முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீதி தேவதை....?

வாய்தா சாதனைக்க்கு முடிவு...
1991-96 காலக்கட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா தனது வருமானத்திற்கு அதிகமாக ரூ.66 கோடியே 65 லட்சத்து 20 ஆயிரத்து 395.59 சொத்து குவித்ததாக அப்போதைய ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடந்த 14-6-1996 அன்று சென்னை மாநகர‌ அமர்வு நீதிமன்றத்தில் புகார் அளித்தார். 27-6-1996 அன்று அவரது புகாரை விசாரிக்குமாறு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை மாநாகர அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இவ்வழக்கை விசாரிக்க தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி நல்லம்ம நாயுடு தலைமையில் 15 காவல் ஆய்வாளர்கள் விசாரணை அதிகாரிகளாக‌ நியமிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் ஆகியோர் இவ்வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.
சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில் முதல்கட்ட விசாரணை, குற்றப்பத்திரிகை தாக்கல், சாட்சிகள் விசாரணை ஆகியவை 2003-ம் ஆண்டு வரை நடைபெற்றது.
திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனின் மனுவைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் கடந்த 2003-ம் ஆண்டு நவம்பர் 18-ம் தேதி இவ்வழக்கை பெங்களூருக்கு மாற்றி உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து தமிழில் இருந்த ஆவணங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தல், பிறழ் சாட்சிகளின் விசாரணை, குறுக்கு விசாரணை, குற்றம்சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலம் பதிவு செய்தல் மற்றும் இறுதிவாதம் ஆகியவை கடந்த 11 ஆண்டுகளாக நடைபெற்று வந்தன. 
வழக்கு
குறித்த அனைத்து விசாரணைகளும் கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி நிறைவடைந்ததால், செப்டம்பர் 20-ம் தேதி தீர்ப்பு வெளியாகும் என சிறப்பு நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா உத்தரவிட்டார்.
இதனிடையே இசட் பிளஸ் பாதுகாப்பு பிரிவில் இருக்கும் ஜெயலலிதா தனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரியதால் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள காந்தி பவனுக்கு மாற்றப்பட்டது.
எந்தெந்த பிரிவுகளில் வழக்கு:
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மீது அவர் முதல்வர் ஆவதற்கு முன்பாக (1-7-1991-க்கு முன்பு) அவருடைய சொத்து மதிப்பு ரூ.2 கோடியே 1 லட்சத்து 83 ஆயிரத்து 956.53 ஆகும். ஆனால் வழக்கு காலத்திற்கு பிறகு (1-7-1991 முதல் 30-4-1996 வரை) ரூ.66 கோடியே 65 லட்சத்து 20 ஆயிரத்து 395.59 ஆக சொத்து அதிகரித்துள்ளது.
எனவே ஜெயலலிதா தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்துள்ளார். மேலும் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் சொத்து குவிக்க உடந்தையாக இருந்துள்ளனர்.
எனவே அவர் மீது ஊழல் தடுப்பு சட்டம் 13(1) ( ஈ) பிரிவில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது மற்றும் 13(2) அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த குற்றத்துக்கு உடந்தையாக இருந்தது மற்றும் ஊழல் தடுப்பு சட்டம் 120(பி) கூட்டு சதி தீட்டியது ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இரு தரப்பு வாதம்:
ஜெயலலிதாவின் வருமானத்தை விவரித்து அவரது வழக்கறிஞர் பி.குமாரும், அதனை மறுத்து அரசு வழக்கறிஞர் பவானிசிங்கும் சுமார் 100 மணி நேரம் வாதிட்டுள்ளனர். இதே போல சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் வழக்கறிஞர்கள், 'ஜெயலலிதாவிற்கும் இவ்வழக்கிற்கும் தொடர்பில்லை. திமுகவின் அரசியல் பழிவாங்கும் வழக்கு' என சுமார் 90 மணி நேரம் வாதிட்டுள்ளனர். சுமார் 5 ஆயிரம் பக்கத்துக்கு எழுத்துப்பூர்வ அறிக்கையும் தாக்கல் செய்துள்ளனர்.
சொத்து குவிப்பு வழக்கில் மூன்றாம் தரப்பான அன்பழகன் தனது வாதமாக 445 பக்கங்களில் எழுத்துப்பூர்வமான ஆதாரங்களை அடுக்கியிருந்தார்.
18 ஆண்டுகளாக நடந்து வந்த சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
பகல் 2.25 மணியளவில் பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா தீர்ப்பை வழங்கினார். சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளும் நிரூபணமானதாக நீதிமன்றம் அறிவிப்பு.
முதல்வர் பதவியை இழந்தார் ஜெ:
பெங்களூர் சிறப்பு நீதிமன்ற வழக்கறிஞர் பவானி சிங் ' கூறியதாவது: "சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளன.மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி ஜெயலலிதா எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுகிறார்.
அவரது முதல்வர் பதவியையும் இழக்கிறார். தீர்ப்பை அடுத்து ஜெயலலிதாவின் காரில் இருந்து தேசியக் கொடி அகற்றப்பட்டது. தண்டனை விபரம் மீதான விவாதம் 3 மணிக்கு தொடங்குகிறது. எதிர்தரப்பு சார்பில், ஜெயலலிதாவுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வாதிடும்" என்றார்.
அவருக்கான இசட் பிளஸ் பாதுகாப்பும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
-----------------------------------------------------------------------


சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியானதையடுத்து திமுக தலைவர் கருணாநிதி வீட்டின் மீது அதிமுகவினர் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
. இதனையடுத்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அதிமுக கட்சியினர் வன் முறையில் இறங்கி ,கொடும்பாவிகளை எரித்தும் கடைகள்,பேருந்துகள் மீது கல்வீசியும் தாக்குவதால் தமிழகம் முழுக்க மக்களின் இயல்பு வாழவு பாதிக்கப்பட்டு பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்நிலையில், சென்னை கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி வீட்டின் மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.
கருணாநிதி வீட்டிற்குள் அதிமுகவினர் சிலர் நுழைய முயன்றனர்.  காவல்துரையினர் அதிமுகவினரை டடுக்காமல் வேடிக்கை பார்த்ததால்  திமுகவினர் அதிமுகவினரை தடுத்து நிறுத்தினர். அதனால்இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இருதரப்பினருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.காவல் துரையினர செயல் படாததினால் கருணாநிதி வீட்டின் முன் திமுக தொண்டர்கள் உருட்டுக்கட்டைகள், இரும்புக் கம்பிகள் ஏந்தியவாறு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதே போல் ஸ்டாலின் வீட்டிலும் கல் எறிந்து அதிமுகவினர் ரகளையில் ஈடு பட்டனர்.அங்கேயும் காவல்துறை கைகட்டி நின்றதால் திமுகவினர் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.





--------------------------------------------------------------------------------------------------------------------------




மோடிக்கு  நீதிமன்ற சம்மன்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு தனது விஜயத்தைத் தொடங்கவுள்ள நிலையில், அவருக்கு நியூயார்க் நீதிமன்றம் ஒன்று அழைப்பாணை ஒன்றை அனுப்பியிருக்கிறது.
குஜராத் மாநிலத்தில் 2002ம் ஆண்டில் நடைபெற்ற கலவரங்களில் அவர் ஆற்றியதாகக் கூறப்படும் பங்கு தொடர்பாக இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டிருக்கிறது
மோடி இன்று வெள்ளிக்கிழமை நியூயார்க் வந்து ஐ.நா பொதுச்சபையில் உரையாற்றவிருக்கிறர். அவர் பின்னதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவையும் சந்திக்கவிருக்கிறார்.
அமெரிக்க நீதிமையம் என்ற மனித உரிமை அமைப்பும் குஜராத் கலவரங்களில் உயிர்தப்பியோர் இருவரும் சேர்ந்து இந்த வழக்கைத் தொடுத்திருக்கின்றனர்.
இந்தக் கலவரங்களில் 1000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலோனோர் முஸ்லீம்கள்.
மோடியை இந்திய நீதிமன்றங்கள் இந்தக் கலவரங்கள் தொடர்பான வழக்குகளில் குற்றமற்றவர் என்று கூறி தீர்ப்பளித்திருக்கின்றன.
இந்தக் கலவரங்களில் மோடிக்கு இருந்ததாகக் கூறப்படும் தொடர்பு காரணமாக  முன்பு  அமெரிக்க விசா அவருக்கு மறுக்கப்பட்டிருந்தது.அவர் இந்திய பிரதமரான பின்னரே அமெரிக்கா செல்ல மோடியால் முடிகிறது.அதுவும் இந்த அழைப்பாணையை வைத்தே விசா வழங்க்கப்பட்டுள்ளது.ஆக அமெரிக்காவுக்கு குற்றவாளியாகவே முதன் முதல் செல்லும் இந்திய பிரதமர் பெருமைக்கு உரியவர் மோடி அவர்கள்தான். 
----------------------------------------------------------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?