”பகத்சிங்--நாகேஷ் “ பிறந்தநாள்



சே குவேராவின்  இந்திய வடிவம்தான்  பகத் சிங் 

பகத்சிங் பிறந்தநாள்: 27.09.1907

1919-ல் நூற்றுக் கணக்கான இந்தியர்களின் உயிரைப் பறித்த ஜாலியன் வாலாபாக் படுகொலைதான் பகத் சிங் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. 
அந்தப் படுகொலை நடந்த சமயத்தில் பகத் சிங்குக்கு வயது 12. படுகொலை நடந்த இடத்தில் இருந்த மண்ணை எடுத்துவந்து பாதுகாத்து வைத்திருந்தார் பகத் சிங்.
பகத் சிங்கின் பாட்டியின் ஆசையை நிறைவேற்றும் வகையில், பகத் சிங்குக்குத் திருமண ஏற்பாட்டை அவருடைய தந்தை மேற்கொண்டபோது, ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு, வீட்டை விட்டு வெளியேறி கான்பூர் சென்றுவிடுகிறார், விடுதலைப் போராட்ட நடவடிக்கைகளைத் தொடர்வதற்காக. அந்தக் கடிதத்தில் இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார்: ‘என் வாழ்க்கை ஓர் உன்னத லட்சியத்துக்காக ஒப்படைக்கப்பட்டிருக்கிறது: இந்திய விடுதலைதான் அந்த லட்சியம். அதன் காரணமாக, வசதிவாய்ப்புகளுக்கும் உலகியல் ஆசைகளுக்கும் என் வாழ்வில் இடமில்லை. நான் சிறுவனாக இருந்தபோதே நாட்டின் சேவைக்காக அர்ப் பணிக்கப்பட்டவன் என்று தாத்தா சபதம் செய்திருந்தது உங்களுக்கு நினைவிருக்கும். ஆகவே, அப்போதைய சபதத்தை மதிக்கிறேன். என்னை மன்னிப்பீர்கள் என்று நம்புகிறேன்.’
பகத் சிங் குடும்பத்தினரே தேசியவாதிகளாக விளங்கியவர்கள்தான். பகத் சிங் பிறந்தபோதுதான் அவரது தந்தை கிஷன் சிங்கும் மாமா சுவரண் சிங்கும் சிறையிலிருந்து விடுதலை ஆனார்கள். இன்னொரு மாமா அஜித் சிங் நாடுகடத்தப்பட்டிருந்தார். 20 வயதில் தூக்கிலிடப்பட்ட கர்தார் சிங் சரபாதான் பகத் சிங்குக்கு முன்மாதிரியான ஆளுமை. சரபாவின் புகைப்படம் அவரது சட்டைப் பையில் எப்போதும் இருக்கும்.

1928-ல் சைமன் கமிஷனைப் புறக்கணிக்க நிகழ்ந்த ஊர்வலத்தில் முதுபெரும் தலைவரான லாலா லஜபதிராய் கொல்லப்பட்டார். அதற்குப் பிறகுதான் தீவிரப் போராட்டப் பாதையில் பகத் சிங் ஈடுபடுகிறார். லஜபதிராயின் மரணத்துக்குக் காரணமான போலீஸ் அதிகாரி ஸ்காட் உயிரைப் பறிப்பதற்காக பகத் சிங்கும் அவரது நண்பர்களும் போட்ட திட்டம், ஜே.பி. சாண்டர்ஸ் என்னும் இன்னொரு அதிகாரியின் உயிரைப் பறித்துவிடுகிறது. இதற்கிடையே பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மக்கள் விரோத மசோதாக்கள் மீது எதிர்ப்பைக் காட்டும் வகையில் பகத் சிங்கும் பி.கே. தத்தும் சட்டசபைக்குள் நுழைந்து இரண்டு குண்டுகளை வீசினார்கள். இந்த வழக்கில் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஜே.பி. சாண்டர்ஸ் கொலை வழக்கில் சுகதேவ், ராஜகுருவுடன் பகத் சிங்குக்கும் சேர்த்துத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, குறித்த தேதிக்கு ஒரு நாளுக்கு முன்பாக, மாலையில் தண்டனை நிறைவேற்றப்பட்டது. (வழக்கமாகக் காலையில்தான் தண்டனை நிறைவேற்றப்படும்).
