணை அமைச்சர்கள் (தனிப்பொறுப்பு)

1. ஜெனரல் வி.கே.சிங்- வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி, வெளியுறவு விவகாரம், வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத் துறை
2. இந்திரஜித் சிங் ராவ்- திட்டமிடுதல், புள்ளியல், திட்ட அமலாக்கம், பாதுகாப்பு அமைச்சகம்
3. சந்தோஷ் கங்க்வார்- ஜவுளித்துறை, நாடாளுமன்ற விவகாரத்துறை, நீர் வளம், நதிகள் மேம்பாடு, கங்கை நதி புனரமைத்தல்
4.ஸ்ரீபத் எஸ்ஸோ நாயக்- கலாச்சாரம் மற்றும் சுற்றுலா
5. தர்மேந்திர பிரதான்- பெட்ரோலியம், இயற்கை எரிவாயு
6. சர்வானந்த சோனோவல்- விளையாட்டு, தொழில்முனைவோர் மேம்பாடு, திறன்சார் மேம்பாடு
7. பிரகாஷ் ஜவடேகர்- தகவல் ஒலிபரப்பு, சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றம், நாடாளுமன்ற விவகாரத்துறை
8. பியுஷ் கோயல்- மின்சாரம், நிலக்கரி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை
9. ஜிதேந்திர சிங்- அறிவியல் தொழில்நுட்பம், புவி அறிவியல் துறை
10. நிர்மலா சீதாராமன்- வர்த்தகம் மற்றும் தொழில்துறை மற்றும் நாடாளுமன்றத் துறை.

இணை அமைச்சர்கள்

1. ஜி.எம்.சித்தேஸ்வரா- விமான போக்குவரத்து
2. மனோஜ் சின்ஹா- ரயில்வே
3. நிஹால் சந்த்- ரசாயனம் மற்றும் உரத் துறை
4. உபேந்திர குஷ்வாஹா- ஊரக வளர்ச்சித் துறை, குடிநீர், சுகாதாரம், பஞ்சாயத்து ராஜ் துறை
5. பொன்.ராதாகிருஷ்ணன்- கனரக தொழில்துறை
6. கிரண் ரிஜிஜூ- உள்துறை
7. கிரிஷன் பால் குஜ்ஜார்- சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை, கப்பல் போக்குவரத்து துறை
8. சஞ்சீவ் குமார் பாலியான்- விவசாயம், உணவு பதுப்படுத்துதல்
. மன்சுக்பாய் வாசவா- பழங்குடியினர் விவகாரத் துறை
10. ராவ் சாஹிப் தான்வே- நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் வழங்கல் துறை
11. விஷ்ணுதேவ் சாய்- சுரங்கம், இரும்பு, தொழில், வேலைவாய்ப்புத் துறை
12. சுதர்சன் பகத்- சமூக நீதித் துறை
suran

மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் முசாபர் நகர் கலவரத்திற்கு தலைமை தாங்கிய சஞ்சீவ்குமார் பாலியானும் இடம்பெற்றுள்ளார்.
 முசாபர் நகர் கலவரத்தினால் உருவான மதவெறி அணிசேர்க்கை உத்தரப்பிரதேசத்தில் பாஜகவிற்கு தேடிக்கொடுத்த வெற்றிக்கான பரிசாகத்தான் சஞ்சீவ் பாலியானுக்கு அமைச்சரவைப் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவர், விவசாயத்துறை இணை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். முசாபர் நகரில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக கலவரத்தை தூண்டும் நோக்கத்துடன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி ஜாட் சமுதாயத்தினரின் மகா பஞ்சாயத்து கூட்டத்தில் மதவெறியை கிளறிவிடும் வகையில் பாலியான் உரையாற்றினார். இதனால் இவர் 27நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
சுமார் 50 சிறுபான்மை மக்கள் கொல்லப்பட்ட இந்த மதக்கலவரத்தில் கால்நடை மருத்துவரான இவர் வகித்த பங்கிற்காகத்தான், இவரை முசாபர் நகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக நிறுத்தியது. தேர்தல் பிரச்சாரம் முழுவதிலும் மாநிலத்தின் வளர்ச்சிபற்றியோ மக்களின் முன்னேற்றம் பற்றியோ அவர் எதுவும் பேசவில்லை.
suran
அவரது பிரச்சாரம் முழுவதும் ‘இந்துத்துவா’ பெருமைபற்றியதாகவே இருந்தது. இந்நிலையில் 4.1லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பகுஜன் சமாஜ் எம்.பியான காதிர் ராணாவை பாலியான் தோற்கடித்தார். முசாபர் நகர் கலவரத்தினால் ஏற்பட்ட வகுப்பு வாத அணி சேர்க்கையை மக்களவை தேர்தல் வெற்றிக்கு பயன்படுத்தும் திட்டத்துடன்தான் கலவரத்திற்குதலைமை தாங்கியவர்களுக்கு மேற்கு உத்தரப் பிரதேசத்தில் பிஜூனோரிலும் ஹைராணாவிலும் பாஜக சீட்டு கொடுத்தது.
ஹைராணாவில் குக்கூம் சிங்கும், பிஜ்னோரில் பாரதேந்து சிங்கும் 2லட்சத்திற்கு அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றனர். பிஜ்னோரில் முதலில் அறிவிக்கப்பட்ட ராஜேந்திர சிங்கை மாற்றிவிட்டு பாரதேந்து சிங்கை களத்தில் இறக்கியது பாஜக. மேற்கு உ.பியில் மொத்தமுள்ள 25 இடங்களிலும் பாஜக வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது..
=========================================================================
suran

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?