தன் போராட்ட நடவடிக்கைகளுக்கிடையே ஆக்ராவில் 175 புத்தகங்களுடன் ஒரு நூலகத்தை பகத் சிங் அமைத்தார். லாகூரில் லஜபதிராய் நிறுவியிருந்த துவாரகாதாஸ் நூலகத்தை அதிக அளவில் பயன்படுத்தினார். தூக்கிலிடப்படுவதற்கு முன்பு சிறையில் இருந்த இரண்டாண்டு காலத்தில் கவிதை, சட்டம், அரசியல், பொருளாதாரம், தத்துவம், சோஷலிஸப் புரட்சி என்று பல்வேறு துறைகள் தொடர்பாக நிறைய வாசித்திருந்தார். தன் எண்ணங்களையும், வாசிப்பைப் பற்றியும், வாசித்ததில் முக்கியப் பகுதிகளையும் ஒரு நோட்டுப் புத்தகத்தில் குறித்து வைத்தார். அந்தக் குறிப்பேடு, ரகசிய ஆவணம் என்பதால் பின்னாளில் அவரது மருமகன் அபே குமார் சிங்கால் படியெடுக்கப்பட்டு, குருகுல் இந்திரபிரஸ்தா என்னும் கல்வி நிறுவனத்தின் நிலவறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, 1994-ல் நூலாக வெளியிடப்பட்டது. அவர் சிறையில் இருந்த போது ‘நான் ஏன் நாத்திகன் ஆனேன்?’ உள்ளிட்ட நான்கு நூல்களை எழுதினார். இது தவிர, ஒரு மொழிபெயர்ப்பையும் செய்திருக்கிறார்.
இளைஞரான பகத் சிங்கின் பரிணாம வளர்ச்சி எப்படி இருந்தது என்பதை அவரது சகாவாக உடனிருந்து போராடிய தோழரான சிவவர்மா இப்படிக் கூறுகிறார். 
“அவரது சிந்தனைப் போக்கின் பரிணாமம் தீவிரமானது. 1924-க்கு முன் அவரைப் பார்த்தவர்கள், அவர் பப்பர் அகாலிகளுடன் இருந்ததாகக் கூறினார்கள்; 1925-26 காலகட்டத்தில் அவரைக் கண்டவர்கள் பகுனின், குரோபோட்கின் போன்ற ரஷ்யப் புரட்சியாளர்களின் செல்வாக்குக்கு உட்பட்ட அராஜகவாதிகளின் தொடர்பில் இருந்தார் என்றார்கள்; 1927-28 காலகட்டத்தில் அவரை எதிர்கொண்டவர்கள் சோஷலிஸ்ட் என்றழைத்தனர்; 1929-31 ஆண்டுகளில் பார்த்தவர்கள் அவரை மார்க்ஸிஸ்ட்–கம்யூனிஸ்ட் என்றனர்.”
பிரிட்டிஷாரை வெளியேற்றிவிட்டு இன்னொரு அதிகாரத் தரப்பினரிடம் ஆட்சியை ஒப்படைப்பதால் மக்களுக்கு நன்மை விளையாது. சோஷலிஸ மாற்றத் தால்தான் மக்களுக்கு நன்மை ஏற்படும் என்பதுதான் பகத் சிங்கின் நிலைப்பாடு. 
பகத் சிங் தூக்கில் இருந்து தப்பிக்க காந்தி மனது வைத்தால் போதும் என்ற நிலை வெள்ளையர் கருத்தை தெரிவித்து காந்தியிடம் கேட்ட போது காந்தி பகத் சிங் விடுதலையை தான் விரும்பவில்லை.புரட்சி சரியல்ல என்று கூறி தூக்கை உறுதி படுத்தினார்.
தூக்கிலிடப்படுவதற்கு முன்பாகத் தன் குடும்பத் தினரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தபோது, பகத் சிங்கின் அம்மா வித்யாவதி அழுகையைக் கட்டுப்படுத்திக்கொண்டு இப்படிக் குறிப்பிட்டார்: “ஒவ்வொருவரும் ஒரு நாள் மடிய வேண்டியவரே. ஆனால், உலகம் நினைவில் வைத்துப் போற்றும் மரணம்தான் மிகச் சிறந்தது.”
இயல்பிலேயே கூச்சமும் தயக்கமும் மிகுந்த இளைஞரான பகத் சிங், துரிதகதியில் வளர்ந்து, தீவிரமாகச் செயலாற்றி, சிறிதும் பின்வாங்காது, சாகும் தருணம் வரை படிப்பதும் சிந்திப்பதும் எழுதுவதுமாக இருந்து, தூக்குக் கயிற்றை முத்தமிட்டார்.
---------------------------------------------------------------------------------------------
நாகேஷ் 

நாகேஷ் எனும் மக்கள் கலைஞனின் பிறந்தநாள் இன்று. குண்டுராவ்
என்றுஅழைக்கப்பட்ட இவர் கம்பராமாயண நாடகம் பார்த்து நடிக்கும் ஆர்வம்
பெற்று சென்னை வந்தார். வாலியுடன் தங்கிக்கொண்டு ரயில்வேயில்
வேலைபார்த்து கொண்டு இருந்த காலத்தில் வயிற்று வலிக்காரனாக இவர் நடித்த
நடிப்பை பார்த்து பிரமித்தார் எம்.ஜி.ஆர். ஒரு கோப்பையை பரிசாக
தந்தார்,அதையாரும் பாராட்டவில்லை. மனிதரை போலீஸ் கூப்பிட்டு கோப்பையை
திருடி வந்தாயா என்று விசாரிப்பது தான் நடந்தது.
அப்பொழுதில் இருந்து என்றும் விருதுகளை வைக்க என்று வீட்டில் எந்த இடமும்
தனியாக வைத்தது இல்லை அவர். ரெஜினா எனும் கிறிஸ்துவ பெண்ணை காதலித்து
திருமணம் செய்து கொண்டார். வாகினி ஸ்டுடியோ ஓனரை ஓனர் என்று தெரியாமல்
கிண்டலடித்த பொழுது இவரின் நடிப்பை பார்த்து பிரமித்து போய் அவர் கொடுத்த
ஆயிரம் ரூபாயில் தான் தனது திருமணத்தை நடத்திக்கொண்டார் இவர்
தொழுப்பேடு ரயில்வே கிராசிங் மூடி இருந்ததால் ஜெயகாந்தன் மற்றும் இவர்
இருவரும் காத்திருக்க நேர்ந்தது காரில். என்ன பண்ணலாம் என்று
யோசித்துக்கொண்டு இருக்கும் பொழுதே ஜே.கே “பிச்சை எடுக்கலாமா ?” என்று
கேட்டிருக்கிறார். இருவரும் சட்டை,பேன்ட் கழட்டி விட்டு அண்டர் டிராயர்
உடன் அமர்ந்து பிச்சை எடுத்திருக்கிறார்கள். நாகேஷ் தட்டில் குறைவாகவே
பணம் சேர்ந்திருக்கிறது
‘சர்வர் சுந்தரம்’, ‘எதிர்நீச்சல்’, ‘நீர்க்குமிழி’, ‘அனுபவி ராஜா
அனுபவி’ என்று தொடர்ந்து ஜெயித்த முதல் நடிகர் நாகேஷ், தில்லானா
மோகனாம்பாள் படத்தில் கொத்தமங்கலம் சுப்பு நடித்தால் நன்றாகஇருக்கும்
என்று சொல்லப்பட்ட வைத்தி கதாபாத்திரத்தில் தோன்றி பின்னி எடுத்தார்
மனிதர்.
மைலாப்பூர் குளத்தில் அமர்ந்து கொண்டு “தண்ணியெல்லாம் வத்திப்போச்சே”
என்று புலம்பிக்கொண்டு இருந்த கிருஷ்ணஸ்வாமி எனும் நபரின் தாக்கத்தை
அப்படியே திரையில் கொண்டு வந்து நாகேஷ் காட்டிய விஸ்வரூபம் தான் தருமி
கதாபாத்திரம். கட்டே இல்லாமல் அது ஸ்க்ரீனில் வருமாறு பார்த்துக்கொண்டார்
சிவாஜி
மகளிர் மட்டும் படத்தில் நாகேஷ் அவர்களின் நடிப்பைப்பற்றி கமல் இப்படி
சொன்னார் “உண்மையாகச் சொல்ல வேண்டுமானால் நடித்து ’இருக்கவில்லை’
என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இதில் நாகேஷ் பிணமாக
நடித்திருக்கிறார்” என்றார்.
நாகேஷ் நடிப்பை பார்த்து பிரமித்த வடநாட்டு நடிகர்கள் ஏராளம். இவரின்
அனுபவி ராஜா அனுபவி படத்து கதாபாத்திரத்தை ஹிந்தியில் எடுத்து நடித்த
மக்மூத் இவர் காலில் விழுந்து மரியாதை செய்தார். நாகேஷ் அவர்கள் வெறும்
மவுனமான உடல்மொழியின் மூலம் காமெடி செய்யலாம் என்று சாப்ளின்,பஸ்டர்
கீட்டன் ஆகியோரை பார்த்து நம்பினார். பின்னர் சத்தம் போட்டு திரையை
அதிரவைத்தார்.
மதுபழக்கம்,ஒரு கொலை வழக்கில் உருண்ட பெயர் இவற்றைத்தாண்டி மீண்டும்
திரையில் மின்னினார் அவர். அவரின் நடன பாணி தனித்துவமானது. ஒரு முறை
சரியாக ஆடத்தெரியவில்லை என்றொரு இயக்குனர் இவரை கடிந்து கொள்ள கதவை
மூடிக்கொண்டு பயிற்சி செய்துவிட்டு வந்தார். நடனத்தில் கலக்கி எடுத்தார்.
அப்படித்தான் அவரின் பாணி உருவானது. தமிழகத்தின் ஜெர்ரி லூயிஸ் ஆனார்
‘பூவா தலையா?’ படத்தின் ஒரு காட்சியில் ரிக்ஷாக்காரனாக நடிக்கும் நாகேஷ்,
தன் மாமியாரிடம் கூழைக் கும்பிடு போட்டு வணங்கும் நாகேஷ் இல்லாத வசனமான
‘இதுக்கு மேல கும்பிட முடியாது. தரை வந்துடுச்சு’ என்று டயலாக் பேசி
அதிரவைத்தார். அபூர்வ ராகங்கள் படத்தில் ஆக்ஷன் என்று பாலச்சந்தர்
சொன்னதும் நிழலை பார்த்து சியர்ஸ் சொன்னார் மனிதர் !
“உங்களுக்கு ஹீரோ மாதிரி பெர்சனாலிட்டி எல்லாம் இல்லை. ஆனா, நடிப்பு
டான்ஸ் எல்லாவற்றிலும் பிரமாதப்படுத்துறீங்களே… எப்படி ?” என்று கேட்ட
பொழுது ,”மாவு நல்லா அரைபடணும் அப்படின்னு அம்மிக்கல்லை ஆறு மாசத்துக்கு
ஒருமுறை கொத்து வைப்பாங்க. அப்படி என் முகத்தில் சின்ன வயசில் ஆண்டவன்
வைத்த அம்மை தழும்பால் தான் நான் நல்லா பொளிஞ்சு இருக்கேன் !” என்றார்
அவர் அது தான் நாகேஷ் ! நம்மவர் படத்துக்காக பெற்ற சிறந்த துணை நடிகர்
விருதை தவிர எந்த மத்திய அரசின் விருதும் இந்த மகத்தான கலைஞரை
தேடிவரவில்லைநாகேஷ் எனும் மக்கள் கலைஞனின் பிறந்தநாள் இன்று. குண்டுராவ்
என்றுஅழைக்கப்பட்ட இவர் கம்பராமாயண நாடகம் பார்த்து நடிக்கும் ஆர்வம்
பெற்று சென்னை வந்தார். வாலியுடன் தங்கிக்கொண்டு ரயில்வேயில்
வேலைபார்த்து கொண்டு இருந்த காலத்தில் வயிற்று வலிக்காரனாக இவர் நடித்த
நடிப்பை பார்த்து பிரமித்தார் எம்.ஜி.ஆர். ஒரு கோப்பையை பரிசாக
தந்தார்,அதையாரும் பாராட்டவில்லை. மனிதரை போலீஸ் கூப்பிட்டு கோப்பையை
திருடி வந்தாயா என்று விசாரிப்பது தான் நடந்தது.
அப்பொழுதில் இருந்து என்றும் விருதுகளை வைக்க என்று வீட்டில் எந்த இடமும்
தனியாக வைத்தது இல்லை அவர். ரெஜினா எனும் கிறிஸ்துவ பெண்ணை காதலித்து
திருமணம் செய்து கொண்டார். வாகினி ஸ்டுடியோ ஓனரை ஓனர் என்று தெரியாமல்
கிண்டலடித்த பொழுது இவரின் நடிப்பை பார்த்து பிரமித்து போய் அவர் கொடுத்த
ஆயிரம் ரூபாயில் தான் தனது திருமணத்தை நடத்திக்கொண்டார் இவர்
தொழுப்பேடு ரயில்வே கிராசிங் மூடி இருந்ததால் ஜெயகாந்தன் மற்றும் இவர்
இருவரும் காத்திருக்க நேர்ந்தது காரில். என்ன பண்ணலாம் என்று
யோசித்துக்கொண்டு இருக்கும் பொழுதே ஜே.கே “பிச்சை எடுக்கலாமா ?” என்று
கேட்டிருக்கிறார். இருவரும் சட்டை,பேன்ட் கழட்டி விட்டு அண்டர் டிராயர்
உடன் அமர்ந்து பிச்சை எடுத்திருக்கிறார்கள். நாகேஷ் தட்டில் குறைவாகவே
பணம் சேர்ந்திருக்கிறது
‘சர்வர் சுந்தரம்’, ‘எதிர்நீச்சல்’, ‘நீர்க்குமிழி’, ‘அனுபவி ராஜா
அனுபவி’ என்று தொடர்ந்து ஜெயித்த முதல் நடிகர் நாகேஷ், தில்லானா
மோகனாம்பாள் படத்தில் கொத்தமங்கலம் சுப்பு நடித்தால் நன்றாகஇருக்கும்
என்று சொல்லப்பட்ட வைத்தி கதாபாத்திரத்தில் தோன்றி பின்னி எடுத்தார்
மனிதர்.
மைலாப்பூர் குளத்தில் அமர்ந்து கொண்டு “தண்ணியெல்லாம் வத்திப்போச்சே”
என்று புலம்பிக்கொண்டு இருந்த கிருஷ்ணஸ்வாமி எனும் நபரின் தாக்கத்தை
அப்படியே திரையில் கொண்டு வந்து நாகேஷ் காட்டிய விஸ்வரூபம் தான் தருமி
கதாபாத்திரம். கட்டே இல்லாமல் அது ஸ்க்ரீனில் வருமாறு பார்த்துக்கொண்டார்
சிவாஜி
மகளிர் மட்டும் படத்தில் நாகேஷ் அவர்களின் நடிப்பைப்பற்றி கமல் இப்படி
சொன்னார் “உண்மையாகச் சொல்ல வேண்டுமானால் நடித்து ’இருக்கவில்லை’
என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இதில் நாகேஷ் பிணமாக
நடித்திருக்கிறார்” என்றார்.
நாகேஷ் நடிப்பை பார்த்து பிரமித்த வடநாட்டு நடிகர்கள் ஏராளம். இவரின்
அனுபவி ராஜா அனுபவி படத்து கதாபாத்திரத்தை ஹிந்தியில் எடுத்து நடித்த
மக்மூத் இவர் காலில் விழுந்து மரியாதை செய்தார். நாகேஷ் அவர்கள் வெறும்
மவுனமான உடல்மொழியின் மூலம் காமெடி செய்யலாம் என்று சாப்ளின்,பஸ்டர்
கீட்டன் ஆகியோரை பார்த்து நம்பினார். பின்னர் சத்தம் போட்டு திரையை
அதிரவைத்தார்.
மதுபழக்கம்,ஒரு கொலை வழக்கில் உருண்ட பெயர் இவற்றைத்தாண்டி மீண்டும்
திரையில் மின்னினார் அவர். அவரின் நடன பாணி தனித்துவமானது. ஒரு முறை
சரியாக ஆடத்தெரியவில்லை என்றொரு இயக்குனர் இவரை கடிந்து கொள்ள கதவை
மூடிக்கொண்டு பயிற்சி செய்துவிட்டு வந்தார். நடனத்தில் கலக்கி எடுத்தார்.
அப்படித்தான் அவரின் பாணி உருவானது. தமிழகத்தின் ஜெர்ரி லூயிஸ் ஆனார்
‘பூவா தலையா?’ படத்தின் ஒரு காட்சியில் ரிக்ஷாக்காரனாக நடிக்கும் நாகேஷ்,
தன் மாமியாரிடம் கூழைக் கும்பிடு போட்டு வணங்கும் நாகேஷ் இல்லாத வசனமான
‘இதுக்கு மேல கும்பிட முடியாது. தரை வந்துடுச்சு’ என்று டயலாக் பேசி
அதிரவைத்தார். அபூர்வ ராகங்கள் படத்தில் ஆக்ஷன் என்று பாலச்சந்தர்
சொன்னதும் நிழலை பார்த்து சியர்ஸ் சொன்னார் மனிதர் !
“உங்களுக்கு ஹீரோ மாதிரி பெர்சனாலிட்டி எல்லாம் இல்லை. ஆனா, நடிப்பு
டான்ஸ் எல்லாவற்றிலும் பிரமாதப்படுத்துறீங்களே… எப்படி ?” என்று கேட்ட
பொழுது ,”மாவு நல்லா அரைபடணும் அப்படின்னு அம்மிக்கல்லை ஆறு மாசத்துக்கு
ஒருமுறை கொத்து வைப்பாங்க. அப்படி என் முகத்தில் சின்ன வயசில் ஆண்டவன்
வைத்த அம்மை தழும்பால் தான் நான் நல்லா பொளிஞ்சு இருக்கேன் !” என்றார்
அவர் அது தான் நாகேஷ் ! நம்மவர் படத்துக்காக பெற்ற சிறந்த துணை நடிகர்
விருதை தவிர எந்த மத்திய அரசின் விருதும் இந்த மகத்தான கலைஞரை
தேடிவரவில்லைநாகேஷ் எனும் மக்கள் கலைஞனின் பிறந்தநாள் இன்று. குண்டுராவ்
என்றுஅழைக்கப்பட்ட இவர் கம்பராமாயண நாடகம் பார்த்து நடிக்கும் ஆர்வம்
பெற்று சென்னை வந்தார். வாலியுடன் தங்கிக்கொண்டு ரயில்வேயில்
வேலைபார்த்து கொண்டு இருந்த காலத்தில் வயிற்று வலிக்காரனாக இவர் நடித்த
நடிப்பை பார்த்து பிரமித்தார் எம்.ஜி.ஆர். ஒரு கோப்பையை பரிசாக
தந்தார்,அதையாரும் பாராட்டவில்லை. மனிதரை போலீஸ் கூப்பிட்டு கோப்பையை
திருடி வந்தாயா என்று விசாரிப்பது தான் நடந்தது.
அப்பொழுதில் இருந்து என்றும் விருதுகளை வைக்க என்று வீட்டில் எந்த இடமும்
தனியாக வைத்தது இல்லை அவர். ரெஜினா எனும் கிறிஸ்துவ பெண்ணை காதலித்து
திருமணம் செய்து கொண்டார். வாகினி ஸ்டுடியோ ஓனரை ஓனர் என்று தெரியாமல்
கிண்டலடித்த பொழுது இவரின் நடிப்பை பார்த்து பிரமித்து போய் அவர் கொடுத்த
ஆயிரம் ரூபாயில் தான் தனது திருமணத்தை நடத்திக்கொண்டார் இவர்
தொழுப்பேடு ரயில்வே கிராசிங் மூடி இருந்ததால் ஜெயகாந்தன் மற்றும் இவர்
இருவரும் காத்திருக்க நேர்ந்தது காரில். என்ன பண்ணலாம் என்று
யோசித்துக்கொண்டு இருக்கும் பொழுதே ஜே.கே “பிச்சை எடுக்கலாமா ?” என்று
கேட்டிருக்கிறார். இருவரும் சட்டை,பேன்ட் கழட்டி விட்டு அண்டர் டிராயர்
உடன் அமர்ந்து பிச்சை எடுத்திருக்கிறார்கள். நாகேஷ் தட்டில் குறைவாகவே
பணம் சேர்ந்திருக்கிறது
‘சர்வர் சுந்தரம்’, ‘எதிர்நீச்சல்’, ‘நீர்க்குமிழி’, ‘அனுபவி ராஜா
அனுபவி’ என்று தொடர்ந்து ஜெயித்த முதல் நடிகர் நாகேஷ், தில்லானா
மோகனாம்பாள் படத்தில் கொத்தமங்கலம் சுப்பு நடித்தால் நன்றாகஇருக்கும்
என்று சொல்லப்பட்ட வைத்தி கதாபாத்திரத்தில் தோன்றி பின்னி எடுத்தார்
மனிதர்.
மைலாப்பூர் குளத்தில் அமர்ந்து கொண்டு “தண்ணியெல்லாம் வத்திப்போச்சே”
என்று புலம்பிக்கொண்டு இருந்த கிருஷ்ணஸ்வாமி எனும் நபரின் தாக்கத்தை
அப்படியே திரையில் கொண்டு வந்து நாகேஷ் காட்டிய விஸ்வரூபம் தான் தருமி
கதாபாத்திரம். கட்டே இல்லாமல் அது ஸ்க்ரீனில் வருமாறு பார்த்துக்கொண்டார்
சிவாஜி
மகளிர் மட்டும் படத்தில் நாகேஷ் அவர்களின் நடிப்பைப்பற்றி கமல் இப்படி
சொன்னார் “உண்மையாகச் சொல்ல வேண்டுமானால் நடித்து ’இருக்கவில்லை’
என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இதில் நாகேஷ் பிணமாக
நடித்திருக்கிறார்” என்றார்.
நாகேஷ் நடிப்பை பார்த்து பிரமித்த வடநாட்டு நடிகர்கள் ஏராளம். இவரின்
அனுபவி ராஜா அனுபவி படத்து கதாபாத்திரத்தை ஹிந்தியில் எடுத்து நடித்த
மக்மூத் இவர் காலில் விழுந்து மரியாதை செய்தார். நாகேஷ் அவர்கள் வெறும்
மவுனமான உடல்மொழியின் மூலம் காமெடி செய்யலாம் என்று சாப்ளின்,பஸ்டர்
கீட்டன் ஆகியோரை பார்த்து நம்பினார். பின்னர் சத்தம் போட்டு திரையை
அதிரவைத்தார்.
மதுபழக்கம்,ஒரு கொலை வழக்கில் உருண்ட பெயர் இவற்றைத்தாண்டி மீண்டும்
திரையில் மின்னினார் அவர். அவரின் நடன பாணி தனித்துவமானது. ஒரு முறை
சரியாக ஆடத்தெரியவில்லை என்றொரு இயக்குனர் இவரை கடிந்து கொள்ள கதவை
மூடிக்கொண்டு பயிற்சி செய்துவிட்டு வந்தார். நடனத்தில் கலக்கி எடுத்தார்.
அப்படித்தான் அவரின் பாணி உருவானது. தமிழகத்தின் ஜெர்ரி லூயிஸ் ஆனார்
‘பூவா தலையா?’ படத்தின் ஒரு காட்சியில் ரிக்ஷாக்காரனாக நடிக்கும் நாகேஷ்,
தன் மாமியாரிடம் கூழைக் கும்பிடு போட்டு வணங்கும் நாகேஷ் இல்லாத வசனமான
‘இதுக்கு மேல கும்பிட முடியாது. தரை வந்துடுச்சு’ என்று டயலாக் பேசி
அதிரவைத்தார். அபூர்வ ராகங்கள் படத்தில் ஆக்ஷன் என்று பாலச்சந்தர்
சொன்னதும் நிழலை பார்த்து சியர்ஸ் சொன்னார் மனிதர் !
“உங்களுக்கு ஹீரோ மாதிரி பெர்சனாலிட்டி எல்லாம் இல்லை. ஆனா, நடிப்பு
டான்ஸ் எல்லாவற்றிலும் பிரமாதப்படுத்துறீங்களே… எப்படி ?” என்று கேட்ட
பொழுது ,”மாவு நல்லா அரைபடணும் அப்படின்னு அம்மிக்கல்லை ஆறு மாசத்துக்கு
ஒருமுறை கொத்து வைப்பாங்க. அப்படி என் முகத்தில் சின்ன வயசில் ஆண்டவன்
வைத்த அம்மை தழும்பால் தான் நான் நல்லா பொளிஞ்சு இருக்கேன் !” என்றார்
அவர் அது தான் நாகேஷ் ! 
கமல்ஹாசனுடன் நடித்த “நம்மவர்” படத்துக்காக பெற்ற சிறந்த துணை நடிகர்
விருதை தவிர எந்த மத்திய அரசின் விருதும் இந்த மகத்தான கலைஞரை தேடிவரவில்லை.
                                                      நன்றி:பூ.கொ.சரவணன்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?